"பெண்மையும் அவள் பெருமையும்"
பெண் என்பவள் அணைத்து சிறப்பிற்கும் உரியவள் என்ற பொழுதிலும்.
அன்று முதல் இன்று வரை, பெண் என்பவள் சிறைப்பட்டே கிடக்கின்றாள்.
அதற்க்கு முழுவதுமான காரணம் இச்சமுதாயம்.
நம்மில் யாவரும் அறிவோம், நம்மை படைத்தவன் இறைவன் என்ற பொழுதிலும், நம்மை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய இணையற்ற அன்பிற்கு உரித்தானவள் தாய். அவளும் பெண்ணே..
சங்கடங்கள் நிறைந்து நிற்பினும், சகோதரி ஒருத்தி இருப்பின், அவள் சிரித்த முகத்துடன் சிலிர்த்து கொண்டு சொல்லும் வார்த்தை அதற்க்கு ஈடு இல்லை, (பரவலா விடுடா எல்லாம் சரி ஆகிடும் பாத்துக்கலாம் .)
நம்மில் பெண்மக்களை நட்பின் உறவுகளாய் கொண்ட அன்பர்களுக்கு தெரியும் ஸ்நேகிதி அவளின் பாசமும், நடிப்பும்..
அன்று ஒரு காலம் இருந்தது பெண்மையை என்னி பெருமிதம் கொண்ட மக்கள்..
பெண்மையே ஆண்மையை முழுமை பெறச்செய்யும் என்று என்னிய மக்கள்....
இன்றோ பெண்மக்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்கள் எத்தனை ?
பெண்பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் மனதில் கவலைகள் எத்தனை?
பெண்ணிற்க்கு நடக்கும் கொடுமையை விடவும், பெண் குழந்தை என்றும் பாராமல் சீறாப்புகள் எத்தனை?
பெண்ணியத்தை பாதுகாப்பது, ஆண்மக்களின் கடமை அல்லவா??
பெண்ணுடம் என்பது மானுடம் காக்க வந்த மாணிக்கம் அல்லவா
??
இத்தனை சிறப்பிற்குரிய பெண் அவளை பெருமை படுத்த மனமில்லாதாகினும், சிறுமை படுத்தியது ஏனோ ?....
பெண்மையையும், பெண் மக்களையும் சிறைப்படுத்தி வைத்திருக்கும் சமூதமே !!!
சிறிதும் சிந்திக்க மாட்டாயா
பெண்மையை பாதுகாக்க மறந்த எந்த சமூகமும் முன்னேற்றம் பெறாதென்பது இறைவனின் வாக்குறுதி...
இதையே "திரு குர்ஆனில்" இறைவன் கூறுவது - தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது என்கிறான். இதன் பொருள் எவர் ஒருவன் தன் தாயிற்கு உதவியாய் இருந்து, உபகாரம் செய்து அவளின் வாழ்நாள் தனில் முகம் சுளிக்கா வண்ணம் நடந்து கொண்டு அரவனைப்பாரோ அவருக்கு நாம் சுவர்க்கத்தை பெறுவதை இலகுவாக்குவோம் என்பது பொருள்...
இப்படியாக படைத்தவனே பெருமைப்படுத்திக் காட்டும் பெண்மையை, படைப்பினங்கள் பாதுகாக்க மறந்ததேனோ
?...
கொரோனாவிற்கு அஞ்சி சிறைப்பட்டிருப்பதை விடவும், சமூதாயத்தில் இருக்கும் மனித கிருமிகள் இடத்தில் சிறைப்பட்டிருப்பது கொடுமை.....
சிறைப்பட்டிருப்பினும் பெண் சமூகம் பெருமைக்கும், பெரும் மதிப்பிற்கும் உரியவர்களே.. 💐💐💐
குறிப்பு : மக்களே! இந்த கவிதைய நான் picture பாத்தப்போவே எழுதிட்டேன். ஆனா பதிவுல போடல.
இப்போ இத கடைசியா போட்டதோட நோக்கம் மக்கள் படிக்கனுன்னு மட்டும் தான். நன்றி.....