நானும் போகிறேன்... உனை விட்டு...
என் வெறுமையை குடையாக்கி..
உன்னை பாராது... போகிறேன்
என் ஜனனம் முதல் என்னுடன்
கைகோர்த்த இசையே...
உனை வெறுக்கின்றேன்..
பண்பட்ட ஓசையே.,..
நீ கட்டிப்போட்டது ..
ஜீவராசிகள் மட்டுமல்ல...
அடைப்பட்ட கதவுகள் திறந்தாய்...
திறந்த கதவுகளை தாழிட்டாய்..
அசையா கற்களை அசைத்தாய்...
வெப்பம் உண்டாக்கி விளக்கேற்றினாய்..
மழை பொழிய செய்தாய்...
ஓடும் தண்ணீரை கட்டுப்படுத்தினாய்...
என் தனிமையில் துணை நின்றாய்..
என்னுள் நீ நுழைந்து, மாற்றங்கள் செய்தாய்..
ஆனாலும் வெறுக்கிறேன்...
சிறகு இல்லா பறவைக்கு
பறக்க ஆசை வந்தது....
உன் இசையால்...
கால்களில்லா மயிலுக்கு
ஆட ஆசை வந்தது....
உன் இசையால்...
இசையே விலகி நில்.. எண்ணங்களே வேறு..
யதார்த்தம் வேறு... என்றுணர்ந்தேன்... இன்று..
இசையே....விலகி நில்..
அண்டவெளியின் நிசப்தத்தை உடைத்த ஓசையே.
ஆதி சிவனின் மூலமே...
உன்னுள் அடங்கும் அகிலமே...
ஆனாலும்... போகிறேன்... வெகுதூரம்..
என் வெறுமையை குடையாக்கி..
உன் குரல் கேளாது.... போகிறேன்
ஓசையில்லா உலகம் தேடி..