Author Topic: அறிந்ததும் அறியாததும்  (Read 5645 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: அறிந்ததும் அறியாததும்
« Reply #15 on: November 11, 2011, 07:52:56 AM »
அறிந்ததும் அறியாததும் : - 

உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு.

அறிந்த விளக்கம்

மிக அழகாக பெண்கள் பக்கம் திருப்பி விடப்பட்ட பழமொழிகளில் இதுவும் ஒன்று. உணவு
நிறைய சாப்பிட்டால் பெண்கள் உடல்
பெருத்து அழகற்றவர்களாகி விடுவார்கள்என்று பயந்தோ என்னவோ பழமொழியையே மாற்றி
விட்டார்கள். சொல்லப் போனால்
இந்தப்பழமொழியின் உண்மையான வடிவமும் சொல்லப்படும் நீதியும் ஆண்களுக்குத் தான்
என அறியும்போது இதில் உள்ள
அறிவியல் தத்துவமும் ஆச்சரியத்தை தருகிறது.


அறியாத விளக்கம்

இந்த பழமொழியின் உண்மையான வடிவம் "உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு " என
வந்திருக்க வேண்டும்.பண்டி என்பது பெண்டீர் என மறுகி பெண்களுக்கு நல்லது என
அறிவுறுத்தலாய் வந்து விட்டது .உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல்
இறக்க  நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம்
ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான்
நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள். ஆக உண்டி
சுருக்க பொதுவாய் சொல்லித் தரப்பட்ட பழமொழி பெண்களுக்கு மட்டும் என்றாகி
விட்டது .


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: அறிந்ததும் அறியாததும்
« Reply #16 on: November 11, 2011, 01:43:20 PM »
// இதை தடுக்கத்தான்
நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள் //


thanks shur ithukana kaaranatha than nan rompa naal thedinen inaiku kidaichuruchu thanks

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: அறிந்ததும் அறியாததும்
« Reply #17 on: November 26, 2011, 09:52:43 AM »
அறிந்ததும் அறியாததும் : -
அரசனை நம்பி புருஷனை கை விட்ட மாதிரி.

அறிந்ததும் அறியாததும்

கொஞ்சம் எசகு பிசகான பழமொழி..
அந்த கால சில அரசர்கள் எந்த பெண்ணை விரும்பினாலும் அந்த பெண் அரசனுக்கு உடைமையாகி விடுவாள் . முக்கியமாக
அந்தப்புரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அரசன் தான் புருஷன். அரசனுக்கு பின் தான் புருஷன் . எனவே அரசனின் கடைக் கண் பார்வை பட்டால் புருஷனிடம் வாழ்வதை விட வசதியாக இருக்கலாம் . ஆனால் எப்போதும் கிட்டத்தரசியாக இருக்க முடியுமே தவிர பட்டத்தரசியாக முடியாது அதுவும் கொஞ்ச காலத்திற்கு மட்டுமே .
சிலர்சொல்ல வரும் நேரடி உட்பொருளாக தன்னைத் தேடிவரும் வாய்ப்புகளை தவிர்த்து எதிர்பார்த்திருக்கும் வாய்ப்புகளும் கை நழுவிப் போகமொத்தமாக எல்லாவற்றையும் இழந்து நிற்க கூடிய சூழலுக்கு சொல்லப்பட்டதாகவும்அறியப்படுகிறது .



அறியாத விளக்கம்

இங்கு அரசன் என்பது அரச மரத்தை குறிக்கும். அரச மரத்தின் காற்றை சுவாசிக்கும் போது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு
அவர்களின் கருப்பை தொடர்பான சில வியாதிகள் குணம் பெறுகின்றன என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்து உபதேசித்துள்ளனர். தவிர குழந்தைப் பேறுக்கும் நல்லது என்றும் சொல்லப்படுவதுண்டு. அரச மரத்தை அடிக்கடி சுற்றியவள் புருஷனை கவனிப்பதற்கு மறந்து விட்டு பிள்ளைக்கு காத்திருந்தாளாம்
இதையே அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிறை தொட்டு பார்த்துக் கொண்டாளாம் என்றும்பழமொழியாக சொல்வார்கள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்