Author Topic: தமிழின் வளர்ச்சி  (Read 6279 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தமிழின் வளர்ச்சி
« on: July 06, 2012, 10:47:02 PM »
தமிழின் வளர்ச்சி
 
 
தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரி வடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது? என்ற வினாவிற்குச் சரியான விடை கிடைக்கவில்லை. தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழி வழி உண்மையை உணர்கிறோம். இன்று நாம் பேசும் தமிழ்மொழி பல கால கட்டங்களில் பல மொழிகளோடு இணைந்து பல உருக்கள் மாறி இறுதி நிலையில் காண்கிறோம். ஆனால் தொல் கால இந்திய எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்கள் தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளைக்குத் தாய் பெருங்குரல் கொடுக்கிறார்கள் அறிஞர்கள் பூலரும், ஐராவதம் மகாதேவன் அவர்களும்.
 
தமிழ் வட்டெழுத்து

தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே! வளைந்த கோடுகள் அவ்வெழுத்து முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது. இதன் அடிப்படையில் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கோலெழுத்துக்கள் அல்லது “மலையாண்மா” என்ற எழுத்து முறை உருவானது. இக்கோலெழுத்துகள் செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் எழுதப்பட்டன. அக்கோலெழுத்துக்களே ஆங்காங்கே கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலும், நடு கற்களிலும் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தாக உருமாறி மலர்ந்து வளர்ந்தது என இரா. நாகசாமி அவர்கள் மார் தட்டிக் கூறுகிறார்.
 
வட்டெழுத்தின் தோற்றம்

வட்டெழுத்துக்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள். நடுகற்கள், நடப்பட்ட கற்களைத் தான் நடுகற்கள் என்று வரலாற்று மேதைகள் கூறுகின்றனர். அதன் வாயிலாகத் தமிழ் வட்டெழுத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. தமிழ் பிராமியில் புழக்கத்திலிருந்த “தமிழ்” எழுத்துக்கள் தான் தமிழ் வட்டெழுத்தாக மாறி வளரத் தொடங்கியது என வரலாறு ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

கி.பி. 3 - ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கியது. பிராமியிலிருந்து பிரியத் தொடங்கிய வட்டெழுத்துக்கள் நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தனித்தன்மை பெற்றது எனலாம்.
 
அன்று செந்தமிழ் நாடு எனப் போற்றப்பட்ட பாண்டிய நாடு “தன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டி நாடு” என மாணிக்கவாசகரால் பாராட்டப்பட்டது. தமிழை வளர்த்த பாண்டியர்கள் வட்டெழுத்து முறைக்கு ஊக்கம் காட்டினர். கொடுந்தமிழை மேற்கொண்ட சேரர்களும் வட்டெழுத்தில் ஆர்வம் காட்டினர். இரு நாட்டிலும் வட்டெழுத்தில் அரசுச் சாசனங்கள் எழுதப்பட்டன என்றால் அதன் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
வட்டெழுத்துப் பகுதிகள்

தமிழ் வட்டெழுத்து தமிழகம் முழுவதிலும் பரவிச் செயல்முறையில் இருந்தது. தமிழகப் பகுதிகளாகிய மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், கோவை, சேலம், வடாற்காடு, தென் ஆற்காடு, செங்கற்பட்டு போன்ற பகுதிகளிலும் பரவியிருந்தது. கொங்கு நாட்டு மன்னர்களின் சாசனங்களிலும் தமிழ் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.
 
 
 
தமிழ்க்கோலெழுத்துக்கள் - “மலையாண்மா”

பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பல நூற்றாண்டுகள் கொடி கட்டிப்பறந்த வட்டெழுத்துக்கள் நாள்பட நாள்பட அவை ஒழுங்கு முறையில் எழுதப்படாமல் உருமாற்றங்களைப்பெற்று தமிழ் வட்டெழுத்து ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. இவ்வெழுத்து முறையைத்தான் திருவாங்கூர் போன்ற கேரளப் பகுதிகளில் “மலையாண்மா” என்றும் “கோலெழுத்து” என்றும் அழைக்கலாயினர். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வட்டெழுத்து குறையத்தொடங்கியது. ஆனால் சேர நாட்டில் கி.பி. 1663 வரை நிலைத்திருந்தது என திரு. டி.ஏ. கோபிநாதராவ் கூறுகிறார்.

வட்டெழுத்து வீழ்ச்சசி

பாண்டிய நாட்டில் மிகச் செல்வாக்குடன் ஓங்கி வளர்ந்த பாண்டிய நாட்டை வென்ற சோழர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச்சோழன் முதலாம் இராசராசன் காலம் வரையாண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து பாண்டியர் பகுதிகளில் மறைந்துவிட்டது.
 
 
 
தமிழ்க் கிரந்தம் உதயம்

தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்தாண்ட சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து மங்கி கிரந்தத் தமிழ் மேலோங்கியது. பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட “பிராமிலிபி”யின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் வழக்காறு பெற்றது. சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. வட்டெழுத்துக்கள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது.

தமிழ் இலக்கியங்கள்

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்” எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல விலக்கியங்கள் தற்பொழுது தமிழகத்தில் தமிழ் பற்றும் புத்துணர்வும், மொழித் தூய்மையும், ஒழுங்கு முறை எழுத்து வடிவமைப்பும் அமையக் காரணங்களாக அமைகின்றது. இலக்கியங்கள் அனைத்துமே பெரும்பாலும் 1. முதற்பொருள், 2. கருப்பொருள், 3. உரிப்பொருள், என வகைப் படுத்தப்பட்டுள்ளன.
 
நம் தமிழ் மொழி இலக்கிய வளம் பெற்ற மொழியாகும். இலக்கியங்களும் இலக்கண நூல்களும் பெருகி இருந்தமையால் தமிழ்மொழி திருந்திய மொழியாக, திருத்தம் செய்யப்பட்ட மொழியாக, ஒழுங்கு படுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்றது. இலக்கண மரபுகளைத் தகுத்து ஒழுங்குபடுத்தி “எழுத்து”, “சொல்”, “பொருள்” என்ற மூன்று தலைப்புக்கள் ஒலியைக் குறிக்கும் குறில், நெடில், ஆய்தம், இகரம், உகரம் போன்ற அனைத்துத் தமிழ் இலக்கண நெறிகளை நாம் அறிவோம்.
 
தமிழ் மொழியின் நான்கு நிலைகள்

1. பண்டைத் தமிழ் நிலை
 2. காப்பியக்காலத் தமிழ் நிலை
 3. இடைக்காலத் தமிழ் நிலை
 4. தற்காலத் தமிழ் நிலை
 
என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்,

பண்டையத் தமிழை அறியத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் உதவுகின்றன.
 
இடைக்காலத் தமிழை அறியத் தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற இலக்கியங்கள் உதவுகின்றன.
 
தற்காலத் தமிழ்நிலையை, நன்னூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் மற்றும் பேச்சு வழக்குத் தமிழ் கொண்டும் தெரிய முடிகிறது.
 
ஒலியாகத் திரிந்து, சித்திரமாய் மாறி, பலமொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப், பல எடுத்து, காலம் பல கடந்து, கல்வெட்டுகளில் உராய்ந்து, செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் தோய்ந்து, வெள்ளைக் காகிதத்தில் வீரநடை போடும் தேன்தமிழ் மொழியே நம் தாய்த் தமிழ்.
 
என்றும், மழலையாய், குன்றாச் சிறப்புடன் தேன் சுவையொத்த, தமிழாம் கன்னியை முன்னோன் தன் கருவினில் சுமந்து, மகவாய் ஈன்று, மழலையாய் வளர்த்து, குமரியாய்ப் போற்றிக்காத்து நம்மிடம் விட்டுச் சென்றான். அன்னவள் விரிந்த கூந்தலை வாரிப் பின்னலிட்டு, மலர் வைத்து அன்புடன் அழகு பார்த்தல் நம் கடமையல்லவா? அழகு பார்க்க எவரும் துணியாதது ஏன்? என்பதுதான் புதிராக உள்ளது.
 
ஃ - அக் என்னும் ஆயுத எழுத்து
 
 
 
அகரக்குறிலொலி துவக்கத்திலெழுப்ப
 இக்கென மெய்யொலி இறுதியில் முடிக்க
 அக்கென எழும்புமாயுத ஒலியை
 மும்முற்றுப்புள்ளிகளெங்கனம் ஒலிக்கும்?
 ஒலியே! இல்லா பிற ஒலி திருடும்
 அவல நிலையைப் போக்கலாமெண்ணி
 மும் முற்றுப் புள்ளியை நீக்கலும் சரியே!
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழின் வளர்ச்சி
« Reply #1 on: July 06, 2012, 10:53:40 PM »
இலமுரியா கண்டம்



 
ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.
 
பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.
 
பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.
 
ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.
 
 
 
குமரிமாந்தரின் மொழியற்ற நிலை
 “சைகை மொழி” - Sign Language.
 
குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.
 
 
 
இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 - 5,00,000

எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி” (Gesture Language - or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை
 
 
 
1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)
 இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.
 
 
 
2. விளியொலிகள் (Vocative Sounds) பிறரை
 விளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.
 
 
 
3. ஒப்பொலிகள் (Imitative Sounds)
 இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.
 
 
 
4. குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படி
 கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.
 
 
 
5. வாய்ச் செய்கையொலிகள்
 வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.
 
 
 
6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)
 குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.
 
 
 
7. சுட்டொலிகள் (Decitive Sounds)
 சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.
 
 
 
8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,
 அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களை
 எழுப்பும் ஒலிகள் எனப்படும்.
 
 
 
தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000

மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.
 
 
 
தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.
 
 
 
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்
 
பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
1. தொலைமேற்கில் - கிரேக்க நாடு
 2. மேற்கில் - எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
 3. வடமேற்கில் - மென் ஆப்பிரிக்கா
 4. தொலை கிழக்கில் - சீன நாடு
 5. கிழக்கில் - பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
 6. தெற்கில் - நீண்ட மலைத் தொடர்
 
 
 
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
 
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
 
 
 
குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!

குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.
 
நான்கு பெருங் கடல் கோள்கள்
 
1. முதல் சங்கம் - தென்மதுரை - கடல் கொண்டது
 2. இரண்டாவது - நாகநன்னாடு - கடல் கொண்டது
 3. மூன்றாவது இடைச்சங்கம் - கபாடபுரம் - கடல் கொண்டது
 4. நான்காவது - காவிரிப்பூம்பட்டிணம் - கடல் கொண்டது.
 
சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.
 
 
 
தொல்காப்பியம்

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.
 
மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
 
 
 
1. பழந்தமிழ்
 2. இடைக்காலத்தமிழ்
 3. தற்காலத்தமிழ்
 
 
 
1. பழந்தமிழ் (Ancient Tamil)
 
உட்பிரிவுகள் மூன்று.

 
அ. முன்பழந்தமிழ் - தொல்பழந்தமிழ் Early ancient Tamil (or) Proto Ancient Tamil
 
ஆ. மத்திய பழந்தமிழ் - Medieval Ancient Tamil
 
இ. பின்பழந்தமிழ் - Later Ancient Tamil
 
2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)
 
உட்பிரிவுகள் மூன்று.
 
அ. முன்இடைக்காலத் தமிழ் - Early Medieval Tamil
 
ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் - Medium Mediaval Tamil
 
இ. பின்இடைக்காலத் தமிழ் - Later Medieval Tamil
 
3. தற்காலத் தமிழ் (Modern Tamil)
 
உட்பிரிவுகள் மூன்று.
 
அ. முன் தற்காலத் தமிழ் - Early Modern Tamil
 
ஆ. பின் தற்காலத் தமிழ் - Later Modern Tamil
 
 
 
முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்
 Early ancient Tamil (or) Proto Ancient Tamil

திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.
 
 
 
திராவிட மொழிக் குடும்பம்

மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
 
1. தென் திராவிட மொழிகள் - தமிழ், மலையாளம், கன்னடம்.
 2. நடுத்திராவிட மொழிகள் - தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
 3. வடதிராவிட மொழிகள் - குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.
 
 
 
தமிழ்மொழியின் பெரும்புகழ்

திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.
 
இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.
 
 
 
தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு

உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது.
 
 
 
வரலாற்றுச் சான்றுகள்

வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.
 
 
 
தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்

மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச் செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக் கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.
 
 
 
ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்

ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்மொழியின் தொன்மையையும், தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பின்வரும் பகுதிகளில் நன்கு அறிவோம்.
 
 
 
சார்லஸ் டார்வின்

இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்” வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழின் வளர்ச்சி
« Reply #2 on: July 06, 2012, 11:18:09 PM »


தமிழர் பங்கும் மொழி வளர்ச்சியும்



 
ஹிராட்டஸின் ஆதாரங்கள் - ஒரு ஆய்வு
 
ஹிராட்டஸின் வாழ்க்கைக் குறிப்பு
 
ஹிராட்டஸ், உலக வரலாற்றின் ஆதி தந்தையாவார். உரைநடை என்ற ஒரு நடையை உலகிற்குக் காட்டிய முதல் மனிதன் இவரே! இவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மேதையாவார். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 484-408. ஹிராட்டஸ என்ற அம்மேதை இயற்றிய “வரலாறுகள்” என்ற வரலாற்று நூலின் வாயிலாக பாரசீகர், லிபியர் ஆகியோரின் அன்றைய, பழமைப் பழக்கவழக்கங்களையும், உண்மை நிலைமைகளையும் வெகு தெளிவாக அறிய முடிகிறது. அவருடைய படைப்புகள் அனைத்துமே அன்றைய வரலாற்றை உறுதிப்படுத்துகின்றன. திரு.வி.எஸ்.வி. இராகவன் இயற்றிய “ஹராட்டஸ்” என்ற வரலாற்று நூல் இன்னும் தெளிவுபடுத்தியது.
 
உலகின் வரலாற்றை எழுதத் தொடங்கியவர்களில் ஹிராட்டஸே முதன்மையானவர் மட்டுமல்லாமல், கி.மு. 107 -43ல் சிசரோ - III என்னும் கிரேக்கப் பெருமகனால் “வரலாற்றின் உரைநடை என்ற ஒரு வடிவமைத்து வரலாறு படைத்தவர் இவரே! இங்கிலாந்து நாட்டு வரலாற்று மேதை சார்லஸ் டார்வினுக்குச் சமமானவர்.
 
இவர் ஹலிகார்னைஸ் என்னும் ஊரில் கி.மு. 484ல் பிறந்தார். இவர் கிரேக்க அரசால் நாடு கடத்தப்பட்ட ஒரு தளபதியாவார். இவர் கதை சொல்லுவதும் வரலாறு படைப்பதுமே முக்கியத் தொழிலாய்க் கொண்டார். கி.மு. 408ல் ஆதன்ஸ் நகரில் தனது எழுபத்தி ஆறாம் வயதில் காலமானார். வரலாற்று என்ற ஒன்று உருவாகக் காரணக்கர்த்தாவே ஹிராட்டஸ்தான். அவரே வரலாற்றுக்கு வித்திட்ட வித்தகனாவார். அவர் எழுதிய “வரலாறுகள்” என்ற நூல், வரலாற்றின் அவசியத்தையும், தேவையையும் சுட்டிக்காட்டி, வரலாறு எழுதப்பட வேண்டும் என அறிவுரைக்கிறது. வரலாற்று உலகின் முதல்படியே அவர் எழுதிய “வரலாறுகள்” என்னும் நூல்தான். இந்நூலின் வாயிலாக தமிழனின் உண்மை வரலாற்றை அறிய முடிகிறது. ஹிராட்டஸின் கூற்றின்படி தமிழரின் வரலாற்றை இனிக் காண்போம்.
 
 
 
தமிழனின் வரலாறு
 
தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்மொழிக்கும் வரலாறு உண்டா? என்றால் உண்டு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே உண்டு என்கிறார் ஹிராடடஸ் அவர்கள். தொல் பழங்காலத்தில், குமரிக் கண்டமாகவும், பழந்தமிழ் நாடாகவும் சிறப்புற்று விளங்கிய பகுதியிலிருந்து சுமார் 4000 ஆண்டுகளக்கு முன்பே வரலாறு படைத்தவன் தமிழன் என உறுதியாக் கூறுகிறார். பழந் தமிழ்நாட்டில் தென்னை, பனை போன்ற மரமேறி வாழ்ந்த தமிழர்கள் உலிகின் பல பகுதிகளுக்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து வாழத் தொடங்கினார்கள் எனவும், அம்மரமேறித் தமிழர்களே பாமேசியர் என்றும் அப்பாமேசியர்களே பினீசியர்கள் எனப் பேரேற்று வாழ்ந்து வந்தனர் எனப் பறை சாட்டுகிறார் ஹிராடடஸ் அவர்கள், தாமியற்றிய வரலாற்று நூலில்,
 
தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்மொழிக்கும் கிடைக்க முடியாத உண்மை வரலாற்றைப்படைத்துப் பெருமை கொள்ளச் செய்துள்ளார். வரலாறு காணா இருண்ட வாழ்க்கை படைத்து முதல் ஒளி ஏற்றிச் சிறப்பிக்கிறார். இந்தியாவைப் பற்றி, குறிப்பாகத் தமிழரைப் பற்றி, மேலை நாட்டவர் எழுதிய முதல் காவியம், முதல் ஓவியம், முதல் வரலாற்று நூல் ஹிராட்டஸ் எழுதிய “வரலாறுகள்” என்ற நூலே!
 
 
 
உலக நாகரிகத்தின் முன்னோடி
 
உலக நாடுகளில் உருவான நாகரிகங்களில் முன்னணி வகுப்பது தமிழர் நாகரிகமே! வரலாறு படைத்துக் கொண்ட மனித வர்க்கத்திற்கே ஆதியும் அந்தமுமாய் இருந்தவன் தமிழனே! இருந்த மொழி தமிழ்மொழியே! இருந்த நாகரிகம் தமிழ் நாகரிகமே என மார்தட்டிக் கூறுகிறார் ஹிராடடஸ் அவர்கள்.
 
 

தமிழ்மொழிச் சிறப்பு

 
பண்டை உலக மொழிகள் அய்ந்தே, உலகில் முதன்முதலில் உருவான ஒலிமொழிகள், கிரேக்கம், எபிரேயம், தமிழ், சீனம், சமஸ்கிருதம் ஆகிய இவ்வைந்துமே! சமஸ்கிருத்த்தைத் தவிர மற்ற மொழிகள் வரிவடிவம் பெற்று எழுதப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவற்றில் தமிழும், கிரேக்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கலந்திருந்தன. இருவர் பண்பாடும் கலந்திருந்தன. இக்கலப்புக்கள் முற்காலத்தில் நடைபெற்ற வாணிகப் பரிமாற்றங்களின் காரணங்களால் ஏற்ட்டதே என்று கூறலாம். இக்கலப்பால், அன்றைய கிரேக்கர், தமிழர் வணிகத் தொடர்புகளையும், மொழித் தொடர்புகளையும், கலவைகளையும் இனிக்காண்க.




மற்றும் பிற மொழிக்கலவைகளும் நிறைய உண்டு.
 
இம்மொழிகளின் கலவைகளால், நம்தமிழ் மொழியின் தொன்மையையும், பெருமைகளையும், சிறப்பையும் காணமுடிகிறது. அத்தோடு மட்டுமின்றி, நான்கு, அய்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகளாவப்பரவி, வீறு நடை போட்ட மொழி நம் தமிழ் மொழி என எண்ணி மகிழ வைக்கிறது. இப்பெரும் வரலாற்றை நமக்குத் தந்த வரலாற்று ஆதித்தந்தை ஹிராட்டஸ் அவர்களுக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி கூறியே ஆக வேண்டும்.
 
தமிழன்தான், உண்மையிலேயே, உலகிற்கு நாகரிகங்களைக் கற்றுத் தந்த தந்தை, தமிழ்நாடுதான் உலக நாகரிகங்களை உருவாக்கித் தந்த கருவூலம். உலகிலேயே முதன்முதலாக வரலாறு படைத்த மாவீரன் தமிழனே! தமிழர் நாகரிகமே உலக நாகரிகத்தின் முன்னோடி என்று பல வராற்று மேதைகள் மெச்சுகின்றனர். வரலாறு படைத்துக் கொண்ட மனித வர்க்கத்திற்கே முதல்வன்தான் நம் தமிழன், இப் பெரும் பேரைப் பெற்றான். என அறிந்து நெஞ்சம் பூரிப்படைகின்றது. நினைத்து, நினைத்துப் பெருமிதம் அடைகிறது.
 
ஆரியர்களின் வருகையால் உண்மைத் தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. தமிழனின் உண்மையான வரலாறு நிலைக்கப்பட வேண்டுமானால், வரலாறுகள் எழுதப்பட வேண்டும். அவை உண்மை வரலாறாக இருத்தல் அவசியம். அப்பொழுதுதான், எதையும் எவரையும் எதிர்பாராமல், தமிழ் மரபுக் காத்து, தமிழ்ப் பரம்பரைக்கு விட்டுச் செல்ல முடியும்.
 
 
 
உலகெங்கும் தமிழன் உலா
 
பண்டைத் தமிழ் நூல்களான அகநானூறு, புறநானூறு, சிறுபாணாற்றுப் படை, மதுரைக்காஞ்சி, நற்றிணை, சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலித்தொகை வாயிலாகவும், கிரேக்க நூல்களான, பிளினி, பெரிப்ளுஸ், தாலமி ஸ்டிராபோ, லெபனான், மெகஸ்தனிஸ் மற்றும் அரியன் இண்டிகா வாயிலாகவும் தமிழனின் வணிகத் தொடர்புள்ள நன்கு தெரிகின்றோம். தமிழ்நாட்டிற்கும், கிரேக்கம், ரோம், சீனா, எகிப்து போன்ற பிற உலக நாடுகளுக்கும் உள்ள நல்லுறவும், வணிக நட்பும் தொன்று தொட்டு பழங்காலம் முதல் இருந்து வந்த வரலாற்றை உணர்கிறோம். தமிழன் கடல் மார்க்கமாக கப்பல்களிலும், வாசனைப் பண்டங்கள், முத்து, பொன், மயிற்பீலி, மிளகு, சடாமாஞ்சி போன்ற பொருள்களை, அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றிச் சென்றான் என்றால், பெருமையே! பெருமை! வளரட்டும், தொடரட்டும் தமிழனின் சுற்றுலா.
 
 
 
குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ்நாடு
 
தென்னாப்பிரிக்காவையும், இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த நாடே பழந்தமிழ் நாடு அல்லது குமரிக்கண்டம் எனப் பேரறிஞர்கள், ஓல்டுகாம், எல்கேல், கிளேற்றர், காட்டு எலியட், தேவ நேயப்பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் எண்ணத்தையொத்தே ஹிராடடஸ் தம் கருத்தைக் கூறுகிறார். அதாவது தொலைமேற்கில் கிரேக்க நாடு, மேற்கில் எகிப்து, தொலை கிழக்கில் சீனா நாடு, இவற்றிற்கு மையத்தில் அமைந்திருந்த நாடே பழந்தமிழ் நாடு என்கிறார். அந்நாட்டில் வாழ்ந்தவன்தான் தமிழன். அவனுடைய வரலாறும், நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழியான, தமிழ்தான் உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தது. பரவியது. தமிழர்கள், பழந்தமிழ் நாட்டிலிருந்து கடல்வழியாகவும், தரை வழியாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர். இதனை இலமுரியா கண்டம், குமரிக்கண்டம், நாகநன்னாடு, எழுதெங்கு நாடு, எழுபனை நாடு என அழைப்பர்.
 
 
 
தமிழர்களின் உலகப் பயணம்
 
எவ்வாறு பிற நாட்டவர் இந்தியாவில் ஊடுருவல் செய்தார்களோ, அதே போல் தமிழ் நாட்டவரும் உலகிலுள்ள பிறநாடுகளில் ஊடுருவல்களை மேற்கொண்டனர். வாணிகம் என்ற பெயரில், வியாபார நோக்கங்கொண்டு, விலை மதிக்க முடியாத பெரும் பொருட்களுடன் தன் நீண்ட பயணத்தை மேற்கொண்டனர். இவர்கள் இரு மார்க்கங்களைக் கையாண்டனர். ஒன்று தரைமார்க்கம், மற்றொன்று கடல்மார்க்கம்.
 
 
 
தமிழர்களின் முதல் கடல் வழி மற்றும் தரை வழிப்பயணம்
 பீனிசியர்களின் கடற்பயணம் (கி.மு.25000)
 
 
 
தமிழர்களின் அமெரிக்கப் பிரவேசம்
 தரைவழிப் பயணம் (கி.மு. 25000)
 



தரைவழி மார்க்கத்தில் தன் பயணத்தைத் தொடங்கிய தமிழன், தன் தாய்நாடாகிய தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டான். புறப்பட்ட தமிழன், தன் தாய்மொழியையும், தமிழ்0 கையாண்டு, பயணத்தில் வெற்றி பல பெற்ற, உலகெங்கும் உலாவந்து, பாரெங்கும் குடியேற்றங்களை அமைத்துக் குடியேறினான். 4000 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்க்கும், தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் வரலாறு உண்டா? இல்லையா? என்று எண்ணப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழர்கள் (பனையேறிகள்), தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு, தரைமார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று குடியேற்றங்களை அமைத்து வாழ்ந்து வரலாறு படைத்தனர்.
 
 
 
ஏழை பனைநாடு மற்றும் ஏழு தெங்குநாடு
 
குமரிக்கண்டத்தை பழந்தமிழ்நாடு எனப் பல வரலாறுகள் செப்புகின்றன. அத்தமிழ்நாடு, ஏழு தெங்கு (தென்னை) நாடுகள் என இருபெரும் பிரிவுகளாக பிரித்திருந்தனர். இயற்கையைப் பயன்படுத்தி வாழ்ந்த காலம், சிலர் கடல் நீரில் வாழும் மீன்களையும், சிலர் மரங்களின் காய், கனி போன்றவைகளையும் உண்டு வாழ்ந்தனர். இன்னும் சிலர் விலங்குகளையும், பறவைகளையும், வேட்டையாடி இறைச்சியை உண்டு வாழ்ந்தனர். தென்னை, பனை, போன்ற நெடுமரங்களை அதிகம் கொண்டமையால் நெடும்பனை நாடு என்ற மற்றொன்றும் உண்டு. அந்த நெடும்பனை, தென்னை மரங்களில் ஏறி, அம்மரத்தைத் தன்வயமாக்கி அதிலிருந்து தேங்காய், நொங்கு, கள்(மாதுபானம்) பதநீர், பனைவெல்லம் போன்றவற்றைத் தயாரித்த தமிழனுக்குப் பெயர் மரமேறிகள். இவர்கள் வாழ்ந்த நாடு பனைநாடாகவும், அங்கு வாழ்ந்தவர்கள் பனையேறிகளாகவும் பெயர் பெற்று நிலைத்தனர்.
 
 
 
பனையேறிகளே பினீசியர்கள்!
 
பழந்தமிழ் நாட்டிலுள்ள பல பிரிவினர்களில், ஏழு பனை நாடு, ஏழ தெங்கு (தென்னை) நாடு, நெடும் பனைநாடு, குறும்பனை நாடு போன்ற பகுதிகளில் வாழ்ந்தவர்கள் மரங்களின் உதவியுடன் கடல் பயணம் மேற்கொண்டனர், இந்தப் பனையேறிகள், பாமேசியர் என்றும், அம்பாமேசியர்களே பினீசியர்கள் எனப் பேரேற்று வாழ்ந்தனர். மரமேறிகள், பினிசியர்களாக மாறி ஒருங்கிணைந்து, உறவுப்பாலம் அமைத்து கொண்டனர். தமிழர்களின் பண்பாடும், நாகரீகமும் பினீசியர் என்ற பெயரில் பாரெங்கும் பரவத் தொடங்கின. வீரத்தமிழன் பினீசியர் என்ற மாற்றுப் பெயர் ஏற்றுச் சாதனை பல புரிகிறான். இச்செய்திகள் அஸ்ஸீரியான் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகிறது.பினீசியர்களின் நாணயமும் உதவுகிறது.
 
 
 
பெயர்க்காரணம்
 
இந்தியப் பெருங்கடலின் தென்கோடியிலிருந்து, தமிழ்நாடு, மலையாளக் கரையோரங்களில் தென்னை மற்றும் பனை மிக வளர்ச்சி பெற்றிருந்தது. அப்பகுதி மக்கள், தென்னை, பனைகளை வளர்த்தும், ஏறியும் வாழ்ந்தனர். இவர்கள் வாழ்ந்த பகுதி ஏழுபனை நாடு, ஏழு (தென்னை) நாடு எனப்படும். இங்கு வாழ்ந்த தமிழர்கள், அதாவது மரமேறிகள், தென்னை, பனை மரக்கட்டைகளைக் கடலில் நீந்தப் பயன்படுத்தினர். அவ்வாறே கடல் மார்க்கமாக உலகில் பல பகுதிகளைச் சென்றடைந்தனர். தாம் சென்றடைந்த புதிய நாட்டில் தென்னை பனை மரங்களைப் பயிரிட்டான் தமிழன். பனை நட்ட காரணத்தால் பனேசியர் என்று மரமேறிகள் அழைக்கப்பட்டனர். அப்பனேசியர்கள் என்ற சொல்லே, நாளடைவில் பனேசியர், பாமேசியர், பனீசியர் என்று திரிபுற்று இறுதியில் பினீசியர் என உருப்பெற்று விளங்கலாயிற்று. பினிசீய மக்கள் தமிழ்நாட்டிலிருந்து, பிற நாடுகள் சென்று குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்ட தமிழர்களே! பினீசியர்கள் கி.மு. 3000 ஆண்டு அளவிலேயே தமிழ்நாட்டிலிருந்து சென்று பிறநாடுகளில் குடியேறியவர்கள் தான் என முனைவர், S. Radhakrishna, (Our Heritage (Page-22) 44-லில்) தெளிவாக்க் கூறுகிறார்.
 
 
 
கி.மு. 3000 இல் தமிழர்களின் முதல் கடற்பயணம்
 
1. தமிழனின் முதற்கடற்பயணம் கி.மு. 3000இல் தொடங்கியது. அப்பயணம், தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு, செங்கடல் வழியாகச் சென்று கீதோன், தீரே ஆகிய துறைமுகங்களை அடைந்தது. (ஒரு பிரிவு)
 
2. கி.மு. 25000இல், பாரிகாஸாவிலிருந்து தொடங்கி கடற்கரை ஓரமாகவே சென்று செங்கடல் வழியாகத் தீரே, கீதோன் ஆகிய துறைமுகங்களை அடைந்தது. (மற்றொரு பிரிவு)
 
 
 
பினீசியர்கள் கடற்பயணம்
 
1. கி.மு. 800இல், கீதோன், தீரே துறைமுகங்களிலிருந்து தொடங்கி இங்கிலாந்தைச் சுற்றி, அய்ஸ்லாந்தை அடைந்து, அங்கிருந்து வடஅமெரிக்காவின் வடசேலம் என்னும் துறைமுகத்தை அடைந்தனர்.
 
2. கி.மு. 500இல் கீதோன், தீரே துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு நேர்வழியில் அமெரிக்காவிலுள்ள, வடசேலம் துறைமுகம் அடைந்தனர்.
 
3. கி.மு. 300ல் கீதோன், தீரே துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு நேர்வழியில் மெகானிக்ஸ் பார்க்கை அடைந்தனர்.
 
4. கி.மு. 150இல் கீதோன், தீரே துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு அமேஸான் ந்திக் கழிமுகத்தை அடைந்தனர்.
 
5. கி.மு. 1800இல் தீரே, கீதோனிலிருந்து புறப்பட்டு, ஆப்பிரிக்காவைச் சுற்றிக் கொண்டு, செங்கடல் வரை வந்து, அங்கிருந்து நேராகத் தமிழ்நாட்டை அடைந்தனர்.
 
 
 
பினீசியர்கள் கல்வெட்டு (கி.மு.1600)
 
பினீசியர்கள் வடஅமெரிக்க மேற்குக் கரையோரமாகச் சென்று, வடஅமெரிக்காவின் கீழைகடற் கரையிலும் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டனர். இப்பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள பினீசியர்கள் கல்வெட்டு, கி.மு. 1600அய்ச் சார்ந்தது.

இது அமெரிக்காவிலுள்ள “ரோட்ஸ் தீவில்” கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில் சிவலிங்கமும், ஓர் என்ற சொல்லையும் காணலாம். இதிலிருந்து நாம் என்ன உணருகிறோம்? அதாவது கடந்த 4000 ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவிலும், அதனருகிலுள்ளள ரோட்ஸ் தீவிலும் தமிழன் வாழ்ந்தான் என்பது தெளிவாகிறது. ஆதிதமிழன் சிவனை வழிப்பட்டான். சிவலிங்கங்களை உருவாக்கிப் பூசித்து வந்தான். ஓம் என்ற வார்த்தை, தெய்வ வழிபாட்டில் உச்சரிக்கும் தமிழ்ச் சொல், தமிழ் மொழி 4000 ஆண்டுகளுக்கு முன்றே அமெரிக்காவில் உச்சரிக்கப்பட்டது என்ற வரலாற்றை உணர்கிறோம். கல்வெட்டுகளில் செதுக்கப்படுகிறது என்றால், தமிழனின் நிலைமையும், தமிழ் மொழியின் வளர்ச்சியையும், தொன்மையும் நன்கு தெளிவாக உணர முடிகிறது.
 
 
 
அப்பொலோ தெய்வம்
 
 
 
அர்மிடஸ்தேவதை
 



அப்பொலோ என்பது கிரேக்க புராணங்களில் தோன்றும் தெய்வங்களில் தலைமைத் தெய்வமாகும். எந்தக் கிரேக்க தெய்வமும் பெறாத பெரும்பேரைப் பெற்ற தெய்வம். இத்தெய்வம் இந்தியக் கடவுள்களாகிய இராமர், கிருஷ்ணர் இந்திரன், சூரியன் போன்றோர்களின் குணங்களையும், செயல்களையும் கொண்ட கடவுளாகச் சித்தரிக்கப்படுகிறது. அதாவது இந்தியத் தமிழர்களின் கலாச்சாரங்களை முழுமையாகப் புகுத்தி, தமிழர் கலாச்சாரத்தையும் பண்புகளையும் வலியுறுத்துகிறது. இதிலிருந்து கிரேக்கம், ரோம் போன்ற பகுதிகளில் தமிழர்களின் கலாச்சாரங்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்றே பரவியிருந்தது என்பதைத் தெரியலாம்.
 

பினீசியர்களின் கல்வெட்டு கி.மு. 1600
 1. சிவலிங்கம் 2. “ஓம்” காணப்படுகிறது
 
 
 
அர்டமிஸ் தேவதை
 
அர்டமிஸ் என்பது, ரோமானியர்கள் வழிபடும் ஒரு பெண் தெய்வம். இதனை அர்டமிஸ் தேவதை அல்லது டயானா தேவதை என அழைப்பதுண்டு. அப்பொலோ, தெய்வத்தின் சகோதரி ஆவாள். அர்டமிஸ் திருவிழாவில் பெண்களே அதிகம் பங்கு பெறுவார்கள். இது தமிழ் நாட்டில் வழங்கி வரும் அல்லது நிகழ்ந்து வரும் திருப்பாவை, திருவெம்பாவை, வரலட்சுமி விரதம், நவராத்திரிக்கொழு போன்ற பாவை நோண்பாகும். இது பெண்களால் போற்றி நடத்தப்படும், பெண்களின் வழிபாடாகும். இத்தேவதை இந்தியத் தெய்வங்களாகிய இலட்சுமி, சரசுவதி, பார்வதி போன்றோர்களின் குணங்களையும், செயல்களையும் கொண்ட தேவதையாகச் சித்தரிக்கப்படுகிறது. சுருங்கக் கூறின் இந்தியத்தமிழ்ப் பெண்களின் கலாச்சாரங்கள் முழுமையாகத் திணிக்கப்பட்டு, மாற்றுரு பெற்ற தமிழ்த்தேவதையாக இயங்குகிறது. இதிலிருந்து தமிழர்களின் கலாச்சாரங்களும், பண்பாடுகளும் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பாரெங்கும் பரப்பிய தமிழ் முழக்கத்தில் பெருமிதம் கொள்கிறேன்.
 
 
 
பினீசியர்களின் நாணயங்கள்:
 
ஆதியில் தமிழ்நாட்டுக் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த தமிழன் மீன் பிடிக்கும் தொழிலையும், மரமேறும் தொழிலையும் கையாண்டு வந்தான். அவன், கடலனில் செல்ல, பனை மற்றும் தென்னை மரங்களை ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் படகுகள் அமைத்து நீரில் மிதக்கும் கற்றிருந்தான். மரமேறிகளாகிய தமிழன் பினீசியர்கள் எனப்பேரேற்று பாரெங்கும் பரவினான். அவன் கடலைக் கடக்கப் படகுகளை (பரிசில்கள்) பயன்படுத்தினான். ஆண்டுகள் பல கடக்க, ஆற்றலும் பல பெற்றான், வளர வளர பாய்மரக்கப்பல்களைப் பயன்படுத்த முனைந்தான். மொத்தத்தில் கடல் கடந்து வழித்தடம் அதாவது கடல்மார்க்கத்தை நன்கு தெரிந்து கொண்டான். வணிகத்தைப் பிற நாடுகளுடன் பெருக்கினான். கடல்வழித் தடத்தைக் கண்டறிந்த பினீசியர் (தமிழன்) படகு பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட்டான்.
 
பினீசியர்களின் நாணயங்கள் கி.மு. 6 - ம் நூற்றாண்டு
 

1. குதிரை வண்டி பொறிக்கப்பட்ட நாணயம்
 2. படகு சின்னம் பொறிக்கப்பட்ட நாணயம்
 
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள பினீசியர்களின் நாணயத்தைச் சற்று உற்றுப்பாருங்கள். ஒன்றில் படகு இருப்பதையும், அதை ஒரு தமிழன் தலைப்பாகையுடன் உட்கார்ந்துகொண்டு மரத்துடுப்பால் தள்ளுவதையும் நன்கு அறிவீர்கள். அப்படகானது தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் கட்டப்படும் படகுகளையும், கட்டுமரங்களையும், ஒத்திருப்பது நன்கு புரியும். அப்படகில் சூலம் போன்ற ஒரு மீன்பிடி ஆயுதம் இருப்பதையும் காணுங்கள்.
 
ஒரு தமிழன், ஒரு படகில் தலைப்பாகையுடன் உட்கார்ந்து கொண்டு, துடுப்பால் படகைத் தள்ளிச் செல்வது, 4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கடல்வழி உலகெங்கும் சென்று, தன் தாய்மொழித் தமிழையும், தன் கலாச்சாரப் பண்பாடுகளையும் பாரெங்கும் பரப்பி வரலாறு படைத்தான் என்ற உண்மை தெளிவாகும்.

மற்றொரு நாணயத்தில், தரைவழித் தடம் கண்டு உலகெங்கும் என்று பரவினான் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு தமிழன் (பினீசியர்) சரக்கேற்றப்பட்ட குதிரை வண்டியில், தலைப்பாகையுடன் குதிரைகளை ஓட்டும் காட்சியையும், அவ்வண்டியில் பின்புறமாக பொருட்களை காவல் காத்துக் கொண்டு, ஆயுதபாணியாய் ஓர் தமிழன் நிற்பதையும் காணுங்கள். தரைவழியிலும் தமிழன் உலகாண்டான் என்ற உண்மையை இந்நாணயம் வெளிக்காட்டுகின்றது.

இந்த நாணயங்களே, தமிழர், தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரைவழியாகவும், கடல் கடந்து, நாடு கடந்து உலகெங்கும் வரலாறு கண்டான் என்ற உண்மையை படம் பிடித்துக் காட்டுகிறது. மற்றும் அஸ்ஸியரின் கல்வெட்டுக்கள் தமிழனின் வரலாற்றிற்கு நற்சான்றாய் உள்ள செய்தி பல செப்புகின்றன.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழின் வளர்ச்சி
« Reply #3 on: July 06, 2012, 11:49:11 PM »
தமிழ்மொழியின் நிலை


 
 
இந்த 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் நிலை எவ்வாறு உள்ளது? என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் சற்றுச் சிந்திக்க வேண்டும். பழங்காலம் முதற்கொண்டு இன்றைய காலம் வரை சகல சீரும், சிறப்பும் பெற்று, வெற்றிக் கொடி நட்டுவிட்ட வித்தனாய் வீறுநடை போடும்மொழி நம் தமிழ் மொழியே! ‘தொல்எழுத்தறிஞர் திரு பூலர் அவர்களின் கூற்றின் படி இந்திய மொழிகளிலே முன்னோடி மொழியாக்க் கருதப்படுவது நம் தமிழ் மொழி. குமரிமாந்தன் வரலாற்றை உலகிற்கே பறைசாற்றிய தொன்மை வாய்ந்த நம் தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன? என்று சற்று நோக்குவோம். இன்று அதற்குள்ள சிக்கல்கள் என்ன என்று ஆய்வோம்.

 
 
தொல் பழங்காலத்தில் தாய்மொழியாகிய நம் தமிழ் மொழி ஊமையாய்த் திரிந்து, சைகையாய் மாறி, ஒலியாய் ஒலித்து, வரியாய் வடிவெடுத்து, பல இன்னல்களையும் இடையூறகளையும், பிற மொழித் தாக்குதல்களையும், சமாளித்து குணம் மாறாமல், நயம் குறையாமல், ஒளிமங்காது பேரொலி கொடுத்து, உயரிடம் தேடிய உத்தம மொழியே நம் தமிழ் மொழி! இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபிய மொழி மலாய் (மலேசியா) எபிரேயம் (ஹீப்ரு) பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது. இன்னும் ஒரு நூற்றாண்டில் மேலும் அழிவு ஏற்படும் அயாய நிலையிலுள்ளது.
 
தமிழ் மொழியில் பிற மொழிகளின் ஊடுருவல்கள்
 
 
 
1. ஆங்கிலம்:-

சினிமா, சோப்பு, பேப்பர், டிக்கெட், போலீஸ், பஸ், மோட்டார், பங்களா, பென்சில், லீவு, கோர்ட் போன்று கண்டதில் பாதி ஆங்கிலமே!
 
 
 
2. பிரெஞ்சு:-

கும்பினிய், லாந்தர் லைட், ஆஸ்பத்திரி, பீரோ, பொத்தான் மேலுமுள்ளன.
 
 
 
3. டச்சு

கக்கூஸ், தொப்பி, பப்ளிமாஸ் மேலுமுள்ளன.
 
 
 
4. போர்க்சுகீசியம்:-

கடுதாசி, பேனா, வாத்து, அலமாரி, மேசை சாவி, கோப்பை, பீப்பான், வராந்தா, கிராதி, கொரடா, ஏலம், சன்னல், மேஸ்திரி, மேலும் பலப்பல உள்ளன.
 
 
 
5. உருது:-

அக்கப்போர், அகங்ரகாரம், அண்டா, ஆசாமி, அசல், ராட்டினம், ராஜினாமா, அலாக்காக, அலாதி, இனாம், கச்சேரி, அஸ்திவாரம், உசார், கெடுபிடி, கத்தகை, சந்தா, சராசரி, கம்மி, கப்ஸா, கஞ்சா, சோப்பு, கிராப்பு, கிராக்கி, சரிகை, சாட்டை, சர்பத், சப்பாத்தி, பேஜார், கைமா, சலாம் போன்ற கண்டதில் பாதிக்கு மேல் உருது உள்ளது.
 
 
 
6. துருக்கி:-

துப்பாக்கி, தோட்டா, வான்கோழி, மேலுமுள்ளன.
 
 
 
7. பெர்சியன் (பாரசீகம்):-

டபேதார், திவான், ரஸ்தா, ஜாகீர், சர்தார், அவல்தார் போன்றவைகள்.
 
 
 
8. அரபிய மொழி:-

வசூல், இலாக்கா, பிஸ்மில்லா, சைத்தான், தபா, மகால், ரத்து, ஜப்தி, ஜாமின், தணிக்கை, மகசூல், ஜில்லா மேலுமுள்ளன.
 
 
 
9. மலாய் (மலேசியா):-

சவ்வரிசி, மலாய் (பாலாடை) கிடங்கு, கிட்டங்கி, மலாக்கா, மணிலாக்கொட்டை இன்னும் பல உள்ளன.
 
 
 
10. கிரேக்கம்:-

மத்திகை, கருங்கை, கன்னல், குருஸ் போன்றவைகளை.
 
 
 
11. ஹீப்ரூ (எபிரோயம்):-

ஏசு, யூதர், சாலமன், போன்றவைகள்
 
 
 
12. சீனம்:-

சாம்பான், பீங்கான், காங்கு போன்றவைகள்.
 
 
 
13. சிங்களம்:-

சீசா, போத்தல், பில்லி, அந்தோ, மருங்கை.
 
 
 
14. மலையாளம்:-

வெள்ளம், ஆச்சி, அவியல், சக்கை, சக்கவட, காலன், தளவாடம், சாயி, பிரதமர், வஞ்சிக்கொடி போன்றைகள் மேலுமுள்ளன.
 
 
 
15. கன்னடம்:-

அட்டிகை, சொத்து, சமாளித்தல், குட்டு, கொம்பு, குலுக்கல், பட்டாக்கத்தி, இதர,தாண்டல் போன்றவைகள் மேலுமுள்ளன.
 
 
 
16. தெலுங்கு:-

தெலுங்கிலிருந்து 325 சொற்கள் தமிழ்மொழியில் புகுந்துள்ளன. அக்கடா, பாம்பு, பெத்த, தீவிட்டி, ஜாடி, ஜதை, தண்டா, சளிப்பு, கடப்பாரை, கட்டடம், உருண்டை, சாம்பார், சாவடி, பேட்டை, வில்லங்கம், தெம்பு, அட்டவணை, குடுமி, காயம், ரம்பம், வாணலி, தடவை, சிமிழி, சிட்டிகை, கொலுச்சு போன்ற பலப்பல உள்ளன.
 
 
 
17. மராத்தி:-

சந்து, பொந்து, சலவை, தடவை, நீச்சல், கில்லாடி, அபாண்டம், சேமியா, கிச்சடி, கசாயம், பட்டாணி இப்படிப்பல மராத்தி மொழிச்சொற்கள் தமிழில் கலந்துள்ளன.
 
 
 
18. இந்தி:-

அரே, நயா பைசா, சாதி, சாயா, அந்தர், ரூப்பியா போன்ற பல உள்ளன.
 
 
 
மொழி ஊருவல்கள்:

நம் தமிழ் மொழியில் மாற்று மொழிகளின் கலப்பு இருக்கத்தான் செய்கிறது. மேலே எடுத்துக் காட்டிய பிறமொழிக் கலவையை உற்று நோக்குங்கள். தவிர்க்க முடியாத ஒன்று தான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு லிட்டர் பாலில் 1 லிட்டர் தண்ணீரைக் கலந்தாலும் பால் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 900 மில்லித் தண்ணீரும் 100 மில்லி பாலுமானால் இதற்கு பெயர் என்ன? பாலா? இல்லை தண்ணீரா? பாலில் தண்ணீர் கலவையா? இல்லை தண்ணீரில் பால் கலவையா? இப்படிப் பல கேள்விகளும், பயமும் உருவாகிறது. தமிழ் மொழியில் பிறமொழிக் கலவை இருக்கலாம். ஆனால் மித மிஞ்சினால் தமிழ் மொழி மறைந்து விடுமே! நம் மொழி அழிவது சரியா?
 
 
 
பிறமொழி வரிவடிங்களின் கலவைகள்

பிறமொழிகள் நம் தமிழ் மொழியோடு கலந்து, இணைந்து இயம்புவதை ஏற்றுக் கொள்ளலாம். “அதாவது புறம்போக்கு நிலத்தில் எவரும் பயிர் செய்வதைப் போல ஏற்றுக் கொள்ளலாம்”. ஆனால் நமக்கே உரிய பட்டா நிலமாகியதமிழ் மொழியில் மாற்று மொழிகளுக்குப் பட்டா என்னும் வரிவடிவைக் கொடுக்கலாமா? மேலும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு இணையாக உரிமையும் தகுதிதகளையும் கொடுக்கலாமா? தமிழ் வரிவடிங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்து அட்டவணையில் இடம் கொடுக்கப்படலாமா? நன்கு சிந்தித்து விடை காணுங்கள். செயல்படவும் முனைந்திடுங்கள்.
 
 
 
பிறமொழி எழுத்துக்களின் சுமை

உலக மொழிகளோடு நம் தமிழ் மொழியை ஒப்பிட்டால் நம் மொழியில் எழுத்துக்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது நன்கு புரியும். என் சிந்தனைக்கு நம் தமிழ் மொழியெழுத்துக்களில் “ஐ” –அய் “ஔ” “ஃ” அக் போன்றவைகள் பிற மொழி வந்தவைகளே! அவைகள் நம் மொழியில் உட்புகுந்து, நம் மொழியை ஆட்கொள்கிறது. அத்தோடின்றி ஏதோ சற்றும் ஒலிக்கு ஒவ்வாத வரிவடிவம் பெற்று எழுதப்பட்டவணையில் இடமும் பெற்றிருப்பது சாத்தியமில்லை. அப்புறப்படுத்துவது நலமே!
 
1. “ஐ” மற்றும் “ஔ” - பல்லவரின் - பிராமிலிபி என்ற மொழிவழி வந்தவைகள். காஞ்சிப் பல்லவரின் கைப்பொம்மைகள், தமிழுக்கு இழுக்கு ஏற்பட வைக்கிறது. “கை” முதல் “னை” வரையுள்ள 18 அய்காரத்தயும் நீக்கிவிட வேண்டும்.
 2. “ஃ” இது சமஸ்கிருதம் என்னும் வடமொழி வழி வந்தது. இது முழுமையான எழுத்து வரிவடிவமல்ல. மூன்று புள்ளிகளே! வரி வடிவமே இல்லாத மும் முற்றுப் புள்ளிகளை ஆயுத எழுத்து என்று எவ்வாறு ஏற்பது?
 
3. “ஔ” வுடன் புணர்ந்து ஔகார ஒலியெழுப்பும் உயிர்மெய் எழுத்துக்களாகிய, கௌ முதல் னௌ வரையுள்ள 18 வரிவடிவங்களையும் அடியோடு நீக்கிட வேண்டிய பிற மொழியெழுத்துக் கலவைகளே! மேற்காணும் “ஔ” “ஐ” மற்றம் “ஃ” என்ற உயிர் மற்றும் ஆய்த எழுத்துக்களின் வடிவங்களை நீக்கிவிட வேண்டும். மேற்காணும் சீர்திருத்தங்களை நாம் செய்தால் தமிழ் மொழி செப்பனிடப் பட்டுவிடும். வரிவடிவை மட்டுமே நீக்குகிறேன். ஒலிவடிவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
 
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பெருங்கனவு நனவாகிவிடும். தந்தை பெரியாரின் தமிழெழுத்துச் சீர்திருத்த நெறியினைப் பின்பற்றினால் வெகு சுலபமாக நம் தாய் மொழித் தமிழைச் செப்பனிட்டு விடலாம். ஐ, ஔ, ஃ, இந்த மூன்று எழுத்துக்களைப் பற்றி பின்வரும் பகுதிகளில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழின் வளர்ச்சி
« Reply #4 on: July 06, 2012, 11:54:33 PM »
சங்கங்கள்



 
 
நான்கு தமிழ்ச் சங்கங்கள்
 
பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட அன்பின் மிகுதியாலும், ஆழ்ந்த பற்றுதலாலும் தங்கள் தலைநகரங்களில் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள் என்று பல இலக்கியச் சான்றுகளின் வாயிலாகவும், செப்பேடுகளின் வாயிலாகவும், மன்னர்களின் கல்வெட்டுகள் வாயிலாகவும் நாம் அறிகின்றோம். முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய முப்பெரும் தமிழ்ச்சங்கங்கள் அழிந்து போன போதிலும் நான்காம் தமிழ்ச் சங்கம் இன்றும் இயங்கி கொண்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்றே. தமிழ்ச் சங்கங்களைப் பற்றியும், சங்க வரலாற்றுச் செய்திகளைப் பற்றியும் அறிய பல இலக்கியச் சான்றுகள் உதவுகின்றன.
 
 
 
சங்கச் சான்றுகள்
 
1. கடைச்சங்கப் புலவராகிய சீத்தலைச்சாத்தனார்
 “புலம்புரிச் சங்கம் பொருளொடு முழுங்க” என மணிமேகலையில் கையாண்டுள்ளார். மற்றுமோரிடத்தில்,
 
“பன்னீராண்டு பாண்டி நன்னாடு மன்னுயிர் மனிய மழை வளமிழந்தது புலவரை எல்லாம் வம்மின் யான் உங்களைப் புரந்தரகில் லேன்”
 
என்கிறார். இதன் மூலம் பாண்டியர்கள் சங்கம் வளர்த்தனர் எனத் தெளிவாகிறது.
 
2. முச்சங்கச் செய்திகளையும் வரலாறுகளையும் தனியொரு அகவற்பாவாலும், சிலப்பதிகாரத்தாலும், இறையனார் களவியல் உரைகளாலும் அறிய முடிகிறது. பிற்கால திருவிளையாடலிலும் சில சங்கச் செய்திகள் உள்ளன.
 
3. “மதுராபுரிச் சங்கம் வைத்தும்
 மகா பாரதம் தமிழ்ப் படுத்தும்” எனச் செப்புகிறது சின்னமனூர் செப்பேடு - பாண்டியன் மெய்க்கீர்த்தி.
 
4. “தலைச் சங்கப் புலவனார் தம்முள்” - பெரிய புராணம்
 
5. “சங்கத் தமிழ் மூன்றும் தா” - ஔவையார்.
 
6. “புகலி ஞானசம்பந்தன் உரை செய்
 சங்கமலி செந்தமிழ்கள்” - திருஞானசம்பந்தர். திருவாதவூர்
 
7. “இமிழ்குரல் முரசன் மூன்றுடன் நாளும்
 தமிழ்கெழு கூடல் தண் கோல்வேந்தே” - காரிக் கண்ணனார் புறம் 56.
 
8. “தொல்லாணை நல்லாசிரியர்
 புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
 நிலந்தரு திருவின் நெடியோன்” - மதுரைக்காஞ்சி 761 - 763.
 
9. “தமிழ் நிலைபெற்ற தாங்கருமரபின்
 மகிழ்நனை மறுகின் மதுரை” - சிறு பாணாற்றுப்படை 66-67
 
10. “நிலனாவிற்றிரிதருஉம் நீண்மாடக்கூடலார்
 புலனாவிற் பிறந்த சொற்புதிதுண்ணும் பொழுதன்றோ” - கலித்தொகை 35
 
11. “சங்க முத்தமிழ்” - ஆண்டாள் பெரிய திருமொழி
 
12. “பாடு தமிழ் வளர்த்த கூடலின் வடாது” புறந்திரட்டு - புகழ்மாலை
 
மேல்காணும் பல்வேறு இலக்கியச் சான்றுகளின் வாயிலாக முச்சங்கங்கள் இருந்த உண்மைகளை தெளிவாக உணரமுடிகிறது. மேலும் நக்கீரனாரின் இறையனார் அகப்பொருளைரையும் கடைச் சங்கம் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கின்றது. இன்னும் பல ஆதாரங்கள் உண்டு.
 
 
 
முதல் சங்கம்
 
 
 
தலைச்சங்கம் அல்லது முதல் சங்கம்
 
கி.மு. 5000 - கி.மு. 3000 வரை.
 
பழம்பாண்டியமன்னனான “காய் சினவழதி” என்பவனால் முதல் சங்கம் நிறுவப்பட்டது. பழம் பாண்டி நாட்டின் தலைநகராக குமரியாற்றங்கரையில் வீற்றிருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். மன்னன் காய்சினவழுதி முதல் முதலாம் கடுங்கோன் வரை, 89 பாண்டிய மன்னர்கள் அச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தமிழை ஆய்தனர். அவர்களின் அகத்தியர் தலைசிறந்த புலவராய்த் திகழ்ந்தார் தென்மதுரையை தலைநகராகக் கொண்டு முதல் சங்கம் கி.மு. 5000 முதல் கி.மு. 3000 வரை ஏறக்குறைய 2000 ஆண்டுகள் சிறப்புடன் வளர்ச்சி பெற்று வந்துதது.
 
அக்காலத்தில் ஈழம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பக்றுளியாற்றிற்கும் குமரிக்கோட்டிற்கும் இடையே இருந்த பெரும் நிலப்பகுதியே பழம் பாண்டிய நாடு. இதன் தலைநகர் தென்மதுரை. ஏழுபனை நாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழு மதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு போன்ற 49 நாடுகள், மலைகள், ஆறுகள், காடுகள் கொண்ட நாடு பாண்டிய நாடு என அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.
 
திடீரன நிகழ்ந்த கடற்கோளால் பக்றுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்குணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. பாண்டி நாட்டுடன் பழமை வாய்ந்த லெமூரியாக் கண்டமும் அழிவுற்றது எனப் பேராசிரியர் ஹெக்கல் கூறுகிறார்.
 
 
 
 
 
இரண்டாம் சங்கம்
 
 
இடைச்சங்கம் அல்லது இரண்டாம் சங்கம்
 கி.மு. 3000 முதல் 1500 வரை
 
முதல் சங்கமிருந்த தென்மதுரை அழிந்து போகவே மீண்டும் சங்கத்தை உருவாக்க எண்ணிய “பாண்டிய மன்னம் கடுங்கோன்” என்பவன் கபாடபுரத்தை அமைத்து அதில் இடைச்சங்கத்தை நிறுவி தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தான். இச்ச்கம் சுமார் கி.மு. 3000 முதல் கி.மு 1500 வரை ஏறக்குறைய 1500 ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது. இச்சங்கத்தில் அவைப் புலவர்களாக தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்களும் வீற்றிருந்தனர். இவர்களுக்கு அகத்தியம், மாதிரி நூலாகத் துணைபுரிந்தது. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்றவைகளின் வாயிலாக கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. மேலும் கபாடபுரம் பாண்டியனின் தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த துறைமுகமாகவும் திழ்ந்தது.
 
 
 
“இவ்வகை யரசிற் கவியரங்கேறினார்
 ஐவகையரசர் ஆயிடைச் சங்கம்
 விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக்
 கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்”
 
 
 
என்ற பழைய அகவற்பாவும் கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்த செய்தியை சுட்டிக் காட்டுகிறது.
 
இடைச்சங்க காலத்தில் பல இலக்கியங்களும், இலக்கண நூல்களும் வெளிவந்தன. அவைகள் பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, இசை நுனுக்கம், தொல்காப்பியம் போன்றவைகளாம். இதில் தொல்காப்பியம் தலைசிறந்த நூலாகப் போற்றப்பட்டது. கி.மு. 1500 அளவில் ஏற்பட்ட கடற்கோளானது கபாடபுரம் இருந்த பகுதி முழுவதையும் அழிந்து விட்டது. கடற்கோளால் பாண்டிய நாட்டையும், இரண்டாம் தமிழ்ச் சங்கத்தையும் இழந்ததோடு இடைச்சங்கம் இலக்கியங்களையும் இழக்க நேரிட்டது.
 
 
 
 
 
மூன்றாம் சங்கம்
 
 
 
கடைச்சங்கம் அல்லதுமூன்றாம் தமிழ்ச்சங்கம்
 கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை
 
கபாடபுரம் அழிவுற்ற அதேவேளை இடைச்சங்மும் சேர்ந்தே அழிவுற்றது. அழிவுற்ற பாண்டி நாட்டையும் தமிழ் சங்கத்தையும் மறுபடியும் உருவாக்க எண்ணிய “முடத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உண்டு பண்ணி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தை உருவாக்கினான். கடைச்சங்க காலம் கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை. இப்பொழுது உள்ள மதுரையில் கடைச்சங்கம் நிலைப்பெற்றிருந்தது என இறையனார் அகப்பொருளுரை கூறுகிறது. இச்சங்கத்தைப்பற்றி செய்திகள் நமக்கு நிறையக் கிடைத்துள்ளன. கடைச்சங்கத்தில் 49 அவைப் புலவர்கள் தமிழாய்ந்துள்ளனர். அவர்கள் நக்கீரன், நல்லந்துவனார், சீத்தலைச்சாத்தனார் போன்றவர்கள் தலைசிறந்தவர்கள் ஆவார். கபிலர், பரணம் போன்ற பெரும்புலவர்களும் கடைச்சங்ககாலத்தவர்களே. இச்சங்கத்தில் தான் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும் இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவரே. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கடைச்சங்கத்தில் இயற்றப்பட்டவைகளே.
 
 
 
கடைச் சங்கத்தின் சிறப்புகள்
 
பழைய திருவிளையாற் புராணத்தின் வாயிலாக சங்கப் பலகை என்று ஒன்று இருந்த செய்திகளை அறியமுடிகிறது. “மொழியறி சங்கப் பலகை” என்றும் “பாவறி சங்கப்பலகை என்றும்” இருவகை சங்கப்பலகைகள் இருந்ததாக நமக்குத் தெரிவிக்கின்றது. பாடிக்கொண்டிருக்கும் பாடலை சங்க பலகை ஏற்றால்தான் புலவர் பெருமக்கள் அப்பாக்களைப் போற்றுவார்களாம். பாண்டிய மன்னன் ஒருவன் கடைச்சங்கத்திலிருந்த நாற்பத்தொன்பது புலவர்களின் உருவங்களை சிலைகளாகச் செய்து நிறுவினானாம். ஒரு சமயம் பொய்யாமொழிப் புலவர் அச்சிலைகள் முன் நின்று பாடினாராம். அவர் பாட்டைக் கேட்டு ரசித்த அப்பதுமைகள் தலையசைத்ததாகப் பழஞ்செய்தி கூறுகின்றது.
 
 
 
கடைச்சங்கத்தின் அழிவு
 
சிறந்து விளங்கிய கடைச் சங்கமாது பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதியின் காலத்திற்குப்பின் நில்லாது மறைந்தொழிந்தது. அவனுப்பின் வந்த பாண்டியர்கள் சங்கம் நிறுவாது, தமிழை வளர்க்காது போயினர். காரணம், அரசியல் குழப்பங்கள் பல நிகழ்ந்தன. களப்பியர்களின் படையெடுப்புகள், பல்லவர்களின் படையெடுப்புக்கள், பாண்டிய நாட்டில் பன்னீராண்டு கடும் பஞ்சம் காரணமாக சங்கப் புலவர்களைப் பாதுகாக்க முடியாமற்போகவே அவர்கள் சேர, சோழ நாடு நோக்கிச் சென்று விட்டனர். இச் சூழ்நிலையில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சங்கம் அழிவுற்றது என இறையனார் அகப்பொருளுரை தெரிவிக்கிறது.
 
 
 
நான்காம் சங்கம்
 
 
 
நான்காம் தமிழ்ச்சங்கம் கி.பி. 1901 முதல்
 
பிலவ ஆண்டு ஆவணித் திங்கள் 13-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை சித்திரை மீன் கூடிய நன்னாளில் 14. 09.1901 பகல் 1.30 மணிக்கு மேல் 2.45 மணிக்குள் மதுரை சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது. அதே நன்னாளில்

1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை,

2. பாண்டியன் புத்தகசாலை

3. நூலாராய்ச்சி சாலை என்பனவும் தொடங்கப்பெற்றன.
 
 
 
சங்கம் தோன்றக் காரணங்கள்
 
முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழவுற்று சிதைந்தன. கடைச்சங்க பாண்டி மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்ச் செயல்இழந்து விட்டது. பண்டைய நாளில் தமிழ் மொழிகும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய பாண்டியத்துரைத் தேவர், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப்பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப்பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தனர்.
 
 
 
சங்க நோக்கங்கள்
 
1. நான்காம் தமிழ்ச்சங்கம் பொழுது போக்குக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ, அரசியல் செல்வாக்குப் பெறுதற்காகவோ அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல.
 
2. அரசின் பொருட்கொடையையோ, பல்கலைக் கழகங்களின் நல்குதலையோ எதிர்பார்த்து தொடங்கப்பட்டதும் அல்ல.
 
3. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், முச்சங்கம் கண்டு முன்பு தமிழ் மொழி பெற்றிருந்த உச்ச நிலைக்கு மீண்டும் உயர்த்த வேண்டும் என்ற நன்னோக்கோடும் உருவாக்கப்பட்ட சங்கமே நான்காம் தமிழ்ச்சங்கம்
 
 
 
தொடக்க நாளிலே உருவாக்கப்பட்ட சங்கத் தீர்மானங்கள்
 
நான்காம் தமிழ்ச்சங்கத் தொடங்க விழாவிற்கு மன்னர் பாசுகர சேதுபதியவர்கள் தம் பரிவாரங்கள் புடைசூழ வந்திருந்தார். சேதுநாட்டு அவைப்புலவர்களும் பாண்டித்துரை தேவர் தம் அவைப் புலவர்களும் குழுமினர். பெரும்புலவர்களாகிய உ.வே. சாமிநாதைய், சடகோப ராமாநுசாச்சாரியார், ராகவ ஐயங்கார், பரிதிமாற் கலைஞர், சண்முகம்பிள்ளை விழாவிற்கு வந்திருந்தனர். மதுரை மாநகரமே விழாக்கோலம் கண்டது. சங்கத் தொடக்க நாளிலேயே கீழ்க்காணும் “9 தீர்மானங்கள்” நிறைவேற்றப்பட்டன.
 
1. தமிழ்க் கல்லூரி உண்டாக்குதல்.
 2. தமிழ் ஏடுகளை அச்சிட்டு பயன்படுமாறு தொகுப்பது.
 3. வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல்.
 4. வடமொழி ஆங்கில நூலைகளை தமிழில் மொழி பெயர்த்தல்
 5. தமிழ்க் கல்வி பற்றிய செந்தமிழ் இதழ் வெளியிடுதல்.
 6. தமிழில் தேர்வு நடத்தி பட்டமும் பரிசும் வழங்குதல்.
 7. தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.
 8. தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல்.
 9. வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை அரங்கேற்றுதல்
 
இந்த ஒன்பது நோக்கங்களை நிறைவேற்றத்தக்க ஏழு அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கின.
 
 
 
1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை.
 2. பாண்டியன் புத்தக சாலை.
 3. நூலாராய்ச்சி சாலை.
 4. கல்விக் கழகம்.
 5. தமிழ்ச் சங்க முத்திராசாலை (அச்சகம்)
 6. செந்தமிழ் என்னும் திங்களிதழ்
 7. தமிழ்த் தேர்வு என்பவைகளாம்.
 
 
 
சேது சகோதரர்களின் கொடைகள்
 
ஒன்றுவிட்ட உடன் பிறப்புக்களான மன்னர் பாண்டித்துரையாரும் மன்னர் பாசுகர சேதுபதியவர்களும் இளம்வயிதலேயே தந்தையர்களை இழந்தபோதிலும் மனம் தளராமல் தமிழ்த் தொண்டாற்றத் துணிந்தனர். இன்று நான் காணும் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம் போன்ற அனைத்துமே அவர்கள் தந்தருளிய கொடைகளே. வேந்தர் பாசுகரசேதுபதி சங்கத் தொடக்க நாளிலே 10000 வெண்பொன் வழங்கி வாழ்த்தினர். பாண்டித்துரைத் தேவர் தாம் குடியிருந்த மாளிகையையே சங்கத்திற்குத் தியாகம் செய்த்ததோடு மட்டுமல்லாமல் சங்கம் என்ற குழந்தை எந்தவிதக் குறையின்றி வளரத் தேவைபடும் அனைத்து வசதிகளையும் தம் சொந்தச் செலவிலேயே பராமரித்தார். சங்கம் என்றுமே சுயமாக தங்குதடையின்றி நடைபெறுவதற்கு தக்க வகையில் சில நிலையான அறக்கட்டளை பாண்டிய மன்னர் பாசுகர் சேதுபதியவர்கள், கடைச் சங்க பாண்டிய மன்னம் உக்கிரப் பெருவழுதி காலத்தில் கி.பி. 250ல் மறைந்த தமிழ்ச் சங்கம், 1901இல் பொன்பாண்டித்துரைத் தேவரால் மீண்டும் நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் உயிர்பெற்று எழுந்தது. நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, உயிர்கொடுத்து, உடல் வளர்த்து, கல்லூரி கண்டு, செந்தமிழ் என்னும் திங்களிதழ் பெற்று, தமிழ்மனம் வீச வீரநடை போடுகிறதென்றால் அது சேது சகோரதர்கள் வழங்கிய கொடைகளே.
 
 
 
இன்றும் நான்காம் தமிழ்ச் சங்கம்
 அன்று, அதாவது 1910 இல், எவ்வளவு சிறப்பாக இந்த நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டதோ அதே சிறப்புடன் அதே நோக்கங்களை நிறைவேற்றி, வளர்ச்சிப் பாதை நோக்கி முன்னேறிச் செல்கிறது. இன்று சங்கம் தொடங்கப்பட்ட அன்றே நிறைவேற்றப்பட்ட முதல் அய்ந்தாம் தீர்மானங்கள் உடனே நிறைவேற்றப்பட்டு, செந்தமிழ்க் கல்லூரியாகவும், செந்தமிழ் திங்களிதழாகவும் மலர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருகின்றன. பல தமிழ் அறிஞர்களையும், தமிழ் முனைவர்களையும், தமிழ் இலக்கிய மேதைகளையும் உருவாக்கி மகிழ்கிறது நான்காம் தமிழ்ச் சங்கம்.
 
தமிழ்ச் சங்க நிர்வாகங்களை, தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு கண்காணித்து வருகிறது. ஆட்சிக் குழுவின் தலைவராக - முகவை மன்னர் மாட்சிமை தாங்கிய திரு, இராசா நா .குமரன் சேதுபதியவர்களும், துணைத் தலைவராக திருமதி. இராணி இலட்சுமி நாச்சியார் அவர்களும் மாண்புமிகு அய்யா திரு. இரா. அழகுமலை அவர்கள் செயலாளராகவும் மற்றும் ஒன்பது ஆட்சிக்குழு உறுப்பினர்களும் ஆட்சிக் குழுவில் பங்கேற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
 
செந்தமிழ்க் கல்லூரியின் நிர்வாகங்களை கல்லூரிக் குழு கண்காணிக்கிறது. கல்லூரிக் குழுவின் தலைவராக மாண்புமிகு டாக்டர் ந. சேதுராமன் அவர்களும், செயலாளராக மாண்புமிகு அய்யா திரு. இரா. குருசாமி அவர்களும் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்டு சிறப்புடன் செயல்பட்டுவருகிறது. செந்தமிழ் திங்கள் இதழ் சிறப்பாகத் தமிழ்த் தொண்டாற்றி வருகிறது.
 
 
 
பாண்டித்துரைத் தேவர்கள் உருவச்சிலை
 
கொடைவள்ளல், சங்கம் கண்ட தமிழ்ச் செம்மல், மாண்புமிகு மன்னர் பாண்டித்துரைத் தேவரின் திரு உருவச் சிலை மீண்டும் அதே இடத்தில் 2007இல் சங்கம் நிறுவியது. சங்கத் தலைவர், துணைத்தலைவர், சங்கச் செயலர், சங்க ஆட்சிக்குழு, பொதுக்குழு, கல்லூரிக் குழு, கல்லூரிப் பேராசிரியப் பெருமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் ஆர்வத்தாலும் அயராத உழைப்பாலும் சிலை நிறுவப்பட்டதோடு மட்டுமல்லாமல், மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதைகளோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
 
 
ஆசிரியர் குழு
 
நான்காம் தமிழ்ச் சங்கவெளியீடாகிய செந்தமிழ் என்னும் திங்கள் இதழ், 1902 முதல் இன்று வரை மிகச்சிறப்பாக தமிழ்த் தொண்டாற்றி வருகிறது. இவ்விதழை சிறப்புடன் வெளியட ஆசிரியர் குழு ஒன்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. இக்குழுவில் தமிழறிஞர்களும், பெரும்புலவர்களும், பேராசிரியப் பெருமகளும், முனைவர் பெருமக்களும், மொழி ஆய்வாளர்களும், தமிழார்வளர்களும் பங்கேற்று தொண்டாற்றுகிறார்கள். தமிழ் அறிஞர் முனைவர் திரு. தமிழண்ணல், பெரும்புலவர் திரு. இரா இளங்குமரன், நா. பாலுசாமி, ம. ரா. போ. குருமசாமி, அ.அ. மணவாளன், கதிர் மகாதேவன் மற்றும் தமிழார்வளர்கள் ஆலோசகர்களாகவும் அவைப் புலவர்களாகவும் வீற்றிருக்கின்றனர்.
 
நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களால் 1901 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம் நூறு ஆண்டைக் கடந்து எட்டாம் ஆண்டில் நடைபயின்று கொண்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெறவேண்டிய நூற்றாண்டு விழா இவ்வாண்டு 2008ல் நடைபெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் சங்க ஆட்சிக்கு குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழா வெற்றிவாகை சூடட்டும். கொடை வள்ளல் பாண்டித்துரைத் தேவரின் புகழ் ஓங்கட்டும். நான்காம் தமிழ்ச் சங்கம் செழித்தோங்கி வளரட்டும். நாற்சங்கம் கண்ட செம்மொழி தமிழே நீ வாழ்க!