Author Topic: அறநெறிச்சாரம்  (Read 12151 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அறநெறிச்சாரம்
« on: September 14, 2011, 05:45:49 PM »
                                               முனைப்பாடியர் இயற்றிய

                                 அறநெறிச்சாரம்
 
                       திரு ஆ பொன்னுசாமிப் பிள்ளை உரை




பதிப்புரை 

இந்நூல் அருக சமயத்து அறிஞர் முனைப்பாடியார் என்பார் இயற்றியது. இருநூற்றிருபத்தாறு வெண்பாக்கள் கொண்டது. வெண்பாக்களின் அமைப்பும் பொருளும் அறிஞருள்ளத்தைக் கவரும் மாண்பின. அருகக் கடவுளும் அருக சமயமும் அருக ஆகமும் சிறப்பாகக் கொண்டுரைக்கும் வெண்பாக்கள் நீங்க, அறம் ஒழுக்கம் முதலியன கூறும் ஏனைய பாக்கள் செம்பாகமாய்ச் சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல் முதலிய அழகு நிறைந்து சமய வெறுப்பின்றி எவரும் பயின்று மேற்கொள்ளத் தக்கனவாயிருக்கின்றன. உருவக முகத்தால் விளக்கியிருக்கும் பாடற் கருத்துக்கள் பசுமரத்தாணிபோல் மனத்திற் பதிந்து நிலைக்கும் பண்பு வாய்ந்தவை.


சங்கச் செய்யுள்கள் முதல் கம்பராமாயணம், நளவெண்பா முதலிய பிற்காலத் திலக்கியங்கள் வரை பன்னூல்களினின்றும் எடுத்த பாக்களின் தொகுப்பே புறத்திரட்டு. அதில் இந் நூலிற் காணும் வெண்பாக்களிற் சில காணப்படுகின்றன. இத்திரட்டு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகட்கு முன் திரட்டப்பெற்றது. ஆகவே, இவ் அறநெறிச்சாரம் ஐந்நூறு ஆண்டு கட்கு முற்பட்டதொரு பழைய நூல்.
இந்நூல் மூலமட்டும் ஏட்டுச்சுவடியிலுள்ளபடி இற்றைக்கு முப்பத்து மூன்று ஆண்டுகட்கு முன்னர், திருசிரபுரம் நேஷனல் உயர்நிலைப்பள்ளித் தமிழ்ப்பண்டிதர் திரு. தி. ச. ஆறுமுக நயினார் அவர்களால் வெளியிடப்பெற்றுள்ளது. அவர்கள் பதிப்புக் குறிப்பில் “விரைவில் வெளியிட வேண்டி நேர்ந்தமையால் தக்காரெடுத்து ஒழுங்குபடுத்தி வெளியிடற்கு ஒரு துணையாக இது வெளியிடப் பெறுவதாயிற்று” என்று குறித்துள்ளார்கள்.

பின்னர், சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தலைமைத் தமிழ்ப்புலமைச் செல்வர் திருமணம். செல்வக்கேசவராய முதலியார் எம். ஏ., அவர்கள், இந்நூலின் செய்யுளமைதி, நீதி, உருவக வுயர்வு முதலியன கண்டு மகிழ்ந்து, யாவரும் விரும்பி ஏற்றுப் பயின்று அயின்று மகிழ்ந்திடுமாறு நாலடியார்போற் பாகுபடுத்தி வெளியிட முயன்று, அருங்கலச் செப்பின் றுணைகொண்டும், இந்நூல் பதினொன்றாஞ் செய்யுளாகிய “காட்சி யொழுக்கொடு ஞானந்தலை நின்று” என்னுஞ் செய்யுளின் பகுப்புக் கிணங்கவும் பாகுபடுத்தி, அருஞ்சொற் குறிப்புடனும் சில மேற்கோள்களுடனும் 1905 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். குறித்த இவர்கள் வெளியீடு, பின்னிரண்டு பதிப்புகளும் பெற்றுள்ளன.

அருகசமய அருங்கொள்கை விளக்கத்துடன் நல்லொழுக்கம், இல்லறம், துறவறம் ஆகிய இவற்றி னியல்புகளை எளிய தீந்தமிழில் விளக்கி வீடெய்து மாற்றையும் அடைவிக்கும் இந்நூற்கு, காலத்தில் வேண்டப்பெறும், பதவுரை, குறிப்புரை, அருஞ்சொல் விளக்கம் முதலியவற்றை அமைத்தும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்போற் பள்ளி மாணவரும் பிறரும் பயின்று தேர்தற்குத் துணையாக வெளியீடொன்றை விரைவில் வெளியிட்டுதவும்படி தமிழறிஞர்கள் பலர் கேட்டுக்கொண்டார்கள். அதற்கிணங்க இதுகாறும் வெளியிடப்பெற்ற மூலநூல்களையும் ஏட்டுச் சுவடிகளையும் ஒப்புநோக்கிச் சிறந்த மூலபாடங் கண்டோம்; பதவுரை விளக்கவுரை முதலியன எழுதி முடித்தற்கு ஏற்றவர் சேலம் மாவட்டம், இராசிபுரம், நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் திரு. ஆ. பொன்னுசாமிப் பிள்ளை அவர்கள் என்பதை மேற்படி மாவட்டக் கல்வித்துறைத் தலைவரும், நம் கழக வாயிலாகத் தம் அரும்பெறற் புலமை விளக்கும் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிட்டு வருபவருமாய் முன் விளங்கிய காலஞ்சென்ற திரு. T.B. கிருஷ்ணசாமி முதலியார், எம்.ஏ., பி.எல்., அவர்கள் வாயிலாக அறிந்து அவர்களைக் கொண்டே பதவுரை முதலியன எழுதி வாங்கலானோம்.

எளிதில் உரைத்தெளிவு காணமுடியாத இந்நூல் 44, 47, 127, 131, 147, 185, 210 ஆம் செய்யுள்களுக்கு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள், திருச்சி, துரைத்தன மகம்மதிய உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் திரு. அ. நடராச பிள்ளை யவர்கள் ஆகிய இவ்விருவரும் வேண்டும் மேற்கோள்களுடன் உரை விளக்கம் செய்து உதவியுள்ளார்கள்.
இந் நூற் பொருட்பாகுபாடு திருமணம், செல்வக்கேசவராய முதலியாரவர்கள் பதிப்பு முறையைத் தழுவியிருப்பினும், செய்யுட்கள் தனித்தனி நுதல்பொருள் அமைப்பைக் கொண்டிலங்குவது பயில்வார்க்கு இன்பம் பயப்பதாம். குறிப்பு மொழிவழிப் பொருள் நயம் தோற்றுவிக்கும் ஆசிரியரின் ஆற்றல் 207, 208 ஆம் செய்யுட்கள் முதலியவற்றால் விளங்கும். இப் பதிப்பில் அருக சமயத் துணிபுகள் கொண்டு எளிதில் பொருட்டுணிபு விளக்கம் பெறாதிருக்கும் ஆறு செய்யுட்கள் இறுதியில் மூலபாடமாக இணைக்கப்பெற்றிருக்கின்றன.

கழகம் ஏற்பட்ட காலத்திலிருந்தே சங்கமருவிய நூல்களில் பதினெண் கீழ்க்கணக்கைத் திருத்தமான முறையிற் பதிப்பித்து வெளியிடவேண்டித் தாம் அரிதின் ஆராய்ந்து எழுதிவைத்த கையெழுத்துப் படிகளைக் கழகத்திற் குதவி ஊக்கிவந்த தமிழ்ப்பெரும் புலவர் திரு. தி. த. கனகசுந்தரம் பிள்ளை, பி. ஏ., அவர்கள் மூலப்படி யொன்றும் இந்நூல் அச்சிட்டு முடியுங்காலத்தில் ஒப்புநோக்கக் கிடைத்தது. அதிற் கண்ட பாட வேற்றுமைகளும் அடிக்குறிப்பாகச் சேர்க்கப்பெற்றுள்ளன; இதற்கு முந்திய பதிப்புக்களிற் காணாத செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை இந்நூலிற் சேர்க்கப்பட்டுள்ளமை பயில்வார்க்கு உறுதுணையாம். பதவுரையிலும் மூலபாடத்திலும் சிறந்த விளக்கக் குறிப்புகள் கிடைக்குமாயின், அடுத்த பதிப்பை இதனினும் திருத்தமாகப் பதிக்க விரும்புகின்றோம்.

தமிழ்மக்கள் இத்தகைய வெளியீடுகளைப் போற்றி ஊக்க முன் வருவார்களாக.

-------------------------------------------------------------------------------------------------------------
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #1 on: September 14, 2011, 05:54:38 PM »
   
1. கடவுள் வாழ்த்து


தாவின்றி எப்பொருளுங் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேற் சென்றான் புகழடியை - நாவின்
துதித்தீண் டறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து


(பதவுரை) தா இன்றி-குற்றம் இல்லாமல், எப்பொருளும்- எல்லாப் பொருள்களி னியல்பையும், கண்டு உணர்ந்து-ஆராய்ந்து அறிந்து, தாமரைப் பூவின் மேல்-தாமரை மலரின் மேல், சென்றான்-சென்ற அருகனது, புகழடியை - பெயர்பெற்ற திருவடிகளை, நாவின் துதித்து-நாவினால் புகழ்ந்து, ஈண்டு-இங்கே, அறநெறிச்சாரத்தை- அறநெறிச்சாரமாகிய இந்நூலை, தோன்ற- விளங்க, சுருக்கய் விரைந்து-மிக விரைவாக, விரிப்பன்- விரித்துக் கூறுவேன்.

(குறிப்பு) இது தற்சிறப்புப்பாயிரம்; ''தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் உரைப்பது'' தற்சிறப்பாகலின். தெய்வம்-வழிபடு கடவுள்; ஏற்புடைக் கடவுளும் ஆம், அறத்திற்கு முதல்வனாகலின். குற்றம்-ஐயம் திரிபுகள். காணல்-ஈண்டு ஆராய்தல்; சென்றான்: வினையாலணையும் பெயர். ''மலர் மிசை ஏகினான்'' என்றார் திருவள்ளுவனாரும.் (1)
 
   -----------------------------------------------------------------------------------------------------   
     
பாயிரம்


2. அறவுரையின் இன்றியமையாமை


மறவுரையும் காமத் துரையும் மயங்கிய
பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.


(பதவுரை) மற உரையும்-பாவத்தினை வளர்க்கும் நூல்களும், காமத்து உரையும்-ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிற உரையும்-பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், மயங்கி-கலந்து, மல்கிய- நிறைந்த, ஞாலத்து- உலகில், அறவுரை-அறத்தினை வளர்க்கும் நூல்களை, கேட்கும்-கேட்கின்ற, திரு உடையாரே-நற் பேற்றினை உடையவர்களே, பிறவியை-பிறப்பினை, நீக்கும்-நீக்குதற்கேற்ற, திருஉடையார்-வீட்டுலகினையுடையவராவர்.

(குறிப்பு) காமத்து-அத்து: சாரியை. பிறவுரை-சோம்பல் முதலியவற்றை வளர்ப்பன. உரை-ஈண்டு நூலை உணர்த்தலின் ஆகு பெயர். திரு-ஈண்டு நற்பேற்றினையும், வீட்டினையும் உணர்த்திற்று. இதனால், அறவுரை கேட்டலின் இன்றியமையாமை கூறப்பட்டது. (2)
 
    ---------------------------------------------------------------------------------------------------------- 
     
3. அறவுரைக் கின்றியமையா நான்கு


  உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ
  துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி
  நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
  வான்மையின் மிக்கார் வழக்கு.



(பதவுரை) உரைப்பவன்-அறங் கூறுபவனையும், கேட்பான் -அதனைக் கேட்பவனையும், உரைக்கப்படுவது - உரைக் கப்படும் அறத்தினையும், உரைத்ததனால் ஆயபயனும்- உரைப்பதனால் உண்டாகும் பயனையும், புரைப்பு இன்றி- குற்றமிலா வகை ஆராய்ந்து, நான்மையும் போலியை நீக்கி-அந் நான்கனுள்ளும் பிழைபடுவன வற்றை நீக்கி, அவை நாட்டல்-அவையினை நிலைபெறச் செய்தல், வான்மையின் மிக்கார் வழக்கு-ஒழுக்கத்தால் உயர்ந்தோர் கடனாகும்.

(குறிப்பு) உரைப்பவன், கேட்பான், உரைக்கப்படுவது: வினையாலணையும் பெயர்கள். புரைப்பு-குற்றம். வாய்மை- உயர்வு: ஈண்டு ஒழுக்கம். இதன்கண் அறவுரைக் கின்றி யமையா நான்கும் அவற்றின் போலியும் தொகுத்துக் கூறப்பட்டன. அவற்றை மேலே விரிப்பர்.        (3)
 
      -------------------------------------------------------------------------------------------
     
4. அறமுரைப்பவன் இயல்பு


  அறங்கேட் டருள்புரிந் தைம்புலன்கள் மாட்டும்
  இறங்கா திருசார் பொருளும்-துறந்தடங்கி
  மன்னுயிர்க் குய்ந்துபோம் வாயி லுரைப்பானேற்
  பன்னுதற்குப் பாற்பட் டவன்.


(பதவுரை) அறம் கேட்டு-அற நூல்கள் பலவுங் கேட்டவனாயும், அருள் புரிந்து-அருளுடையவனாயும், ஐம்புலன்கள் மாட்டும் இறங்காது-ஐம்பொறிகளால் நுகரப்படும் இன்பங்களை விரும்பாதவனாயும், இருசார் பொருளும் துறந்து-அகப்பற்றுப் புறப்பற்றுகளை விட்டவனாயும், அடங்கி-அடக்கமுடையவனாயும்; மன் உயிர்க்கு-நிலைபெற்ற உயிர்களுக்கு, உய்ந்துபோம் வாயில்- வீடுபேற்றுக்குரிய வழியினை, உரைப்பானேல் - உரைப்பவன் ஒருவனுளனாயின், பன்னுதற்குப் பாற்பட்டவன்-அவன் அறமுரைத்தற்கு உரியவனாவன்.

(குறிப்பு) சார்-பற்று. மன்னுதல்-நிலைபெறுதல். பால்- உரிமை. இதனால், அறமுரைப்பவன் தன்மை விரித்துக் கூறப்பட்டது. அற நூல்களை அறமென்றது ஆகுபெயர். பன்னுதல்-விளக்கிச் சொல்லுதல். ஐம்பலன்கள்-சுவை; ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.  (4)
 
      ------------------------------------------------------------------------------------------------------
     
5. அறமுரைப்பவராகார் இயல்பு


  பிள்ளைபேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி
  வெள்ளை களிவிடமன் வேட்கையான்-தெள்ளிப்
  புரைக்கப் பொருளுணர்வா னென்றிவரே நூலை
  உரைத்தற் குரிமையிலா தார்.


(பதவுரை) பிள்ளை-பாலனும், பேய்-பேய் கொண்டானும், பித்தன்-பைத்தியம் பிடித்தவனும், பிணியாளன்-நோயாளனும், பின் நோக்கி-எட்டிய நோக்கமில்லாதவனும், வெள்ளை - முட்டாளும், களி-கட்குடியனும், விடமன்-பிறர்க்குத் துன்பம் செய்பவனும், வேட்கையான்-பேராசையுடையவனும், தெள்ளிப் புரைக்க பொருள் உணர்வான்-குற்றமுடையன வற்றையே ஆராய்ந்து உட்கொள்பவனும், என்ற இவரே- ஆகிய இவர்களே, நூலை உரைத்தற்கு உரிமை இலாதார்- அறநூலைக் கூறுதற்கு உரிமையில்லாதவராவர்.

(குறிப்பு) வெண்மை-அறிவின்மை.பிள்ளை முதலியோர் அற முரைப்பவராகார் என்பது கருத்து. பின் நோக்கி - முன்னேற்றத்தில் நோக்கம் இல்லாதவனுமாம். ஏகாரம்: பிரிநிலைப் பொருள் கொண்டது. என்ற+இவரே-என்றிவரே: அகரந்தொகுத்தல் விகாரம். (5)
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #2 on: September 14, 2011, 06:19:02 PM »
   
6. அறங்கேட்டற்குரியா னியல்பு


  தடுமாற்ற மஞ்சுவான் தன்னை யுவர்ப்பான்
  வடுமாற்ற மஞ்சித்தற் காப்பான்-படுமாற்றால்
  ஒப்புரவு செய்தாண் டுறுதிச்சொல் சேர்பவன்
  தக்கான் தரும உரைக்கு.


(பதவுரை) தடுமாற்றம் அஞ்சுவான்-தன் சோர்வு படுதலுக்கு அஞ்சுபவனும், தன்னை உவர்ப்பான் - பிறர் தன்னைப் புகழுங்கால் அதனை வெறுப்பவனும், வடுமாற்றம் அஞ்சி தற்காப்பான்-பழி வராமல் தன்னைக் காத்துக்கொள்பவனும், படும் ஆற்றால் ஒப்புரவு செய்து-தன்னால் இயன்றவளவு பிறருக்கு உதவிசெய்து, ஆண்டு உறுதிச்சொல் சேர்பவன் - அந்நிலையிற் பெரியோர்பால் உறுதி மொழிகளைக் கேட்டு அதன்வழி நிற்பவனுமாகிய ஒருவன், தரும உரைக்குத் தக்கான்-அறநூல் கேட்டற்கு உரியவனாவான்.

(குறிப்பு) அஞ்சுவான்,உவர்ப்பான்,காப்பான்,சேர்பவன் வினை
யாலணையும் பெயர்கள். ஒப்புரவு-  யாவர்க்கும்ஒருபடித்தாய் உதவி செய்தல்.      (6) 

 
     -------------------------------------------------------------------------------------------------------
     
7. அறங்கேட்டற்காகார் இயல்பு


  தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்
  புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான்-இன்சொல்லை
  ஏன்றிருந்தும் கேளாத ஏழை எனஇவர்கட்
  கான்றவர்கள் கூறா ரறம்.


(பதவுரை) தன்சொல்லே மேல் படுப்பான்-தான் கூறியதே சிறந்ததென்று கூறுபவனும், தண்டி-மானமுள்ளவனும், தடிபிணக்கன்-மிக்க மாறுபாடு கொண்டவனும், புன் சொல்லே போதரவு பார்த்து இருப்பான்-பிறர் கூறும் இழிசொற்களின் வரவினையே எதிர்பார்த்து இருப்பவனும், இன்செல்லை ஏன்று இருந்தும் - இன்பந்தரும் உறுதிமொழிகளைக் கேட்கக் காலமும் இடமும் வாய்த்தும், கேளாத ஏழை-கேளாத மூடனும், என இவர்கட்கு-ஆகிய இவர்களுக்கு, ஆன்றவர்கள்- பெரியோர்கள், அறம் கூறார்-அறநூலைச் சொல்லார்கள்.

(குறிப்பு) தடுமாற்றம்-அம் ஈற்றுத் தொழிற்பெயர். தடுமாறு: பகுதி; போதரவு-போதல்: தொழிற்பெயர்; 'நுண்ணுணர்வின்மை வறுமை' என்றாராகலின். ஏழை-மூடன்.     (7) 
 
  --------------------------------------------------------------------------------------------------------   
     
8. நல்லற வியல்பு


  வினையுயிர் கட்டுவீ டின்ன விளக்கித்
  தினையனைத்தும் தீமையின் றாகி--நினையுங்கால்
  புல்லறத்தைத் தேய்த்துலகி னோடும் பொருந்துவதாம்
  நல்லறத்தை நாட்டுமிடத்து.


(பதவுரை) நினையுங்கால்-ஆராயுமிடத்து, நல்அறத்தை நாட்டுமிடத்து-நல்லறத்தினை நிலைநிறுத்தக் கருதின், (அந்நல்லறமானது) வினைஉயிர் கட்டு வீடு இன்ன விளக்கி வினையும் ஆன்மாவும் பந்தமும் வீடுபேறும் ஆகிய இவற்றை நன்கு உணர்த்தி, தினை அனைத்தும் -தினையளவும், தீமை இன்று ஆகி-குற்றமில்லாததாய், புல்லறத்தை-பாவச்செயல்களை, தேய்த்து-அழித்து, உலகினோடும் பொருந்துவதாம்-உயர்ந்தோர் ஒழுக்கத்தோ டும் பொருந்துவதாகும்.

(குறிப்பு) தகட்டு - பாசம். தினை - சிறிய அளவு. நல்லறத்திற்கு எதிர்மொழியாகப் புல்லறம் எனப் பின்வருவது நினைவிலிருத்தற்குரியது.    (8) 
 
     -----------------------------------------------------------------------------------------------------
     
9. புல்லற வியல்பு


  ஆவட்டை போன்றறியா தாரை மயக்குறுத்திப்
  பாவிட்டார்க் கெல்லாம் படுகுழியாய்க்--காவிட்(டு)
  இருமைக்கும் ஏமம் பயவா தனவே
  தருமத்துப் போலிகள் தாம்.


(பதவுரை) ஆவட்டை போன்று-மரணமடையு நிலையிலி ருப்பார் போன்று, அறியாதாரை-அறிவில்லாதவர்களை, மயக்குறுத்தி - மயக்கி, பாவிட்டார்க்கு எல்லாம் - விரும்பினவர்களுக்கெல்லாம், படுகுழியாய் - மிக்க துன்பம் பயப்பவாய், காவிட்டு - துன்பம் உற்றுழி உதவுதலின்றி, இருமைக்கும் ஏமம் பயவாதென - இம்மை மறுமைக ளுக்கு உறுதி பயவாதவை யாவை அவை, தருமத்துப் போலிகள்தாம் - அறநூல்கள் போன்றிருப்பினும் அறநூல்க ளாகா.

(குறிப்பு) மரண நிலையிலிருப்போர் தன்மையைக் குறித்து 'ஆவட்டை கோவட்டையாயிருக்கிறது' என்று சொல்வது சேர நாட்டிடை வழங்குவதொரு வழக்கு. மரண நிலையிலிருப்பார் அறிவிலிகள். மனத்தில் குழப்பத்தினை யுண்டாக்குபவர் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. ஆவட்டை ஒரு பூண்டுமாம் துன்பம் உற்றுழி உதவுதலாவது சேற்றுநிலத்தி லியங்குவார்க்கு ஊன்று கோல் போன்று உதவுதல். இம்மை மறுமைகட் குறுதி களாவன புகழ் இன்பங்கள் 'பயவாவெனவே' என்பதூ உம் பாடம்; பொருந்தாமையை ஆராய்ந்தறிக. பாவிட்டார்-பாவிடு: பகுதி; இடு: துணை வினை. பாவி - கருது, விரும்பு.   (9) 
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
10. அறவுரையா லாம்பயன்


  புல்ல வுரைத்தல் புகழ்தல் பொருளீதல்
  நல்ல ரிவரென்று நட்பாடல்--சொல்லின்
  அறங்கேள்வி யாலாம் பயனென் றுரைப்பார்
  மறங்கேள்வி மாற்றி யவர்.


(பதவுரை) சொல்லின்-சொல்லுமிடத்து, மறம் கேள்வி மாற்றியவர் - பாவத்தன்மையை அறநூல்களைக் கேட்டலால் மாற்றிய பெரியோர்கள், புல்ல உரைத்தல்-பலரும் தம்மை அடையுமாறு சொல்லு தலும், புகழ்தல்-பலரானும் புகழப்படுதலும், பொருள் ஈதல்-பொருள் ஈயப்படுதலும், நல்லர் இவர் என்று நட்பாடல்-இவர் நல்லவரென்று கருதிப் பலரும் நட்பினராக வந்தடைதலுமாகிய இவற்றை, அறம் கேள்வியால்-அந் நூல்களைக் கேட்பதனால், ஆம்- வரும், பயன் என்று உரைப்பர்-பயனென்று சொல்லுவார்கள்.

(குறிப்பு) புல்ல வுரைத்தல் மூன்றும் அறவுரையை அறிந்தமையாலாம் பயனாம். மாற்றியவர் உரைப்பர் எனமுடிக்க.   (10)
 
     
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #3 on: September 14, 2011, 06:31:38 PM »
   
11. இதுவுமது 


காட்சி யொழுக்கொடு ஞானந் தலைநின்று
மாட்சி மனைவாழ்த லன்றியு--மீட்சியில்
வீட்டுலக மெய்தல் எனவிரண்டே நல்லறங்
கேட்டதனா லாய பயன்.



(பதவுரை) நல்லறம்-சிறந்த அறநூல்களை, கேட்டதனால்- கேட்பதனால், ஆய-உண்டாகும், பயன்-பயன்களாவன, காட்சி ஒழுக்கொடு-அறிவு ஒழுக்கங்களோடு, மாட்சி- பெருமை பொருந்திய, மனை வாழ்தலும்-இல்லறத்தில் வாழ்தலும், அன்றி- அதுவேயன்றி, ஞானந் தலைநின்று- ஞானத்தால் சிறந்து, மீட்சியில்-மீளுதலில்லாத, வீட்டுலகம் எய்தாலும்-வீடுபேற்றினையடைதலும், என இரண்டே-ஆகிய இரண்டே ஆகும்.

(குறிப்பு) மனை வாழ்க்கையும் வீடுபேறுமாகிய இரண்டுமே அறங்கேட்டதனாலாய பயனாம். மேற்கண்ட பத்துப்பாக்களும் இந்நூற்குப் பொதுவாகிய இன்றியமையா நான்கினையும் விளக்குகின்றமையாற் பாயிரமாயின. (11)
 
    ------------------------------------------------------------------------------------------------------ 
     
நூல்


12. அறம் பத்தாவன
 


மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவமடக்கம்
செம்மையொன் றின்மை துறவுடைமை--நன்மை
திறம்பா விரதந் தரித்தலோ டின்ன
அறம்பத்தும் ஆன்ற குணம்.



(பதவுரை) மெய்ம்மை-உண்மையும், பெறையுடைமை- பொறுமையும், மேன்மை-பெருமையும், தவம்-தவமும், அடக்கம்-அடக்கமும், செம்மை-நடுநிலைமையும், ஒன்றின்மை-தனக்கென ஒன்று இல்லாதிருத்தலும், துறவுடைமை-பற்றுவிடுதலும், நன்மை-நல்லன செய்தலும், திறம்பா விரதம் தரித்தலோடு-மாறுபடாத விரதங்களை மேற்கொள்ளுதலுமாகிய, இன்ன அறம் பத்தும்-இவ்வறங்கள் பத்தும், ஆன்ற குணம்-மேலான குணங்களாம்.

(குறிப்பு) ஒன்றின்மை-தனக்கென வொன்றைப் பெறாது பொதுமக்களுக்காகக் காரியஞ் செய்தல். திறம்பா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். (12)
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
13. அறமே அனைத்தினுஞ் சிறந்தது


தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி
இனத்துள் இறைமையுஞ் செய்து-- மனக்கினிய
போகந் தருதலால் பொன்னே! அறத்துணையோ
டேகமா நண்பொன்று மில்.


(பதவுரை) பொன்னே-இலக்குமி போன்றவளே, தனக்குத் துணையாகி-செய்தவனுக்கு இம்மை மறுமைகளில் துணையாக நின்று, தன்னை விளக்கி-அவனைப் பலரும் அறியுமாறு செய்து, இனத்துள் இறைமையும் செய்து- சுற்றத்தார் பலருக்கும் தலைவனாகவும் செய்து, மனக்கு இனிய போகம் தருதலால்-மனதிற்கினிமையான செல்வத்தினையுங் கொடுப்பதால், அறத்துணையோடு- அறமாகிய துணையோடு, ஏகமாம்-ஒன்றாக வைத்தெண்ணு தற்குரிய, நண்பு ஒன்றும் இல்-நட்பினர் ஒருவரும் இல்லை.

(குறிப்பு) மனக்கு: அத்துச்சாரியை பெறாது வேற்றுமை யுருபு ஏற்றுவந்தது. அறத்துணை: பண்புத்தொகை, நண்பு - உதவி செய்வது என்றுமாம். (13)
 
     --------------------------------------------------------------------------------------------------------
     
14. அறமே மறுமைக்குத் துணையாம்


ஈட்டிய வொண்பொருளும் இல்லொழியும் சுற்றத்தார்
காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர்--மூட்டும்
எரியின் உடம்பொழியும் ஈர்ங்குன்ற நாட!
தெரியின் அறமே துணை.


(பதவுரை) ஈர்ங்குன்ற நாட-குளிர்ந்த மலைநாட்டுக்கரசே! ஈட்டிய-தேடிய, ஒண் பொருளும்-சிறந்த செல்வமும், இல் ஒழியும்-மனையி லேயே நின்றுவிடும், சுற்றத்தார்-உறவினர், காட்டுவாய் நேரே கலுழ்ந்து ஒழிவர்-சுடுகாட்டுவரை கூட அழுதுகொண்டு வந்து நீங்குவர், மூட்டும் எரியின்- மூட்டப்படுகின்ற நெருப்பால், உடம்பு ஒழியும்-உடல் அழியும், தெரியின்-ஆராயின், அறமே துணை-ஒருவனுக்கு துணையாவது அறமேயாகும்.

(குறிப்பு) அறமே-ஏகாரம: பிரிநிலை. எரியின்- இன; ஐந்தனுருபு ; ஏதுப்பொருள். (14)
 
    --------------------------------------------------------------------------------------------------------- 
     
15. இல்லற துறவறங்களின் ஏற்றம்


நோற்பவ ரில்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவருக்குச் சார்வா யறம்பெருக்கி--யாப்புடைக்
காழுங் கிடுகும்போல் நிற்குங் கயக்கின்றி
ஆழிசூழ் வையத் தறம்.



(பதவுரை) நோற்பவர்-துறவிகள், இல்லவர்க்கு-இல்லறத் தாருக்கு, சார்வாகி-பற்றுக்கோடாகியும், இல்லவரும்- இல்லறத்தாரும், நோற்பவர்க்கு-துறவிகளுக்கு, சார்வாய்- பற்றுக்கோடாகியும், அறம் பெருக்கி-முறையே இல்லறம் துறவறங்களை வளர்த்தலால், ஆழி சூழ்-கடல் சூழ்ந்த, வையத்து-பூமியில், அறம்-அவ்வறங்கள், கயக்கு இன்றி- சோர்வில்லாமல், யாப்பு உடை-உறுதி பெற்ற, காழும் கிடுகும்போல்-தூணும் சட்டப் பலகையும் ஒன்றுக்கொன்று ஆதரவாயிருத்தல்போல, நிற்கும்-ஒன்றுக்கொன்று ஆதரவாக நிற்கும்.

(குறிப்பு) நோற்பவர்-நோல்: பகுதி. காழும், கிடுகும் மறைப்பாக அமைக்கப்பட்ட வலுவான ஊன்றுகோலும் மறைப்புத் தட்டியுமாம். ஆழி-ஆழமுடையது; கடல். (15)  
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #4 on: September 14, 2011, 06:44:34 PM »
   
16. இளமையி லறஞ்செய்கை


இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்


(பதவுரை) இன்சொல்-இனியசொல்லே, விளை நிலமா-விளை நிலமாகவும், ஈதலே-ஈகையே, வித்தாக-விதையாகவும், வன் சொல்- கடுஞ்சொல்லாகிய, களை கட்டு-களை பிடுங்கி, வாய்மை-உண்மையாகிய, எரு அட்டி-எருவிட்டு, அன்பு-அன்பாகிய, நீர் பாய்ச்சி-நீரைப் பாய்ச்சி, அறக்கதிர்-அறமாகிய கதிரை, ஈன்றது-ஈனுவதாகிய, ஓர்-ஒப்பற்ற, பைங்கூழ்-பசிய பயிரை, சிறு காலை- இளம்பருவத்திலேயே, செய்-செய்வாயாக.

(குறிப்பு) நெஞ்சே என்ற விளி வரவழைத்துக் கொள்ளப்பட்டது. (16)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
17. இளமையி லறஞ்செய்தலின் இன்றியமையாமை


காலைச்செய் வோமென் றறத்தைக் கடைப்பிடித்துச்
சாலச்செய் வாரே தலைப்படுவார்--மாலைக்
கிடந்தான் எழுதல் அரிதால்மற் றென்கொல்
அறங்காலைச் செய்யாத வாறு.



(பதவுரை) அறத்தை-அறத்தினை, காலை-இளம் பருவத்திலேயே, செய்வோம் என்று-செய்வோமென்று கருதி, கடைப்பிடித்து-உறுதியாகக்கொண்டு, சாலச் செய்வாரே-மிகச் செய்வோரே, தலைப்படுவார்- உயர்ந்தோராவார், மாலை-இரவில், கிடந்தான்-படுத்தவன், எழுதல்-காலையில் எழுவது, அரிது-அருமை, (அங்ஙனமாகவும்), அறம்-அறத்தினை, காலை-இளம் பருவத்திலேயே, செய்யாதவாறு-செய்யாதிருத்தல், என்கொல்-என்ன அறிவீனமோ?

(குறிப்பு) கொல்: ஐயப்பொருள்தரு மிடைச்சொல். ஆல், மற்று: அசைநிலைகள். (17)
 
  -------------------------------------------------------------------------------------------------------   
     
18. இளமையி லறஞ்செய்யாமையின் இழிவு


சென்றநா ளெல்லாம் சிறுவிரல்வைத் தெண்ணலாம்
நின்றநாள் யார்க்கும் உணர்வரிது--என்றொருவன்
நன்மை புரியாது நாளுலப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம்.



(பதவுரை) சென்ற நாள் எல்லாம்-ஆயுளில் கழிந்த நாட்களெல்லாவற்றையும், சிறுவிரல் வைத்து எண்ணலாம்-சிறிய விரல்களால் எண்ணிக் கணக்கிட்டு விடலாம், நின்ற நாள்-இனி உள்ள நாட்களை, யார்க்கும் உணர்வு அரிது-இவ்வளவு என்று அளவிட்டறிய யாராலும் இயலாது, என்று-என்று கருதி, ஒருவன் நன்மை புரியாது-ஒருவன் நல்வினையை விரைந்து செய்யாமல், நாள் உலப்ப-ஆயுள்நாள் வீணே அழியுமாறு, விட்டிருக்கும் புன்மை-விட்டிருப்பதால் வருந் துன்பம், புறம்பெரிது- பின் மிகும்.

(குறிப்பு) சிறு விரல் வைத்து-சிறிய சுண்டு விரலை முதலாகக் கொண்டு என்றுமாம். உலப்ப : வினை யெச்சம்; உல : பகுதி, புறம்-அப்புறம்: பின்பு. புன்மை- இழிவென்றுமாம். (18)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
19. கூற்றத்தின் நடுவுநிலைமை


கோட்டுநா ளிட்டுக் குறையுணர்ந்து வாராதால்
மீட்டொரு நாளிடையுந் தாராதால்--வீட்டுதற்கே
வஞ்சஞ்செய் கூற்றம் வருதலால் நன்றாற்றி
அஞ்சா தமைந்திருக்கற் பாற்று.


(பதவுரை) கோட்டுநாள் இட்டு-விதித்த நாளை விட்டு, குறை உணர்ந்து வாராது-குறைநாளில் வருவதுமில்லை; மீட்டு ஒருநாள் இடையும் தாராதால்-விதித்த நாளுக்குமேல் மிகுதியாக ஒருநாள் கூடக் கொடுப்பதும் இல்லை; வஞ்சஞ் செய் கூற்றம்-வருதலை முன்னர் அறிவியாது வந்து வஞ்சிக்கின்ற எமன், வீட்டுதற்கே-அழிப்பதற்கே, வருதலால்- வருவதனால், நன்று ஆற்றி-அறத்தினை மிகவும் செய்து, அஞ்சாது-(மரணத்திற்கு) அஞ்சாமல், அமைந்து இருக்கற்பாற்று-அடங்கியிருத்தல் வேண்டும்.

(குறிப்பு) ஆல் முன்னிரண்டும் அசைநிலைகள்; பின்னது மூன்றனுருபு, கூற்றம் உயிரையும் உடலையும் கூறுபடுப்பது. (19)
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     
20. உடலும் செல்வமும் நிலையாமை


இன்றுளார் இன்றேயும் மாய்வர் அவருடைமை
அன்றே பிறருடைமை யாயிருக்கும்--நின்ற
கருமத்த ரல்லாத கூற்றின்கீழ் வாழ்வார்
தருமந் தலைநிற்றல் நன்று.



(பதவுரை) இன்று உளார் இன்றேயும் மாய்வர்-இன்றைக் கிருப்பவர் இன்றே அழியினும் அழிவர், அவர் உடைமை அன்றே பிறருடைமை ஆயிருக்கும்-அவர் செல்வம் அவர் இறந்த அப்பொழுதே அயலாருடைய செல்வமாகும், (ஆதலால்) அல்லாத கூற்றின்கீழ் வாழ்வார்-கொடிய எமனது ஆணையின்கீழ் வாழும் மாந்தர், நின்ற கருமத்தர்-நிலைபெற்ற செயலையுடையராய், தருமம் தலைநிற்றல் நன்று-அறத்தினை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது.

(குறிப்பு) தலைநிற்றல், ஒருசொல்; மேற்கொண்டொழுகுதல், (20)
 
     
   
« Last Edit: September 14, 2011, 06:49:06 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #5 on: September 14, 2011, 07:16:53 PM »
   
21. இளமை நிலையாமை


மின்னு மிளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை யறிவெனென்றல் பேதைமை-தன்னைத்
துணித்தானும் தூங்கா தறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலு முண்டு.


(பதவுரை) மின்னும்-மின்னல் போலும், இளமை-இளமைப் பருவமானது, உளதாம்-நிலைத்திருக்கும், என மகிழ்ந்து - என்று மகிழ்ந்து, பின்னை-முதுமையில், அறிவென் என்றல்-அறத்தினைப்பற்றி அறிவேன் என்று கருதுதல், பேதைமை-அறியாமையேயாகும், கூற்றம்-எமன், அணித்தாய்-இளமையிலேயே, வருதலும் உண்டு - ஆயுளைக் கவர்ந்து செல்ல வருதலும் உண்டு, (ஆதலால்) தன்னைத் துணித்தானும்-தனது உடலை வருத்தியேனும், தூங்காது-காலதாமதம் செய்யாமல், அறம் செய்க-அறத்தினை ஒவ்வொருவனும் செய்வானாக.

(குறிப்பு) அறிவென்: என் ஈற்றுத்தன்மை ஒருமை வினைமுற்று. துணித்தல்-துண்டாக்கல், வருத்தல். (21)
 
  ------------------------------------------------------------------------------------------------------   
     
22. அறவரணத்தின் இன்றியமையாமை


மூப்பொடு தீப்பிணி முன்னுறீஇப் பின்வந்து
கூற்ற வரசன் குறும்பெறியும்-ஆற்ற
அறவரண மாராய்ந் தடையினஃ தல்லால்
பிறவரண மில்லை யுயிர்க்கு.


(பதவுரை) மூப்பொடு தீ பிணி-முதுமையையும் கொடிய நோயையும், முன்னுறீஇ-முன்னரடைவித்து, கூற்ற அரசன்-எமனாகிய அரசன், பின் வந்து-பின்னர் அடைந்து, குறும்பு எறியும்-உடலாகிய அரணை அழிப்பான், ஆராய்ந்து -பலவற்றாலும் ஆராய்ந்து, ஆற்ற அற அரணம்-மிக்க அறமாகிய பாதுகாவலை, அடையின் அஃது அல்லால் - அடைந்தாலன்றி, உயிர்க்கு பிற அரணம் இல்லை - உயிர்களுக்குப் பாதுகாவலான இடம் வேறொன்றுமில்லை.

(குறிப்பு) முன்னுறீஇ: சொல்லிசை யளபெடை. அறவரணம்: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. (22)
 
      --------------------------------------------------------------------------------------------------
     
23. நன்கு செய்யப்பட வேண்டியது நல்லறமே


திருத்தப் படுவ தறக்கருமந் தம்மை
வருத்தியு மாண்புடையார் செய்க--பெருக்க
வரவும் பெருங்கூற்றம் வன்கண் ஞமன்கீழ்த்
தரவறுத்து மீளாமை கண்டு.


(பதவுரை) திருத்தப்படுவது-நன்றாகச் செய்யத் தகுவது, அறக் கருமம்-அறச்செயல்களேயாகும், பெருங் கூற்றம்-வலிமிக்க எமன், பெருக்க வரவும்-உயிர்களைக் கவர்ந்து செல்லப் பலமுறை வருதலையும், வன்கண்-கொடிய, ஞமன்-அவ் யமனது, கீழ்த்தர வறுத்து-கட்டளையை மீறி, மீளாமை-அவனால் கவரப்பட்ட உயிர்கள் திரும்பாமையையும், கண்டு-காணலால், மாண்புடையார்-பெரியோர்கள், தம்மை-தமதுடலை, வருத்தியும்-வருத்தியேனும், செய்க-அவ்வறத்தினைச் செய்வார்களாக.

(குறிப்பு) வன்கண்மை-கொடுமை, ஞமன்-யமன்; யகர ஞகர முதற்போலி; அன்றி நமன் ஞமன் என நகர ஞகரப் போலியுமாம். (23)
 

      ----------------------------------------------------------------------------------------------------
     
24. அறத்தினை விரைந்து செய்க


முன்னே ஒருவன் முடித்தான்றன் துப்பெலாம்
என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல்?--முன்னே
முடித்த படியறிந்து முன்முன் அறத்தைப்
பிடிக்க பெரிதாய் விரைந்து.


(பதவுரை) முன்னே-தனக்கு முன்னே, ஒருவன்-பிறனொருவன், தன் துப்பு எலாம்-தன் நுகர்பொருள்பலவற்றையும், முடித்தான்-அழித்துச் சென்றான், ஒருவன்-அதனைப் பார்த்த அவன், இகழ்ந்திருத்தல்-(அறத்தினைச்செய்யாமல்) ஏளனஞ் செய்திருத்தல், என்னே-என்ன பேதமை!, முன்னே முடித்த படியறிந்து-முன்னே பெரியோர்கள் செய்த வழியை யறிந்து, முன்முன்-மேலும்மேலும், பெரிதாய் விரைந்து-மிக விரைந்து, அறத்தைப்பிடிக்க-அறத்தினைச் செய்க.

(குறிப்பு) முன்முன்: அடுக்குத் தொடர், விரைவுப் பொருள் கூறியது. பிடிக்க: வியங்கோள். (24)
 
     -------------------------------------------------------------------------------------------------------
     
25. அறஞ்செய்யாமையால் வருங்கேடு


குறைக்கருமம் விட்டுரைப்பிற் கொள்ள உலவா
அறக்கருமம் ஆராய்ந்து செய்க--பிறப்பிடைக்கோர்
நெஞ்சேமாப் பில்லாதான் வாழ்க்கை நிரயத்துத்
துஞ்சாத் துயரந் தரும்.


(பதவுரை) பிறப்பிடைக்கு-மறு பிறப்பிற்கு, ஓர்-ஒப்பற்ற, நெஞ்சு-தன் மனத்தை, ஏமாப்பு இல்லாதான்-அரணாகக் கொள்ளாதவன், வாழ்க்கை-வாழ்க்கையானது, நிரயத்து-நரகில், துஞ்சா-அழிவில்லாத, துயரம் தரும்-துன்பத்தினைக்கொடுக்கும் (ஆதலால்) அறக் கருமம்-அறவினையை, ஆராய்ந்து செய்க- (நெஞ்சே!) ஆராய்ந்து செய்வாயாக, குறைக்கருமம்-இன்றி யமையா வினைகளை, விட்டு உரைப்பின்-விரித்துக் கூறப்புகின், கொள்ள உலவா-அளவிலடங்கா.

(குறிப்பு) குறைக்கருமம்-வேண்டிய நிலையிற் குறைந்த வினைகள். (25)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #6 on: September 14, 2011, 09:03:35 PM »
   
26. உடல் நிலையாமை


அறம்புரிந் தாற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரண மென்னை?--மறந்தொருவன்
நாட்டு விடக்கூர்தி அச்சிறுங் காலத்துக்
கூட்டுந் திறமின்மை யால்.


(பதவுரை) ஒருவன்-நான்முகன், நாட்டு-படைத்த, விடக்கு ஊர்தி-இறைச்சியாலாகிய வாகனம் (உடல்), அச்சு இறுங்காலத்து-அச்சொடிந்து (உயிர் பிரிந்து) அழியுங் காலத்தில், கூட்டும் திறம் இன்மையால்-அதனைப் பொருத்தி நடத்தும் தன்மை இன்றாகவும், அறம் புரிந்து-அறத்தினை விரும்பி, ஆற்றுவ செய்யாது-இயன்ற அளவு செய்யாமல், மறந்து நாளும் உறங்குதல்-மறந்துபோதலால் எப்பொழுதும் காலத்தை வீணே கழித்தல், என்னை காரணம்-(நெஞ்சே) யாது கருதி?

(குறிப்பு) அச்சு-உயிர்; ஊர்தியாகிய உடலின் ஆதரவான பாகம் . (26)
 
  ------------------------------------------------------------------------------------------------------   
     
27. அறனில்லா வாழ்க்கை யழிவேயாம்


பாவம் பெருகப் பழிபெருகத் தன்னோம்பி
ஆவதொன் றில்லை யறனழித்துப்--பாவம்
பொறாஅ முறைசெய் பொருவில் ஞமன்கீழ்
அறாவுண்ணும் ஆற்றவு நின்று.


(பதவுரை) முறைசெய்-நீதியைச் செய்கின்ற, பொரு இல்-ஒப்பற்ற, ஞமன்-எமன், பாவம் பொறாஅ-நாம் செய்யும் பாவத்தினைப் பொறாமல், ஆற்றவும் நின்று-மிகவும் அசைவின்றி நின்று, கீழ் அறா உண்ணும்-மறைந்து ஆயுளைக் குறைத்து உண்பானாதலின், அறனழிந்து-அறத்தினைக் கொன்று, பாவம் பெருக-பாவம் பெருகவும், தன் ஓம்பி-தன்னை ஓம்பி வாழ்வதால்,ஆவது ஒன்று இல்லை-ஆகும் பயனொன்றும் இல்லை.


(குறிப்பு) பொறாஅ: இசைநிறை யளபெடை, ஞமன்-யமன்; முதற்போலி . (27)
 
-----------------------------------------------------------------------------------------------------     
     
28. அறனை மறவேல்


முற்செய் வினையின் பயன்றுய்த் ததுவுலந்தால்
பிற்செய் வினையின்பின் போகலால்--நற்செய்கை
ஆற்றுந் துணையும் அறமறவேல் நன்னெஞ்சே!
கூற்றங் குடில்பிரியா முன்.


(பதவுரை) நல் நெஞ்சே-நல்ல மனமே!, முன் செய் வினையின்-முற்பிறப்பிற் செய்த வினையினது, பயன் துய்த்து-பயனை அனுபவித்து, அது உலந்தால்-அஃது அழிந்தால், பின் செய்-இப் பிறப்பில் செய்த, வினையின்பின் போகலால்-வினைவழியே சென்று வேறு பிறப்பினை அடைவதால், கூற்றம்-எமன், குடில் பிரியா முன்-உடலினின்றும் உயிரை வேறு படுப்பதன் முன், நற்செய்கை-நல்வினையை, ஆற்றுந் துணையும்-செய்ய ஆற்றலுளதாங் காலம் முடிய, அறம் மறவேல்-அறத்தினை மறவாது செய்வாயாக.

(குறிப்பு) குடில்-உயிரின் இருக்கையாகிய உடல். மறவேல்: எதிர்மறை ஏவலொருமை வினைமுற்று. (28)
 
   -------------------------------------------------------------------------------------------------------   
     
29. கிடைத்ததைக்கொண்டு அறஞ்செய்க


திரையவித்து நீராட லாகா உரைப்பார்
உரையவித் தொன்றுஞ்சொல் இல்லை-அரைசராய்ச்
செய்தும் அறமெனினும் ஆகா துளவரையால்
செய்வதற்கே ஆகுந் திரு.



(பதவுரை) திரை அவித்து நீராடல் ஆகா-அலைகளை ஒழித்துப் பின் கடல் நீராடுதல் எவர்க்கும் ஆகாது (என்று), உரைப்பார் உரை அவித்து-உரைப்பவர் உரையை விட்டால், ஒன்றும் சொல் இல்லை-வேறு மெய்ம்மை பொருந்தும் சொல் இல்லை, (ஆதலின்), அரைசராய்ச் செய்தும் அறமெனினும் ஆகாது-ஒருவர் அரசராய்ப் (பெருஞ் செல்வம்) பெற்றபின் அறத்தினைச் செய்வேமெனக் கருதின் அக்காலத்துச் செல்வம், அவருக்கு அறஞ்செய்ய உதவுவதில்லை, உளவரையால் செய்வதற்கே ஆகும் திரு-பெற்ற அளவினுக்கேற்ப அவ்வப்போது அறஞ்செய்யப் புகுகின்றவனுக்கே அறஞ்செய்வதற்குத் துணையாக நிற்கும் அவனது செல்வம்.

(குறிப்பு) “அலையொழிந்து கடலாடலாகாது” என்பது பழமொழி. உரைவித்து: எச்சத்திரிபு. அரைசர்-அரசர்; இடைப்போலி. (29)
 
   -------------------------------------------------------------------------------------------------------   
     
30. மூடனுக்கு அறவுரையாற் பயனில்லை


கல்லா ஒருவனைக் காரணங் காட்டினும்
இல்லைமற் றொன்றும் அறனுணர்தல்--நல்லாய்
நறுநெய் நிறைய முகப்பினு மூழை
பெறுமோ சுவையுணரு மாறு

.
(பதவுரை) நல்லாய்-நற்குணமிக்க பெண்ணே!, மூழை - அகப்பையானது, நறு நெய்-நல்ல நெய்யோடு கலந்த உணவை, நிறைய முகப்பினும்-நிறைய முகக்கு மாயினும், சுவை உணருமாறு-சுவையினை அறியுந் தன்மையை, பெறுமோ-உடையதாகுமோ? (ஆகாது), அதுபோல, கல்லா ஒருவனை-படியாத ஒருவனுக்கு, காரணம் காட்டினும்-காரணங்காட்டி விளக்கிச் சொன்னாலும், அறன் உணர்தல் மற்று ஒன்றும் இல்லை-அவன் அறத்தினை ஒரு சிறிதும் உணரான்.

(குறிப்பு) ஒருவனை: உருபு மயக்கம். ‘அகப்பை யறுசுவை யறியுமோ?’ என்பது பழமொழி .காட்டினும், முகப்பினும்: உயர்வு சிறப்பும்மைகள். (30)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #7 on: September 14, 2011, 09:35:08 PM »
   
31. கீழ்மகன் நெஞ்சில் அறவுரை புகாது


வைகலு நீருட் கிடப்பினும் கல்லிற்கு
மெல்லென்றல் சால அரிதாகும்--அஃதேபோல்
வைகலும் நல்லறம் கேட்பினுங் கீழ்கட்குக்
கல்லினும் வல்லென்னும் நெஞ்சு
.

(பதவுரை) வைகலும்- நாள்தோறும், நீருள் கிடப்பினும் - நீரினுள்ளேயே கிடந்தாலும், கல்லிற்கு-கல்லுக்கு, மெல்லென்றல்-மென்மையடைதல், சால அரிதாகும் - சிறிதும் இல்லை, அஃதே போல்-அதுபோல், வைகலும் - நாள் தோறும், நல்லறம்-நல்ல அறநூல்களை, கேட்பினும் - கேட்டாலும், கீழ் கட்கு-கயவர்களுக்கு, நெஞ்சு-மனமானது, கல்லினும் வல்லென்னும்-கல்லைக் காட்டிலும் திண்ணியதாகவே இருக்கும்.

(குறிப்பு) சால: உரிச்சொல், மிகுதிப்பொருள், பொருளின் போக்குக் கொண்டு சிறிதும் என உரைக்கப்பட்டது. (31)
 
     
     --------------------------------------------------------------------------------------------------

32. கீழ்மக்கட்குக் கட்டாயப் படிப்பாலும் பயனில்லை


கயத்திடை உய்த்திடினும் கன்னனையா தென்றும்
பயற்றுக் கறிவேவா தற்றால் - இயற்றி
அறவுரை கேட்ட விடத்தும் அனையார்
திறவுரை தேறா தவர்.



(பதவுரை) கயத்திடை - குளத்தினிடை, உய்த்திடினும்-செலுத்தினாலும், கல் நனையாது-கல் மெல்லென ஊறியுறாது, என்றும்-எக்காலத்தும், பயறுகறி-பயறு களுள் பத்தினிப் பயறாக இருப்பது கறியினிடத்தே, வேவாது-வேவதில்லை, அற்று-அது போல், இயற்றி-விதிகளுக்குட்படுத்தி, அறவுரை கேட்டவிடத்தும்-அற நூல்களைக் கேட்குமாறு செய்தாலும், அனையார்-அக் கீழ்மக்கள், திறவுரை தேறாதவர்-உறுதி மொழிகளை யுணராதவர்களே யாவர்.

(குறிப்பு) இடை : ஏழனுருபு. பயறு-முனையினைக் கொண்டிராத பயறு: பத்தினிப் பயறு .அ: பண்டறி சுட்டு. ஆல்: அசை.                  (32)
 
     ------------------------------------------------------------------------------------------------------
     
33. நெஞ்சின் கொடுமை


அற்ற பொழுதே அறநினைத்தி யாதொன்றும்
பெற்ற பொழுதே பிறநினைத்தி--எற்றே
நிலைமையில் நன்னெஞ்சே! நின்னொடு வாழ்க்கை
புலைமயங்கி யன்ன துடைத்து.



(பதவுரை) அற்ற பொழுதே-பொருளற்ற காலத்தில், அறம் நினைத்தி-பொருளிருப்பின் அறம் செய்யலாம்; இல்லையே என் செய்வது என்று நினைத்து வருந்துகின்றாய், யாதொன்றும் பெற்ற பொழுதே-ஏதாவது ஒரு செல்வத்தினை யடைந்த காலத்திலோ, பிற நினைத்தி-அறத்தினை மறந்து பாவச்செயல்களைச் செய்ய விரும்புகின்றாய், நிலைமையில் நன்னெஞ்சே-ஒரு நிலையில்லாத நல்ல மனமே!, எற்றே-இஃதென்னே, நின்னொடு வாழ்க்கை-உன்னோடு கூடிவாழ்தல், புலைமயங்கி அன்ன துடைத்து-புலைமக்களோடு சேர்ந்து வாழ்வது போலும்.

(குறிப்பு) புலை-புலைமக்கள், பண்பாகுபெயர். நினைத்தி: முன்னிலை யொருமை நிகழ்கால வினைமுற்று. (33)
 

   --------------------------------------------------------------------------------------------------------   
     
34. உடலி னழிவு


ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெருவாழ்க்கை முத்தாடை கொண்ட--திருவாளா!
வீணாள் படாமைநீ துன்னம்பொய் யேயாக
வாணாள் படுவ தறி.



(பதவுரை) ஒருபால்-ஒருபுறம், திருத்த-தைக்க, ஒருபால்-மற்றொருபுறம், கிழியும்-கிழிகின்ற, பெறுவாழ்க்கை- பெரிய வாழ்க்கையாகிய, முத்தாடை-விலையுயர்ந்த உடலாகிய ஆடையை, கொண்ட-உடுத்த, திருவாளா-செல்வமுடையவனே! நீ துன்னம் பொய்யே யாக-நீ தைத்தல் பயனின்றி, வாணாள் படுவது-ஆயுள் நாள் அழிவதை, வீணாள் படாமை அறி-நாள்கள் வீணாக கழியு முன் அறிக.

(குறிப்பு) திருவாளன் என்றது இழிவு பற்றியது. தின்னம்-தைத்தல். (34)
 
     
    --------------------------------------------------------------------------------------------------------
 
35. அறஞ்செய்யாமையால் வரு மிழிவு


உள்ளநாள் நல்லறஞ் செய்கென்னும் சாற்றன்றோ
இல்லைநாட் போயேன றிடங்கடிந்து--தொல்லை
இடைக்கடையு மாற்றார் இரந்தார்க்கு நின்றார்
கடைத்தலைவைத் தீயும் பலி.


(பதவுரை) தொல்லை இடைக் கடையும் ஆற்றார்-முன் தாம் செல்வமுடையரா யிருந்தகாலத்தில் அறம் சிறிதும் செய்யாமல், இல்லை நாட்போய் ஏன்று இடங்கடிந்து இரந்தார்க்கு-பின் வறியரான காலத்தில் தம்மிடம் விட்டுப் பெயர்ந்து ஆங்காங்குப் போய் ஏற்றுத் திரிந்து பிறர்பால் இரந்தார்க்கு, நின்றார் கடைத்தலை வைத்தீயும் பலி-இரக்கப்படுவார் தம் தலைவாயிலில் வைத்தீயும் பிச்சையானது, உள்ளநாள் நல்லறம் செய்க என்னும் சாற்றன்றோ-செல்வம் பெறும் காலத்தில் நன்மை தரும் அறத்தை செய்க என்று அவர்க்குச் சொல்லும் சொல்லாகு மன்றோ?

(குறிப்பு) சாற்று-சொல், அன்று, ஓ: தேற்றப்பொருளன. செய்க+என்னும்=செய்கென்னும்: அகரந்தொகுத்தல் விகாரம்.        (35)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #8 on: September 15, 2011, 12:51:22 AM »
   
36. வயிற்றின் கொடுமை


ஒருநாளும் நீதரியாய் உண்ணென்று சொல்லி
இருநாளைக் கீந்தாலும் ஏலாய்--திருவாளா!
உன்னோடு உறுதி பெரிதெனினும் இவ்வுடம்பே!
நின்னோடு வாழ்தலரிது.


(பதவுரை) இவ்வுடம்பே-இப் பசிநோயால் வருந்தும் வயிறே, ஒருநாளும் நீ தரியாய்-(உணவில்லாத காலத்தில்) ஒரு நாளாவது பொறுத்திராய், உண்ணென்று சொல்லி இரு நாளைக்கு ஈந்தாலும்-(நல்ல உணவை மிகுதியாகப் பெற்ற காலத்தில்) இதனை உண்பாயாக என்று கூறி இரண்டு நாளைக்கு வேண்டு வனவற்றை ஒரே தடவையில் கொடுத்தாலும், ஏலாய்-ஏற்றுக்கொள்ளாய், திருவாளா-திருவுடையோனே, உன்னோடு உறுதி பெரிது எனினும்-உன்னோடு சேர்ந்து வாழ்வதால் அடையும் பயன் சிறந்ததாயினும், நின்னோடு வாழ்தல் அரிது-உன்னோடு வாழ்வது துன்பமே.

(குறிப்பு) உடம்பு: இடவாகுபெயர். அரிது-கூடாது: கூடின் துன்பமே. ''ஒருநாளுணவை''எனத் தொடங்கும் நல்வழிச் செய்யுளை இதனோடு ஒப்பு நோக்குக. (36)
 
    --------------------------------------------------------------------------------------------------- 
     
37. அறத்திற்கு இன்றியமையாதது அறிவே


கட்டளை கோடித் திரியிற் கருதிய
இட்டிகையுங் கோடு மதுபோலும்--ஒட்டிய
காட்சி திரியி னறந்திரியும் என்றுரைப்பர்
மாட்சியின் மிக்கவர் தாம்.



(பதவுரை) கட்டளை-செங்கல் அறுக்கும் கருவி, கோடித்திரியின்- கோணலானால், கருதிய-அதனால் அறுக்கக் கருதிய, இட்டிகையும்-செங்கல்லும், கோடும்-கோணலாகும், அதுபோலும் -அதுபோல்,ஒட்டிய-பொருந்திய, காட்சி திரியின்-அறிவு வேறுபடின், அறம் திரியும்-அறம் வேறுபடும், என்று மாட்சியின் மிக்கவர் உரைப்பர்-என்று பெரியார் கூறுவர்.

(குறிப்பு) தாம்: அசைநிலை, இட்டிகையும்-உம்: இறந்தது தழுவிய எச்சவும்மை. (37)
 
     -------------------------------------------------------------------------------------------------------
     
38. அறநூலால் அறியவேண்டிய ஆறு பொருள்கள்


தலைமகனும் நூலும் முனியும் பொருளும்
தொலைவின் றுணிவொடு பக்கம்--மலைவின்றி
நாட்டியிவ் வாறும் உரைப்பரே நன்னெறியைக்
காட்டி யறமுரைப் பார்.


(பதவுரை) நல் நெறியை-ஒழுக்க நெறியினை, காட்டி-விளக்கி, அறம் உரைப்பார்-அறநூலை உணர்த்துவோர், தலைமகனும்-அருகனும், நூலும்-மெய்ந்நூலும், முனியும்-துறவியும், பொருளும்-உண்மைப் பொருளும், தொலைவின் றுணிவு ஓடு-அழிவின் துணிவையும், பக்கம்-அருகனிடத்தன்பும், இவ்வாறும்-இவ்வாறு பொருள்களையும், மலைவு இன்றி காட்டி-மாறுபாடு அற்றவனாகக் கொண்டு, உரைப்பார்-சொல்லுவார்.

(குறிப்பு) தொலைவின் துணிவு-அழிவின் நிச்சயம். (38)
 
      --------------------------------------------------------------------------------------------------
     
39. சமயம் நம்பிக்கையாலே நடைபெறுவ தென்பது


இறந்தும் பெரியநூ லெம்மதே தெய்வம்
அறந்தானும் இஃதே சென்றாற்றத்--துறந்தார்கள்
தம்பாலே வாங்கி யுரைத்ததனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம்.


(பதவுரை) சென்று-இல்லறத்தினின்று நீங்கி, ஆற்ற துறந் தார்கள் தம்பாலே-அகப்பற்றுப் புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடமிருந்தே, வாங்கி உரைத்ததனால்-பெற்றுச் சொன்னதனால், இறந்தும் பெரிய நூல்-மிகவும் சிறந்த நூல், எம்மதே-எம்முடையதே, தெய்வம் அறந்தானும் இஃதே-தெய்வமும் இதுவே அறமும் இதுவே, ஆராய்ந்து-நீவிரும் நன்கு ஆராய்ந்து, நல்ல அறம்-நல்ல அறமாகிய இதனை, நம்புக-நம்பி மேற்கொள்வீர்களாக.

(குறிப்பு) இதன்கண் அறத்தாலாகிய சமய முடிவு கூறப்பட்டுள்ளது. (39)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
40. அகத்தூய்மையும் அருளுமே சிறந்த அறங்களாம்


ஒன்றோடொன் றொவ்வாத பாசண்டத் துள்ளெல்லாம்
ஒன்றோடொன் றொவ்வாப் பொருடெரிந்-தொன்றோடொன்
றெவ்வா உயிரோம்பி உட்டூய்மை பெற்றதே
அவ்வாய தாகும் அறம்.


(பதவுரை) ஒன்றோடு ஒன்று ஒவ்வாத-ஒன்றுக்கொன்று மாறுபட்ட, பாசண்டத்துள் எல்லாம்-புறச்சமய நூல்கள் பலவற்றுள்ளும், ஒன்றோடு ஒன்று ஒவ்வா-ஒன்றுக்கொன்று மாறுபட்ட, பொருள் தெரிந்து-பொருள் இவையென ஆராய்ந்தறிந்து, ஒன்றோடு ஒன் ஒவ்வா-பலவகைப்பட்ட, உயிரோம்பி-உயிர்களைக் காத்து, உள்தூய்மை பெற்றதே-அகத்தூய்மை பெற்றதே, அவ்வாயது அறம் ஆகும்-சிறந்த அறமாகும்.

(குறிப்பு) ஏ-தேற்றப்பொருள் தரு மிடைச்சொல், உள்-அகம்; மனம். (40)
 
     
     

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #9 on: September 16, 2011, 05:55:31 PM »
   
41. உண்மை நூலை உணரு முறை


நிறுத்தறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால்--பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகுமற் றாகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.


(பதவுரை) நிறுத்து அறுத்து சுட்டு உரைத்து பொன் கொள்வான்போல-பொன் வாங்குவோன் அதனைநிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்துவாங்குதல்போல, அறத்திறனும் ஆராய்ந்து உள்புக்கால்-அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால், பிறப்பு-பிறவியினை, அறுக்கும்-நீக்கும்படியான, மெய்நூல்-உண்மைநூலை, தலைப்படலாகும்-அடையலாம், கண் ஓடிக்கண்டதே கண்டு-கண்சென்று பார்த்ததையே விரும்பி உண்மையெனக்கற்பின், ஆகாது-உண்மை நூலை அடைய இயலாது.

(குறிப்பு) அறுத்தல்-வெட்டிப்பார்த்தல், சுடல் - நெருப்பிலிட்டுக் காய்ச்சி நோக்கல். மற்று:அசைநிலை.ஏ: பிரி நிலைப்பொருள் தரும் இடைச்சொல். (41)
 
    ---------------------------------------------------------------------------------------------------- 
     
42. நடுநிலை காணு முறை


காய்த லுவத்த லகற்றி ஒருபொருட்கண்
ஆய்த லறிவுடையோர் கண்ணதே--காய்வதன்கண்
உற்றகுணந் தோன்றாத தாகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்.


(பதவுரை) காய்வதன்கண் உற்ற-வெறுக்கப்படும் பொருளி லுள்ள, குணம் தோன்றாததாகும்-குணம்ஆராய்வா னுக்குத் தோன்றாது. உவப்பதன்கண் -விரும்பப்படு வதன்கணுள்ள, குற்றமும் தோன்றாக்கெடும் - குற்றமும் தோன்றாது மறையுமாதலால்,காய்தல் உவத்தல் அகற்றி-வெறுப்பு விருப்புஇல்லாமல், ஒரு பொருட்கண் ஆய்தல் - ஒரு பொருளிலுள்ள குணங் குற்றங்களை ஆராய்ந்தறிதல், அறிவுடையோர் கண்ணதே-அறிவுடையார்செயலாகும்.

(குறிப்பு) ஏ: தேற்றப்பொருள் தருமிடைச்சொல், உம்மை இறந்தது தழுவியது. (42)
 
   ---------------------------------------------------------------------------------------------------- 

43. உண்மைத் துறவியினை உணரு முறை


துறந்தார் துறந்தில ரென்றறிய லாகும்
துறந்தவர் கொண்டொழுகும் வேடம்--துறந்தவர்
கொள்ப கொடுப்பவற்றால் காண*லாம் மற்றவர்
உள்ளம் கிடந்த வகை.


(பா-ம்) *‘கொடுப்பவற்றார் காண’
(பதவுரை) துறந்தவர் கொண்டு ஒழுகும் வேடம்-துறவிகள் மேற்கொண்டொழுகும் வேடத்தால், துறந்தார் துறந்திலர் என்று அறியலாகும்-பற்றற்றவர் பற்றறாதவர் என்று அறியலாம், அவர் உள்ளங் கிடந்தவகை-அவர் உள்ளம் பற்றற்ற நிலையினை, துறந்தவர் கொள்ப கொடுப்பவற்றால் காணலாம்-அவர்கள் மற்றவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளும் பொருளினின்றும், மற்றவர்கட்குக் கொடுக்கும் பொருளினின்றும் அறியலாம்.


(குறிப்பு) வேடம்-வேஷம், கொள்ளுதல்-பொருளில் அவாவின்றி வேண்டியவற்றைக் கொண்டு மற்றவை விடல், கொடுத்தல். உண்மைப் பொருளைப் பலர்க்கும் உணர்த்தல். மற்று: அசை.                 (43)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     

44. உம்ப ருலகுக் குரியார் இவரென்பது


இந்தியக் கொல்கா விருமுத் தொழில்செய்தல்
சிந்தைதீ ரப்பியத்தின் மேலாக்கல்--பந்தம்
அரித லிவையெய்து* மாறொழுகு வார்க்கே
உரிதாகும் உம்ப ருலகு.


(பதவுரை) இந்தியக்கு-இந்திரியத்துக்கு, ஒல்கா-தளராத, இரு முத்தொழில் - இரண்டு மூன்றுமாகிய ஐந்து இந்திரியங்களின் தொழிலை, செய்தல்-இயற்றுதல், சிந்தை-அவாவினை, தீர-ஆற்ற, அப்பியத்தின்மேல் ஆக்கல்-வெறுத்து அறுத்தல், பந்தம்-பாசக்கட்டினை, அரிதல்-கெடுத்தல், இவை-ஆகிய இவை, எய்தும் ஆறு-பொருந்தும்படியாக, ஒழுகுவார்க்கே-நடக்கிறவர்களுக்கே, உம்பர் உலகு-மேலுலகம், உரி(த்)தாகும்-உரியதாகும்.

(குறிப்பு) இந்தியக்கு-இந்திரியத்துக்கு: அத்துச்சாரியை தொகை. இந்நூலாசிரியரே பின் இந்தியக் குஞ்சரத்தை ‘ஞானவிருங்கயிற்றால்’ என்று குறித்தலும் காண்க. இவ்வாசிரியர், ‘ஆர்வில் பொறி யைந்தில்’ என்பது போல், வள்ளுவரும், “உரனென்னுந் தோட்டியா னோரைந்தும் காப்பான். வரனென்னும் வைப்பிற்கோர் வித்து” எனக் கூறியிருத்த லுணர்க. அப்பியம்-அப்பிரியம் என்பதன் விகாரம். இனி அப்பியம் என்பதை அவ்வியம் என்பதின் திரிபாகக் கொண்டு அப்பியத்தின் மேலாக்கல் என்பதற்கு மனத்தைக் கோட்டமின்றிச் செய்தல் என்க. தீர்தல்-மிகுதல், உரித்து என்பது உரிது என எதுகை நோக்கி இடை குறைந்து வந்தது. இருமுத்தொழில் அறுவகைத் தொழிலுமாம். அவ்வியம்-அவியம் என்பதன் விரித்தல் விகாரமுமாம்.              (44)

  (பா-ம்)    * ‘வருவா ரிவையெய்து’

 
 ---------------------------------------------------------------------------------------------------
     
     
45. முனிவர் தொழில்


அழலடையப் பட்டான் அதற்குமா றாய
நிழலாதி தன்னியல்பே நாடும்--அழலதுபோல்
காமாதி யாலாங் கடுவினைக் கட்டழித்துப்
போமாறு செய்வார் புரிந்து.



(பதவுரை) அழல் அடையப்பட்டான் - சூரிய வெப்பத்தால் தெறப்பட்டவன், அதற்கு மாறுஆய - அதற்குப் பகையான நிழல் ஆதி தன்னியல்பே நாடும் - நிழல் முதலியவற்றையே விரும்பி அடைவான். அழலது போல்-அதனைஅடைந்தவனை விட்டு வெப்பம் நீங்குதல்போல்,காமம் ஆதியால் ஆம்-காமவெகுளி மயக்கங்களால் ஆகிய, கடுவினை கட்டு அழித்து-கொடியவினையாலாகிய தளையை அழித்து, போமாறுபுரிந்து செய்வார்-வீடு பேற்றினையடையப் போகின்ற வழியினை விரும்பித் தவம் செய்வோரேமுனிவர் ஆவர்.

(குறிப்பு) நிழல் ஆதி- நிழல், நீர், காற்று, உணவு,உடை என்பன. (45)
 

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #10 on: September 16, 2011, 06:33:01 PM »
   
46. ஒழுக்கமே விழுப்பம் தரும்


வெப்பத்தா லாய வியாதியை வெல்வதூ உம்
வெப்பமே என்னார் விதியறிவார்--வெப்பம்
தணிப்பதூஉம் தட்பமே தான்செய் வினையைத்
துணிப்பதூஉம் தூய வொழுக்கு.



(பதவுரை) விதி அறிவார்-நோய் நீக்கும் நெறியினை அறிந்தோர், வெப்பத்தால் ஆய-வெப்பத்தினாலாகிய,வியாதியை-நோயை, வெல்வதூஉம்-போக்குவதும்,வெப்பமே என்னார்-வெப்பமே என்று சொல்லார்,வெப்பம் தணிப்பதுவும் தட்பமே-வெப்பத்தைப் போக்குவதும் குளிர்ச்சியே, (அதுபோல்) தான் செய்வினையை-தான் செய்த தீவினையை, துணிப்பதூஉம்-அழிப்பதும், தூய ஒழுக்கு-குற்றமற்ற ஒழுக்கமேயாகும்.

(குறிப்பு) தணிப்பதூஉம், வெல்வதூஉம், துணிப்பதூஉம் : இன்னிசை யளபெடைகள், ஏகாரம்: முன்னது அசை நிலை: பின்னது தோற்றம். (46)
 ------------------------------------------------------------------------------------------------------------
     
     
47. பொய்ந் நூல்களின் இயல்பு


தத்தம திட்டம் திருட்ட மெனவிவற்றோ
டெத்திறத்தும் மாறாப் பொருளுரைப்பர்--பித்தரவர்
நூல்களும் பொய்யேயந் நூல்விதியி நோற்பவரும்
மால்கள் எனவுணரற் பாற்று.



(பதவுரை) பொருள்-தாம் கூறும் பொருள்களை, தத்தமது - தங்கள் தங்கள், இட்டம்-விருப்பம், திருட்டம்-காட்சி, என இவற்றோடு-என்ற இவையோடு, எத்திறத்திலும் மாறா உரைப்பர்-ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களை,பித்தர் என-பைத்தியக்காரர் எனவும், அவர் நூல்களும்பொய்யே என-அவர் கூறும் நூல் களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல் விதியின்நோற்பவரும் -அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும்,மால்கள் என-மயக்கமுடையார் எனவும், உணரற்பாற்று-உணர்தல் வேண்டும்.

(குறிப்பு) இட்டம்-இஷ்டம்: மனத்தே கண்டது. திருட்டம்-திருஷ்டியிற் படுவது; காட்சி. ஏ: தேற்றப்பொருள். (47)
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
48. மெய்யுணர்வு நற்கதிக் கின்றியமையாமை


குருட்டுச் செவிடர்கள் கோல்விட்டுத் தம்முள்
தெருட்டி வழி *சொல்லிச் சேறல்--திருட்டேட்டம்
மாறு கொளக்கிடந்த மார்க்கத்தால் நற்கதியில்
ஏறுதும் என்பா ரியல்பு.



(பதவுரை) திருட்டம்-ஐம்புலக் காட்சியும், இட்டம்- உள்ள உணர்ச்சியும், மாறுகொளக் கிடந்த மார்க்கத் தால் - செலுத்தும் நெறிகள் மெய்ந் நெறிகளின் மாறுபடக்கிடப்பதை (அறியாமல்) அந்நெறியிற் சென்று நற்கதியில் ஏறுதும் என்பார். இயல்பு-நற்கதியை அடையக்கருதுவோர் செயல், குருட்டுச் செவிடர் கள்-குருடுஞ்செவிடுமாகிய இரு தன்மையையும் ஒருங்கே அடைந்த இருவர், கோல்விட்டு-கோலினு தவியாலும், தம்முள் வழி தெருட்டிச் சொல்லி-ஒருவருக்கொருவர் வழியின தியல்பைவிளக்கிக்கொண்டும், சேறல்-குறித்த இடத்தினை அடையக்கருதிச் செல்லு தலை நிகர்க்கும்.

(குறிப்பு) திருட்டம்-பார்வை: உபலக்கணத்தல் ஐம்புலக்காட்சியினை யுணர்த்தியது. இட்டம் - கருத்து. திருட்ட+ இட்டம்=திருட்டேட்டம்: வடமொழிக் குணசந்தி. சேரல்=செல் + தல். ஏறுதும்: தன்மைப்பன்மை வினைமுற்று. (48)
 
     -------------------------------------------------------------------------------------------------------
     
49. அறவுரையை உரைப்பவரும் கேட்பவரும்


அற்றறிந்த காரணத்தை ஆராய்ந் தறவுரையைக்
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே--மற்றதனை
மாட்சி புரிந்த மதியுடை யாளரே
கேட்பர் கெழுமி யிருந்து.


(பா-ம்.) *தெருட்டு வழி
(பதவுரை) கற்று அறிந்த மாந்தர்-மெய்ப்பொருளைக்கற்றுத் தெளிந்த மாந்தர், அற்றறியும் காரணத்தை-பற்றற்றுத் துறந்து அறியவேண்டிய மெய்ந் நூல்களை அறியும் காரணத்தையும், அறவுரையை - அறப் பொருளையும், ஆராய்ந்து உரைப்ப - ஆராய்ச்சி செய்து உரைப்பர். அதனை-அவ்வுரையை, மாட்சி புரிந்த மதியுடையாளரே-நற்குணமிக்க அறிவுடையவர்களே,கெழுமி இருந்து-உளமிசைந்து உரிமை யுடன், கேட்பர்-கேட்பராவர்.


(குறிப்பு) அறுதல்-பற்றொழிதல். அறவுரை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஏ: முன்னது அசைநிலை;பின்னது பிரிநிலை. (49)
 

     
 -------------------------------------------------------------------------------------------------------
   
50. வீட்டினை அடையும் வழி


உருவும் ஒழுக்கமும் நூலும் பொருளும்
பொருவில் தலைமகனோ டின்ன--ஒருவாறு
கண்டு கருதிக் கயக்கறத் தேர்ந்தபின்
கொண்டுவீ டேற்க வறம்.


(பதவுரை) உருவும் வடிவமும் ஒழுக்கமும்-நன்னடக்கையும், நூலும்-உரைக்கும் நூலும், பொருளும்-அந்நூலுட் கூறப்படும் பொருளும், பொருவில் தலைமகனோடு இன்ன-ஒப்பில்லாதுயர்ந்த இறைவனுமாகியஇவற்றை, ஒருவாது - நீங்காது, கண்டு - ஆராய்ந்து, கருதி-சிந்தித்து, கயக்கு அற தேர்ந்த பின்-கலக்கமில்லாதுணர்ந்த பின்னர், அறம் கொண்டு-அறத்தினை மேற்கொண்டு, வீடு ஏற்க-முத்தியை அடைய முயல்க.

(குறிப்பு) உருவு-தொலைப் பொருள்களின் வடிவினையுணருங் காட்சியறிவு. ஏற்க: வியங்கோள் வினை. (50)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #11 on: September 16, 2011, 06:39:04 PM »
   
51. வீட்டினை யுறுவான் இயல்பு


நூலுணர்வு நுண்ணொழுக்கம் காட்டுவிக்கும் நொய்யவாம்
சால்பின்மை காட்டும் சவர்ச்செய்கை--பால்வகுத்துப்
பட்டிமையா லாகா பரமார்த்தம் பற்றின்மை
ஓட்டுவா னுய்ந்துபோ வான்.


(பதவுரை) நுண்ணொழுக்கம்-ஒருவன் சிறந்த ஒழுக்கம், நூலுணர்வு காட்டு விக்கும்-அவன் கற்ற நூலின்கணுளதாகும், நுணுகிய உணர்வை வெளிப்படுத்தும், சவர்ச்செய்கை-ஒருவனுடைய வெறுக்கத்தக்க இழிந்த செய்கை, நொய்யவாம் சால்பின்மை காட்டும்-அவனுடைய இழிதகைமையாகிய சிறந்த நூற் பயிற்சியின்மையையும் வெளிப்படுத்தும், பால்வகுத்துப் பயிற்சியின்மையையும் வெளிப்படுத்தும், பால்வகுத்துப் பட்டிமையால்-பகுதிதோறும் வேறுபட்டு ஒருவன் செய்யும் படிற்றொழுக்கத்தால், பரமார்த்தம் ஆகா-பரம்பொருளை அடைதல் இயலாது, பற்றின்மை ஓட்டுவான்-மெய்யாகவே ஒருவன் பற்றின்மையைப் பற்றுவனாயின் அவன், உய்ந்து போவான்-வீடடைவான்.

(குறிப்பு) நொய்யாவாம் சொல்லின்மை-எளியவாகிய அறிவின்மை எனலுமாம். ஓட்டுவான்: வினையாலணையும் பெயர். (51)
 
     -----------------------------------------------------------------------------------------------------
     
52. வீரமில்லானைப் படைத்துணை கோடல் வீணென்பது


புனைபடை கண்டஞ்சித் தற்காப்பான் றன்னை
வினைகடியு மென்றடி வீழ்தல்--கனையிருட்கண்
பல்லெலி தின்னப் பறைந்திருந்த பூனையை
இல்லெலி காக்குமென் றற்று.


(பதவுரை) புனை படை கண்டு அஞ்சி-படைக்கலன்களை அணிந்துவரும் படையைக் கண்ட அளவானே பயந்து, தற்காப்பான் தன்னை-தன்னைப் பாதுகாக்க விரைந்து ஒழியும் ஒருவனைப் (பிறனொருவன்), வினை கடியும் என்று அடி வீழ்தல்-தனக்கு வந்த போரைப் போக்கென அவனடி வீழ்ந்து வேண்டுதல், கனையிருட் கண்-நள்ளிருளில் பல்லெலி தின்னப் பறைந்திருந்த பூனையை-பல எலிகளும் வீட்டிலுள்ள பொருள்களைத் தின்றுகொண்டி ருப்பதைக் கண்டு வைத்தும் ஒன்றுஞ் செய்யமுடியாது வரிதே கூச்சல் செய்துகொண்டிருந்த பயந்த பலனற்ற பூனையை, இல்லெலி காக்கும் என்றற்று- (ஒருவன்)தன் வீட்டு எலிகளின் துன்பத்தினின்று காக்குமென்று அத்னைக் கொண்டாற் போலும்.

(குறிப்பு) புனைபடை: வினைத்தொகை. பல+எலி=பல்லெலி. பறைதல்-ஒலித்தல். (52)
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
53. அவா மிகுந்துள்ளார் ஆசிரியராகார்

மாடமும் மண்ணீடுங் கண்டடக்க மில்லாரைக்
கூடி வழிபடுங் கோளாமை--ஆடரங்கின்
நோவகமாய் நின்றானோர் கூத்தினை ஊர்வேண்டிச்
சேவகமாய் நின்ற துடைத்து.


(பதவுரை) மண்ணீடும்-சிறுவீட்டையும், மாடமும்-பெரு மாளிகைகளையும், கண்டு-பார்த்து, அடக்கம் இல்லாரை-அவாவில்லாதிராது ஆசையுடையாரை, கூடி-தலைப்பட்டு, வழிபடும்-ஆசிரியராகக்கொண்டு வழிபாடுசெய்யும் ,கோள்-கொள்கை, அமை ஆடரங் கின்-அமைக்கப்பட்ட நடனசாலையில், நோவகமாய் நின்றானோர் கூத்தினை-தன் பிழைப்பு நோக்கி வருத்தமுடன் நிற்பவனாகிய கூத்தன் நடிக்க அவன், கொண்ட அரசகோலத்தைக் கண்டு மயங்கி அவனை, ஊர்வேண்டிச் சேவகமாய் நின்றதுடைத்து-ஊரார் தங்களை ஆள்கவென்று கூறிப் பணிசெய்து நிற்றலோ டொக்கும்.

(குறிப்பு) கோள்: முதநிலை திரிந்த தொழிற்பெயர். ஆடரங்கு: வினைத் தொகை. ஊர்: இடவாகுபெயர். (53)
 
   ---------------------------------------------------------------------------------------------------   
     
54. ஒழுக்கமும் நோன்பும் இல்லார் உறுதிப்பொருள் உரையார்


நாற்றமொன் றில்லாத பூவொடு சாந்தினை
நாற்றந்தான் வேண்டி யதுபோலும்--ஆற்ற
மறுவறு சீலமும் நோன்புமில் லாரைஉறுபயன் வேண்டிக் கொளல்.


(பதவுரை) மறுவறு சீலமும்-குற்றமற்ற ஒழுக்கமும், நோன்பும்-தவமும், ஆற்ற இல்லாரை-மிக இல்லாதவர்களை, உறுபயன் வேண்டிக்கொளல்-உறுதிப் பொருள்களை உணர்த்துமறு வேண்டுதல், நாற்றம் ஒன்று இல்லாத-நறுமணம் ஒரு சிறிதும் இல்லாத, பூவொடு சாந்தினை-பூவினையும் சந்தனத்தினையும், நாற்றந்தான் வேண்டியது போலும்-நறுமணத்தை அளிக்குமென்று விரும்பியது போலாம்.

(குறிப்பு) உறுபயன்: உரிச்சொற்றடர்; மிகுந்த பயன் தரும் உறுதிப்பொருள். தான்: அசைநிலை. (54)
 
    -------------------------------------------------------------------------------------------------------- 
     
55. நற்குணமில்லாரிடத்து நயங்கோடல் கூடாது


மால்கடல்சூழ் வையத்து மையாதாங் காத்தோம்பிப்
பால்கருதி யன்ன துடைத்தென்பர்--மேல்வகுத்து
மன்னிய நற்குண மில்லாரைத் தாம்போற்றிப்
புண்ணியங் கோடுமெனல்.


(பதவுரை) மன்னிய-நிலைபெற்ற, நற்குணம் இல்லாரை - நற்குணங்கள் இல்லாத வர்களை, மேல் வகுத்து-உயர்ந்தோராகக் கொண்டு, போற்றி-துதித்து, தாம் புண்ணியம் கோடும் எனல்-நாம் புண்ணியத்தினை அடைவோம் என்று நினைத்தல், மால்கடல் சூழ் வையத்து-பெரிய கடல் சூழ்ந்த உலகத்தில், தாம்-சிலர், மையா காத்து ஓம்பி - மலட்டுப்பசுவை மிகவும் பாதுகாத்து பால் கருதி யன்ன துடைத்து என்பர்-அதனால் பாலை அடையக் கருதியி ருந்தாற் போலும் என்று பெரியோர் கூறுவர்.

(குறிப்பு) மை-மலடாகிய குற்றம், கோடும்=கொள்+தும்: கோடும்: தன்மைப் பன்மை வினைமுற்று. (55)
 

« Last Edit: September 16, 2011, 06:40:52 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #12 on: September 16, 2011, 07:17:13 PM »
   
56. பலர் கூறினும் பொய் மெய்யாகாது


உடங்கமிழ்தங் கொண்டா னொருவன் பலரும்
விடங்கண்டு நன்றிதுவே என்றால்-- மடங்கொண்டு
பல்லவர் கண்டது நன்றென் றமிழ்தொழிய
நல்லவனும் உண்ணுமோ நஞ்சு.


(பதவுரை) உடங்கு-உயிரும் உடம்பும் கூடிநிற்றற்குக் காரணமாகிய அமிழ்தம் கொண்டா னொருவன்-தேவாமிர்தத்தினைப் பெற்றா னொருவன், விடங்கண்டு பலரும் இதுவேநன்று என்றால்-நஞ்சினைப் பார்த்துப் பலரும் இதுவே தேவாமிர்தமென்று கூறினாலும், பல்லவர் கண்டது நன்று என்று-பலர் கண்டதே உண்மையாக இருக்குமென்று நம்பி, நல்லவனும் மடங்கொண்டு-அமிழ்தத்தைப் பெற்ற அவனும் அறியாமையை யுடையவனாய், அமிழ்து ஒழிய-கையிலுள்ள அமிர்தத்தை நீக்கி, நஞ்சு உண்ணுமோ-நஞ்சினை உண்பானோ? உண்ணான்.

(குறிப்பு) என்றால்:உம்மை தொகுத்தல் விகாரம் பெற்றுள்ளது. நல்லவனும்: உம்மை உயர்வு சிறப்பு. ஓ: எதிர்மறை. (56)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
57. சிட்டராவார் இவரெனல்


தன்னையும் தன்னிற் பொருளையும் பட்டாங்கிற்
பன்னி யறமுரைக்க வல்லாரை--மன்னிய
துட்ட ரெனச்சிட்டன் தோற்றுவ தல்லாரைச்
சிட்டரென் றேத்தல் சிதைவு.


(பதவுரை) தன்னையும் தன்னிற் பொருளையும் பட்டாங்கிற் பன்னி-தன்னையும் தன்னால் அறியத்தகும் பொருளையும் உண்மையாகக் கூறி, அற முரைக்க வல்லாரை-அறங்கூற வல்லாரை, மன்னிய சிட்டரென-நிலைபெற்ற ஞானமுடையவரென, சிட்டன்-ஞானி, தேற்றுவது-பலருக்கும் தெளிவிப்பது நன்மை பயப்பதாகும், அல்லாரை-அத்தகைய ரல்லாதவர்களை, சிட்டர் என்று-ஞானிகளென, ஏத்தல்-புகழ்தல், சிதைவு-கேடு பயப்பதாகும்.

(குறிப்பு) பன்னுதல்-கூறுதல், பட்டாங்கு-நூல்நெறியெனலுமாம். (57)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
58. ஏகான்மவாதிகளின் இயல்பு


எத்துணை கற்பினும் ஏகான்ம வாதிகள்
யுத்தியும் சொல்லும் பொலிவிலவாய்--மிக்க
அறிவனூல் கற்றா ரலவெனவே நிற்கும்
எறிகதிர்முன் நீல்சுடரே போன்று.


(பதவுரை) எத்துணை கற்பினும்-மிகப்பல நூல்களைக் கற்றாலும், ஏகான்ம வாதிகள்-ஆன்மா ஒன்றே என்று வாதிப்போரது, புத்தியும் சொல்லும்-அறிவும் சொல்லும், எறி கதிர்முன் நீள்சுடரே போன்று-சூரியன் முன் ஓங்கி எரியும் விளக்கேபோல், பொலிவிலவாய்-விளங்குதலின்றி, மிக்க-பெருமைமிக்க, அறிவன் நூல் கற்றார் அல எனவே நிற்கும்-இறைவனோதிய நூலைக் கற்றவரல்லர் என்று சொல்லுமாறே நிற்கும்.

(குறிப்பு) ஏகான்மவாதிகள்-அத்துவைத சமயிகள். ''விரி வெயிலில் விளக்காளியும்............போல் வெட்கி முகம் வெளுத்தான்'' என்ற சிவகாமி சரிதத் தொடரினை ஒப்புநோக்குக. (58)
 
    --------------------------------------------------------------------------------------------------- 
     

59. பிறவிநோயை அறுக்கவல்ல பெரியார் இவரென்பது


அவ்விநய மாறும் மும்மூட மெண்மயமும்
செவ்விதி னீக்கிச் சினங்கடிந்து-கவ்விய
எட்டுறுப்பி னாய இயல்பினற் காட்சியார்
சுட்டறுப்பர் நாற்கதியிற் றுன்பு.



(பதவுரை) அவ்விநயம் ஆறும்-அச்சத்தால் வணங்குதல் முதலிய ஆறு ந்வ்விநயங்களும், மும்மூடம்-உலக மயக்க முதலான மூன்று மயக்கங்களும், எண் மயமும்-அறிவால் வருஞ் செருக்கு முதலிய எண்வகைச் செருக்குகளுமாகிய இவற்றை, செவ்விதின் நீக்கி-நன்றாகப் (முற்றிலும்) போக்கி, சினம் கடிந்து-வெகுளியையும் நீக்கி, கவ்விய-மேற்கொள்ளுதற்குரிய, எட்டுறுப்பின் ஆய இயல்பின்-ஐய மின்மை முதலான எட்டு உறுப்புக்களோடு கூடிய, நற்காட்சியார்-சிறந்த காட்சியாராகிய அறிவினையு முடையவர்கள், நாற்கதியில் துன்பு-நால்வகைப்பட்ட பிறவியால் வரும் நோயைஇ சுட்டு அறுப்பர்-சுட்டு அறுப்பவராவர்: (அழிப்பவராவர்.)


(குறிப்பு) விநயம்-ஒழுக்கமுடைமை, அவ்விநயம்-ஒழுக்கமின்மை.  ‘மும்மூடமும்’ என உம்மையை விரிக்க அவ்விநய மாறாவன-அச்சம், ஆசை, லௌகிகம், அன்புடைமை, பாசண்டம், தீத்தெய்வ வணக்கம், மும்மூடம்: உலக மூடம், பாசண்டி மூடம், தேவமூடம்.  எண்மயம்-அறிவுச்செருக்கு, புகழ்ச்செருக்கு, குலச்செருக்கு, வீரச்செருக்கு, தவச்செருக்கு, செல்வச்செருக்கு, ஆகூழ்ச்செருக்கு, அழகுச்செருக்கு, எண்வகையுறுப்பு ஐயமின்மை, அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கின்மை, பழிநீக்கல், நன்னெறியில் நிற்றல், அருளுடைமை, அறப்பொருளை விளக்கல்.  இவற்றையெல்லாம் பின்வருஞ் செய்யுட்களில் விளங்கக் காணலாம்.               (59)
 

     
 -------------------------------------------------------------------------------------------------------   

60. அவ்விநயம் ஆறாவன


அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை
மிக்கபா சண்டமே தீத்தெய்வ-மெச்சி
வணங்குத லவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களிற் குன்றா தவர்.



(பதவுரை) மாண்ட குணங்களில் குன்றாதவர்-மாட்சிமைப்பட்ட குணங்களால் குறையாத நிறைந்த பெரியோர்கள், அச்சம்-அச்சமும், ஆசை-ஆசையும், உலகிதம்-லௌகிகமும், அன்புடைமை-அன்புடைமையும், மிக்க பாசண்டம்-இழிவு மிக்க புறச்சமயமும், தீத்தெய்வம்-கொடுந்தெய்வத்தை, மெச்சி வணங்குதல்-துதித்து வணங்குதலும், அவ்விநயம் என்ப-விநயமல்லாததென்று சொல்லுவர்.


(குறிப்பு) ஏ: அசைநிலைப் பொருளன.  என்ப: உயர்திணைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று    (60)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #13 on: September 18, 2011, 03:31:30 AM »

61. அறுவகைப் பெரியோர்கள்


மன்ன னுடன்வயிறு மாண்புடைத் தாய்தந்தை
முன்னி முடிக்கு முனியாசான்-பன்னியங்
காய குரவர் இவரென்ப வையத்துத்
தூய குலஞ்சாதி யார்க்கு.



(பதவுரை) வையத்து-இப்பூமியில், தூய குலம்-அழுக்கற்ற குல நலனும், சாதியார்க்கு-சாதி நலனும் உடையவர்க்கு, மன்னனுடன்-மன்னனும், வயிறு மாண்புடைத் தாய் தந்தை-தம்மைப் பெறலால் மேம்பட்ட தாய் தந்தையரும், முன்னிமுடிக்கு முனி-கருகியதை முடித்தேவிடும் ஆற்றலுடைய துறவியும், ஆசான்-குருவும், பன்னி-அவர் பத்தினியும், ஆய இவர்-ஆகிய இவர்களே, குரவர் என்ப-குரவர்கள் எனப் பெரியோர் கூறுவர்.


(குறிப்பு) “மாண்பு வயிறுடைத் தாய்” எனக் கோடலுமாம்.  அங்கு-ஆங்கு: அசைநிலை குறுக்கல் விகாரம்.         (61)
 
      ------------------------------------------------------------------------------------------------------
     

62. கோள்மொழி கேட்கும் குணமிலிகள்


கண்டதனைத் தேறா தவனுங் கனாக்கண்டு
பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும்-பண்டிதனாய்
வாழ்விப்பக் கொண்டானும் போல்வரே வையத்துக்
கோள்விற்பக் கொள்ளாநின் றார்.


(பதவுரை) வையத்து-பூமியில், கோள்-பொய்யை, விற்ப-மெய்யென்று கூறி விற்க, கொள்ளாநின்றார்-அதனை விலை கொடுத்து வாங்குவோர், கண்டதனை-தானே நேரில் பார்த்ததை, தேறாதவனும்-தெளியாதவனும், கனாக் கண்டு பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும்-கனவில் தன் மனைவி அயலானைச் சேர்ந்திருக்கக் கண்டு அதனை உண்மையென மயங்கி அவளைக்கொன்றவனும், பண்டிதனாய் வாழ்விப்பக்கொண்டானும்-பண்டிதனாக இருந்தும் தனது நல்வாழ்க்கைக்குப் பிறருதவியை நாடுபவனும், போல்வர்-போன்று அறிவிலிகளேயாவர்.

(குறிப்பு) கோள், பிறர்மேல் இல்லது கூறலாதலின் பொய் எனப்பட்டது. (62)
 
    -------------------------------------------------------------------------------------------------------- 
     

63. பாசண்டி மூடம்


தோல்காவி சீரைத் துணிகீழ் விழவுடுத்தல்
கோல்காக் கரகம் குடைசெருப்பு-வேலொடு
பல்லென்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
நல்லவரால் நாட்டப் படும்.



(பதவுரை) தோல் காவி சீரை துணி கீழ்விழ உடுத்தல்-தோல் கல்லாடை மரவுரி துணி இவைகளைக் கீழே விழுமாறு உடுத்தலும், கோல் கா கரகம் குடை செருப்பு வேலொடு பல் என்பு தாங்குதல்-தண்டு காவடி கமண்டலம் குடை செருப்பு வேல் பல் எலும்பு இவற்றை மேற்கொள்ளுதலுமாகிய இவை, பாசண்டி மூடமாய் நல்லவரால் நாட்டப்படும்-புறச் சமயிகளது அறியாமையாகப் பெரியோர்களால் சொல்லப்படும்.

(குறிப்பு) தோல்-புலித்தோல், மான்தோல் முதலியவற்றாலாகிய ஆடை.  துணி-நூலாடை.  கல்லாடை-காவியுடை.  கீழ் விழ உடுத்தல்-பாதங்கள் வரை படியுமாறு கட்டிக்கொள்ளுதல், பல் எலும்பு-பற்களாகிய எலும்பு அன்றி, புலிப்பற்களும்-மக்களுடலெலும்புமாம்  (63)
 
     
   --------------------------------------------------------------------------------------------------- 

64. வெளிக்கோலத்தின் வீண்


ஆவரண மின்றி அடுவாளும் ஆனைதேர்
மாவரண மின்றி மலைவானும்-தாவில்
கழுதை யிலண்டஞ் சுமந்தானும் போலப்
பழுதாகும் பாசண்டி யார்க்கு.


(பதவுரை) ஆவரணமின்றி அடு வாளும்-கேடகமின்றிப் போரில் பகைவரைக் கொல்லும் வாளும், ஆனை தேர் மா அரணம் இன்றி மலைவானும்-யானை தேர் குதிரை முதலிய படைகளும் அரணுமின்றிப் போர் செய்யும் வீரன் செயலும், தா இல் கழுதையில் அண்டம் சுமந்தானும் போல-குற்றமற்ற கழுதையில் ஏறிச் சென்றும் சுமையைத் தன் தலையில் தாங்கிச் செல்பவன் செயலும்போல், பாசண்டியார்க்குப் பழுதாகும்-போலித் துறவிகளுக்கு அவர் மேற்கொண்டுள்ள வேடமும் பயனற்றதாகும்.

(குறிப்பு) கேடகமின்றி மேற்கொள்ளும் வாள், போரில் பயன்படாதென்பதாம்.  கோவேறு கழுதை யென்பார், “தாவில் கழுதை” என்றர்ா.  கழுதை+இலண்டம் எனப் பிரித்து, கழுதைச் சாணம் எனலுமாம். (64)

 
      --------------------------------------------------------------------------------------------------
     

65. எண்வகைச் செருக்கு


அறிவுடைமை மீக்கூற்றம் ஆன குலனே
உறுவலி நற்றவ மோங்கிய செல்வம்
பொறிவனப்பின் எம்போல்வா ரில்லென்னு மெட்டும்
இறுதிக்கண் ஏமாப் பில.


(பதவுரை) அறிவுடைமை-அறிவாலும், மீக்கூற்றம்-புகழாலும், ஆன குலனே-உயர்ந்த பிறப்பாலும்.  உறுவலி-மிக்க வலிமையாலும், நல் தவம்-நல்ல தவத்தாலும், ஓங்கிய செல்வம்-உயர்ந்த செல்வத்தாலும், பொறி வனப்பின்-நல்லூழாலும் உடல் அழகாலும், எம்போல்வார் இல் என்னும்-எம்மைப் போன்றவர் இல்லையென்று கூறி மகிழும், எட்டும்-எட்டுவிதமான செருக்கும், இறுதிக்கண்-முடிவில், ஏமாப்பு இல-இன்பம் செய்யாவாம்.


(குறிப்பு) மீக்கூறு-மேம்படக் கூறும் புகழ்: அம்: தொழிற் பெயர் விகுதி.  பொறி-ஊழ்.  வனப்பு-மேனியழகு. ஏமாப்பு-பாதுகாப்பு; இன்பம்.    (65)
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #14 on: September 18, 2011, 03:38:04 AM »


66. சினத்தா லாம்பயன் சிறிது மின்று


உழந்துழந்து கொண்ட உடம்பினைக் கூற் றுண்ண
இழந்திழந் தைங்கணுந் தோன்றச்-சுழன்றுழன்ற
சுற்றத்தா ரல்லாதா ரில்லையால் நன்னெஞ்சே
செற்றத்தால் செய்வ துரை,


(பதவுரை) நல் நெஞ்சே-நல்ல மனமே!, உழந்து உழந்து-முயன்று முயன்று, கொண்ட-நாம் அடைந்த, உடம்பினை-உடல்களை, கூற்று உண்ண-எமன் உண்ண, இழந்து இழந்து-பலகாலும் இழந்து, எங்கணும்-எல்லாவிடத்தும், தோன்ற-பிறத்தலால், சுழன்று உழன்ற-உலக வாழ்க்கையில் நம்மொடு கூடிச் சுழன்று தடுமாறித் திரிந்த மக்களில், சுற்றத்தா ரல்லாதாரில்லை-உறவினரல்லாதார் வேறொருவருமில்லை; (அங்ஙனமாயின்), செற்றத்தால் செய்வது உரை-பிறர்பால் கொள்ளும் வெகுளியால் நீ செய்வது யாதோ? சொல்.

(குறிப்பு) உழந்துழந்து, இழந்திழந்து: அடுக்குத் தொடர்கள்; பன்மை கருதின.  கூற்று-உயிரினையும் உடலினையிம் கூறாக்கிப் பிரிப்பது எமன்.  ஆல் அசைநிலை.  “சுற்றிச் சுற்றிப் பார்ப்போமாயின், தோட்டியும் நமக்கு உதவுவான்” என்ற பழமொழிப் பொருளை ஈண்டுக்கொண்டு நோக்குக. (66)


----------------------------------------------------------------------------------------------------------

67. சினத்தினை நீக்கிக் குணத்தினைக் கொள்க


உயிரும் உடம்பும் பிரிவுண்மை யுள்ளிச்
செயிருஞ் சினமுங் கடிந்து-பயிரிடைப்
புற்களைந்து நெற்பயன் கொள்ளு மொருவன் போல்
நற்பயன் கொண்டிருக்கற் பாற்று.



(பதவுரை) உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி-உயிரும் உடம்பும் வேறு வேறாகப் பிரிவது தவறாது என்பதை அறிந்து, பயிரிடை புல் களைந்து-பயிர்களின் இடையிடையே தோன்றிய களைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, நெல் பயன்கொள்ளும் ஒருவன்போல்-பயிர்களைக் காத்து நெல்லாகிய பயனை அடையும் உழவன்போல, செயிரும் சினமுங் கடிந்து-மயக்கம் வெகுளிகளை நீக்கி, நற்பயன்கொண்டு இருக்கற்பாற்று-இன்பத்துக்கேதுவாகிய நல்வினையை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது.

(குறிப்பு) உயிரு முடம்பும் பிரிவுண்மை-உடனிலையாமை, இடை: ஏழனுருபு.  நல்வினையினை அதன் காரியமாகிய பயனாகக் கூறியுள்ளார்.  கடிதல்-விலக்கல்.  (67)


-----------------------------------------------------------------------------------------------------------
 

68. நற்காட்சிக்குரிய எண்வகை உறுப்புகள்


ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
செய்பழி நீக்கல் நிறுத்துதல்-மெய்யாக
அன்புடைமை ஆன்ற அறவிளக்கஞ் செய்தலோ
டென்றிவை எட்டாம் உறுப்பு
.


(பதவுரை) ஐயம்-சந்தேகமும், அவா-ஆசையும், உவர்ப்பு-வெறுப்பும், மயக்கு இன்மை-மயக்கமுமாகிய இவை யில்லாமையும், செய்பழி நீக்கல்- பழியாயினவற்றினின்று உள்ளத்தை மீட்டலும், நிறுத்துதல்-மனமொழி மெய்களை நன்னெறியில் நிறுத்துதலும், மெய்யாக அன்புடைமை-உயிர்களிடத்து மாறாத அருளுடைமையும், ஆன்ற அறவிளக்கம் செய்தல் ஓடு-சிறந்த அறத்தினைப் பலர்க்கும் விளக்குதலுடனே, என்ற இவை எட்டாம் உறுப்பு-ஆகிய இவ்வெட்டும் நற்காட்சிக்கு உரிய அங்கங்களாகும்.

(குறிப்பு) நற்காட்சி மன அமைதியாலுண்டாம் அரிய கடவுள் தோற்றம்.  இதனை, “மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி யென்றுரைப்பர், எப்பொருளும் கண்டுணர்ந்தார்” என்ற அருங்கலச் செப்புச் செய்யுளால் தெளிக.  ஐயமின்மை, அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கின்மை என இன்மையை மூன்றிடத்தும் கூட்டுக.  உறுப்பு-பயனுறுங் கருவிகள்.  என்ற+இவை=என்றிவை அகரந் தொகுத்தல்.    (68)



 ---------------------------------------------------------------------------------------------------------


69. அறத்தின் இன்றியமையாமை


மக்க ளுடம்பு பெறற்கரிது பெற்றபின்
மக்க ளறிவும் அறிவரிது-மக்கள்
அறிவ தறிந்தா ரறத்தின் வழுவார்
நெறிதலை நின்றொழுகு வார்
.


(பதவுரை) மக்கள் உடம்பு பெறற்கரிது-மக்கட் பிறப்பினை அடைதல் அருமை, பெற்றபின்-பிறந்தாலும், மக்கள் அறிவும் அறிவு அரிது-மக்களுணர்வாகிய ஆறறிவினையும் அடைதல் அதனினும் அருமை, மக்கள் அறிவது அறிந்தார்-ஆறறிவினையுமுடையராய்ப் பிறந்து அறியவேண்டியதை அறிந்தவர், அறத்தின் வழுவார்-அறநெறியிற் சிறிதும் வழுவார்.  நெறிதலை நின்று ஒழுகுவார்-அன்றியும் அறநெறியை மேற்கொண்டு அதனுக்கேற்ப நடப்பார்.

(குறிப்பு) “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்பராகலின், ‘மக்கள்’ என்பதற்கு, ‘ஆறறிவினையு முடையராய்’ என்று பொருளுரைக்கப்பட்டுள்ளது.  அறிந்தார்: வினையாலணையும் பெயர்.  வழுவார் முற்றெச்சம்.  (69)
 
     
     -------------------------------------------------------------------------------------------------------

70. ஒழுக்கமே உயர்வளிக்கும்


பிறந்த இடநினைப்பின் பேர்த்துள்ள லாகா
மறந்தேயும் மாண்பொழியும் நெஞ்சே!-சிறந்த
ஒழுக்கத்தோ டொன்றி உயப்போதி யன்றே
புழுக்கூட்டுப் பொச்சாப் புடைத்து,



(பதவுரை) மாண்பு ஒழியும் நெஞ்சே-பெருமையிலாத நேஞ்சே!, பிறந்த இடம்-இதற்குமுன் பிறந்த இடங்களை, நினைப்பின்-நீ நினைந்து பார்க்கின், மறந்தேயும் பேர்த்து உள்ளலாகா-அவற்றை மறந்தும் திரும்ப எண்ணுதலாகாது (ஆதலின் நீ), புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து-புழுக்கள் கூடி வாழுமிடமாகிய இவ்வுடலைப் பெற்றதால் உண்டாம் மறதியைக் கெடுத்து, சிறந்த ஒழுக்கத்தோடு ஒன்றி-பெரியோர் ஒழுக்கத்தில் நின்று, உயப்போதி-துன்பத்தினின்றும் உய்தி.



(குறிப்பு) உடைத்தல்-நொறுக்குதல்; கெடுத்தல்.  உய்தல்-தப்பிப் பிழைத்தல்.  போதி: இகரவிகுதி பெற்ற ஏவலொருமை வினைமுற்று.  அன்று, ஏ: அசைநிலைகள்.      (70)