16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே.
(பதவுரை)
பனையின் - பனைமரத்தின், தேம்படு - மதுரம் பொருந்திய, திரள் - திரண்ட, பழத்து - கனியில் உள்ள, ஒரு விதை - வித்தானது, வான் உற - ஆகாயத்தைப் பொருந்தும்படி, ஓங்கி - உயர்ந்து, வளம் பெற- செழுமை உண்டாக, வளரினும் - வளர்ந்தாலும், ஒருவர்க்கு - ஒருவர்க்காயினும். இருக்க - இருப்பதற்கு, நிழல் ஆகாது - நிழலைத் தராது.
(பொ-ரை)
சுவை பொருந்திய பெரிய பனங்கனியிலுள்ள விதையானது முளைத்து வானமளாவ வளத்துடன் வளர்ந்தாலும் ஒருவரேனும் தங்கியிருக்க நிழலைத் தராது.
உருவத்தாற் பெரியவரெல்லாம் பெருமை யுடையவராகார் என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. தேம்பழம் எனக் கூட்டுக. விதை முளைத்து வளரினும் அது நிழலாகாது. என விரித்துக் கொள்க. தொல்காப்பிய இலக்கணப்படி பனை முதலிய புறவயிரம் உள்ளவற்றிற்குப் புல் என்று பெயர். ஒருவர்க்கும் - என்னும் உம்மை தொக்கது. ஏ : ஈற்றசை.
-----------------------------------------------------------------------------------------------------
17. தெள்ளிய ஆலின் சிறுபழத தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
(பதவுரை)
ஆலின் - ஆலமரத்தின், தெள்ளிய - தெளிந்த, சிறு பழத்து - சிறிய கனியிலுள்ள, ஒரு விதை - ஒரு வித்தானது, தெள் நீர் - தெளிந்த நீரையுடைய, கயத்து - குளத்திலுள்ள, சிறு மீன் - சிறிய மீனினது, சினையிலும் - முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே ஆயினும் - சிறியதே யானாலும், (அது), அண்ணல் - பெருமை பொருந்திய, யானை - யானையும், அணி அலங்கரிக்கப் பட்ட, தேர் - தேரும், புரவி - குதிரையும் ஆள் - காலாளும் (ஆகிய), பெரும் படையொடு - பெரிய சேனையோடு, மன்னர்க்கு - அரசருக்கும், இருக்க - தங்கியிருப்பதற்கு நிழல் ஆகும் - நிழலைத் தரும்.
சுவை பொருந்திய பெரிய பனங்கனியிலுள்ள விதையானது முளைத்து வானமளாவ வளத்துடன் வளர்ந்தாலும் ஒருவரேனும் தங்கியிருக்க நிழலைத் தராது.
(பொ-ரை)
உருவத்தாற் பெரியவரெல்லாம் பெருமை யுடையவராகார் என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. தேம்பழம் எனக் கூட்டுக. விதை முளைத்து வளரினும் அது நிழலாகாது. என விரித்துக் கொள்க. தொல்காப்பிய இலக்கணப்படி பனை முதலிய புறவயிரம் உள்ளவற்றிற்குப் புல் என்று பெயர். ஒருவர்க்கும் - என்னும் உம்மை தொக்கது. ஏ : ஈற்றசை.
--------------------------------------------------------------------------------------------------
18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.
(பதவுரை)
பெரியோர் எல்லாம் - (உருவத்தால்) பெரியவரெல்லாரும், பெரியரும் அல்லர் - பெருமையுடையவரும் ஆகார்.
(பொ-ரை)உருவத்தாற் பெரியவரெல்லாரும் பெருமை யுடையவராகார்.
பெரியோர் என்பதற்கு வயதிற் பெரியவரென்றும், செல்வத்திற் பெரியவரென்றும் பொருள் கூறினாலும் பொருந்தும். அறிவினாலும், பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரே பெருமையுடையவ ரென்க. பெரியரும் என்பதிலுள்ள உம்மை பின்வரும் சிறியரும் என்பதைத் தழுவியிருக்கிறது. இங்கே கூறிய விசேடவுரைகளை மேல்வரும் தொடர்க்கு மாற்றியுரைத்துக் கொள்க.
------------------------------------------------------------------------------------------------------
19. 1சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்.
(பதவுரை)
சிறியோர் எல்லாம் - (உருவத்தால்) சிறியவரெல்லாரும், சிறியரும் அல்லர் - சிறுமையுடையவரும் ஆகார்.
(பொ-ரை)
உருவத்தாற் சிறியவரெல்லாரும் சிறுமையுடையவராகார்.
உருவத்தாற் பெரியவரெல்லாரும் பெருமை யுடையவராகார்.
1 சில பதிப்பில் "சிறியோர்" என்பது முன்னும் "பெரியோர்" என்பது பின்னும் காணப்படுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------
20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர்.
(பதவுரை)
பெற்றோர் எல்லாம் - பெறப்பட்டவர்க ளெல்லாரும், பிள்ளைகள் அல்லர் - (நல்ல) பிள்ளைகளாகார்.
(பொ-ரை)
ஒருவர் பெற்ற பிள்ளைகளெல்லாரும் நல்ல பிள்ளைகளாகார்