Author Topic: Ithu Enna Maayam  (Read 4088 times)

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Ithu Enna Maayam
« on: November 21, 2018, 08:39:37 PM »
இரவாக நீ



இரவாக நீ
நிலவாக நான்

உறவாடும் நேரம்
சுகம் தானடா

தொலையும் நொடி
கிடைத்தேனடி

இதுதானோ காதல்
அறிந்தேனடி

கரை நீ பெண்ணே
உனை தீண்டும் அலையாய் நானே

ஓ நுறையாகி நெஞ்சம் துடிக்க
ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிறே
காதோரம் காதல் உரைக்க

ஓ ஒரு பார்வை வேண்டும் இறக்க
என்னுயிறே மறு பார்வை போதும் பிறக்க

இரவாக நீ
நிலவாக நான்

உறவாடும் நேரம்
சுகம் தானடா

தொலையும் நொடி
கிடைத்தேனடி

இதுதானோ காதல்
அறிந்தேனடி

விழி தொட்டதா
விரல் தொட்டதா

எனதாண்மை தீண்டி பெண்மை
பூ பூத்ததா

அனல் சுட்டதா
குளிர் விட்டதா

அடடா என் நாணம் இன்று
விடை பெற்றதா

நீ நான் மட்டும்
வாழ்கின்ற உலகம் போதும்

உன் தோள் சாயும்
இடம் போதுமே

உன் பேர் சொல்லி
சிலிர்க்கின்ற இன்பம் போதும்

இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்
ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என் உயிரே
காதோரம் காதல் உரைக்க

மழை என்பதா
வெயில் என்பதா

பெண்ணே உன் பேரன்பே நான்
புயல் என்பதா

மெய் என்பதா
பொய் என்பதா
மெய்யான பொய் தான் இங்கே
மெய் ஆனதா

அடியே பெண்ணே
அறியாத பிள்ளை நானே

தாய் போல் என்னை
நீ தாங்க வா

மடி மேல் அன்பே
பொன் ஊஞ்சல் நானும் செய்தே
தாலாட்ட உன்னை அழைப்பேன்

ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என் உயிரே
காதோரம் காதல் உரைக்க

இரவாக நீ இரவாக நீ
நிலவாக நான் நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா

இருக்கிறாய் இல்லாமலும்



இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்

எங்கும் உன் முக பிம்பம் நெஞ்சில் வந்தது தாங்கும்
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி

கண்ணில் நீரது பொங்கும் காதல் வந்தது அங்கும்
சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்

வெளிச்சம் இலாமல் நிழலும் இல்லை
உயிரே நீ இல்லாமல் நானும் இல்லை
விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை

பனியில் பாதைகள் மூடும்
வெயிலில் மழை வருமே

அருகினில் வருகையில் உணர்கிற மயக்கத்தை
மறுபடி தா கொஞ்சம்

சுடுகிற மலர்களை தொடுகிற காலனி
கதறுது என் நெஞ்சம்

இனி வரும் இரவிலும் இனி வரும் பகலிலும்
கனவுகள் என் தஞ்சம்
அன்பே வா உயிரே

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்

மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை
மழை மட்டும் தராது வானவில்லை
ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை

அருகில் இருந்தும் காதல்
பிரிவில் பெருகிடுமே

ஒரு முறை தெரியிது மறு முறை மறையிது
தொலையிது உன் பிம்பம்

கனவுகள் வருவது காலையில் களைவது
காதலில் பேரின்பம்

இது வரை இது வரை இடைவெளி தொடர்ந்திடும்
கேட்க்குது என் நெஞ்சம்
அருகே வா உயிரே

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்