என் உயிரின் உறவே...
என் அருகில் நீ இருந்தால்
நான் பேசும் மொழி கூட
மறந்து போகிறதே...
ஆயிரம் கதைகளை பேசுகின்றது
உன் அழகிய கண்கள்...
கண்களால் பேசும் மொழியைக்
கற்றுக் கொள்ள ஆசை...
உன்னுடன் ரகசியமாய் பேசுவதற்காக...
உன் கண்களில் தொலைத்த என்னை
உன் இதயத்தில் தேடுகின்றேன்...
உன் அழகை ரசிக்க இந்த யுகம் போதாது
என் இதய திருடா...
என் அன்பே...
அன்பு என்ற வார்த்தைக்கு...
ஆயிரம் ...ஆயிரம் அர்த்தம் இருப்பினும்...
நான் கண்ட மெய் அர்த்தம் நீதானடா...
என் மனதில் நீ வந்த பின்பு ... எனக்குள்
ஏதேதோ மாற்றங்கள் ....
தூக்கம் மறந்தேன்...உணவையும் மறந்தேன்...
என்னை நானே மறந்தேன்...உன் நினைவால்...
நீ தொலைவில் இருக்கையில்
பார்க்க துடிக்கும் அதே இதயம் தான்...
நீ அருகில் வந்தால் பேச முடியாமல் தவிக்கின்றது...
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத
இதயம் வேண்டும் என்னுயிரே ...
இன்னொரு ஜென்மம் ஒன்று இருந்தால்
அதிலும் நீயே வேண்டுமே...
என் உறவாக அல்ல...என் உயிராக
உனக்குள் என் நினைவுகளும்...
எனக்குள் உன் நினைவுகளும்...
இருக்கும் வரை நமக்குள் பிரிவுவென்பதே இல்லை
என்னுயிர்க் காதலனே...
என்றும் அன்புடன் ,
உன்னை இதயத்தில் சுமந்து செல்லும்
உன் அன்புக் காதலி
Jerusha JSB