Author Topic: கிராமிய வைத்தியம் !  (Read 853 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
கிராமிய வைத்தியம் !
« on: November 19, 2018, 03:15:35 PM »


விஷம் அருந்தி விட்டால் செய்ய வேண்டிய சில முதலுதவிகள்
விஷம் அருந்தி விட்டால் செய்ய வேண்டிய சில முதலுதவிகள் : எலி மருந்து, பூச்சிக்கொல்லி மருந்து என எந்த வகையேனும் விஷத்தை ஒருவர் சாப்பிட்டு விட்டால் விஷம் ரத்தத்தில் கலப்பதற்கு முன்பு அதை வாந்தியாக வெளியேற்ற

வேண்டும். இல்லையேல் விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டால் உடல் முழுக்கப் பரவி உடல் இயக்கத்தை முடக்குவதோடு, உடனடி மரணத்துக்கும் வழி வகுத்துவிடும்.

எனவே, விஷம் சாப்பிட்டவரின் வாயினுள் விரலை நுழைத்துச் செயற்கையாக வாந்தி எடுக்கச் செய்யலாம். வேப்ப எண்ணெய் அல்லது சமையல் உப்புக் கரைசலைக் குடிக்க வைத்தால், வாந்தி மூலம் இரைப்பையில் தங்கி இருக்கும் விஷம் வெளியேறிவிடும். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஒருவேளை விஷம் குடித்தவர் நினைவு இழந்த நிலையில் இருந்தால், அவருக்கு வேப்ப எண்ணெய் அல்லது உப்புக் கரைசலைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று உயிர் இழப்பை ஏற்படுத்தி விடலாம். மேலும், பாதிக்கப்பட்டவரின் கால்களை மேடான பகுதியிலும் தலைப் பகுதியைத் தாழ்வாக இருக்கும் படியும் படுக்க வைக்க வேண்டும். தலையை ஒரு பக்கமாகச் சாய்ந்த நிலையில் வைத்துக் கொண்டு, அவரது வாயினுள் விரலை நுழைத்து வாந்தி எடுக்கச் செய்யலாம்.

இதே போல், மருத்துமனைக்குக் கொண்டு செல்லும் போது கூடவே மறக்காமல் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய விஷப் பாட்டிலையும் எடுத்துச் செல்ல வேண்டும். எந்த வகையான விஷத்தை அவர் உட்கொண்டார் என்பது தெரிந்தால், அவருக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் என்பதால் இதனை மறக்க வேண்டாம்.

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிராமிய வைத்தியம் !
« Reply #1 on: November 19, 2018, 03:18:40 PM »
சீத்தாப்பழம்




சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.

சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவப் பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: கிராமிய வைத்தியம் !
« Reply #2 on: November 19, 2018, 03:39:25 PM »
ரொம்ப நல்ல மருத்துவ  குறிப்புகள் மச்சி  மிக்க நன்றி மச்சி !!!

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிராமிய வைத்தியம் !
« Reply #3 on: November 21, 2018, 11:39:28 AM »


குடல் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் இந்த பொருளை உணவில் சேர்த்தாலே போதும்

பழங்காலம் முதலே நமது உணவுகளில் முக்கியப்பங்கு வகிக்கும் ஒரு மசாலா பொருள்
[highlight-text]கடுகுதான்.[/highlight-text]

கடுகை உபயோகப்படுத்தாமல் செய்யும் உணவுகள் மிக மிக சொற்பமே. ஏனெனில் அது உணவின் சுவையை அதிகரிப்பதுடன் தனித்துவமான சுவையை கொண்டது. கடுகு இவ்வளவு முக்கிய பொருளாக நம் உணவு முறையில் இருக்க காரணம் அதன் சுவை மட்டுமல்ல அது வழங்கும் ஆரோக்கிய பலன்களும்தான்.


Health benefits of Yellow Mustard

நாம் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வருவது கருப்பு கடுகைதான்.
ஆனால் தற்போது மஞ்சள் நிற கடுகும் மிகவும் பிரபலமாகி வருகிறது.
அதற்கு காரணம் அதிலுள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள்தான்.

மஞ்சள் கடுகில் புரோட்டின், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளது.
இது நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த பதிவில் மஞ்சள் கடுகின் அற்புத பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

   
[highlight-text]தசைப்பிடிப்புகள்[/highlight-text]


மஞ்சள் கடுகு அனைத்து விதமான தசைப்பிடிப்புகளை சரிசெய்ய கூடியது. தினமும் ஒரு ஸ்பூன் மஞ்சள் கடுகு பொடியை உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் எலும்புகளை வலிமையாக்கும், தசைகளை வலுப்படுத்தும். அதற்கு காரணம் இதில் உள்ள பொட்டாசியமும், கால்சியமும்.

[highlight-text]   
சுவாசக்கோளாறுகள்[/highlight-text]


இது சுவாசக்குழாய்களில் உள்ள சிக்கல்களை சரிசெய்து எளிதில் சுவாசிக்க உதவ கூடியது. கடுகு விதைகளை சுடுநீரில் போட்டு அந்த நீராவியை சுவாசிப்பது அனைத்து சுவாச பிரச்சினைகளையும் குணாமக்கும், அதேபோல கடுகு டீயில் வாய் கொப்பளிப்பது தொண்டை மற்றும் நுரையீரல் பிரச்சினைகளை சரிசெய்யக்கூடும்.

   
[highlight-text]உடல் வலி[/highlight-text]


மஞ்சள் கடுகிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் அந்த விதமான உடல் வலிகளையும் விரைவில் குணமாக்கக்கூடியது, குறிப்பாக மூட்டுவலியை விரைவில் குணமாக்கும். வலி மிகுந்த இடங்களில் இந்த எண்ணெயை கொண்டு 10 முதல் 15 நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். இது தினமும் இதனை இரண்டு முறை செய்து வந்தால் எந்த வலியாக இருந்தாலும் உடனடியாக குணமாகும்.

   
[highlight-text]இதய ஆரோக்கியம்
[/highlight-text]

கொலஸ்ட்ரால் அளவுகளை சமநிலைப்படுத்துவதில் உதவுகின்ற மோனோனுசுட்டரேட் மற்றும் பல நிறைவுறாத கொழுப்புகள் மஞ்சள் கடுகில் அதிகம் உள்ளது. இது உடலுக்கு கேடு விளைவிக்கிற LDL என்னும் கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்ற உதவுவதோடு மேலும் HDL என்னும் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. 9இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது.
   
[highlight-text]
வாய் துர்நாற்றம்
[/highlight-text]

உங்கள் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மஞ்சள் கடுகு ஒரு மிகச்சிறந்த வீட்டு மருத்துவமாகும். ஒரு ஸ்பூன் மஞ்சள் கடுகு எண்ணெயை உங்கள் வாயில் ஊற்றி ஒரு நிமிடம் அப்படியே இருக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் உங்கள் வாயை நன்கு கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் உடனடியாக மறையும்.

   
[highlight-text]புற்றுநோய்[/highlight-text]


மஞ்சள் கடுகில் முக்கியமான பைடோக்கெமிக்கலான க்ளுகோசினோலைட்ஸ் என்னும் பொருள் உள்ளது. ஆய்வுகளின் படி இது உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பா கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். தினமும் உங்கள் உணவில் மஞ்சள் கடுகு எண்ணெய் அல்லது மஞ்சள் கடுகு பொடியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

   
[highlight-text]வளர்ச்சிதை மாற்றம்[/highlight-text]


மஞ்சள் கடுகில் மக்னீசியம் அதிகளவு உள்ளது. இது நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் இதில் உள்ள பாஸ்பரஸ் நம் உடலுக்கு தேவையான சரியான கார்போஹைட்ரேட், புரோட்டின் மற்றும் கொழுப்புகளை வழங்குகிறது.

   
[highlight-text][highlight-text]முடிவளர்ச்சி[/highlight-text][/highlight-text]


மஞ்சள் கடுகில் பீட்டா கரோட்டின், புரோட்டின், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது முடியை வேகமாக வளர வைப்பதுடன் அதன் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. உங்கள் தலையை மஞ்சள் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்தால் அது உங்கள் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும்
[/highlight-text]
[/color]

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிராமிய வைத்தியம் !
« Reply #4 on: November 21, 2018, 11:59:38 AM »


வாழைக்காயின்
மருத்துவ குணங்கள்


● வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.


● வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதுடன், மாவுச்சத்தும் உள்ளது. எனவே வாழைக்காய் அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமனாகும். நல்ல வளர்ச்சியையும் அளிக்கும்.


● வாழைக்காய் சாப்பிடுவதால், பசி அடங்கும். மேலும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்காய்கறி வழங்கப்படுகிறது.


● வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது.
வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்களைப் போக்க வாழைக்காய் ஏற்றதாகும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிராமிய வைத்தியம் !
« Reply #5 on: December 11, 2018, 01:39:50 PM »
நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்துக்கோங்க

சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணிய ஸ்வாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பது அந்த கால வாக்கு. ஆனால் அதில் அத்தனை உண்மை உள்ளது.

சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது.

காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என தினமும் இந்த மூன்றையும் உங்கள் அன்றாடம் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு நோயே வராது என்பது தெரியுமா?

இஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எஞ்சிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. இது கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மைகள் அளிக்கின்றது.

சுக்கு நமது பழங்கால உணவிலிருந்து பயன்படுத்திவருகிறோம். எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும். நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும். அத்தகைய சுக்கை எப்படி நாம் நமது உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தலாமென இந்த கட்டுரையில் காண்போம்.

[highlight-text]தீராத தலைவலிக்கு :[/highlight-text]
தலையை இடிப்பது போல் தலைவலி வந்தால், சுக்கை நீரில் உரசி அதனை பற்றாக போட்டால் போதும். சில நிமிடங்களில் தலைவலி மறைந்துவிடும். தலையில் நீர்க்கோர்த்திருந்தால், நீரை வற்றச் செய்யும் சிறப்பை சுக்கு பெற்றுள்ளது. தலைவலிக்கு இது சிறந்த பலனைத் தரும்.

[highlight-text]அஜீரணப் பிரச்சனை :[/highlight-text]
1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்திடுங்கள். வெதுவெதுப்பாக ஆறிய பின் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.

இதனால் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல்,குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, குணமாகும்.

[highlight-text]வாய் துர் நாற்றம் :[/highlight-text]
சுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை விளக்கலாம். மேலும் ஈறுகளையும் இந்த பொடிக் கொண்டு மசாஜ் செய்தால் பல் கூச்சம், பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும். பல் வலி குறையும். வாய் துர் நாற்றம் குணமாகும்.

[highlight-text]வாய்வுபிடிப்பிற்கு :[/highlight-text]
சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாதபோதும், மன அழுத்தம் இருக்கும்போதும் வாய்வுபிடிப்பு உண்டாகும். அந்த சமயத்தில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

[highlight-text]நோயில்லாத வாழ்வு :[/highlight-text]
வாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம்.

முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.

[highlight-text]மூட்டு வலி:[/highlight-text]
மத்திய வயது ஆனவுடன் மூட்டு வலி ஆரம்பிக்கும். சில சமயம் அமர்ந்து எழ முடியாதபடி ஆகும். அப்படியானவர்கள் சுக்கை தட்டி பாலுடன் சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்று போல் போட்டு வந்தால் மூட்டு வலியிலிருந்து விடுதலை பெறலாம்.

[highlight-text]கபம் கரைய :[/highlight-text]
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை, ஆகியவற்றை பொடி செய்து அல்லது இந்த ஐந்தும் கலந்து பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி அதனை னீரில் காய்ச்சி குடித்தால் எப்பேர்ப்பட்ட சளி மற்றும் கபம் விலகும்.

[highlight-text]வயிற்றுப் பூச்சிகள் அழிய [/highlight-text]:
சுக்குப் பொடியை அல்லது சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்ற உதவும்.

[highlight-text]போதை தெளிய :[/highlight-text]
சுக்கை , வர கொத்துமல்லியுடன் சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து அதனை சாப்பிட்டால் மதுவினால் ஏற்பட்ட போதை அடியோடு குறைந்துவிடும்

[highlight-text]சுக்குக் காபி :[/highlight-text]
சுக்குக் காபி குடிப்பதால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். அஜீரணப் பிரச்சனைகள் நீங்கும். முக்கியமாக மலச்சிக்கல் குணமாகும். மந்தத்தன்மை மறையும்.

[highlight-text]விஷக்கடிகள் குணமாகும் :[/highlight-text]
தேள், வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக ஒரு வெற்றிலையில் சுக்கு, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் பூச்சியின் விஷத்தை முறிக்கலாம்.


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "