என் ஆசை ஒன்றுதான்
கண்ணீர் புகைக்கும் கலங்காத கண்கள்
உலகையே சுமக்க தடித்த தோள்
கனைமரம் போன்றே கைகள்
வாள்முனை போல் விரல்கள்
வைர வலிமை கொண்ட இதயம்
தூரத்தின் வலி உணரா கால்கள்
அகிலம் அளந்த அறிவு
ஆழம் அறியும் பார்வை
இவையெல்லாம் ஆசையெனில் அது பேராசை
இவையாவும் என் கனவல்ல ..!
என் ஆசை ஒன்றுதான்
அது நீ மட்டும் அறிந்த உண்மைதான் -என்
கனவு மெய்பட வேண்டும்!