ஒரு நாள் என்றும் முழுமைபெறாது
காலையில் பூத்திடும் மலரானது
ஆதவனை கண்டதுமா
மலரும் செடி அது உயிர்வாழ நீர்தேவைபோல
மனிதன் வாழ்ந்திட ஒருநாள் போதுமா ?
சிந்திக்கும் நேரத்திலே சில்லறை வேலைகள்
பலவுண்டு அதை செய்துமுடித்திடத்தான் நேரமேது
எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமே மிச்சமுண்டு
ஆசைகள் நமக்குள் பலவருவதுண்டு
நடப்பதோ நாள் ஒன்று இவுலகில்
மாற்றத்திற்கு என்றுமே மாற்றம் இல்லை
நினைத்தது எதுவும் நடக்காவிடிலும்
நினைக்க ஏனோமனம் மறப்பதில்லை
வாழும் காலமோ விரைந்து ஓடிட
இடைப்பட்ட காலமோ கறந்து ஓடிட
கடந்து சென்ற பாதையோ மனதில் ஓடிட
வாழ்வோ என்றுமே வேடிக்கையாக தோன்றும்.