Recent Posts

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10
51
உங்களை பார்த்தால் பயமாக இருக்கிறது ஆனால் அதைவிட பசி  எனக்கு அதிகமா இருக்கிறது

அன்றைக்கு மேலே இருந்து குண்டு விழுந்துகொண்டே இருந்தது

அம்மா அப்பவே சொன்னாள் வெளியே போகவேண்டாம் என்று அப்பா கேட்கவேயில்லை

சாப்பாடு வாங்க போன அப்பா இன்றுவரை  காணவேயில்லை

போனமாதம் எங்கள் பள்ளிக்கூடம் மேல் ஒரு குண்டு போட்டார்கள் ஒரே புகை

அம்மா அழுதுகொண்டே என்னை கூட்டிப்போனால் அன்றைக்கு என் 2 தோழி காணாமல் போய்விட்டார்கள்

எங்கள் தெருவில் பேசிக்கொண்டு இருந்தார்கள் நமக்கும் பக்கத்து நாட்டுக்கும் சண்டை, குண்டு போடுவார்கள்

பத்திரமாக இருக்கவேண்டும் என்று வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டுமாம்

இன்று இங்கே தான் சொன்னார்கள் ஹெலிகோப்டேரில் இருந்து சாப்பாடு  போடுவதாக

ஆனால் கூட்டமாக இருக்கிறது யார் வீட்லயும் சாப்பாடு இல்லை போல

நல்லவேளை எங்கள் வீட்டில் அம்மா இருக்கிறாள் என் பக்கத்துவீட்டில் நண்பனின் அம்மா இல்லை

எங்கள் ஊரில் சாப்பாடு வாங்க போனாலே  காணாமல் போய்விடுகிறார்கள், அவனின் அம்மாவும் காணோம்

அவனுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு போகணும்

நீங்கள் எப்பிடியும் என்னை கொன்றுவிடுவீர்கள் இந்த உணவை மட்டும் என் தம்பிக்கு தந்துவிட்டு வருகிறேன்

அதன்பின்பு என் மேல் குண்டு போடுங்கள்  நான் ஓடமாட்டேன் அவனால் நடக்க முடியாது

நான் ஒளிந்துகொண்டு இருக்கிறேன் நீங்கள் என்னை பார்க்கவில்லைதானே ,

பார்த்தாலும் பார்க்காத மாதிரி கொஞ்ச நேரம் விளையாட்டு காட்டுங்களே, மாட்டீர்களா |?

எனக்கு ஒன்றே ஒன்று உங்களிடம் கேட்கவேண்டும்

உங்கள் வீட்டிலும் எங்களை போல் சிறுவர்கள் இருப்பார்கள் தானே!!!

52
SMS & QUOTES / Re: MILLIONAIRE SAYINGS RAJINI VERSION
« Last post by MysteRy on March 20, 2024, 03:45:37 PM »
53

உச்சம் ❄️

நட்பின் உச்சம் காதல்
காதலின் உச்சம் பிரிவு
பிரிவின் உச்சம் வலி
வலியின் உச்சம்  அமைதி
அமைதியின் உச்சம்   அரவணைப்பு
அரவணைபின் உச்சம் அன்பு
அன்பின் உச்சம் நீ ❤️
உந்தன் உச்சம் நான் ❤️
நம்மின் உச்சம் நட்பு 😇
56

அன்று ஓர் நாள்,
நான் யார், நான் எப்படி இங்கே, என யோசிக்க தொடங்கினேன்...
இன்று இப்பொழுது, நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றினை மறந்து..
சிறுக சிறுக.. என் நினைவுகளை பின்னே தள்ளினேன்..

அந்த ஓர் நாள்,
நான் இவ்வுலகை முதல் முதலாய் பார்த்த நாள்...
விழி மூடி, சுவாசம் அடக்கி பலநாள் காத்திருப்பு கலைந்து...
மெல்ல மெல்ல.. புவி காற்று என்மீது பட புல்லரித்தேன்..

அது ஓர் நாள்,
யார் யாரோ என்னை உற்று உற்று  பார்க்க..
யார் யாரோ என்னை தொட்டு தொட்டு  வியக்க ..
நானோ எதுவும் அறியாதவளாய்.. மிரண்டேன்..

அதே நாளில்,
விழிகளை லேசாக சுழற்றி சுழற்றி பார்த்தேன்...
இது என்ன இடம்.. நான் ஏன் இங்கே வந்தேன்...
என்னை சுற்றி ஏன்.. இப்படி ஒரு கூட்டம் வியந்தேன்..

அந்த நேரம்,
கூட்டங்கள் அதிகமாக அதிகமாக.. பயம் கவ்வியது..
நான் இருந்ததோ.. ஒரு குட்டி அறை போலிருந்தது..
என் நெஞ்சிலும் விழிகளிலும் பயம் தொற்றி கொண்டது..

அதே பொழுது,
அதிகமானோர் வர.. வர.. என் சிறு அறையும் இருளானது ..
நானும் என் சிரசை.. உள்ளே இழுத்து கொண்டேன்..
அதிக பீதியில் ஓஓ... என கரைய தொடங்கினேன்...

அப்பொழுது,
பதட்டம் ஒரு பக்கம்.. பயம் ஒரு பக்கம்,.. பசி ஒரு பக்கம்..
என் சிறிய இதழ்களும் பலகோணங்களில் நெளிந்தது...
அப்படியே ஒரு ஓரமாக ஒளிந்து கண் மூடி கொண்டேன்..

அச்சமயம்,
ஒரு நறுமணம், என் நாசிகள் துளைக்க கண் திறந்தேன்..
இரு கைகள் என் அருகில்....  ஒரு கரம் என தலை கோரா..
மற்றும் ஒரு கரம் என் தோள்களை தட்டி தடவி கொடுத்தது...

அதே நாளில்,
எனை வாரியெத்தாள்.. அவளோடு என்னை அணைத்து.கொண்டாள்
நானும் அவள் கரங்களை. என் பிஞ்சு விரல்களால்  பிடித்தேன்..
கரைகளும் அழுக்கும் படிந்த என் முகத்தை.. முகர்ந்து முத்தமிட்டாள்...

அந்நேரம்,
"இவ்வளவு அழகான குழந்தை.. எந்த பாதகி.. குப்பையில் வீசினாளோ .."
ஊர் என்ன சொன்னாலும்... யாரை யார் வசைபாடினாலும்..
என் பிறப்பும் என் தொட்டிலும்..  இந்த குப்பை தொட்டியே..
 
அதே நொடியில்,
கடவுள் அனுப்பிய தேவதையின் தோள் மீது சாய்ந்து..
அமைதியாக அந்த பசும் நிற தொட்டியை பார்த்தேன்... அதுவும்..
போய்வா மகளே.. போய்வா.. என  அமைதியாக சிரித்தது...

59
ஆன்மீகம் - Spiritual / Re: Bible Verse of the Day
« Last post by MysteRy on March 20, 2024, 10:28:18 AM »
Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10