திக்கு கால் முளைத்து
சாதி ஆனதோ ?
மதத்திற்கு மதம் பிடித்து
மரணம் ஆகிகின்றதே...
இதுவா சுதந்திரம்?
ஆங்கிலேயரிடம் அடிமை பட்டது
அறியாமையினால் ....
வளமையை கை விட்டது
புரியாமையினால் ...
அந்நிய நாட்டுட்கு அடிமை பட்ட நாம்
இன்று ...
ஆண்ட்ராயிட் போனில் ..
அடிமை பட்டு கிடக்கின்றோம் ...
நம் தலைவர்கள்
தேசத்திற்காக சிறை செல்ல
நாமோ வலைத்தளங்களில்
நமக்கு நாமே சிறையாய்...
சூரியனுக்கும் இரவில்
சுதந்தித்திரமில்லை ...
சந்திரனுக்கும் பகலில்
சுதந்தித்திரமில்லை ...
வீசும் காற்றை சுவாசிக்க
சுதந்தித்திரமில்லை ...
பொங்கி வரும் தண்ணீரை
குடிக்க சுதந்தித்திரமில்லை ...
சொந்த பூமிக்கும் போராட்டம்
செய்யும் காலம் இது...
விளையும் பயிருக்கு
விலை கிடைக்காமல்
வீணாக உயிர் இழக்கும் காலமிது ..
இலட்சியத்தை சாதிக்கும்
பெண்களிடமும் லட்ச கணக்காய்
வர தட்சணை எதிர்பாக்கும் காலம் இது ...
ராஜாக்கள் மாறி ...
அரசியல் மாறி ...
ஆட்சிகள் மாறி ...
சட்டங்கள் மாறி ....
கல்விமுறை மாறி ...
ஆடைகள் மாறி ...
நாகரிகம் மாறி ..
அகமும் புறமும்
மாறினாலும் ...
மாறாதது நம் ஒருமைப்பாடு !
இந்தியாவை இமயம் என
தூக்கி நிறுத்துவோம் !
பெற்ற சுதந்திரத்தை போற்றுவோம் !
வாழ்க பாரதம் ! ஜெய் ஹிந்த் !