காலம் எனும் கடலில் மூழ்கி தவிக்கும் கட்டுமரம் நாம்..
மக்களே !
வாழ்க்கை எனும் பயணத்தில் எவரும்,
எவருடனும் தொடர்ந்து பயணிக்க இயலாது.
அவர் அவர் அவர்களுடைய நிறுத்தத்தில்
இறங்கியே தீர வேண்டும்.
இப்பயணத்தில் சிலர் உடமையை இழக்க நேரிடும்,
சிலர் உறவுகளை இழக்க நேரிடும்.
சிலர் கனவுகளை இழக்கின்றனர்,
சிலர் தம் கனவுகளுக்காக இளமையை இழக்கின்றனர்...
பயணிகள் எவராக இருப்பினும்,
பயணம் அது நிர்பந்தத்தில் நியமிக்க பட்டதே...
இதை விரும்பினும், மருப்பினும்
பயணம் அது நம்மீது சுமத்தப்பட்ட தீர்மானம்...
என்ன செய்வது? நம் வாழ்க்கை எனும் ரப் நோட்டில்
நம்மை விட அதிகமாய், படைத்தவன் எழுதியது ஏராளம்..
வாழ்க்கை எனும் ஆசிரியர் ஒவ்வொருவரிடமும்
ஒரு கேள்வி எழுப்புகிறார், அக்கேள்விக்கு நாம் பதில் தேடி முடிப்பதற்குள்,
அந்த வாழ்க்கை எனும் ஆசிரியர் தன் கேள்வியையே மாற்றி விடுகிறார்.
இப்பயணத்தில் நான் இழந்தவைகளும், கடந்தவைகளும் ஏராளலமாக இருப்பினும்,
நம் முதுமை நம்மை தெளிவு படுத்தும், நம்மில் நம் இளமையில்
கழித்த நாட்கள் அதனை.....
மக்களே இதுவே வாழ்க்கையின் எதார்த்தம். படைத்தவனின் தீர்மானமும் கூட..
எனவே வாழும் காலங்களில் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி,
க்ரோதம் தவிர்த்து, புன்னகை விதைத்து,
படைக்க பட்ட உறவுகள் அனைவரின் பேரிலும்
அன்பு எனும் கொடியை மலரச்செய்வோமாக....
வெறுப்பது யாராயினும், நேசிப்பது நாமாக இருப்போம்.
என்றும் எம் மக்களை நினைக்க மறவா உறவாளன் --- MNA.......