பெண்ணே, ஏன் இந்த அமைதி...
நெற்றியில் பொட்டிட்டு...
கைகளில் வளையல்கள் பூட்டி...
தலை நிறைய பூச்சூட்டி...
பட்டாடைகள் உடுத்தி...
.அழகு பார்க்கும்
இவ்வுலகம் எண்ணியா?...
பெண்ணே,ஏன் இந்த மௌனம்...
சாஸ்திரங்கள் பெயர் சொல்லி..
சமூக முறைகள் சொல்லி..
கல்வி இருந்தும் பயனின்றி..
பேச தெரிந்தும், பேசா ஊமையாய்.
வீட்டை அலங்கரிக்கும்
புதுமையாய்.. பார்க்கும்
இவ்வுலகம் நினைத்தா?...
பெண்ணே,ஏன் இந்த பார்வை...
ஆணின் தேவையாய்...
உயிர் வளர்க்கும் குடமாய்..
உற்றார் உறவினர் வேலையாளாய்..
மனையின் சுமை தாங்கியாய் பார்க்கும்
இவ்வுலகம் பார்த்தா? ...
பெண்ணே, அழகு பொம்மையாய்
உன்னை பார்க்கும் உலகை... தகர்த்தெறி!!!...
உருவம் தாண்டி.. உன் திறமையை காட்டு...
ஆளுமையை உன் அறிவுடன் பறைசாற்று..
அப்பொழுது மாறும் இந்த உலகின் பார்வை...
பெண்ணே, நீ குருடல்ல..
சாஸ்திரங்களும் சட்டங்களும்
உன் கைவிலங்கல்ல... அவற்றின்
கருவை வில்லாக்கி.. அதன்
பொருள் அஸ்திரமாக்கி..
உலகுக்கு நிரூபி நீயும் ஊமையல்ல..
பெண்ணே, நீ ஆணுக்கு எதிரியும் அல்ல..
அவனுக்கு குறைத்தவளும் அல்ல...
பார்வையை ஏராக்கி... சிந்தையை எருதாக்கி..
விவேகம் எனும் கயிற்றால்.. உலகை காக்கும் பாவையாவாய்..
பெண்ணே, உனை பாட பதினாறு அடிகள் போதாதடி..
என் சொற்களும் பொருளும்.. நீயே பெண்ணே...