ஹாய் மாஸ்டர் தங்கள் நிகழ்ச்சி தரமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றது .. மேலும் மெருகு பெற என் வாழ்த்துக்கள் ...
இந்த வாரம் இசையால் இசையால் வெற்றி பெற்ற பாடல் வரிசையில் நான் கேட்க இருக்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1998 இல் செல்வா பாரதி இயக்கத்தில் வெளி வந்த நினைத்தேன் வந்தாய் ...இந்த திரை படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார் இந்த படத்தில் விஜய், ரம்பா , தேவயாணி ,மணிவண்ணன் , சார்லி , வினு சக்கரவர்த்தி ,செந்தில் , சுந்தர்ராஜன் , மலேசியா,ரஞ்சித், வாசுதேவன் இப்படி ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருகின்றது ... கதை சிறப்பாக இருந்தாலும் இந்த படத்தில் வரும் ஒவொரு பாடல்களும் மிகவும் பிரபலமானவை ... திரைக்கதையால் பேசபட்டதை விட பாடல்களால் பேசப்ட்டதேஅதிகம் எனலாம் அந்த வகையில்
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
எனவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
மல்லிகையே மல்லிகையே
உன் மார்பில் விழி மூடி தூங்குகின்றேன்
மனிஷா மனிஷா போலிருப்பாளா
போட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
உன்னை நினைத்து நான் எனை மறப்பது
இப்படி இனிமையான அருமையான பாடல்களை கொண்டு வெற்றி பெற்ற விஜய் படம் ... இதிலே நான் விரும்பி கேட்க இருக்கும் பாடல் s.p.பாலசுப்ரமணியம் , சுஜாதா , S A.சித்ரா இவர்கள் இணைந்து பாடிய ... உன்னை நினைத்து நான் எனை மறப்பது அதுதான் அன்பே ..இந்த பாடல் மிகவும் பொருள் பொதிந்த பாடலாகவும் மனதை வசீகரிக்கும் இசையிலும் இனிய குரல்களாலும் மெருகேற்றப் பட்டிருகிறது ... இந்த பாடலை எனக்காக ஒளி பரப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்