FTC Forum
தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: JeGaTisH on February 28, 2018, 06:12:34 PM
-
http://youtu.be/u2uTvseL6Rw (http://youtu.be/u2uTvseL6Rw)
படம் : சூரியகாந்தி
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..
வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://youtu.be/baXTImlWKB8 (http://youtu.be/baXTImlWKB8)
படம் : ஊமை விழிகள்
இசை : மனோஜ் , கயான்
பாடியவர் : P. B. ஸ்ரீனிவாஸ் , ஆபாவாணன்
பாடல் வரிகள் :ஆபாவாணன்
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
விடியலுக்கு இல்லை தூரம்
விடிந்தும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
யுத்தங்கள் தோன்றட்டும்
இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
இரத்தத்தின் இரத்தத்தில்
அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
யுத்தங்கள் தோன்றட்டும்
இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
இரத்தத்தின் இரத்தத்தில்
அச்சங்கள் வேகட்டும் கொள்கை மாறலாமா
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://youtu.be/G97Q6mVk4yc (http://youtu.be/G97Q6mVk4yc)
திரைப்படம் – ஆண்டவன் கட்டளை
கவிஞர் – கண்ணதாசன்
இசை – திரு.M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி
பாடியவர் – திரு.T.M.சௌந்தரராஜன்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தின் இன்பம் பட்டாகும்
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தின் இன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.......
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=GSQJnNJZxwM (http://www.youtube.com/watch?v=GSQJnNJZxwM)
திரைப்படம் –அவதாரம்
கவிஞர் –வாலி
இசை –இளையராஜா
பாடியவர் – இளையராஜா , s.ஜானகி
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது
ஓடை நீரோடை
இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போலை
நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=dAe4quOBMgw (http://www.youtube.com/watch?v=dAe4quOBMgw)
திரைப்படம் – தேவர் மகன்
கவிஞர் –வாலி
இசை –இளையராஜா
பாடியவர் – கமல்ஹாசன் , மின்மினி , S. ஜானகி
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா ..
(இஞ்சி இடுப்பழகி ..)
தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்
உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே (2)
இஞ்சி இடுப்பழக மஞ்ச சிவப்பழக
கள்ளச் சிரிப்பழக
மறக்க மனம் கூடுதில்லையே
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற கத்தைக் கேளு ,
அசையுற நாத்தைக் கேளு
நடக்கிற ஆத்தைக் கேளு , நீ தானா …
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே ஆ ஆ......
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=P9g43bIdMx4 (http://www.youtube.com/watch?v=P9g43bIdMx4)
திரைப்படம் –டூயட்
கவிஞர் –வைரமுத்து
இசை –A.R.ரஹ்மான்
பாடியவர் –K.J. யேசுதாஸ்
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம் உள்ள ஊமைப்போல
தானம் கேட்க கூசி நின்றேனே
நிறங்கண்டு முகம் கண்டால்
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே (இசை)
அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே
நிறங்கண்டு முகங்கண்டால்
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
கால் அழகு மேல் அழகு
கண் கொண்டு கண்டேன்
அவள் நூல் அவிழும் இடையழகை
நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே
அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு
சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில்
செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது
அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=xTbZKpvu9jI (http://www.youtube.com/watch?v=xTbZKpvu9jI)
படம் : சொல்ல துடிக்குது மனசு
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்
பூவே செம்பூவே,
உன் வாசம் வரும்,
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
பூவே செம்பூவே
நிழல் போல நானும்…
நிழல் போல நானும்,
நடை போட நீயும்,
தொடர்கின்ற சொந்தம், நெடுங்கால பந்தம்,
கடல் வானம் கூட, நிறம் மாற கூடும்,
மனம் கொண்ட பாசம், தடம் மாறிடாது,
நான் வாழும் வாழ்வே, உனக்காகதானே,
நாள் தோறும் நெஞ்சில், நான் ஏந்தும் தேனே,
என்னாளும் சங்கீதம், சந்தோஷமே,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்,
பூவே செம்பூவே,
உன் வாசம் வரும்,
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
பூவே செம்பூவே
உன்னை போல நானும் ஒரு பிள்ளைதானே,
பலர் வந்து கொஞ்சும் கிளி பிள்ளை நானே,
உன்னைபோல நானும் மலர்சூடும் பெண்மை,
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை,
நான் செய்த பாவம் என்னோடு போகும்,
நீ வாழ்ந்து, நான் தான் பார்த்தலே போதும்,
இன்னாளும் என்னாளும் ஊல்லாசமே,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்,
பூவே செம்பூவே,
உன் வாசம் வரும்,
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்,
வாய் பேசிடும் புல்லாங்குழல்,
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்,
பூவே செம்பூவே
பூவே செம்பூவே
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=N15ET23CpLQ (http://www.youtube.com/watch?v=N15ET23CpLQ)
படம் :சத்யா
இசை :இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் : s.p.பாலசுப்ரமணியம்,லதா மங்கேஷ்கர்
வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
(வலையோசை ...)
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகுமேன்
கன்னி உன் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
என் மேனி என் மேனி உன் தொழில் ஆடும் நாள்
(வலியோசை ...)
லா லா லா லா லாஆஆ
உன்னை காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்களோடு
ராஜ உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்
(வளையோசை ...)
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=GRrlf-soeNo (http://www.youtube.com/watch?v=GRrlf-soeNo)
படம் :கண்ணன் வருவான்
இசை :சிற்பி,தேவா
பாடலாசிரியர்:பா.விஜய் பழனி பாரதி
பாடியவர்கள் :ஹரிஹரன், சுஜாதா
காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா?
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா?
தாலாட்டு கேட்கவும் இல்ல
தாய் பாசம் பார்க்கவும் இல்ல
எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா?
நெஞ்சுக்குள்ள மல்லிகைப்பூ தருவாளா?
(காற்றுக்கு..)
பத்து விரலும் எனக்கு மாத்திரம்
புல்லாங்குழலாய் மாறவேணுமே
எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும்?
நல்ல வரம் கொடுக்கும்
மீனாய் மாறி நீரில் நீந்தனும்
குயிலாய் மாறி விண்ணில் பறக்கனும்
காற்றா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும்
ஒருத்தி துணை வேணும்
சாமி சிலைகள் நூறு ஆயிரம்
செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன்
சாமி ஒன்னு கண்ண முழுச்சு பார்த்திடுமா?
அவளா காட்டிடுமா?
(காற்றுக்கு..)
மயிலே மயிலே தோகை தருவாயா?
தோகை அதிலே சேலை நெய்யனும்
யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
நிலவே நிலவே விண்மீன் தருவாயா?
விண்மீன் அதிலே வீடு கட்டணும்
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
மரமே மரமே கிளைகள் தருவாயா?
கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும்
யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே
நிசமா தெரியாதே..
பெ: காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே
உன் வாழ்கைக்கொஉ அர்த்தம் சொல்லி தருவாளே..
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=kt4DS0U0Ldo (http://www.youtube.com/watch?v=kt4DS0U0Ldo)
படம் :சங்கமம்
இசை :A.R.ரகுமான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடியவர்கள் : P.உன்னிகிருஷ்ணன் , S. ஜானகி
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...
மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா (2)
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா
(மார்கழி)
இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா
(மார்கழி)
சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ...
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் (2)
வா...
மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவாவாவாவாவாவா.....
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=RVdoO8cSleY (http://www.youtube.com/watch?v=RVdoO8cSleY)
படம் :வைதேகி காத்திருந்தால்
இசை :இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் : P.ஜெயச்சந்திரன்
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது
( ராசாத்தி உன்ன...)
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே
( ராசாத்தி உன்ன...)
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ....
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=4RXivzQmx7k (http://www.youtube.com/watch?v=4RXivzQmx7k)
படம் :பொற்காலம்
இசை :தேவா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடியவர்கள் :கிருஷ்ணராஜ்
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு
நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=Yjpp1btu3BY (http://www.youtube.com/watch?v=Yjpp1btu3BY)
படம் :பெண்ணின் மனதை தொட்டு
இசை : S.A. ராஜ்குமார்
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் : P.உன்னிகிருஷ்ணன்
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே..
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக..
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி…
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி…!
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..!
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=NiDiSojZPPM (http://www.youtube.com/watch?v=NiDiSojZPPM)
படம் :தொட்டால் பூ மலரும்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் :ஹரிசரண்,யுவன் ஷங்கர் ராஜா
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முல்லை தய்க்கத்தே
என் கண்மணி காதோடு சொல்ல உன் முகவரி ஓ ஓ
எந்நாளும் என் பாட்டுக்கு நீ முதல் வரி ஹே ஹே ஹே
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முல்லை தய்க்கத்தே
அரபு நாடே அசந்து நிற்கும் அழகிய நீ
உருது கவிஞன் உமர் கய்யாமின் கவிதையை ஹே ஹே ஹே
ஏ உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே ஏ ஏ
உள்ளிருக்கும் போட்டு உந்தன் போட்டு சொல்லுதே
என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ
எனக்கிருக்கும் சக்தி பாரா சக்தி புரிஞ்சிக்கோ
கால் கொலுசு தான் காலா கலக்குது
காயின் வளையல் காத்து குளிர கணம் பாட ஹே ஹே
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முல்லை தய்க்கத்தே
போட்டிருக்கும் கோஷா வேஷம் பேஷா பொருந்துதே ஏ ஏ
பின்னழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே
வெண்ணிலாவின் தேகம் மூடும் மேகம் விலகுமா ?
வண்ண உடல் யாவும் காணும் யோகம் வாய்க்கும் ?
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
என்னைக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி ஹே ஹே
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முல்லை தய்க்கத்தே
அரபு நாடே அசந்து நிற்கும் அழகிய நீ
உருது கவிஞன் உமர் கய்யாமின் கவிதையை ஹே ஹே ஹே
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முல்லை தய்க்கத்தே
என் கண்மணி காதோடு சொல்ல உன் முகவரி ஓ ஓ
எந்நாளும் என் பாட்டுக்கு நீ முதல் வரி ஹே ஹே ஹே
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முல்லை தய்க்கத்தே .......
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=aiIHH4wDys0 (http://www.youtube.com/watch?v=aiIHH4wDys0)
படம் :செல்வம்
இசை : தேவா
பாடலாசிரியர்:அகத்தியன்
பாடியவர்கள் :முகேஷ்
என்னை சாத்தியமா அவ காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டா
நீ இப்போ கூட கேட்டு பாரு
இல்லைனு சொல்ல்வாடை
அன்பு ராணி பெரு பெரு
அப்பன் பேரு கதிர்வேலு
அஞ்சான் கிளாஸ்சு படிக்கும் பொது
லாவு லெட்டர் கொடுத்தான் மாமு
ஒ பாக் பாக் பாக் பாக் பாக்
பக்குனு இருந்துச்சு
நெஞ்சு திக்கினுருந்துச்சு
அவ அப்பன் நினைப்புல
தினமும் தூக்கம் பறந்துச்சு
திக்கு தெரியாம
நானும் சுத்தி திரிஞ்சநே
மாமு புத்தி தெளியலே
அவளை இன்னும் புரியல
என்னை சாத்தியமா அவ காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டா
நீ இப்போ கூட கேட்டு பாரு
இல்லைனு சொல்வாட
அவ உட்காந்த பெஞ்சுல நானும்
தினம் உட்காந்து பார்ப்பான் டா மாமு
அவள் லஞ்ச் கொண்டுவரும் டிபன் பாக்சா
நானு தொறந்து பார்ப்பான் டா மாமு
அவ தொலைச்ச கெர்ச்சிப்ப தேடி
நான் தொவைச்சினே லக்ஸ்சுல மாமு
அவ கையா தொட்டு அந்த வாசத்தா நானும்
மோந்து பாப்பான் டா மாமு
அவ அப்பனை பார்த்தாக வணக்கம் தப்பாமா போட்டேனே
அவ தங்கச்சி பாப்பாக்கு முட்டையி வங்கியே தந்தேனே
நான் முட்டாயி தந்தேனே
மாமு முட்டாளா அநேனேன்
என்னை சாத்தியமா அவ காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டா
நீ இப்போ கூட கேட்டு பாரு
இல்லைனு சொல்ல்வாடை
தெனம் ஸ்கூலு முடிஞ்சதும் மாமு
அவ கூட நடப்பான் டா மாமு
அவ ஊருக்கு போனாக பஸ் ஸ்டாண்டு வாசலில்
காத்து கிடப்பான் டா மாமு
அவ வீடு தெருவில நானும்
தினம் 100 முறை போவான் மாமு
அவ பாவாடை தேக்கர டைலர் கடையில
வேலைக்கு சேர்ந்தெண்டா மாமு
அவளை நினைச்சுதான்
அவ தம்பிய தொட்டேனே
அவ தம்பிய தொட்டேனே
கரண்ட் கம்பிய தொட்டேனே
நான் கம்பிய தொட்டேனே
அவளை நம்பியை கேட்டேனே
என்னை சாத்தியமா அவ காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டா
நீ இப்போ கூட கேட்டு பாரு
இல்லைனு சொல்ல்வாடை
அன்பு ராணி பெரு பெரு
அப்பன் பேரு கதிர்வேலு
அஞ்சான் கிளாஸ்சு படிக்கும் பொது
லாவு லெட்டர் கொடுத்தான் மாமு
ஒ பாக் பாக் பாக் பாக் பாக்
பக்குனு இருந்துச்சு
நெஞ்சு திக்கினுருந்துச்சு
அவ அப்பன் நினைப்புல
தினமும் தூக்கம் பறந்துச்சு
திக்கு தெரியாம
நானும் சுத்தி திரிஞ்சநே
மாமு புத்தி தெளியலே
அவளை இன்னும் புரியல
என்னை சாத்தியமா அவ காதலிச்சா
ஆனா ஒத்துக்க மாட்டா
நீ இப்போ கூட கேட்டு பாரு
இல்லைனு சொல்ல்வாடை........
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=2DZ4aVAs994 (http://www.youtube.com/watch?v=2DZ4aVAs994)
படம் :ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
இசை : ராகவ்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம், ஸ்ரீவர்த்தினி
மொகம்மது மர் மேரே உசு மாறே
உசு மாறே ஹயோ உசு மாறே
மொகம்மது மர் மேரே உசு மாறே
உசு மாறே ஹயோ உசு மாறே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட ஆசை வருகிறதே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட ஆசை வருகிறதே
துள்ளி துள்ளி உந்தன் மடியிலே பனித்துளி மனசு விழுகிறதே
நட்சத்திர நடுக்கம் கண்களிலே
மேகங்களின் தொடக்கம் கூதாளிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
நான் உனக்கேன் பிறந்தான் பூமியிலே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட ஆசை வருகிறதே
துள்ளி துள்ளி உந்தன் மடியிலே பனித்துளி மனசு விழுகிறதே
நட்சத்திர நடுக்கம் கண்களிலே
மேகங்களின் தொடக்கம் கூதாளிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
நான் உனக்கேன் பிறந்தான் பூமியிலே
ஹே தொட்டு செல்லும் தொட்டு செல்லும்
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஹே
மொகம்மது மர் மேரே உசு மாறே
உசு மாறே ஹயோ உசு மாறே
உள்ளே உள்ளே உனக்கு சாம்பய்யா யா யா
உள்ளே உள்ளே உனக்கு சாம்பய்யா ?
உலகேங்கிலும் சுகம் உள்ளது
அதை வாங்கிட பணம் உள்ளது
மனசு மயகுது எதுக்காகே
உள்ளே உள்ளே
நமக்கானவன் யார் என்பதை
நம் கண்களால் நாம் தேடணும்
மனசு மயங்குது அதுக்காகே
உள்ளே உள்ளே
பார்வைக்கு சொல்லும் காதல்
பாதை மாறி போனால்
அழகு பெண்ணின் வாழ்க்கை
அப்போது என்னாகுமோ
காதல் கொள்ளும் ஆண்கள் தவறு செய்வது இல்லை
கள்ள நெஞ்சத்தில் பெண் காதல் குடி கொள்ளுமே
காதல் சுகமான தேடல்
உயிரில் விழுகின்ற சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
அலைகள் வீசுது காதல் காதலே
மொகம்மது மர் மேரே உசு மாறே
உசு மாறே ஹயோ உசு மாறே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட ஆசை வருகிறதே
தீம் தீம் தின தின தீம் தீம் தின தின
சில நேரங்கள் விழே வேய்கிறாய்
சில நேரங்கள் ஏழே வேய்கிறாய்
எதுக்கு எதுக்கிந்த விளையாட்டு
உள்ளே உள்ளே
விழே வெய்ப்பதும் ஏழே வெய்ப்பதும்
அழே வெய்ப்பதும் சுகம் சேர்ப்பதும்
அழகு புதுமையின் கையோடு
உள்ளே உள்ளே
பாதி இதயம் அங்கே
மீதி இதயம் இங்கே
எனது நெஞ்சத்தை ஏனடி துண்டாக்கினாய்
அந்த நிலையைத்தான் இங்கும்
காதல் இதுதான் எங்கும்
உடைந்த உள்ளதை
முத்தத்தில் ஒன்றாகலாம்
காதல் சுகமான தேடல்
உயிரில் விழுகின்ற சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
அலைகள் வீசுது காதல் காதலே
மொகம்மது மர் மேரே உசு மாறே
உசு மாறே ஹயோ உசு மாறே .........
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட ஆசை வருகிறதே
நட்சத்திர நடுக்கம் கண்களிலே
மேகங்களின் நடக்கம் கூதாளிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
அடி எப்புடி நீ போறந்த பூமியிலே
மொகம்மது மர் மேரே உசு மாறே
உசு மாறே ஹயோ உசு மாறே
மொகம்மது மர் மேரே உசு மாறே
உசு மாறே ஹயோ உசு மாறே.........
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=13D4ehNnCPk (http://www.youtube.com/watch?v=13D4ehNnCPk)
படம் :காணவே கலையாதே
இசை :தேவா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன்
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூஒமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று
என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லாமல் பூ பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா உன் போலே பிம்பமா
ஓ ..ஓ... நம்புமா என் உள்ளம் நம்புமா
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூஒமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று
உயிர் நீங்கி போனவளே
என் உயிர் வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே
பாரம்மா ...என் வாழ்வை பாரம்மா
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை கீருதே
தாங்குமா ...என் உள்ளம் தாங்குமா
உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பவள் யார்
உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார்
ஒரு தொடர்கதையே இங்கு விடுகதைய
அந்த விடையின் எழுத்தை எந்தன் விதி வந்து மறைத்ததா
பொங்குதே கண்ணீரும் பொங்குதே கண்களில் உன் பிம்பம் தங்குதே
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூஒமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று
வடகே ஒரு அஸ்தமனம்
தெற்கே ஒரு சந்திரோதயம்
ஆகாயம் என்னோடு திசை மாறுதே
உண்மையா ... நான் என்ன பொம்மையா
ஒரு ஜன்மம் வாங்கி வந்து இரு ஜன்மம் வாழ்கிறேன்
இது என்ன கதை என்று விதி கேட்குதே
மாறுமா என் கண்ணீர் மாறுமா
எங்கேயோ தொலைந்த விதை இங்கே வந்து பூத்ததென்ன
முல்லை பூ என்றிருந்தேன் முள்ளோடு பாய்ந்ததென்ன
நான் ஓட நினைக்க நிழல் என்னை துரத்த
உயிர் திகைக்கும் பயணம் எந்த திருப்பதில் முடிவது
ஓய்ந்ததே ...என் கால்கள் ஓய்ந்ததே
தீர்ந்ததே ... கண்ணீரும் தீஎர்ந்ததே
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூஒமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று
என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லாமல் பூ பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா உன் போலே பிம்பமா
ஓ ..ஓ... நம்புமா என் உள்ளம் நம்புமா..................
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=fkFyi5DvhHk (http://www.youtube.com/watch?v=fkFyi5DvhHk)
படம் :தாஜ் மஹால்
இசை : A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடியவர்கள் :ஸ்ரீனிவாசன்
MALE VERSION
அடி நீ நீ எங்கே அடி நீ எங்கே
அடி நீ எங்கே அடி நீ எங்கே
அடி நீ எங்கே .........
சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹால்
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
மழைத் தண்ணீ உசிரைக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலை
கட்டிக் கொடுத்தவனும் நான்தானே
அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே
சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹால்
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடியே நீ எங்கே நீ எங்கே........
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்..
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்
எனைக் கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையில் ஆடும் மயிலே, மயிலே
உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே, கண்ணே
நீருக்கும் நமக்கும் ஒரு தேவ பந்தம் அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை மீண்டும் மழை சேர்த்தது
சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹால்
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
மழைத் தண்ணீ உசிரைக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலை
கட்டிக் கொடுத்தவனும் நான்தானே
அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே
நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே...........
http://www.youtube.com/watch?time_continue=22&v=GYjNOAd1jlg (http://www.youtube.com/watch?time_continue=22&v=GYjNOAd1jlg)
FEMALE VERSION
அடி நீயிங்கே…அடி நீயிங்கே…
நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானா
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானா
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாக மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே…அடி நீயிங்கே…
நீயெங்கே நீயெங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாக மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே…அடி நீயிங்கே…
உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
வந்து மூன்று முடிச்சு போடு பின்பு முத்த முடிச்சு போடு என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையலெடுக்க நானும் உனக்குள் புதையலெடுக்க உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
இளமையின் தேவை எது எது என்று அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்ல வா
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாக மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே…அடி நீயிங்கே…
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=aXE5kVqBZn8 (http://www.youtube.com/watch?v=aXE5kVqBZn8)
படம் :பாடும் வானம்பாடி
இசை :பப்பி லாஹிரி
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆ வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஓஒ
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே....
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே....
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு...........
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=B_BYxNsjF08 (http://www.youtube.com/watch?v=B_BYxNsjF08)
படம் :நானும் ரவுடி தான்
இசை :அனிருத்
பாடலாசிரியர்:விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் :சியன் ரோல்டன்(Sean Roldan)
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
நீ கலங்காதடி
யார் போனா
யார் போனா என்ன
யார் போனா
யார் போனா
யார் போனா என்ன
நான் இருப்பேனடி
நீ கலங்காதடி
ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
கிடச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்
நான் கண்ணா தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்
கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஓட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி
பெத்தவங்க போனா என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்
உயிர் வாழுரேண்டி
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=N5pP7k7qppE (http://www.youtube.com/watch?v=N5pP7k7qppE)
படம் :என்னை நோக்கி பாயும் தொட்டா
இசை :தர்புகா சிவா
பாடலாசிரியர்:தாமரை
பாடியவர்கள் :சய்ட் ஸ்ரீராம்
எதுவரை போகலாம் ?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்...
தேன் முத்தங்கள்
மட்டுமே
போதும் என்று சொல்வதால்...
தொடாமல் போகிறேன்...
யார்யாரோ கனாக்களில்...நாளும்
நீ சென்று உலாவுகின்றவள் !
நீ காணும்
கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால்
நான்தான் எந்நாளிலும்..!
பூங்காற்றே நீ வீசாதே..!
ஓ..ஓ..ஓ..
பூங்காற்றே நீ வீசாதே...
நான் தான் இங்கே விசிறி..!
என் வீட்டில்...
நீ நிற்கின்றாய்..!
அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் !
தோட்டத்தில்...
நீ நிற்கின்றாய்..!
உன்னை பூவென்று எண்ணி
கொய்யச் சென்றேன்..!
புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்...
நான் கண்டேன்...ஏன் உன் பின் வந்தேன்..?
பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்...
வேண்டாமே
நீ வேண்டும் என்றேன்...
உயிரே..!
நேற்றோடு...
என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் !
காற்றோடு...
என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன் !
உனைப் பார்க்காத நாள்
பேசாத நாள்...
என் வாழ்வில்
வீண் ஆகின்ற நாள்..!
தினம் நீ வந்ததால்... தோள் தந்ததால்...
ஆனேன் நான்
ஆனந்தப் பெண்பால்..!
உயிரே ..!
எதுவரை போகலாம்..?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்...
தேன் முத்தங்கள்
மட்டுமே போதும்
என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்..
உன்போன்ற
இளைஞனை...
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை...!
கண்டேன் உன்
அலாதித் தூய்மையை !
என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை..!
பூங்காற்றே நீ வீசாதே..! ஓ ஓ ஓ...
பூங்காற்றே நீ வீசாதே...
நான்தானிங்கே விசிறி..!
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=JiW8qxUrzZ8 (http://www.youtube.com/watch?v=JiW8qxUrzZ8)
படம் :மூன்றாம் பிறை
இசை :M.S.விஸ்வநாதன்
பாடலாசிரியர்:கண்ணதாசன்
பாடியவர்கள் : S.B.பாலசுப்ரமணியம் ,S.ஜானகி
தந்தன தத்தன தையன தத்தன தனன தத்தன தான தையன தந்தானா
ஆஹா
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
லல்ல லலலல்ல லல்ல லலலல்ல லல்ல லலலல்ல லாலல்லல்ல லாலாலா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
எப்படி?
ம்?
சந்தங்கள்
நாநநா
நீயானா
ரிஸரி
சங்கீதம்
ம்ம்ம்
நானாவேன்
சந்தங்கள் நீயானா சங்கீதம் நானாவேன்
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
தா.......
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி ஹஹா.
னனனனனா
Come on. Say it once again!
னனனனனா
ம்... சிரிக்கும் சொர்க்கம்
தரனனா தரரனானா
தங்கத்தட்டு எனக்கு மட்டும் OK?
தாரே தாரே தானா
அப்படியா?
தேவை பாவை பார்வை
தத்தனதனா
நினைக்க வைத்து
னனனன லாலாலாலா
நெஞ்சில் இன்று நெருங்கி வந்து
னனனனனனனா தானானா லாலலா லாலாலா
Beautiful!
மயக்கம் தந்தது யார்? தமிழோ? அமுதோ? கவியோ?
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
சந்தங்கள்
அஹாஹா
நீயானா
அஹாஹா
சங்கீதம்
அஹாஹா
நானாவேன்
அஹாஹா
இப்பப் பாக்கலாம்!
தனன தனன னானா
ம்..?
மழையும் வெயிலும் என்ன?
தன்னனன தனன னான னானா
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன?
தனனனான தனனனான தான்னா
அம்மாடியோ...
தனனனான தனனனான தான்னா
ஆங். ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்
சபாஷ்
கவிதை உலகம் கெஞ்சும் உன்னைக் கண்டால்
கவிஞர் இதயம் கொஞ்சும்
ஹஹ
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாடிக் கலந்திருப்பது எப்போது
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாடிக் கலந்திருப்பது எப்போது
ஹாஹாஹா லலல்லா ம்ம்ம் ஆஹாஹா
லாலாலா லாலாலா லாலாலா லாலாலா
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=k2gYEwIrtUQ (http://www.youtube.com/watch?v=k2gYEwIrtUQ)
படம் :சிங்காரவேலன்
இசை :இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் : S.B.பாலசுப்ரமணியம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே…
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே…
கககாகிகீகூகூ
verry good mmகககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே… பாடுங்கோ?
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே…
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
ஏ பாக்கும் பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு
கேக்கும் மத்தாப்பு மேலாக்கு
புதுக்காத்துக்கும் பாட்டுக்கும் கூத்துக்கள் போடுது தகிடதத்தித்தோம்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்ப ஆஆ பம்சிக்கு பம்ச பம்
பொறக்கையில் என்னோடு பொறந்தது வளர்ந்தது பாட்டு
நடக்கையில் என்னோடு நடந்தது கலந்தது பீட்டு
இருக்குது கிட்டாரு ட்ரம்ஸூகள் ட்ரம்பெட்டு ஃப்ளூட்டு
இவைகளை ஒன்றாக இசைப்பவன் எவனென்று காட்டு
விதவிதமா வகைவகையா சுகம்சுகமா சுரம் படிப்பேன்
இமயம் முதல் குமரிவரை இதயங்களில் இடம் பிடிப்பேன்
குயிலின் சங்கீதம் கூக்கூ
கிளியின் சங்கீதம் கீக்கீ
எனது சங்கீதம் ஸா..பா..
இதுக்குக் கிடையாது தாப்பா
குமரியானாலும் கிழவியானாலும் நின்று காதாரக் கேப்பா
புதுச்சேரி கச்சேரி
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே…
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே…
ஹ ஹ ஹா
மிருதங்கம் சூடேற அடிக்கடி கொடுக்கணும் டேக்கா
தரிகிடதோம் ததாம் தகிட
மனுஷங்க முன்னேற அடிக்கடி புடிக்கணும் காக்கா
வெவரங்க சொல்லாம விஷயத்தை முடிக்கணும் நேக்கா
முடிஞ்சதும் எல்லாரும் புகழ்ந்திட நடக்கணும் சோக்கா
சரக்கிருக்கு முறுக்கிருக்கு எனக்கெதுக்கு மனக் கவலை
அறிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும் மழைத்தவளை
காலம் என்னோட காலம் நேரம் என்னோட நேரம்
கல்லும் காயாக மாறும் முள்ளும் பூவாக மலரும்
நாளும் பார்த்தாச்சு ஆளும் பார்த்தாச்சு
ஜோடி எப்போது சேரும்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
ஏ பாக்கும் பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு
கேக்கும் மத்தாப்பு மேலாக்கு
புதுக்காத்துக்கும் பாட்டுக்கும் கூத்துக்கள் போடுது தகிடதத்தித்தோம்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்.....
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=8Hjf-UyTSKg (http://www.youtube.com/watch?v=8Hjf-UyTSKg)
படம் :உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
இசை :இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் :S. P. பாலசுப்ரமணியம், ஸ்வரனலாதா
ஆஆஆஆஆ....ஆஆஆஆஆஆஅ...
ஆஆஆஆஅ.....ஆஆஆஆஆ....
யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி
அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்
(யென்னைத் தொட்டு)
சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்கம் சொர்கம் யென்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
யென்னை யென்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு...
யென்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு...
அன்பே ஓடி வா...
அன்பால் கூட வா...
அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்
யென்னைத் தொட்டு...
நெஞ்சைத் தொட்டு...
யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி..
ஆஆஆஅ....ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆஆ
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே...
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே...
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே...
கட்டுக்குள்ள நிர்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே...
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே...
யென்னில் நீயடி...
உன்னில் நானடி...
யென்னில் நீயடி...உன்னில் நானடி...
ஓஹ் பைங்கிளி... நிதமும்
யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி..
அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்
யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி...
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=GcqO6GpmBok (http://www.youtube.com/watch?v=GcqO6GpmBok)
படம் :சின்ன தாயே
இசை :இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் :K.J.ஜேசுதாஸ், ஸ்வரனலாதா
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகள
உள்ளாற பூட்டி வச்சே திண்டாடி
நிக்கிறேனே இக்கரையிலே
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
தூரக் கிழக்கு கரை ஓரந்தான்
தாழப் பறந்து வரும் மேகந்தான்
உன்கிட்ட சேராதோ
என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும்
சந்தர்ப்பம் வாராதோ
உன் கூட நானும் சேர
ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு
சேதி ஒண்ணு சொன்னேனே
கண்ணாலம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது
நான் மா மரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே
மாமன் நெனப்பில்
சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில்
கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா
மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ
கையேந்தும் ஆட்டு குட்டி
கன்னிப் பொண்ணா மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி
மையல் தீரபேசாதோ
உன்னாலே தூக்கம் போயாச்சி
உள்ளார ஏதேதோ ஆயாச்சு
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும்
அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளார பூட்டிவச்சு
திண்டாடி நிக்கிறேனே
இக்கரையிலே
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே...
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=mSbepxanSnM (http://www.youtube.com/watch?v=mSbepxanSnM)
படம் : இராஜகுமாரன் (1994)
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இயற்றியவர் : ஆர்.வி.உதயகுமார்
இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
ஆ..ஆ...ஆ...ஆ
கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=zGu1h-1I_kE (http://www.youtube.com/watch?v=zGu1h-1I_kE)
படம் :இதயம்
இசை :இளையராஜா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடியவர்கள் :K.j.யேசுதாஸ்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
ஆறாத ஆசைகள் தோன்றும்
எனைத் தூண்டும்
ஆனாலும் வாய் பேச
அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும்
அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை
நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று
வினா தாள் போல் இங்கே
கனா காணும் காலை
விடை போலே அங்கே
நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=aLD5rYU227w (http://www.youtube.com/watch?v=aLD5rYU227w)
படம் : கண்ணு பட போகுதையா
இசை : S.A.ராஜ்குமார்
பாடலாசிரியர்: கலைக்குமார்
பாடியவர்கள் : S.B.பாலசுப்ரமணியம் ,சித்ரா
மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற
ஓரக்கண்ணுல நீ தான் என்னை எதுக்கு பாக்குற
ஒதுங்கி நிக்குறபோதும் என்னை உரசி கேக்குற
தொட்டு தொட்டு ரசிப்போமா தொட்டில் கட்ட நினைப்போமா
ஒட்டிக்கிட்டு சிற்பமா ஒண்ணா சேர்ந்து நிப்போமா
கட்டிக்கிட்டு காத்துல தான் கரைஞ்சி போவோமா
மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற
அம்மம்மா குண்டுமல்லி ஆளை இப்போ தூக்குது
அழகா கிட்ட வந்து மூடு ஏத்துத்து
சிரிக்கும் கொலுசு இப்போ அய்ய்த்தான் பேரை சொல்லுது
அதுக்கும் இதுக்கும் சேர்த்து ஆட்டம் போடுது
சேலை போத்தி தான் செங்கரும்பு ஆடுதா
கடிச்சி திங்கத்தான் கட்டெறும்பு தேடுதா
காதல் ரேகை தான் உள்ளங்கையில் ஓடுதா
கட்டில் கச்சேரி காதோடுதான் கேட்க்குதா
குத்த்டாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா
இரவே பத்தாதம்மா பகலும் பாக்கலாம்
ஓரக்கண்ணுல நீ தான் என்னை எதுக்கு பாக்குற
உதட்ட கடிச்சி நீ தான் என்னை உசுப்பு ஏத்துற
ஆஹா நீயும் குடிச்ச ஆத்துதண்ணி அது ரொம்ப இனிக்குதே
இரவில் மாமா உங்க நினைப்புல நான் தூங்கினால்
நிலவில் பாய் விரிச்ச சுகமும் கிடைக்குது
காதல் சூரியந்தான் கண்ணுக்குள்ளே கரையுமே
மாமன் பாத்தாலே மஞ்சள் கூட சிவக்குமே
கண்ண பாத்தாலே கள் குடிச்ச போதை தான்
உன்ன நினைச்சாலே சொர்கத்துக்கு பாதைதான்
குத்தாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா
இரவே பத்தாதம்மா பகலும் பாக்கலாம்
மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற
தொட்டு தொட்டு ரசிப்போமா தொட்டில் கட்ட நினைப்போமா
ஒட்டிக்கிட்டு சிற்பமா ஒண்ணா சேர்ந்து நிப்போமா
கட்டிக்கிட்டு காத்துல தான் கரைஞ்சி போவோமா
மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
ஒதுங்கி நிக்குறபோதும் என்னை உரசி பேசுற .....
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=wwqfcdL9XOI (http://www.youtube.com/watch?v=wwqfcdL9XOI)
படம் : அவள் வருவாளா
இசை : S.A.ராஜ்குமார்
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர்கள் : S.B.பாலசுப்ரமணியம்
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
ஓ ஓ ஓ.....
கூந்தல் வருடும் காற்று
அது நானா இருந்தேன் தெரியாதா
கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவி ஆனேன் புரியாதா
சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்
மின்னுவதும் காதல் தரும் மொழிதான்
வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்
உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்
பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
ஓ ஓ ஓ.....
நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
ஓ ஓ ஓ ம்ம் ம்ம் ம்.........
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=ABqMzJduFGQ (http://www.youtube.com/watch?v=ABqMzJduFGQ)
படம் : கரகாட்டகாரன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : கங்கை அமரன்,மலேசியா வாசுதேவன்
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேரு கெட்டு பொனதின்னா
நம்ம பொழப்பு என்னகுங்க
விட்டுடு தம்பி இது வேனாம் தம்பி
இதனை பேரு வீடு உங்கலை நம்பி
விட்டுடு தம்பி இது வேனாம் தம்பி
இதனை பேரு வீடு உங்கலை நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேரு கெட்டு பொனதின்னா
நம்ம பொழப்பு என்னகுங்கொய்.....
அன்னசி என்ன எப்பொதும் நீங்க
தப்பாக என்ன வேனாம்
பொன்னலே கெட்டு பொவேனோ என்று
ஆரைசி பன்ன வேனா
ஊருல ஒலகதில
எங்க கதை பொல் யேதும்
நடகலிய
வீடயும் மரந்துபுட்டு
வேர ஒரு நாடுக்கு ஓடலிய
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
இல்ல இல்ல!!!
மங்கை இல்லதொரு வெற்றியும் உண்டோ
இல்ல இல்ல!!!!
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கை இல்லதொரு வெற்றியும் உண்டோ
காதல் ஈடேர!!!
பாடு என் கூட!!!
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேரு கெட்டு பொனதின்ன
நம்ம பொழப்பு என்னகுங்க
விட்டுடு தம்பி இது வேனாம் தம்பி
இதனை பேரு வீடு உங்கலை நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கே
ஆன பொரந்த எல்லரும் பொன்ன
அன்பாக எண்ண வேனும்
வீன திரிஞ்ச ஆனந்தம் இல்ல
வேரென்ன சொல்ல வேனும்
வழ்கைய ரசிகனும்ன
வஞ்சிக் கொடி
வசனை பட வேனும்
வாலிபம் இனிகனும்ன
பொன்ன கொஞ்சம்
ஆசயில் தொட வெனும்
கன்னிய தேடுங்க கர்பனை வரும்
ஆம ஆம ம!!!
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
ஆம ஆம ம!!!
கன்னிய தேடுங்க கர்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லம பூமி இங்கேது
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேரு கெட்டு பொனதின்ன
நம்ம பொழப்பு என்னகுங்க
விட்டுடு தம்பி இது வேனாம் தம்பி
இதனை பேரு வீடு உங்கலை நம்பி
அய்யயோ
விட்டுடு தம்பி இது வேனாம் தம்பி
இதனை பேரு வீடு உங்கலை நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேரு கெட்டு பொனதின்ன
நம்ம பொழப்பு என்னகுங்க....
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=LVFh-6C1OuI (http://www.youtube.com/watch?v=LVFh-6C1OuI)
படம் : சின்ன தம்பி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : மனோ
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே!
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமி தான்
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
சொருபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
சொருபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட........
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=rTqhzkq0JsY (http://www.youtube.com/watch?v=rTqhzkq0JsY)
படம் : புன்னகை மன்னன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : S.B.பாலசுப்ரமணியம்,சித்ரா
ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா கூ
சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே
சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா கூ
அன்பே நீ இன்றி அலைகள் ஆடாது
கண்கள் சாய்த்தாலும் இமைகள் மூடாது
பூவே நீ இன்றி பொழுதும் போகாது
காதல் இல்லாமல் கவிதை வாழாது
ஆதரிக்க நல்ல இளைஞன்
மனம் விட்டு காதலிக்க நல்ல கவிஞன்
காதலிக்க வந்த கலைஞன்
இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்
தடை ஏது தலைவா
இடை மேலே உடை நீயே
பூ மஞ்சம் நீ போட வா
எனக்கென்ன சிங்களத்து சின்னக் குயில் நான்
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்
சிங்களத்து சின்னக் குயில் நான்
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா கூ
நிலவே நீ தானே நிஜமா வீண் கேலி
உந்தன் மடி தானே நிலவின் நாற்காலி
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி
காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி
ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்
இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்
விட்டு விடு தத்தளிக்கிறேன்
என்னை விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிறேன்
பிடிவாதம் தகுமா
கொடி ஒன்று கனி ரெண்டு
வாங்காமல் தாங்காதம்மா
இசைதரும் சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே
சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கில்ல்லாதே கல்லுளி மங்கா கூ
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா கூ
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=Au6ZDhcN1b0 (http://www.youtube.com/watch?v=Au6ZDhcN1b0)
படம் : அவ்வை சண்முகி
இசை : தேவா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : S.B.பாலசுப்ரமணியம்
அவ்வை......... சண்முகி
அவ்வை......... சண்முகி
வேல வேல வேல வேல மேல மேல மேல வேல
அம்பளைக்கும் பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன அம்பளைக்கும் வேல
காலமால மாடகால மேல வேல வேல வேல வேல
எத்தனையோ வேல எப்போவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை
சண்முகா....
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்னையா
அவ்வை சண்முகி.....
வேல வேல வேல வேல மேல மேல மேல வேல
அம்பளைக்கும் பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன அம்பளைக்கும் வேல
ஆத்தாடி இந்த மாமி தான் கூத்தாடும் அர்த்தநாரிதான்
க்யூயல் ரோல்தான் இந்த வேஷம் தான் என் என்றால் பிள்ளை பாசம்தான்
காளை ஓன்று கன்றுக்காக கறவை மாடாய் ஆயாச்சு
ஈன்றெடுத்த கன்றுக்காக இங்குரெண்டு தாயாச்சு
இது ஒரு அதிசயம் தனிப்பட்ட ரகசியம் ரீப்பிரப்பபிப்பா
சரச்ஹரே ரிபாபா சகசிகி சகசிகி சகச்சா சு சூ சு சு
சண்முகா.........
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்னையா
அவ்வை சண்முகி.....
காலமால மாடகால மேல வேல வேல வேல வேல
எத்தனையோ வேல எப்போவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை
அவ்வை சண்முகி....
அவ்வை சண்முகி....
பாத்தாச்சு பல மேடைதான் போட்டாச்சு பல வேஷம்தான்
ஆனாலும் இது வித்தியாசம் தந்தைக்கு இங்கு தாய்வேஷம்
ஆரீராரோ .......ஓ....ஆரீராரோ..ஆரீ.....ஆரீ
பாட்டிவந்து பாட பாட தூங்குதம்மா இசை கேட்டு
பாசமுள்ள பாட்டை கொஞ்சம் தடுப்பதுண்டோ ஐகோர்ட்டு
நிழலையும் உடலையும் வழகென பிரிப்பது ரீப்பிரப்பபிப்பா
தரதரார தரதறதா யூகுரதரத்தா சிகிச்சா சிக்கி சிகிச்சா
சண்முகா....
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்னையா
அவ்வை சண்முகி.....
வேல வேல வேல வேல மேல மேல மேல வேல
அம்பளைக்கும் பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன அம்பளைக்கும் வேல
காலமால மாடகால மேல வேல வேல வேல வேல
எத்தனையோ வேல எப்போவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை
சண்முகா ஆஅ ஆஅ....
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்னையா
அவ்வை சண்முகி.....
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=HQbj1KUcuQ8 (http://www.youtube.com/watch?v=HQbj1KUcuQ8)
படம் : ஜோடி
இசை : A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் :உன்னி மேனன் ,S.ஜானகி
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
ம்ம்ம்…
கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
ஒ.. அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
ஒ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
ம்ம்ம்…
கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
ஆ… காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா
மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா
ல ல லல… ல ல ல ல ல
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
லல… ல ல ல லல… ல
ஓ… வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
ஓ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
ஓ…ஓ…ஓ…
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=su9J9HkvcF0 (http://www.youtube.com/watch?v=su9J9HkvcF0)
படம் : ஏந்திறன்
இசை : A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்:மதன் கார்கி
பாடியவர்கள் :Blaaze, Arjun Chandy , Sid Sriram
பலாசே ,அர்ஜுன் சண்டி ,சய்ட் ஸ்ரீராம்
ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.
ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.
ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.
ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.
ஏ ஏ
ராஜாளி நீ காலி
இன்னைக்கும் திங்களுக்கு
தீபாளி.
ராஜாளி
செம்ம ஜாலே.
நரகத்துக்கு நீ
விருந்தாளி.
மாசே நா பொடி மாசே
வெடிச்சாக்க
பூப் பட்டாசு.
பாஸு நா குட்ட பாசு
மாட்டிக்கிட்டா
மச்சான் நீ பூட்ட கேசு.
ஓஒ ஓஒ
யா யா யா
கூ கூ கூ உ உ
நக நக நக நா
ஆறே அங்குல பீரங்கி
நீ உள்ளங்கி.
நக நக நக நா
தானியங்கி உன் காதுல
வச்ச சம்பங்கி.
நக நக நக நா
ஆறே அங்குல பீரங்கி
நீ உள்ளங்கி.
நக நக நக நா
தானியங்கி உன் காதுல
வச்ச சம்பங்கி.
நக நக நக நா
ரன்கூஸ்கி உன்
தூது வந்தா
சங்குஸ்கி.
பொடி பொடி பொடி நான்
மூக்குப் பொடி.
ஓன் மூக்குல புகுந்தேன்
தாக்குப் புடி.
ராஜாளி நீ காலி
இன்னைக்கும் திங்களுக்கு
தீபாளி.
ராஜாளே
செம்ம ஜாலே.
நரகத்துக்கு
நீ விருந்தாளி.
மாஸு நான் பொடி மாசே
வெடிச்சாக்க
பூப் பட்டாசு.
பாஸு நா குட்டப் பாஸு
மாட்டிக் கிட்டா மச்சா நீ
பூட்டக் கேசு.
ஒஹ் ஹோ
பட்சி சிக்கி கிச்சோ.
ஒஹ்
ரெக்க பிச்சிக் கிச்சோ.
ஒஹ்
உன்ன முறச்சி கிச்சோ.
அச்சச்சோ.
ய ய யா ய ய யா ய ய யா.....ஹே ஹே ஹே
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=xsbLtHql4g8 (http://www.youtube.com/watch?v=xsbLtHql4g8)
படம் : மெர்சல்
இசை : A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்: விவேக்
பாடியவர்கள் :கைலாஷ் க்ஹெர் ,சத்யா பிரகாஷ் ,தீபக் ,பூஜா av
ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!
முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் ஏழ
அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...
வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்
ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்
தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
தமிழினமே வீழாதே!!!
நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்
முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ
வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்
தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=ySIbczGOky0 (http://www.youtube.com/watch?v=ySIbczGOky0)
படம் : துள்ளாத மனமும் துள்ளும்
இசை : S.A.ராஜ்குமார்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் :ஹரிஹரன்
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ..ஹே.....ஹே..
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ
மானிடப் பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ..ஓஹோ
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மேனி கொண்ட கன்னம் மின்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ..ஓஹோ
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஹே.....ஹே..ஹே.....ஹே..
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=Zllqm2zHmpA (http://www.youtube.com/watch?v=Zllqm2zHmpA)
படம் : அப்புச்சி கிராமம்
இசை :விஷால் C
பாடலாசிரியர்:சாருகேஷ் சேகர்
பாடியவர்கள் :வருண் விஷ்வா
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ....
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ....
யேன்காதுல எசை போல
பேசுர உன்கொரலாலே
எசை போல நீயும் பேசவே
எப்போவுமே ரசிக்கிறேன் நானே
ஏதோ ஏதோ பாடுறேன் நானே
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...
குத்தாலத்து சாரலபோல் நல்லசிரிக்க என் தேன்மொழி
கன்னங்குழி போதானு என்ன மயக்கும் உன் மைவிழி
கருவாபையன் கனவெல்லாம் கலர்படம் ஆனதனால
முழிச்சாலும் மெதுக்கானே காதலெனும் பல்லாக்குமேல
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...
வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழுபவுர்ணமி
சொக்கனுக்கே ஆசைவரும் என்ன அழகு யென் கண்மணி
தைமாசம் தேதி குறிக்கவா மேளதாளம் கேள்வி கேக்குது
உன்னெஞ்சில ஊஞ்சலாடவே மஞ்சகயிரு ஏங்கிவாடுது
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...
ஒரு வாய் சோறும் இறங்காம
ஒரு ராவுமே உறங்காம
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=HCD9PzJfJVY (http://www.youtube.com/watch?v=HCD9PzJfJVY)
படம்: வெயில்
இசை: G.V.பிரகாஷ்
பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்: திப்பு, பிரசன்னா, ஜாஸி கிஃப்ட், கைலாஷ் கெர்
வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை
வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே....
வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்
ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்
தொப்புள்கொடியைப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை
வெயிலோடு விளையாடி!!!
வெயிலோடு உறவாடி!!!
வெயிலோடு மல்லுக்கட்டி!!!!
ஆட்டம் போட்டோமே....!!!!
வெயிலோடு விளையாடி!!!
வெயிலோடு உறவாடி!!!
வெயிலோடு மல்லுக்கட்டி!!!!
ஆட்டம் போட்டோமே.
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=B2jkAoD0b-M (http://www.youtube.com/watch?v=B2jkAoD0b-M)
படம்: ரன்
இசை:வித்யாசாகர்
பாடல்: அறிவுமதி
பாடியவர்:ஹரிஹரன் , சாதனா சர்கம்
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றை ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
அதை ரகசியமாக உயிரை தோண்டி பதியம் போட்டு கொண்டேன்
கண்டவுடன் எனையே
தின்றதடி விழியே
என்னை விட்டு தனியே
சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழி சுடரே
நட்சதிரப் பயிரே
ரெக்கை கட்டி வா நிலவே
பொய் ஒன்றை ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
ஒரு மழை என்பது ஒரு துளி தானா கண்ணே
நீ ஒற்றை துளியா கோடி கடலா உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே
சிக்கிக்கொண்டேன் அழகே
நெற்றி முடி வழியே
தப்பி வந்தேன் வெளியே
அடி பொத்தி வைத்த புயலே
தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா வெளியே
நில் என்று கண்டித்தாய்
உள்ள சென்று தண்டித்தாய்
சொல் என்று கெஞ்சத்தான்
சொல்லாமல் வஞ்சித்தாய்
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றை ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=beXU_OcpUJM (http://www.youtube.com/watch?v=beXU_OcpUJM)
படம்: பார்த்தாலே பரவசம்
இசை:A.R.ரகுமான்
பாடல்: வாலி
பாடியவர்:பல்ராம் ,K.S.சித்ரா
காதலே ஜெயம் ..
நீதான் என் தேசிய கீதம்
ரன்ஜன ரன்ஜன
என் ஒரே பாடலே
உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவலே
மனதிற்கு இனியவளே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
கனவிலும் நீயே
ரஞ்சனா ரஞ்சனா
என் பிறவா மழலைகளை
உன் விழியில் பார்க்கிறேன்
என் பிறவா மழலைகளை
விழியில் பார்க்கிறேன்
நான் எழுதாக்கவிதைகளை
மொழியில் கேட்கிறேன்
உன் மொழியில் கேட்கிறேன்
நான் வேண்டிய வரங்களை
வரவில் பார்க்கிறேன்
உன் வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளே
என் விடியா இரவுகளே
உறவில் பார்க்கிறேன்
உன் உறவில் பார்க்கிறேன்
காதலே ஜெயம்
காதலே ஜெயம்
கான்பத உண்மையம்
என் மரியாதைக்கு உரியவலே
மனதிற்கு இனியவளே
அஹா அஹா
நீ தான் என்தேசிகீதம்
ரஜனா
என் ஒரே பாடலே ...
உடலால் வரும் சுகத்தை
உதற பார்க்கிறேன்
வெறும் உடலால் வரும் சுகத்தை
உதற பார்க்கிறேன்
நம் இறந்தும் இரவாநிலை
எதிர்பார்க்கிறேன்
எதிர்பார்க்கிறேன்
எல்லாம் எழுத்துக்கும் உயிர் தொடக்கம்
உயிர் தொடக்கம்
என் எல்லா உணர்வுக்கும்
என் எல்லா உணர்வுக்கும் நீ தொடக்கம்
நீ தொடக்கம்
காதலே ஜெயம் ம்ம்ம் ...
காதலே ஜெயம்
அது கடவுளின் குணம்
என் மரியாதைக்கு உரியவலே
மனதிற்கு இனியவளே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
கனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம் ...
உன் ஒரே பாடலே
உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவனே
இந்த மண்ணிலும் பெரியவனே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
நனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம்
ரன்ஜன ரன்ஜன
ரன்ஜன ரன்ஜன ...
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=US-gPZzQDns (http://www.youtube.com/watch?v=US-gPZzQDns)
படம்: மின்சார கனவு
இசை:A.R.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்:உன்னி மேனன் .K.S.சித்ரா ,ஸ்ரீனிவாசன்
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
ஒஹோ...
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
மானா மதுர மாமர கிளையிலே
பச்ச கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன
என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்த கேள்வி எனை கேட்டா என்ன நான் பாடுவேன்.
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
ஒஹோ...
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
மேட்டுச்சாலையிலே மாட்டுவண்டியிலே
போறாலே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்
வானவில்லின் வர்ணம் என்றாய்
மழை துளி மண்ணில் வந்து
சிந்த சிந்த எழுகிறதே ஒரு வானம்
அது எனை வாணவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே
சில நேரம்....
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
தந்தானே தந்தானே காற்று மழையும்
தந்தானே எல்லோரும் வாழத்தானே
தந்தானே தந்தானே பாடல் ஒன்று தந்தானே
எல்லோரும் பாடத்தானே
சிறு பிள்ளை போல்
மனமிருந்தால்
துயரில்லையே
பறவையை போல் உடல் இருந்தால்
பயமில்லையே
தந்தானே தந்தானே கையில் பூமி
தந்தானே வளமோடு வாழத்தானே
மழை துளி மண்ணில் வந்து சிந்த சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வாணவில்லில் கொண்டு
சேர்த்து விடுகிறதே சில நேரம்
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
ஒஹோ...
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
தந்தானே தந்தானே உன்னை கணிக
தந்தானே உயிரெல்லாம் தித்தித்தேனே
தந்தானே தந்தானே பாட்டு குயில் தந்தானே
செவியெல்லாம் இன்பத்தேனே
ஒளிகளிலே ஓவியங்கள் தெரிகின்றதே
மனத்திரையில் காட்சிகளுமே
விரிகின்றதே
தந்தானே தந்தானே மேகக்கூட்டம் தந்தானே
இடியெல்லாம் தாளம்தானே
மழை துளி மண்ணில் வந்து சிந்த சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வாணவில்லில் கொண்டு
சேர்த்து விடுகிறதே சில நேரம்
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
மானா மதுர மாமர கிளையிலே
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
பச்ச கிளி பச்ச கிளி ஒன்னு
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=8GKGykP0JNc (http://www.youtube.com/watch?v=8GKGykP0JNc)
படம் : தூள்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள் : சுஜாதா, ஷங்கர் மஹாதேவன்
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது
கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது
மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது
னா னா னா
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது
தலை முதல் கால்வரை இப்பொழுது நீ
தவறுகள் செய்வது எப்பொழுது
ஓ..இடைவெளி குறைந்தது இப்பொழுது உன்
இதழ்களை துவைப்பது எப்பொழுது
அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை
ஆடுதான் மேய்வது எப்பொழுது
திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ
எனக்குள் தொலைவது எப்பொழுது
னா னா னா
ஆசை .ஆசை ஆசை .ஆசை ஆசை ..
ஆசை ஆசை .ஆசை..
பூல்வெளி ஆகினேன் இப்பொழுது நீ?
பனித்துளி ஆவது எப்பொழுது
ஓ..கொட்டும் மழை நான் இப்பொழுது உன்
குடிநீராவது எப்பொழுது
கிணற்றில் சூரியன் இப்பொழுது உன்
கிழக்கில் உதிப்பது எப்பொழுது
புடவை கருவில் இப்பொழுது நீ
புதிதாய் பிறப்பது எப்பொழுது
னா னா னா னா......
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது
கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது
மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது
னா னா னா னா......
னா னா னா னா......
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=47Je6h9wKv8 (http://www.youtube.com/watch?v=47Je6h9wKv8)
படம்: நண்பன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: விவேகா
பாடியவர்கள்: கிரிஷ், சுசித் சுரேசன்
என் பிரெண்ட போல யாரு மச்சான்..
அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..
தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்
புது பாதை நீயே போட்டு தந்தாய்..
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்..
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்..
என் பிரெண்ட போல யாரு மச்சான்..
அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=k7YM7OCU1iQ (http://www.youtube.com/watch?v=k7YM7OCU1iQ)
படம் : ஜெயம் கொண்டான்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : திப்பு
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே மலருகின்றதே
ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே
கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே
ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே
கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே
பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக
தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்
என்னில் என் கால்களில்
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்
பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்
ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்
நொடியும் விலகாமல் கொஞ்சும்
கொஞ்ச தங்கும் நெஞ்சே
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=4SXEasUsFSg (http://www.youtube.com/watch?v=4SXEasUsFSg)
படம் : அன்பு
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிஹரன், சதனா ஷர்கம்
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்
தவமின்றி கிடைத்த வரமே
ஓ… இனி வாழ்வில் எல்லாம் சுகமே
ஓ கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற
வேண்டாமா வேண்டாமா…
கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேர
வேண்டாமா வேண்டாமா
கை கோர்க்கும் போதெல்லாம் கைரேகை தேயட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும்
பகல் எல்லாம் இரவாகி போனால் என்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டால் என்ன
நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே
சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும்
தருவாயா தருவாயா
கண்ணென்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா வருவாயா
விழுந்தாலும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்
மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்
இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்….
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=yxrWSWJ8R4w (http://www.youtube.com/watch?v=yxrWSWJ8R4w)
படம் : வின்னர்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போ(fm)து
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
ஓ…நிலவின் பின்புறமாய் நீ தான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா ஓ…
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=s5sDN_wvVXw (http://www.youtube.com/watch?v=s5sDN_wvVXw)
படம் : வீரா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ… அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
போன் மயில் ஆடுது வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்…..
ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி
சுவாரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே
ஆற்றில் பொர்க்கோள் அலையாட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்
ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி
வானவில் ஓவியம்….
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=FzLpP8VBC6E (http://www.youtube.com/watch?v=FzLpP8VBC6E)
படம் : வாரணம் ஆயிரம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்கள் : பிரசன்னா, ஹரிஹரன், தேவன்
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ கால்சலை
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுணி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகம் வில்லா
நீ நின்ற இடம் என்றால் விலை ஏறி போகாதோ
நீ செல்லும் வழி எல்லாம் பனி கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ கால்சலை
தூக்கங்களை தூக்கி சென்றாய்… தூக்கி சென்றாய்
ஏக்கங்களை தூவி சென்றாய்
உன்னை தாண்டி போகும் போது… போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு
நில் என்று நீ சொன்னால் என் காலும் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீ தானே
என தோன்றும் நேரம் இது தானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ கால்சலை
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=KbSOxVY6AHI (http://www.youtube.com/watch?v=KbSOxVY6AHI)
படம் : டிஷ்யூம்
இசை : விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஜெய தேவ்
ஹேய் !
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் – முதுகில்
கட்டறெம்பு போலே உருகிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
ஹேய் !
விண்ணை துடைக்கின்ற முகிலை, வெள்ளி நிலவை,
மஞ்சள் நட்ஷத்திரத்தை..
என்னைத்தேடி மண்ணில் வரவழைத்து
உன்னை காதலிப்பதை உரைப்பேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும், சிறு புல்லுக்கும்,
காதல் உரைத்துமுடிப்பேன்..
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
இன்னும் சொல்லவில்லையே இல்லையே..
லட்சம் பல லட்சம் என்று
தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்தச் சொல்லு சிக்கவில்லை எதனாலே
பந்திவெச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிவிட்டு பட்டினியாய்
கிடப்பாளே அது போல…!!!
நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்..
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
சின்ன சின்ன செல்ல குரும்பும், சீனி சிரிப்பும்,
என்னை சீரழிக்குதே..
விரு விருவென வளரும் பழம்
எந்தன் விரதங்களை வெல்லுதே
உன்னை கரம் பற்றி இழுத்து, வளை உடைத்து,
காதல் சொல்லிடச் சொல்லுதே..
வெக்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை
குத்தி குத்தியே கொல்லுதே..
காதல் எந்தன் வீதி வழி
கையை வீசி வந்த பின்னும்
கால் கடுக்க காத்துருக்கேன் எதனாலே
பிப்ரவரி மாதத்துக்கு நாளு ஒன்னு கூடி வர
அந்த நாளும் காத்திருக்கும் அது போல…!!!
நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்..
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிருத்திவிட்டால்
னெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=2_XRvlmzIxg (http://www.youtube.com/watch?v=2_XRvlmzIxg)
படம் : சிவப்பதிகாரம்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : சுவர்ணலதா, கார்த்திக், மலையம்மா
அப்படியோ
ஆணழகன்
என்ன ஆள வந்த
பேரழகன்
செப்பு கல்லு
சீரழகன்
சின்ன செம்பவழ
வாயழகன்
இப்படியோ
தேரழகன்
இல்ல இன்னும் சொல்லும்
ஊரழகன்
அப்பறம் நான்
என்ன சொல்ல
என்ன கட்டிக்கிட்டான்
கட்டழகன்
சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்
கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்
தேசங்கள் அத்தனையும்
வென்று விட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்
சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்
பாவி பையலால
இப்போ நானும் படும் பாடு என்ன
ஆவி புக போல
தொட்டிடாம இவ போவதென்னா
கண்ணுக்கு காவலா
சொப்பனத்த போடுறா
கன்னத்துக்கு பௌடர
முத்தங்களை பூசரா
நூல போல சீலை
பெத்த தாய போல காளை
யாரு போல காதல்
சொல்ல யாருமே இல்ல
சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்
கேணி கயிராக
உங்க பார்வ
என்ன மேலிழுக்க
கூனி முதுகாக
செல்ல வார்த்த
வந்து கீழிழுக்க
மா விளக்கு போல நீ
மனசயும் கொளுத்துர
நாவிடுக்கு ஓராமா
நாணத்த பதுக்குற
யாரும் எரச்சிடாத
ஒரு ஊத்து போல தேங்கி
ஆகி போச்சு வாரம்
இவ கண்ணு முழி தூங்கி
சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்
கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்
தேசங்கள் அத்தனையும்
வென்று விட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்
சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=r_87vjMxW1c (http://www.youtube.com/watch?v=r_87vjMxW1c)
படம்: கழுகு
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா
பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ஆச்சு நெஞ்சு..
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை குறைஞ்சு..
பட்ட மரம் ஒன்னு… பொசுக்குனு துளிர்க்குதே..
நீ சிரிக்கும் போ… என் மனசு வழுக்குதே ..
உன்கிட்ட கெஞ்ச .. என்னோட நெஞ்ச .. என்னடி செஞ்ச ..
சொல்லு சொல்லு ..
காதல சொன்னேன் .. கற்பூர கண்ண.. என்னடி பண்ண ..
சொல்லு சொல்லு ..
பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ஆச்சு நெஞ்சு..
மனசு முழுக்க ஆசை..என்னடி நானும் பேச ..
நாக்கு குள்ள கூச.. தடுமாறி போனேன் ..
காணாத கானகத்தில் அலைஞ்சி திரிஞ்சேன் நானும் தான் ..
காத்தாக என்னை உரசி சாச்சிபுட்ட நீயும் தான் ..
உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான் ..
உன் பேர உசுரு மேல உசுரு மேல வெட்டிகிட்டேன் நான் ..
பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ஆச்சு நெஞ்சு..
அழுக்கா கெடந்த மனச.. நீ எறங்கி அலச ..
மறந்து நிக்கிறன் பழச .. புரியாம தானே
ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான் ..
அங்கேயும் உன் நினப்ப அனுப்பி வெக்கிற நீயும் தான் ..
நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே ..
உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே ..
பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ஆச்சு நெஞ்சு..
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை குறைஞ்சு..
பட்ட மரம் ஒன்னு பொசுக்குனு துளிர்க்குதே..
நீ சிரிக்கும் போது என் மனசு வழுக்குதே ..
உன்கிட்ட கெஞ்ச .. என்னடி செஞ்ச..என்னோட நெஞ்ச சொல்லு ..சொல்லு ..
காதல சொன்னேன் .. கற்பூர கண்ண .. என்னடி பண்ண ..
சொல்லு சொல்லு
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=lZORMUufA_Y (http://www.youtube.com/watch?v=lZORMUufA_Y)
படம்: 3
இசை: அருனித்
பாடலாசிரியர்: தனுஷ்
பாடியவர்கள்: அஜீஸ், அருனித்
இதழின் ஒரு ஓரம்..
சிரித்தாய் அன்பே…
நிஜமாய் இது போதும்…
சிரிப்பால் அன்பே…
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்…
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்…
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்…
சொல்லு நீ I LOVE YOU….
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் TRUE..MAKE NEVER FAIL…
ஓ.. எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதை வரைந்தேன்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
சொல்லு நீ I LOVE YOU….
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் TRUE..MAKE NEVER FAIL…
சொல்லு நீ I LOVE YOU….
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் TRUE..MAKE NEVER FAIL…
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=Jbn8Lc7WN-U (http://www.youtube.com/watch?v=Jbn8Lc7WN-U)
படம்: தெய்வதிருமகள்
இசை: G.V.பிரகாஷ்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஹரிசரண்
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
தாயாக தந்தை மாறும் புது காவியம்
ஓ…இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=Uoz5cjRS0aU&list=RDMMUoz5cjRS0aU (http://www.youtube.com/watch?v=Uoz5cjRS0aU&list=RDMMUoz5cjRS0aU)
படம்: ஆட்டோகிராஃப்
இசை: பரத்வாஜ்
பாடலாசிரியர்:ஸ்நேஹன்
பாடியவர்கள்: ஹாரீஷ் ராகவேந்திரா, ரேஷ்மி
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று சொல்லுச்சா
மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசனை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்க நாசை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அது ஏன் அது ஏன்
புத்தகத்தை தலைகீழாய் படிச்சிருப்ப அதில்லோ
மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப
எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு தொலைஞ்சு போ
அதை தேடி நோக்கன் மனசென்னோ மறஞ்சு போயி
அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல
உன் நெஞ்சுக்குள்ளே காதல் வந்த சுவடு புள்ள
எண்ட கனவிலும் நினவிலும் பெரியுத்தம் நடக்குன்னு
கலகம் ஏதும் வருமோ
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மலரிய மன்னங்கள் மலர்கின்ற நேரம்
சுகம் என காற்றே சொல்வாயா
கண்களில் பாஷை காதிலில் பாஷை
என்னிடும் உண்டு உன்னிடும் உண்டு
வாழ்வது இன்று தேவதை இன்று
தேசம் இன்றும் நாளை இன்றும்
தேசம் தேடும் நீச்சம் இன்று
வாழ்த்திட வேண்டும் வாழ்த்திட வேண்டும் ஹோ..
அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுதே
தனிமையும் சாந்தியும் ப்ரியமிருதே
கேரளத்து கத்தக்களி ஆடணும்போல் தோணுதே
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு
கண்ணால் பேசும் வித்தை எல்லாம் போக போக கத்துக்குவ
கடிகாரத்தை பார்த்து பார்த்து உன்னை நீயே திட்டிக்குவ
எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குதடா
நீ மெட்டியிட்ட அடங்குமோ அறியலடா
நம்ம வயசுக்குள் வண்முறைகள் நடக்குதடி
அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சீரிகுதடி
அட குச்சு குச்சு பேச்சு எல்லாம் செய்யுமுன்
நான் நின்னை கண்டால்ல் ஏண்டா ஏண்டா ஏண்டா
மனசுனுளில் தாகம் வந்துலே வந்துச்சி வந்துச்சி
மயிலிறகில் வாசனை வந்துலே வந்துச்சி வந்துச்சி
தமிழ் படிக்கான் ஆச வந்துலே வந்துச்சி வந்துச்சி
தமிழ்நாடின் நாணம் வந்துலே வந்துச்சிடா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுநுல்லின் ஒட்டிச்சென்னு பிரேமாம் பிரேமாம் ஏன்னு சொல்லியே .......
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=2OOwoU6acJA&index=2&list=RDMMUoz5cjRS0aU (http://www.youtube.com/watch?v=2OOwoU6acJA&index=2&list=RDMMUoz5cjRS0aU)
படம்: ஜெயம்
இசை:R. P.பட்நாயக்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள்: திப்பு
திருவிழான்னு வந்தா இவ கோயில் வரமாட்டா
அரிசந்திரன் போல இவ பொய் பேசமாட்டா
கண்ணகிய போல இவ கோபப் படமாட்டா
இன்னொரு விஷயம் கேளு என்ன என்ன என்ன
நீ இன்னொரு விஷயம் கேளு நான் உட்டதெல்லாம் ரீலு
வரமாட்டேன்னு சொன்னவளே வந்து வந்து போறியே சின்னவளே
வரமாட்டேன்னு சொன்னவளே வந்து வந்து போறியே சின்னவளே
ஆட்டோ மீட்டர் போல இவ சூடு காட்ட மாட்டா
க்ளிண்டன் டாட்டர் போல இவ பீட்டர் உட மாட்டா
டென்ட் கொட்டா போல இவ பிலிமு காட்ட மாட்டா
இன்னொரு விஷயம் கேளு சொல்லுடா சொல்லு
நீ இன்னொரு விஷயம் கேளு நான் உட்டதெல்லாம் ரீலு
சிரிக்க மாட்டேன்னு சொன்னவளே சிரிச்சு சிரிச்சு போறியே சின்னவளே
சிரிக்க மாட்டேன்னு சொன்னவளே சிரிச்சு சிரிச்சு போறியே சின்னவளே
புஷ்பத்தூரு பொண்ணு என்ன கொண்டு வரா
காதுல வைக்க பூவு கோயில்ல வைக்க பழம்
என்ன பழம்
அந்த பழம்
நல்லா பாத்து சொல்றா ஞானப்பழம்
ஆரஞ்சுபழம் ஆப்பிள்பழம் திராட்சைபழம் பேரீச்சம்பழம்
சீதாபழம் கொய்யாபழம் மாம்பழம் மாதுளம்பழம்
பலாபழம் வாழைபழம்..
தோடி ஆச வச்ச ராசா நான் மீச வச்ச ரோசா
சந்தோசமா வந்து நீ ஆடி பாடு லேசா
அஞ்சு பேரு நாங்க அதில் ஒருத்தன் மட்டும் ஏங்க
எங்க கூட ஆட வாங்க…
எங்க கூட ஆட வாங்க அட இல்லாக்காட்டி போங்க
போயா போயா போயா போயா
வேலையைத்தான் பாத்துகிட்டு போயா போயா
ஹேய் பேச மாட்டேன்னு சொன்னவளே பேசி பேசி போறியே சின்னவளே
மீனு போல கண்ணு இவ வலையில் விழ மாட்டா
மானை போல காலு இவ மிரண்டு ஓட மாட்டா
மயில போல அழகு இவ இறக போட மாட்டா
இன்னொரு விஷயம் கேளு இதுவும் ரீளுதானேடா
இது ரீலு இல்ல ரியலு
கொஞ்ச மாட்டேன்னு சொன்னவளே கொஞ்சி கொஞ்சி போறியே சின்னவளே
அடியே கொஞ்ச மாட்டேன்னு சொன்னவளே கொஞ்சி கொஞ்சி போறியே சின்னவளே
ஹே ஹே ஹேய்…பாபர பாப்பர ஹே ஹே ஹேய்
பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=nj1NHDQHRRA (http://www.youtube.com/watch?v=nj1NHDQHRRA)
படம்: உனக்கும் எனக்கும்(Something Something)
இசை:தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள்:S.P.பாலசுப்ரமணியம்
ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்
தூணாக தாங்குவது காதல் தான்
ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க
அழகான காரணமே காதல் தான்
பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை
நாட்கள் ஏழும் காதலின் கிழமை
ஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும்!!!!
மரம் ஏற ஏணியைத்தந்தால்
மலையில் ஏறி கொடியேற்றும்
குண்டூசி கையில் தந்தால்
கிணறே தோண்டி விடும்
வெறும் கல்லை வைரக்கல்லாய்
காதல் பார்வை மாற்றிவிடும்
வென்னீரில் விட்டால் கூட
காதல் மீன் நீந்தும்
கஷ்டம் காதலுக்கு இஸ்டம்
வெற்றி பெற வேண்டும் என்றால்
காதல் எதையும் தாங்கிவிடும்
முட்டும் கதவுகளை தட்டும்
சரிக்கி விழும் பாதை எல்லாம்
வெற்றிபடியாய் மாற்றிடுமே
அன்னாந்து பார்க்காமல்
விண்மீனை வீழ்த்திவிடும்
துணையாரும் இல்லாமல் ஜெயித்திடுமே
இது நெருப்பில் செய்த இரும்பு வளையமே
இருமனம் விரும்பி துணிந்து நுழையுமே
பயங்களும் தயக்கமும் விடுமுறை எடுத்திடுமே!!!!
வேரோடு வேர்வை ஊற்றி
காதல் என்றும் வென்று விடும்
வெறியோடு ஓடும் போது
தடையை உடைத்து விடும்
கடல் நீரை தேக்கும் போது
உப்பாய் தானே மாறிவிடும்
கண்ணீரை தேக்கும் காதல்
முத்தாய் மாற்றிவிடும்
காதல் கேட்டுக் கொண்டு வருமா
தோட்டத்துக்குள் பறவை வந்தால்
வேலி என்ன தடுத்திடுமா
காதல் காட்டுச் செடி போலே
கட்டளைகள் போடும் போதும்
பூக்கள் பூக்க மறுத்திடுமா
புலி வாழும் குகையுள்ளே கிளிவாழும் வீரத்தை
மனதோடு தந்திடுமே காதல் தான்
இது போகும் வழியோ வெற்றுப்பாதை
திரும்பும் வழியோ வெற்றிப்பாதை
விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணம் இது!!!!
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது
மலையேறும் எறும்பின் கால்கள்
வெயிலை மிதித்து உடையாது
மனதோடு காதல் வந்தால் மனிதா தடையேது
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=xdhY-uRL0Gw (http://www.youtube.com/watch?v=xdhY-uRL0Gw)
படம்: சைவம்
இசை:G.V.பிரகாஷ்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள்: உத்ரா(daughter of singer Unnikrishnan)
சா சா சா சா நீ ச நி ச பா
ம ம தா த நீ பா பா
சா சா சா சா நீ ச நி ச பா
ம ம தா த நீ பா பா
க ம ப த நீ சா
நீ நீ சா
அழகே அழகே எதுவும் அழகே
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !
புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மை அதுதான் நீதான் அழகு !
க ம ப த நீ சா
நீ நீ சா
க ம ப த நீ சா
க ரீ சா
குயிலிசை அது பாடிட ஸ்வர வரிசைகள் தேவையா
மயில் நடனங்கள் ஆடிட ஜதி ஒலிகளும் தேவையா
நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு
க ம ப த நீ சா
நீ நீ சா
அழகே அழகே எதுவும் அழகே
ஜானுதக தீம் நீ நீ ரீ ச நீ ப க ம நீ ச ஜானுதக தீம்
ம த நீ ப க ம த நீ ச தாஜிதும் தத நு
த க தீம்... ம த நீ சா நீ பா
த க த யூ ம் த யூ நு த க.....
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !
புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மை அதுதான் நீதான் அழகு !
க ம ப த நீ சா
நீ நீ சா
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=dqzcQF2Bz7o (http://www.youtube.com/watch?v=dqzcQF2Bz7o)
படம் : பாகுபலி 2
இசையமைப்பாளர் : மரகதமணி
வரிகள் : மதன் கார்க்கி
பின்னணி பாடகர் : நயனா நாயர்
முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா
பூவையர் மீது கண்
மேய்வது முறையா
பாவை என் நெஞ்சம்
தினம் தேய்கின்ற பிறையா
போதுமே நீ கொஞ்சம்
துயில் கொல்லடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
உன் விரலினில் மலை
சுமந்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
உன் இதழ் இனி குழல்
இசைத்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
பா சா ரீ கா மா
பா சா ரீ கா மா
சா சா சா சா
சோலையின் நடுவினிலே
நுழைந்தேன் அலைந்தேன் தொலைந்தேன்
நான் உனதருகினிலே
கானகம் நடுவினிலே
மயங்கி கிறங்கி கிடைத்தேன்
நான் உனதழகினிலே
மா தவா...
யா தவா...
லீலை செய்து என்னை
நீ கவழில்க
காலை மோதி
உன்னையும் கவழில்க
காயம் என்னால் கொண்டாயடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
மதன மதுசூதனா
மனோஹர மன்மோஹனா
மதன மதுசூதனா
மனோஹர மன்மோஹனா
முறைதானா முகுந்தா
கண்ணா...
சரிதானா சனந்தா
ஆனந்தா அனிருத்தா...
கண்ணா...
ஆனந்தா அனிருத்தா...
கண்ணா...
கண்ணா...
கண்ணா...
ராதா ரமணா
கண்ணா நீ தூங்கடா...
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=syMgzlRjNPU (http://www.youtube.com/watch?v=syMgzlRjNPU)
படம் :தசாவதாரம்
இசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா
வரிகள் : வைரமுத்து
பாடகர் :கமல்ஹாசன் ,மகாலட்சுமி ஐய்ர்
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்ணிலே நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
காற்றைத் திறக்கும் சாவிதான் காற்று
காதை திறக்கும் சாவிதான் பாட்டு
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்...
இசை பூமியை ஆளட்டும்...
காற்றைத் திறக்கும் சாவிதான் காற்று
காதை திறக்கும் சாவிதான் பாட்டு
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்...
இசை பூமியை ஆளட்டும்...
நீ என்பதை பொல்லாத நான் என்பதை
ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான்
யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது
அதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான்
கடவுளும் கந்தசாமியும்... பேசிக் கொள்ளும் மொழி பாடல்தான்...
மண்ணில் வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்ந்திடும் சுவடுகள் எங்கே மிஞ்சும்
எண்ணிப்பாரடா மானுடா... என்னோடு நீ பாடடா....
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
பூ பூக்குதே அதன் வாழ்வு 7 நாட்களே
ஆனாலும் தேன் தந்துதான் போகுதே...
நம் வாழ்க்கையை வாழ்ந்தாலே யார் தந்தது
என் நெஞ்சம் நீ வாழவே வாழுதே...
வீழ்வது யாராயினும்.... வாழ்வது நாடாகட்டும்....
காலம் உன் உதடுகள் மூடும் போதும்
காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்
நீ பாடினால் நல்லிசை...
உன் மௌனமும் மெல்லிசை...
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
Come everybody rock with me
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ராக் ஈஸ் ராக் இட்
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
கம் ஆன் கம் ஆன் பேபி கம் ஆன்
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
யூ மூவ் இட் மூவ் இட்
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
யூ பேபி ப்ரின்ஸ் இட் ப்ரிங்
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ராக் இட் ராக் இட்
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=6xOmBPCjdx4 (http://www.youtube.com/watch?v=6xOmBPCjdx4)
படம் :உயிரே
இசையமைப்பாளர் :A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடகர் : சுக்ஹ்விந்தர் சிங்க் , சுபா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா
தைக்க தைய தைய தையா தையா
நெஞ்சு உஞ்சுகுட்டித் துடிக்குது தையா தைய
உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய ஒரு பசைகுயில் பறந்தது
தைய தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா
தைக்க தைய தைய தையா தையா தையா
தைக்க தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய
அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்
தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்
தைய தைய தைக்க தைய தைய தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா....
அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்
தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா.....
ஒறு பார்வையிலே என்னை உறையவைத்தாய்
சிறு புன்னகயல் என்னை உருகவைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்
உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்
நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும் என்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ....
ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என்மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா....
நெஞ்சு உஞ்சுகுட்டித் தவிக்குது தையா தைய
உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய
ஒரு பசைகுயில் பறந்தது தைய தயா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா
ஒரு வானவில் இரு முரை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாலரையில் தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல் கலைவதில்லை
அது பாடிப்போன குரல் கலைவதில்லை
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யோ பொய்யோ
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா
நெஞ்சு உஞ்சுகுட்டித் துடிக்குது தையா தைய
உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய ஒரு பசைகுயில் பறந்தது
தைய தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா
தைக்க தைய தைய தையா தையா தையா
தைக்க தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய
அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்
தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா.......
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=NiU9nyNttTA (http://www.youtube.com/watch?v=NiU9nyNttTA)
படம் :ஜீன்ஸ்
இசையமைப்பாளர் :A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடகர் :நித்யாஸ்ரீ மகாதேவன்
ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் மறுவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ!!!
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்
ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப
ப பனி பனிபம பனிபம கமப சகசனி
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா ஆ ஆஆ
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
[/color]
-
http://www.youtube.com/watch?v=yMaeidGXd1Y (http://www.youtube.com/watch?v=yMaeidGXd1Y)
படம் : சிநேகிதியே (2000)
இசை : வித்யாசாகர்
பாடல்வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : சுஜாதா, சித்ரா, சங்கீதா சஜித்
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுப்பிடிக்க!!
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுப்பிடிக்க!!!..
கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்
கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்
பாவை மறந்து தொலைத்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை இழுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுப்பிடிக்க!!!
கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு
காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்
காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட
காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் தன்னை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா இங்கே வா வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க
கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று
அந்த கண்ணி கண்கள் விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல
வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை
சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின்
நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாள்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு
கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கரையும் முன்
உடல் மண்ணில் சரியும் முன்
கண்ணா கண்ணா நீ வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=mIj-YhHBZwU (http://www.youtube.com/watch?v=mIj-YhHBZwU)
படம் : தாண்டவம்
இசை : G.V.பிரகாஷ்
பாடல்வரிகள் : நா.முத்துக்குமார்
பாடியவர்கள் :சைந்தவி,சத்யா பிரகாஷ்
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேறு என்னக் கேட்கிறேன்
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
சாயங்காலம் சாயும் நேரத்தில்
தோழி போல மாறுவேன்
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்
தாயை போல தாங்குவேன்
வேறு பூமி வேறு வானம்
தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும்
சேர்ந்து நாமங்கு பேசலாம்
அகலாமலே அணுகாமலே இந்த
நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னைத் தேடத்தான்
ஐந்து வயது பிள்ளைப் போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பதிக்கவா
நிகழ் காலமும் எதிர் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தாலுமே இறக்காமலே இந்த
ஞாபகம் என்றும் வாழுமே
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேறு என்னக் கேட்கிறேன்
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=f-kKmRfqhA0 (http://www.youtube.com/watch?v=f-kKmRfqhA0)
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை : A.R.ரஹ்மான்
பாடல்வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் :K.S.சித்ரா
கண்ணாம்பூச்சி ஏனடா
என் கண்ணா ?
கண்ணாம்பூச்சி ஏனடா
என் கண்ணா ?
நான் கண்ணாடிப்
பொருள் போலடா
கண்ணாம்பூச்சி ஏனடா…
அந்த நதியின் கரையை
நான் கேட்டேன்
அந்த காற்றை
நிறுத்தியும் கேட்டேன்
வான்வெளியைக் கேட்டேன்
விடையேயில்லை
இறுதியில் உன்னைக்கேட்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
கண்ணாம்பூச்சி ஏனடா…
என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா ?
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா ?
நெஞ்சின் அலை உறங்காதோ ?
உன் இதழ் கொண்டு வாய்
மூட வா என் கண்ணா…
உன் இமைக் கொண்டு விழி
மூட வா என் கண்ணா…
உன் உடல் தான்
என் உடையல்லவா….!
பாற்கடலில் ஆடிய பின்னும்,
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்.
என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா.
என் உயிரில் நீ
வந்து சேர்க்க
உதடுகள் ஈரமாய் வாழ்க !
கலந்திட வா….
கண்ணாம்பூச்சி ஏனடா…
வான்மழை விழும் போது
மலை கொண்டு காத்தாய் !
கண்மழை விழும் போது
எதில் என்னைக் காப்பாய் ?
பூவின் கண்ணீரை ரசிப்பாய்.
நான் என்ன பெண்ணில்லையா
என் கண்ணா ?
அதை நீ காண
கண்ணில்லையா ?
உன் கனவுகளில்
நான் இல்லையா ?
தினம் ஊசலாடியது
எம் மனசு.
அட ஊமை யல்ல
என் கொலுசு.
என் உள் மூச்சிலே,
உயிர் நீங்குதே !
என் உயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே !
உயிர் தர வா….
கண்ணாம்பூச்சி ஏனடா………….
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=BMT3jnb4T9Q (http://www.youtube.com/watch?v=BMT3jnb4T9Q)
படம் : பிரியமான தோழி
இசை : S.A.ராஜ்குமார்
பாடல்வரிகள் : Pa.விஜய்
பாடியவர்கள் : ஹரிஹரன் , சுஜாதா மேனன்
மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான்
பூந்தொட்டியே
உன் கொழு கொழு
கன்னங்கள் பார்த்து
என் மனசுல தெருகூத்து
உன் ரவிக்கையின் ரகசியம்
பார்த்து என் நெஞ்சுல
புயல் காத்து
மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான்
பூந்தொட்டியே
உன்னால உன்னால
எம்மனசா உன்னால
தறியில் ஓடும் நாடா
போல ஏன் ஓடுது
அது ஏன் ஓடுது
உன்னால உன்னால
உன்னோட நெனப்பால
கண்ணுக்குள்ள மெளகா
வத்தல் ஏன் காயுது
அது ஏன் காயுது
இது பஞ்சுலகம் மேனி
பஞ்சு தலகானி
மேல வந்து ஏன் விழுந்த
நீ செக்க செக்க செவந்த
குங்குமத்தில் கலந்த
வண்ணத்துல ஏன் பொறந்த
நீயும் நானும்தான்
ஒண்ணா திரியிறோம்
தீயே இல்லையே
ஆனா எரியிறோம்
மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான்
பூந்தொட்டியே
உன்னோடும் என்னோடும்
உடம்போடும் வேர்த்தாலும்
வேர்த்திடாத இடமும் உண்டு
நீ சொல்லணும்
அத நீ சொல்லணும்
ஆனோடும் பெண்ணோடும்
வேர்க்காத இடம் என்ன
உதட்டு மேல வேர்க்காதையா
நீ நம்பனும்
அத நீ நம்பனும்
நீ அங்க கொஞ்சம் காட்டி
இங்க கொஞ்சம் கூட்டி
பாதி உயிர் எடுக்காதே
என்ன கட்டி கட்டி புடிக்க
கண்ட இடம் கடிக்க
உத்தரவு கேட்காதே
அசந்தா போதுமே
அரைச்சி பார்க்கலாம்
கசந்தா போய்விடும்
கலந்தே பார்க்கலாம்
மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான்
பூந்தொட்டியே
என் கொழு கொழு
கன்னங்கள் பார்த்து
உன்ம னசுல தெருகூத்து
என் ரவிக்கையின் ரகசியம்
பார்த்து உன் நெஞ்சுல
புயல் காத்து
மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான்
பூந்தொட்டியே
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=eLlOKJl5-i8 (http://www.youtube.com/watch?v=eLlOKJl5-i8)
படம் : கச்சேரி ஆரம்பம்
இசை : டி.இமான்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : பாலாஷ் சென்
கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து விட்டேன்
உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திட தொடங்கி விட்டேன்
தன்னாலே
அர்ச்சனை பூக்கள் எல்லாம்
உன் முகம் மேல் தூவ
பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை
உந்தன் செவி நுழைய
யார் வந்து அடித்தாலும்
ஜோராய் தலை ஆட்டும்
நான் இன்று காண்பதெல்லாம்
பொய் இல்லை மெய் தானம்மா
தட்சனை தருவதற்கே
உயிரை தந்தாய்யம்மா
கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து விட்டேன்
உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திட தொடங்கி விட்டேன்
தன்னாலே
ஆஆ…
கண்ணை பார்த்ததும் வேகமாய்
மின்னல் அடித்தது நெஞ்சிலே
தோளில் சிறகுகள் இன்றியே
தேகம் பறக்குது விண்ணிலே
இந்த புது உயிரை
நீ தந்ததாய்
என் புலன் ஐந்தும்
நன்றி சொல்லுது
ஒரேதாய் இறகாய்
அலைந்து வந்தேன்
உன் இமையின் நுழைப்பால்
தரையில் வந்தேன்
உன் விரலில் என் மனசும்
மோதிரம் ஆகியதே
கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து விட்டேன்
உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திட தொடங்கி விட்டேன்
தன்னாலே
மண்ணை முதன் முறை பார்த்திட
தாயின் கருவறை சொன்னது
என்னை முதன் முறை பார்த்திட
உந்தன் கருவிழி சொன்னது
மலை உயரத்திலே
நதி தோன்றுமே
அது சேரும் இடம்
கடலாகுமே
இது உயிரும் உயிரும்
பேசும் மொழி
இதை விடவும் சிறந்தது
எந்த மொழி
என் உயிரை உன் பாதத்தில்
காணிக்கை ஆக்குகிறேன்
கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து விட்டேன்
உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திட தொடங்கி விட்டேன்
தன்னாலே
அர்ச்சனை பூக்கள் எல்லாம்
உன் முகம் மேல் தூவ
பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை
உந்தன் செவி நுழைய
யார் வந்து அடித்தாலும்
ஜோராய் தலை ஆட்டும்
நான் இன்று காண்பதெல்லாம்
பொய் இல்லை மெய் தானம்மா
தட்சனை தருவதற்கே
உயிரை தந்தாய்யம்மா
ஆ…
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=JASid2R_Y58 (http://www.youtube.com/watch?v=JASid2R_Y58)
படம் : யூத்
இசை : மணி ஷர்மா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
மனம் பசை தண்ணி தான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
அதில் கொள்ளை போனது என் தவறா?
பிரிந்து சென்றது உன் தவறா?
நான் புரிந்து கொண்டது என் தவறா?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா?
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்?
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=ECIOLPCJpek (http://www.youtube.com/watch?v=ECIOLPCJpek)
படம் : சமுத்திரம்
இசை : சபேஷ் முரளி
பாடலாசிரியர்: கலைக்குமார்
பாடியவர்கள் : கங்கா, ஷங்கர் மஹாதேவன்
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லோ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ
அழகான சின்ன டெவதை அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோரும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்தடால் இறைவா வா நண்ட்றி சொல்கிறோஸ்
உன்னகேதும் சொகம் தோண்ட்றினால் இங்கே வா இன்பம் தருகிறொம்
சர வெடி போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்துதான் காட்டலாம்
அழகான சின்ன டெவதை அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோரும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்தடால் இறைவா வா நண்ட்றி சொல்கிறோம்
உன்னகேதும் சொகம் தோண்ட்றினால் இங்கே வா இன்பம் தருகிறொம்
சர வெடி போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்துதான் காட்டலாம்
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ
நம்மைக் கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே
நட்சதிர கூட்டம் த்ருஸ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவெண்ட்ற சொல்லை
நாங்கள் இண்ட்று அழிதிடுவோமே
வந்து வந்து மோதும் சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒண்ட்று சேர்ந்து நாங்கள் ஊட்டும்போது ஊடிபோகும்
எங்களுக்குள் நாங்கள் செல்ல பெரை வெய்த்து கொண்டு
செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
அள்ளி அள்ளி அன்பைத் தந்து மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ
அழகான சின்ன டெவதை அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோரும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்தடால் இறைவா வா நண்ட்றி சொல்கிறோம்
உன்னகேதும் சொகம் தோண்ட்றினால் இங்கே வா இன்பம் தருகிறொம்
சர வெடி போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்துதான் காட்டலாம்m
கோடை வெயில் நெர இளனீரை போல
இதமாக தானே நாங்கள் பெசுவோம்
சுமைகளை சுகமாய் ஏர்ப்போம்
சுகன்களை சமமாய் பிரிப்போம்
விட்டு தந்து வாழ நம்மை போல யாரு யாரு
வண்டிக் கட்டிக் கொண்டு எட்டு திக்கும் தேடு தேடு
தூங்கும் போது கூட புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால் தனீர் கூட தீர்த்த மாகும்
இன்னும் சொல்ல வார்த்தை இல்லை ஆக மொத்தம் இந்த வாழ்கை
அர்த்தமுள்ள வாழ்கைதான் அல்லோj
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லோ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ
அழகான சின்ன டெவதை அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோரும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்தடால் இறைவா வா நண்ட்றி சொல்கிறோம்
உன்னகேதும் சொகம் தோண்ட்றினால் இங்கே வா இன்பம் தருகிறொம்
சர வெடி போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்துதான் காட்டலாம்
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லோ
சந்தொஷ சாரல் டினம் ஜென்னல் தேடி வர செயூம் சொந்தம் அல்லொ
நாம் பாடும் பாட்டை டினம் கேட்க்கும் சிலைகளும் தலயை ஆடுமல்லொ
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=rmyjT-6mWwk (http://www.youtube.com/watch?v=rmyjT-6mWwk)
படம்: ஒரு கல் ஒரு கண்ணாடி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: மதுமிதா, முகேஷ்
அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி.
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..
அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..
சுடச்சுட நெருப்பென பார்த்தாய்..
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்..
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்
இருந்தும் நடித்தாய்..
அடிக்கடி முள்ளென தைத்தாய்..
ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு
எனக்காய் திறப்பாய்..
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..
உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்..
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர..
கனியே முக்கனியே தீயோடும் பனியே..
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..
பலப் பல கனவுகள் இருக்கு..
அதை ஏன் சொல்லணும் உனக்கு..
மனசுவிட்டு பேச நீயும்.. நண்பனா எனக்கு..
பார்த்ததும் பிடித்தது உனக்கு..
பழகிட தோனணும் எனக்கு..
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..
நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..
நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா
ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைக்கிறாய்..
உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர..
கனியே முக்கனியே தீயோடும் பனியே..
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..
அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=uSmng_rewMM (http://www.youtube.com/watch?v=uSmng_rewMM)
படம் : நான் மகான் அல்ல
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : ராகுல் நம்பியார்
ம்.. ம்.. ம்... ம்.. ம்..
ம்... ம்.. ம்..
ம்.. ம்.. ம்... ம்.. ம்.. ம்..
ம்... ம்.. ம்..
வா வா நிலவ புடிச்சு தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஒஹோ விடியும் போது தான்
மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா
வா வா நிலவ புடிச்சு தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஒஹோ விடியும் போது தான்
மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா
வானத்தில் ஏறி ஏணிக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஒஹோ... ஹோ... ஒஹோ... ஹோ... ஹோ... ஹோ...
ஒஹோ... ஹோ... ஒஹோ... ஹோ... ஹோ... ஹோ....
வா வா நிலவ புடிச்சு தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஒஹோ விடியும் போது தான்
மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா
கவலை நம்மை சில நேரம் கூரு போட்டு துண்டாக்கும்
தீயினை தீண்டி வாழும் போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலை சேரும் நதி யாவும் தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும்
அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஒஹோ... ஹோ... ஒஹோ... ஹோ... ஹோ... ஹோ...
ஒஹோ... ஹோ... ஒஹோ... ஹோ... ஹோ... ஹோ...
வா வா நிலவ புடிச்சு தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஒஹோ விடியும் போது தான்
மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா
ஆ ஹா ஹா ஹா இரவை பார்த்து மிரளாதே இதயம் வேர்த்து துவளாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால் நிலவின் அழகு தெரியாதே
கனவில் நீயும் வாழாதே கலையும் போது வருந்தாதே
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஒஹோ... ஹோ... ஒஹோ... ஹோ... ஹோ... ஹோ...
ஒஹோ... ஹோ... ஒஹோ... ஹோ... ஹோ... ஹோ...
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=oxlySP5zuzk (http://www.youtube.com/watch?v=oxlySP5zuzk)
படம்: கில்லி
இசை:வித்யாசாகர்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள்:சுஜாதா ,உதித் நாராயணன்
தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்
தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ
சங்கு சக்கரம் போலே மனசு சுத்துர வேளை
ஸுராங்கனிக்கா மாலு கண்ணா வா
ஆதோ பாரு வானம்
துனி துவைக்குது மேகம்
வெலகி போகுது சோகம் நீ வா
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
வெள்ளிமணி கொலுசுக்குள்ளே துள்ளுகிற மனசுக்குள்ளே
சந்தோசம் நிலைச்சிருக்க சாமிகிட்ட கேட்டிருக்கேன்
தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்
ஏல்லோரும் அருகிருக்க பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட ஆண்டவனை பாத்திருக்கேன்
என்னம் இருந்தா எதுவும் நடக்கும் தன்னாலே
ஏ நீ துனிஞ்சா உலகம் உனக்கு பின்னாலே
குதுவிளக்கா சிரிச்சா சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான் மனச மனச இப்போது
நம்ம பக்கம் காத்து வீசுரத பாத்து
நல்லவங்கள சேர்த்து நீ போடு தினம் கூத்து
தூம் ஷாக் தூம் ஷாக் தூம் ஷாக் தூம் ஷாக்
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கந்தனுக்கு வள்ளிய போல கன்னனுக்கு ராதைய போல
ஆசைகொண்ட உயிருகெல்லாம் துனையிருக்கு பூமியிலே
தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்
கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க
யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லை
ரெக்கை கட்டி பறக்கும் பறக்கும் வெல்லாடு
வெக்க பட்டு மறைக்கும் மறைக்கும் நெஞ்சோடு
ஹேய் சிட்டுகுருவி சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு
கொட்டும் அருவி குதிக்கும் குதிக்கும் என்னோடு
சிட்டான் சிட்டாஞ் சினுக்கு இப்ப உள்ளதெல்லாம் நமக்கு
கெட்டத தான் ஒதுக்கு இனி நம்ம கிட்ட கெழக்கு
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ
சங்கு சக்கரம் போலே மனசு சுத்துர வேளை
ஸுராங்கனிக்கா மாலு கண்ணா வா
ஆதோ பாரு வானம்
துனி துவைக்குது மேகம்
வெலகி போகுது சோகம் நீ வா
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=fuLc6Z4ID1U (http://www.youtube.com/watch?v=fuLc6Z4ID1U)
படம்:அந்நியன்
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்:ஹரிணி ,ஷங்கர் மகாதேவன்
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
ஓ சுகுமாரி ஓ சிங்காரி
ஏ அலங்காரி நீ…
ஓ சுகுமார்….ஓ சுகுமாரி ஓ சிங்காரி
ஏ குமாரி … ஏ குமாரி நீ… குமாரி..
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
நான் தோற்று போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
இந்த காதல் என்ன வெரும் பாரமா
இது பேறு காலம் இல்லா கற்ப்பமா
ஓ.. காதலை மறைத்தால் கனம் தாங்காமல்
என்னுயிர் செத்துபோகும் இல்லையா
காதலை சொல்லி இல்லையென்று மறுத்தால்
காதலே செத்து போகும் இல்லையா
ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை
முழுசா சொல்வது இல்லை
நீ கண்களை அடைத்தல் காதல் நுழைய
இன்னொரு வாசல் இல்லை
குமாரி…… ஆ….ஆ…ஆ
நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா
தினம் தேய்கிறேனே இது தேவையா
கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி
கோவிலை தேடி நடக்கின்றேன்
கூடையை கொடுத்து கும்பிட்டு முடித்து
கோரிக்கை வைக்க மறக்கின்றேன்
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்
பூமியில் உள்ளான் எவன்?
கண்களை பார்த்து காதலை சொல்ல
தைரியம் உள்ளவன் அவன் அவன் அவன்
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
குமாரா… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா
குமாரா… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குதா
குமாரா… என் வார்த்தை கடல் வற்றி விட்டதா
நான் தோற்று போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=Sf3VIFQpTkc (http://www.youtube.com/watch?v=Sf3VIFQpTkc)
படம் : கோடம்பாக்கம்
இசை : சிற்பி
பாடலாசிரியர்: விஜய் சாகர்
பாடியவர்கள் : ஹரணி, ஹரிஷ் ராகவேந்திரா
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்
சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை,வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்
கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=-Y05HTQd37U (http://www.youtube.com/watch?v=-Y05HTQd37U)
படம் : தென்மேற்குப் பருவகாற்று
இசை : ரஹ்நந்தன்
பாடலாசிரியர் : வைர முத்து
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கௌஷல்
யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
என்ன புரியலயா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நா முத்தம் போட துடிக்கிறேன் உன்ன
நீ முள்ள கட்டி அடிக்கிற கண்ண
நீ காய் தானா
பழம் தானா
சொன்னால் என்ன
யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
என்ன புரியலயா
ஓ..
அத்த மகன் போல வந்து
அங்க இங்க மேயிவ
அட்டு வான காட்டில் விட்டு
அட்டு கிட்டு போவ
முள்ளு தெச்ச ஆடு போல
நெஞ்சு குழி நோக
முட்டை இட்ட காடை எங்கே
காட்டை விட்டு போக
வெள்ளாட்டு கோமியம் கூட
ஒருவாறு வாசம் வரும்
கிளி கீத்த மாம்பழம் கூட
மறுநாளே மாறிவிடும்
நா பொம்பள கிறுக்குல வரல
என் புத்தியில் வேர் ஒன்னும் இல்ல
நா உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல
நீ வெறும் வாய
மெல்லாத
வெளையாட்டுல
யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
என்ன புரியலயா
லே லே லே…..
ஆண்டிப்பட்டி தாலுக்காவில்
பொம்பளைக்க பஞ்சம்
ஆக மொத்தம் உன்ன கண்டு
ஆடி போச்சு நெஞ்சம்
பித்தம் கொஞ்சம் கூடி போனா
இப்படித்தான் கெஞ்சும்
சத்தாம் போடும் நெஞ்சு கூட்ட
சாத்தி வையி கொஞ்சம்
கோடி ஓடும் சக்கர வள்ளி
தெரியாம கெழங்கு வைக்கும்
அது போல பொம்பள சாதி
அரியாம மனச வைக்கும்
நீ பட்டுனு முன்ன வந்து நில்லு
என் பொட்டுல அடிச்சு நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்கு என் முள்ளு
அட நாவுக்கு தூரம் இல்ல பல்லு
நா முடி போட
ரெடி தாண்டி
முடிவா சொல்லு
யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
என்ன புரியலயா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நா முத்தம் போட துடிக்கிறேன் உன்ன
நீ முள்ள கட்டி அடிக்கிற கண்ண
நீ காய் தானா
பழம் தானா
சொன்னால் என்ன
யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=Mk_-E8PksYI (http://www.youtube.com/watch?v=Mk_-E8PksYI)
படம்: வாகை சூட வா
இசை: ஜிப்ரான்.எம்
பாடலசிரியர்: கார்திக் நேதா
பாடியவர்கள்: ரஞ்சித், நேஹா பஷின்
போறானே போறானே …
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே
அழகாய் நீ நெரஞ்ச
அடடா பொந்துக்குள் புவியப் போல
போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாம தான் போறாளே
போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாம தான் போறாளே
பருவம்…தொடங்கி… ஆசவைச்சேன்….
இல்லாத…சாமிக்கும் பூசவைச்சேன்…
மழையில், நனஞ்ச காத்த போல,
மனச நீயும் நனச்சுபுட்ட
ஈரகுலாய கொஞ்சம் இரவல்தாயா
உன்ன மனச கொஞ்சம் புன்னையவா
ஏர இரங்க பார்க்கும் ரோசக்கார
டீ தூளு வாசம் கொண்ட மோசக்கார
அட நெல்லங்குருவி ஒன்னு மனச மனச
சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன கொரதி பொன்னு கண்ணு முழியதான்
ஈசங்காய ஆஞ்சிருச்சே …
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே
கென்னது நெலவா நானிருந்தேன்,
கல்ல எரிஞ்சு கொழப்பிபுட்ட
உன்ன பார்த்து பேசயில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்
மூக்கான கவுரபோல உன்னெனப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடகாக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்கின்னு பூத்திரிக்கே என் பொளப்பு
அட மஞ்ச கெலங்கே உன்ன நெனச்சி நெனச்சி தினம்
மனசுகுள்ள வச்சி பூட்டிகிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான்
காயத்துக்கு பூசிக்கிட்டேன்
போறாளே.. போறாளே.. போறாளே..
போவாமதான் போறாளே.
அழகாய் நீ நெரஞ்ச
அடடா பொந்துக்குள் புவியப் பொல ..
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே
போறானே ..போறானே ..போறானே ..
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .
-
http://www.youtube.com/watch?v=hgqhLN3o9cU (http://www.youtube.com/watch?v=hgqhLN3o9cU)
படம் : மின்னலே
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடல் வரி : தாமரை
பாடியவர் : ஹரிணி, உன்னிகிருஷ்ணன்
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே
ஓ ஓ ஓ..
ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்
தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே
நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு
நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்
இதை யாரிடம் கேட்டு சொல்வேன்
கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே
ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை
நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் உம்ஹ்ம்ம் உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்
நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
ஒரு ஒரு முறை சொல்லி விடு...
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
சொல்லி விடு... சொல்லி விடு... சொல்லி விடு...
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள் .[/size]
-
http://www.youtube.com/watch?v=Py_Q2IfAD5U (http://www.youtube.com/watch?v=Py_Q2IfAD5U)
படம் : வெற்றிவேல்
இசை : இம்மான்
பாடல் வரி : யுகபாரதி
பாடியவர் : ஸ்ரேயா க்ஹோஷால்
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல
சாமி போல வந்தவனே
கேட்கும்முன் நீ தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
ஏன் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கு சாமி நீ தானே
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல
உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடிரபா நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல
உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே
கன்னி வரம் கேட்கிறேன்
நானும் அரங்கேறவே
உன்னருகில் வாழுவதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே
எனை ஆளவே வந்த மகராசனே
நான் உனக்காகவே பல பிறவிகள்
துணை வருவேனே
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல
சாமி போல வந்தவனே
கேட்கும்முன் நீ தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
ஏன் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கு சாமி நீ தானே
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=lXUAC3FcCM8 (http://www.youtube.com/watch?v=lXUAC3FcCM8)
படம் : சந்திரமுகி
இசை :வித்யாசாகர்
பாடல் வரி : கபிலன்
பாடியவர் : கார்த்திக் ,கே கே ,சுஜாதா
வாழ்துறேன் வாழ்துறேன் வாரும் பெண்களென்றே வாழ்துறேன்
பொண்ண பெத்த தாயாரே போதரவா கேட்டிருங்க
மாப்பிள்ளையை பெத்தவங்க மனம் மஙளமா கேட்டிருங்க
சுண்ணாம்பு போல சுரிச்ச மொகத்துக்கே எங்க சூரியனார் வமுசம் எங்கெங்கோ வாச்சுச்சோ
வெத்தல போல விரிச்ச மொகத்துக்கே சந்திரனார் வமுசம் எங்கெங்கோ வாச்சுச்சோ
அரே அரே அரே அரே அரே அரே…
ஆ…ஆ ..அண்ணனோட பாட்டு ஆ.. ஆ.. அட்டம் போடுடா.
ஆ…ஆ … அக்கறையா கேட்டா ஆ.. ஆ .. அர்த்தம் நூறுடா
போடு சக்க போடு போடு போட்டா அளந்து போடுடா.
னேத்து காத்தில் ஓடி போச்சி இன்றே வாழ்ந்து பாரடா
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
ஆ…ஆ ..அண்ணனோட பாட்டு ஆ.. ஆ.. அட்டம் போடுடா.
ஆ…ஆ … அக்கறையா கேட்டா ஆ.. ஆ .. அர்த்தம் நூறுடா
ஆ…ஆ ஆ…ஆ
ஆ…ஆ ஆ…ஆ
அன்பின் உறவாயிரு உண்மை மறவாதிரு
நூறு ஆண்டு வரை வாழ்வில் நலமா இரு.
வாழை பூ போல வெட்ட்கம் பாரு
மனசுக்குளே தான் மத்தாப்பு
இரவில் இனிமேலே தூக்கம் ஏது?
மார்பில் தங்காது மாராப்பு
நீ அறியா விசயம் அது நாளை புரியும்
அட மூச்சி காற்றில் உன் சேலை எரியும்
ஏ.. கொக்கரக்கோ சேவல் வந்து கோழிகிட்ட மாட்டிகிச்சி..
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
ஆ…ஆ ..அண்ணனோட பாட்டு ஆ.. ஆ.. அட்டம் போடுடா.
ஆ…ஆ … அக்கறையா கேட்டா ஆ.. ஆ .. அர்த்தம் நூறுடா
இப்புடு சூடு 8) 8) 8) 8)
உள்ளம் தெளிவாக வை எண்ணம் தெளிவாக வை
வாழும் காலம் எல்லாம் மண்ணில் மரியாதை வை
வேர்கள் இல்லாத மரமும் உண்டா சொந்த காலில் நீ நில்லேம்மா
நீ நின்ன பின்னாலே ஊரே கேட்கும் அதுக்குள் தம்பட்டம் கூடாதம்மா
கண்ணிமைக்கும் நொடியில் அட எதுவும் நடக்கும்
இது எனக்கு தெரியும் நாளை உனக்கும் புரியும்
ஹே அஞ்சுக்குள்ள நாலை வை ஆழம் பாத்து காலை வை
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
ஆ…ஆ ..அண்ணனோட பாட்டு ஆ.. ஆ.. அட்டம் போடுடா.
ஆ…ஆ … அக்கறையா கேட்டா ஆ.. ஆ .. அர்த்தம் நூறுடா
போடு சக்க போடு போடு போட்டா அளந்து போடுடா.
னேத்து காத்தில் ஓடி போச்சி இன்றே வாழ்ந்து பாரடா
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=MSCBx07ENGQ (http://www.youtube.com/watch?v=MSCBx07ENGQ)
படம் : சிவாஜி
இசை : A.R.ரகுமான்
பாடல் வரி : வைரமுத்து
பாடியவர் : சின்மயி ,உதித் நாராயணன்
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
ஓராயிரம் ஆண்டுகலாய் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=QgSN41LopIc (http://www.youtube.com/watch?v=QgSN41LopIc)
படம் :தாயின் மணிக்கொடி
இசை : வித்யாசாகர்
பாடல் வரி : வைரமுத்து
பாடியவர் :கோபால் ஷர்மா ,தேவி
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா...
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா
கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை கண்டேன்
கண்மூடினால் கண்மூடினால்
அந்நேரமும் உன்னை கண்டேன்
ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா
உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா
ஒ... இதே சுகம் இதே சுகம்
என்னாளுமே கண்டால் என்ன
இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன
ம்... முத்தத்திலே பல வகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு
இப்படியே என்னை கட்டிக்கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு
அச்சப்பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=K9jQm0FZZ98 (http://www.youtube.com/watch?v=K9jQm0FZZ98)
படம் : ரோமியோ ஜூலிட்
இசை : D.இம்மான்
பாடல் வரி : தாமரை
பாடியவர் : விஷால் டட்லாணி,சுனிதா சாரதி
தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்
என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை
நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்
தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்
குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும்
என்னோடு நீ நிற்கும் வேளையில்
புழுதியும் பளிங்காகும்
புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்
யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும்
நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்
காதல் வந்தால் கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே
தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்
இரவுகள் துணை நாடும்
கனவுகள் கடை போடும்
நீ இல்லை என்றால் நான் காகிதம்
விரல்களில் விரல் கோர்க்க
உதட்டினை உவர்ப்பாக்க
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்
நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை
ரீங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை
நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே
கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்
தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்
என் மேலே ஈரம் ஆக
ஓருயிர் கரைவதை நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்......
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.
-
http://www.youtube.com/watch?v=6xOmBPCjdx4 (http://www.youtube.com/watch?v=6xOmBPCjdx4)
படம் : உயிரே
இசை : AR. ரஹ்மான்
பாடல் வரி : வைரமுத்து
பாடியவர் : ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், சுபா
காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகலா!
பாதகத்தி காத்திருக்கா மனச அரிவீகலா!!!
காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகலா!!!
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா!!
ஒரு பச்சைக் குயில் பரந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா!!
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா!!!
அவல் கங்கலோடு இரு நூராண்டு
மூக்கின் அழகோடு முன்னூராண்டு
அவல் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐனூரு
வாழ வேண்டும் தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
ஒரு பார்வையிலே என்னை உரைய வைத்தாய்
சிரு புன்னகையால் என்னை உருக வைத்தாய்!!!
ஒரு பார்வையிலே என்னை உரைய வைத்தாய்
சிரு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
அட நான் என்ர ஆனவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பனிய வைத்தாய்
என் ஆரடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
என் ஆரடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு மரைந்ததைப் போல்
அந்த மாய மகல் இன்ரு மரைந்துவிட்டால்
நான் பார்த்துவிட்டால் ஒரு மீட்சி வரும்
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
என் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும்
ஒரு மலையில் நான் கண்ட மானிக்கமா
என் மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒரு நாள் இரு நாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா
நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா!!
ஒரு பச்சைக் குயில் பரந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா!!
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா!!!
ஒரு வானவில் இரு முரை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாலரையில் தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல் கலைவதில்லை
அது பாடிப்போன குரல் கலைவதில்லை!!
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி!!!!
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யோ பொய்யோ
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா!!!
நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா!!
ஒரு பச்சைக் குயில் பரந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா!!
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா!!!
அவல் கங்கலோடு இரு நூராண்டு
மூக்கின் அழகோடு முன்னூராண்டு
அவல் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐனூரு
வாழ வேண்டும் தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா!!!!
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.[/b][/size]
-
http://www.youtube.com/watch?v=vFV3xOgospo (http://www.youtube.com/watch?v=vFV3xOgospo)
படம் : ரட்சகன்
இசை : AR. ரஹ்மான்
பாடல் வரி : வைரமுத்து
பாடியவர் : ஹரிணி, உதித் நாராயண்,உன்னிகிருஷ்ணன்
சோனியா...
சோனியா... சோனியா சோனியா
சோனியா........
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு!!
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று.
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
பாமா... பாமா...
ரிக ரிக ரிமக ரிக
பாமா...
ரிக ரிக ரிமக ரிக
பாமா...
ரிக ரிக ரிமக ரிக ஆ ஆ
பூவோடு உரசும் பூங்காற்றை போலே
சீரோடு அணைத்தால் அது சைவம்
வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே
மார்போடு இழுத்தால் அது அசைவம்
புல்லில் வந்து விழும் தூறலை போல்
ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம்
கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்
ஒரு பெண்ணை சேர்ந்து எல்லை தாண்டுவது அசைவம்
பெண் கூந்தல் மீது பூவாகட்டா?
பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?
மெலிதான முத்தத்தில் சக்தியில்லை
மெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை
பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
உள் நெஞ்சு துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும்
பூ போலே அணைக்க பொறுமை இல்லை
பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை
கையால தெரிந்தால் கவலை இல்லை
காதல் Cricket-இல் சட்டம் இல்லை
ஒரு சாஸ்திரம் இல்லை
Runs எடுப்பதுதான் வேலை
பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை
கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை பூ மாலை
தட்டாமல் போனால் தங்கமில்லை
முட்டாமல் போனால் மோகமில்லை
காமத்தின் வாதத்தில் நியாயமில்லை
கன்னத்தின் காயங்கள் காதலில்லை
பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆணில்லை
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
சோனியா... சோனியா சோனியா
பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்
FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
தெரியபடுத்துங்கள்.