Author Topic: கடிதலும் காதலும்....  (Read 396 times)

Offline Guest

கடிதலும் காதலும்....
« on: November 12, 2018, 05:01:12 PM »
நான் நினைப்பதை
செய்வேன் என்றான்...!!
என்னை கேட்காமல்
எதையும் செய்வதில்லை என்றாள்...!!
.
எதிலும் என் முடிவுகள்தான்
இறுதி என்றான்...!!
என் முடிவைத்தான்
சொல்கிறார் என்றாள்...!!
.
வாசலில் நான் வந்துவிட்டாலே
வீடு அடங்கிடும் என்றான்...!!
வாசலிலேயே அவர்
அடங்கித்தான் வருவார் என்றாள்...!!
.
என் சப்தத்திற்கே என்
குழந்தைகள் நடு நடுங்கும் என்றான்...!!
என் முன்னால் இயல்பாகவும்
அவரை பார்த்தவுடன் பயந்ததாய்
நடிப்பதும் சகஜமான நிகழ்வு என்றாள்..!!
.
பிடிவாதக்காரனாமே....
அதெல்லாம் வீட்டிற்கு வெளியே என்றாள்....
.
எந்த இன்னலையும் அநாயாசமாய்
கடப்பவன் என்றான்...!!
சிறு பிரச்சினையென்றாலும்
நொடிந்துபோவார் என்றாள்...!!
.
நான் கோபக்காரன் என்றான்
அவர் அன்பானவர் என்றாள்..!!
.
நான் இரக்கிமில்லாதவன் என்றான்...!!
பரிவின் பாஷையே அவர்தான் என்றாள்...!!
.
வாழ்க்கையே அவர்கள்தான் என்றான்...!!
எங்கள் உலகமே அவர்தான் என்றாள்...!!
.

அன்பும் சீற்றமும்
கடிதலும் காதலும்
ஊடலும் நட்புமெல்லாம்
இல்லாதிருத்தல் ஒரு
வாழ்க்கையே இல்லையென்றாள்....!!
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: கடிதலும் காதலும்....
« Reply #1 on: November 12, 2018, 05:16:54 PM »
 வாவ்வ் நண்பா. Nice one!
« Last Edit: November 12, 2018, 05:19:04 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்