இவள்
உறங்கும் பொழுதுகளில் உன் குரல் கேட்காமல்
விழிமூடாத பாவை இவள் !
விழி மூடிய நொடிகளில் உன் நினைவுகளை
சுவாசிக்கும் பேதை இவள்!
உன் நினைவுகளுடன் விடியும் இவளது பொழுதுகளை
நேசிக்கும் சித்தினி இவள்!
பொழுதுகள் முழுவதையும் ஆக்கிரமிக்கும்
உன் நேசம் கிரகிக்கும் கள்ளி இவள்!
நேசத்தை விதைத்து கண்ணீருடன்
அறுவடை செய்யும் கன்னி இவள்!