தமிழ்ப் பூங்கா > பொதுப்பகுதி

ஜோக்கரின் குறுந்தகவல்

(1/27) > >>

joker:
கஷடங்களை தாங்கும்  இதயம்..
காயங்களை தாங்காது,
வலிகளை தாங்கும் இதயம்..
கடுமையான வார்த்தைகளை தாங்காது
ஏமாற்றத்தை தாங்கும் இதயம்..
துரோகத்தை தாங்காது

joker:
மகிழ்ச்சியான தருணங்கள்
நல்ல நினைவுகளையும்,
சோதனையான தருணங்கள்
நல்ல பாடத்தையும் அளிக்கின்றன...!

joker:
கோபத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்...
அலட்சியத்தை ஏற்றுக் கொள்வது...
மிகக் கடினம்...!


கோபத்தைக் கொஞ்சம் தணித்தால்,
நன்மைகள்  பல விளையும்

நரி நன்றாக பழகினாலும்
அதன்‌ குணம் சூழ்ச்சி செய்வதே
அதுபோல தான் சில உறவுகளும் 
அழகாய் உறவாடி
உள்ளத்தை உடைத்து
உதறி செல்லும் உதாசின படுத்தி.....

joker:
வாழ்வில் தோல்வி அதிகம்,
வெற்றி குறைவு என வருந்தாதே!
செடியில் இலைகள் அதிகம் இருந்தாலும்,
அதில் பூக்கும் ஒரு சில பூக்களுக்கே
மதிப்பு அதிகம்.

joker:
கொதிக்கும் நீரில்
உங்களின் பிம்பத்தை
எப்படி காண முடியாதோ..
அதுபோலதான்
கோபத்திலும் உண்மையை
கண்டறிய முடியாது..

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version