Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 285343 times)

Offline PowerStaR

நான்
வாழும்
உலகத்தில்...
நீ
எனக்கு
மனைவியாகவும்...
நான்
உனக்கு கணவனாகவும்...
வாழ்ந்திட்டால்
என் வாழ்க்கை
சொர்கமே ....


வாழ்க்கை

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
உன்னோடு பகிர்ந்துகொள்ள
சில கதைகளும்
உன்னோடு செல்ல சண்டையிட
சில காரணங்களும்
உன்னோடு பயணம் செய்ய்ய
சில ஸ்தலங்களும்
மிச்சம் இருக்கையில்

நம்மை பிரித்து வைத்து
வேடிக்கை காண்பிக்கிறது
வாழ்க்கை

[highlight-text]
வேடிக்கை[/highlight-text]
[/color]

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
உன்னை இன்பப்படுத்த
என்னிடமிருக்கும் ஒரே
சொத்து உன்னை
நினைத்து பின்னும்
என் கவிதையே
அதை படித்துப் பார்
என் வாழ்க்கையே
ஒரு வேடிக்கை
விளையாட்டாய் மாறி
போய் விட்டது
என்பதை அறிவாய்



விளையாட்டாய்
« Last Edit: October 31, 2020, 07:40:22 PM by JsB »

Offline thamilan

விளையாட்டாய் உன்னை
காதலித்தேன்
அது தான் நான் செய்த வினை
வினை விதைத்தவன் வினையை தானே
அறுவடை செய்வான்
இன்று அறுவடை செய்த நிலம் போலே
தரிசாய் நிற்கிறேன்  நான் 



 விதைத்தவன்

Offline சிற்பி

விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவதில்லை
உலவு இல்லாமல் இந்த உலகம் இல்லை

விதைகள்
❤சிற்பி❤

Offline thamilan

வீழ்வது வெட்கமில்லை
வீழ்ந்து கிடப்பது தான் வெட்கம்
மண்ணில் விழுந்த விதைகள் தான் மரமாகிறது
எழுந்து நின்று
எம்பிக் குதிப்பவனால் தான்
விழ முடியும்
காலம் பூராவும்
காலை நீட்டி
படுத்துக் கிடப்பவன்
வீழ்வதில்லை


வீழ்வதில்லை

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
பயப்படாதே!
உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும்...
உன் கால்களும் இடறி வீழ்வதில்லை...
தோள்களும் சுமையால் சாய்வதில்லை...
என் ஆற்றலும் வலிமையும் நீயாக...என்பதை
விளக்கப்படுத்தி செல்கிறேன்
நீ புரிந்துக் கொள்வாய்யென...





சுமையால்...

Offline thamilan

சுமைகள் யாவுமே பாரமல்ல
வயிற்று சுமையால் ஆனந்தப்படுபவள்
தாய்
அறிவு சுமையால் உலகை நல்வழிப்படுத்தியவர்கள்
மேதைகள்
அன்புச் சுமையால் நம்மை அரவணைப்பது
நண்பர்கள்


அரவணைப்பது

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
என் உயிரே...
நீ பேசும் ஒரு ஆறுதலான
வார்த்தை போதும்...எனக்கு
ஒவ்வொரு நிமிடமும்
உன்னோடே பேசின
அந்த நினைவுகள் போதும்...எனக்கு
என்றும் அன்பாய்
உன் அரவணைப்பு
ஒன்றே போதும்...எனக்கு
உனக்காகவே வாழும்
ஆசையில் காத்துக் கொண்டிருக்கும்
உன் காதல் ரோஜா ஜெருஷா JSB



ரோஜா


Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
என் இதயத்தில் உன்னை
ரோஜாவாக வைத்தேன்
ரோஜாமலரை போல்
மென்மையாக வருடினேன் காதலை
ராஜாவின் ரோஜாவாகிட
காத்துக்கிடக்கிறாய் தற்போது
உள்ளுக்குள் ரணமாய் நித்தமும்
முள்ளாய் குத்திய
உன் வார்த்தைகள்
ரோஜாமலரின் மென்மை
அதன் செடிக்கு இல்லை என்பதை
உணர்ந்தபின்  முட் செடியில்
 சிக்கிக்கொள்ள விரும்பவில்லை காதலியே...?

ஏமாற்றம்
« Last Edit: May 31, 2021, 06:19:44 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
இவ்வுலகத்தில்
எதிர்பார்ப்பே இல்லாத வாழ்கை
ஒவ்வொருவருக்கும் ஏமாற்றம் இல்லாமல் கிடைக்குமா?
எல்லோரும் இதை தான் எதிர் பார்த்து எதிர் பார்த்து
ஏமாந்துப் போய் கொண்டிருக்கிறோம்
காலம் போட்ட கோலத்தில்
அனைவரது வாழ்கை கேள்விக்குறியே....

காலம்

Offline Patrick

  • Newbie
  • *
  • Posts: 11
  • Total likes: 33
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
                                                    காலம்

அனைவருக்கும் பொதுவா நீ ?


உன்னை இயக்கும் ஆற்றல் வேண்டும் என்று நினைப்பவர் பலர் இருக்க, நட்பு பாராட்டி விண்ணப்பிக்கும் என்னை ஒதுக்கிவிடுவாயோ!


நீ இல்லாத இடம் உண்டோ.. பூமியை விட்டு வெளியில் சென்றால் நீ சாது என்றான் ஒருவன்.. ஆனால் நான் சுவாசிக்க ?


சாதுவாக இருந்தாலும், இல்லாமல் அல்லவே.. நீ இல்லாத இடமும் உன்டோ..


எங்கும் இருக்கிறாய்.. உடுத்திரளை விட்டுச்சென்றாலும், கருந்துளைக்குள் புகுந்து சென்றாலும் அங்கும் இருப்பாய் போலும்..


உன்னைக்கண்டு ஏன் அனைவரும் அச்சப்பட வேண்டும்.. இறப்பையும் முதுமையையும் தருகிறாய் என்றா ?


அனுபவத்தை தருவதும் நீதானே.. நீ எப்போது பிறந்தாய் ? உனக்கும் அந்தம் உண்டா ?



அடுத்த தலைப்பு :: விழிகள்

Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 183
  • Total likes: 789
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
நான் திறந்து இருக்கும் பொழுது... மறைந்து இருக்கிறாய்

நான் மூடி இருக்கும் பொழுதோ.. என்னை வருடுகிறாய்

உன் பிம்பம் காணும் கண்ணாடியாய்
நான் இருக்க ஏங்குகின்றேன்

என்னை காக்கும் இமையாய்
என்றும் நீ வேண்டும்

இப்படிக்கு
உன்னவளின் விழிகள்





அடுத்த தலைப்பு :: நகைச்சுவை
« Last Edit: December 11, 2022, 07:00:04 AM by VenMaThI »

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 166
  • Total likes: 434
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
நகைச்சுவை என்கிறேன் நான்..
கோமாளி என்கிறாய் நீ..
பொன்னகை அணியா பெண்ணே உன் புன்னகை காண ...
ஆயிரம் முறை ஜனிப்பேன் கோமாளியாய்..
காதலில் வைதலும் கொஞ்சல் தானே..

அடுத்த தலைப்பு: கோமாளி
« Last Edit: December 27, 2022, 10:11:31 AM by Madhurangi »

Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 183
  • Total likes: 789
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
கோமாளி


ஏமாளியாய் இருப்பதை விட
கோமாளியாய் இருப்பது மேல்..

அடுத்தவர் சிரிப்பிலாவது
அகத்தின் வலியை மறக்கலாம்..


அடுத்த தலைப்பு : முகவரி