Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 257  (Read 2148 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 257
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)

என் உயிரின் உறவே...
என் அருகில் நீ இருந்தால்
நான் பேசும் மொழி கூட
மறந்து போகிறதே...


ஆயிரம் கதைகளை பேசுகின்றது
உன் அழகிய கண்கள்...
கண்களால் பேசும் மொழியைக்
கற்றுக் கொள்ள ஆசை...
உன்னுடன் ரகசியமாய்  பேசுவதற்காக...


உன் கண்களில் தொலைத்த என்னை
உன் இதயத்தில் தேடுகின்றேன்...
உன் அழகை ரசிக்க இந்த யுகம் போதாது
என் இதய திருடா...

என் அன்பே...
அன்பு என்ற வார்த்தைக்கு...
ஆயிரம் ...ஆயிரம் அர்த்தம் இருப்பினும்...
நான் கண்ட மெய் அர்த்தம் நீதானடா...


என் மனதில் நீ வந்த பின்பு ... எனக்குள்
ஏதேதோ மாற்றங்கள் ....
தூக்கம் மறந்தேன்...உணவையும் மறந்தேன்...
என்னை நானே மறந்தேன்...உன் நினைவால்...

நீ தொலைவில் இருக்கையில்
பார்க்க துடிக்கும் அதே இதயம் தான்...
நீ அருகில் வந்தால் பேச முடியாமல் தவிக்கின்றது...

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத
இதயம் வேண்டும் என்னுயிரே ...
இன்னொரு ஜென்மம் ஒன்று இருந்தால்
அதிலும் நீயே வேண்டுமே...
என் உறவாக அல்ல...என் உயிராக


உனக்குள் என் நினைவுகளும்...
எனக்குள் உன் நினைவுகளும்...
இருக்கும் வரை நமக்குள் பிரிவுவென்பதே இல்லை
என்னுயிர்க் காதலனே...


என்றும் அன்புடன் ,
உன்னை இதயத்தில் சுமந்து செல்லும்
உன் அன்புக் காதலி
Jerusha JSB
« Last Edit: February 23, 2021, 01:04:57 PM by JsB »

Offline thamilan

மனதை மயக்கும் அந்திமாலைப் பொழுது
பகலவன் களைப்பாறும் நேரம்
பறவைகள் தங்கள் கூடுகளைத் தேடித்
பறக்கும் தருணம்
சாரளத்தில் நின்றேன்
மாமன் மகள் அவள் நினைவுடனே
குனிந்த தலையும் நாணம் பொங்கும் முகமுமாய்
வந்து நின்றாள் என்முன்னே
 
அன்பே
உலகத்தில் பூக்கின்றன
ஓராயிரம் பூக்கள்
என்னை மலரவைத்த பூ
உன் சிரிப்பு தான்

பிற பூக்கள் எல்லாம்
காயாகி கனிகின்றன
உன் பூவோ
காயான என்னையே
கனிய வைக்கிறது

மற்ற பூக்களை பார்க்கும் போது
என் இதயம் மகிழ்ச்சியில் மலர்கிறது
உன்னை பார்க்கும் போது தான்
என் இதயமே பூவாய்மலர்கிறது

மாதவளே உன்னை அணிவதற்கு
மனதில் காதல் அணிந்துவந்தேன் கண்களில்
பொன்னை அணிகின்ற பூவே
மறுக்காமல் என்னை அணிவாயா இன்று

கண்நாடி போகுங்கால்
கண்ணாடி போலிருந்த
பெண்ணாய் வந்தாளே பேசத்தான்
பேச மறந்து
தள்ளாடி தலைகுனிந்து நின்றாளே
நாணத்தால்

போர்க்களத்தில் கூட புகுந்து வந்தேன்
எத்தனையோ நீர்குளத்தில் நீந்திவந்தேன்
ஆனால் உன்கண்ணுக்குள்
மூழ்கினேன் காண்


« Last Edit: February 23, 2021, 05:07:59 PM by thamilan »

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Quote

ஹாய் எனும் என்னவனுக்கு
நான் எழுதும் முதல் கடிதம்
காதல் கடிதம்
இதற்கு முன்னே இவ்வளவு  தீவிரமாய்
நான் கடிதம் எழுதியதே இல்லை
இது எனது முதல் காதல் கடிதம்
எனது முதல் காதலன் நீ
எனக்கு வாய்த்த முதல்
அடிமையும் நீயே

கணவன் என்ற சொல்லே
புதிது எனக்கு ஹீ ஹீ
மனசுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்குது
தலைக்கு மேலே
பல வர்ணங்களில் பல்பு எரியுது
இருந்தாலும் நீயே எனது கணவன் ஹீ ஹீ

நானே மோர்னிங் காபி போடுவேன் என்று
எதிர் பார்க்காதே
நீயே எனக்கும் சேர்த்து போட்டாலும்
பரவா இல்ல
லைப்ல எந்த எதிர்பார்ப்பும் இல்லாத எனக்கு
நீ கிடைத்தது வரமே
நான் உனக்கு கிடைத்தது
பெரிய கிப்ட்டு
அதனாலே நீ தினமும் தாராய்
எனக்கு கிப்ட்டு
உனக்கு நான் வைக்க போறேன்
கட் அவுட்டு
இல்லனா நான் உனக்கு தருவேன்
கெட் வுட்டு

உண்மைல சொல்லனுமென்ன

 
என் பிறப்பின் ஒளியும் நீ
என் பிறப்பின் உயிரும் நீ
என் பிறப்பின் அர்த்தமே நீ
என்பிறப்பின் அந்தமும் நீயே
எத்தனை முறை நான் பிறந்தாலும்
நீ என்னுடைய என் அவனாகவே இருக்கணும்
[/font]

Copyright by
BreeZe

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நீ இல்லையென்றால்
உண்மையான காதல் என்றால் என்னவென்று
நான் அறிந்திருக்கவே மாட்டேன்
அந்தக் காதல் எத்தனை இன்பமானது என
நான் அறிந்திருக்க மாட்டேன்

நீ இல்லையென்றால்
காதல் வெப்பமும் குளுமையையும்
ஒன்றான கலவையென
உணர்ந்திருக்க மாட்டேன்
நீ இல்லாத போது உடல்
ஏக்கத்தால் தகிக்கிறதே
நீ இருக்கும் போது
ஊட்டி குளிரை உடல் அனுபவிக்கிறதே

உன் உயிர் தொடும் தொடுகை
மனதை மயக்கும் குரல்
யாரிடமும் அனுபவிக்காத
இன்பத்தை தருகிறதே
என் உயிரே நீ தான்
உன்னைத்தவிர யாரும் இல்லை

நீ இல்லாவிட்டால்
மழையில்லா பயிர் நான்
காற்றில்லா பிரபஞ்சம் நான்
எனது பாதி நீ
நீ இல்லாமல் நான் இல்லை
இதை உணர்த்தியது உனது காதல்!!

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !


நிலவு பெண்ணே  ! நினைவுஇருக்கிறதா?
ஓர் நாள்  ...
கல்லூரி சாலையில் சந்தித்தோம் ! பின்பு
உள்ளூர் சோலையில் சிந்தித்தோம் !
காதல் என்ற கனவு வார்த்தை
வாழ்தல் என்ற பந்தம் ஆக துடித்தது !

எதிர்ப்புகள் இல்லா காதல் சாத்யமில்லையே !
எதிர்பார்ப்புகள் இல்லா வாழ்தலும் அப்படித்தானே ?

உனக்கு நினைவு இருக்கிறதா ?அன்று...
உன்னை பார்க்க துடித்து நெடுநேரம் ...
காத்து கொண்டு நின்றேன் ஆற்றங்கரையோரம் !
பால் நிலவு ஆறாக ஓடி கொண்டு இருக்க....
பெண் நிலவு நீ என் அருகே வந்தாய் !
கோடி நிலவுகள் குளிர்ச்சி அப்போது !

ஆனால்!  அனல் காற்று அல்லவே வீசிற்று !
ஏன் என்று உன் விழியை பார்த்த போது புரிந்தது !
விழிகள் மழையும் பொழிந்தது !
சுட்டு எரிக்கும் தணலையும் பொழிந்தது !
காரணம் எதோ சொன்னாய் !
ஏதுவாய் இருந்தால் என்ன ?

நான் இருக்கும் வரை உன் கண்களில்
கங்கையும் பார்க்க விழையவில்லை
காவேரியும் ஓட தேவை இல்லை !
ஒரு சொட்டு நீர் நீ சிந்தினாலும் ..
அது எனக்கு உயிர் வலி கொட்டும் !
அதில் மகிழ்வை தவிர வேறு ஒன்றும்
முகில கூடாது !நான் பார்க்கவும் கூடாது !

என்று நான் கூறிய வினாடிகளில் மீண்டும்
உன் கண்களில் ஆகாய கங்கை !
ஹே பெண்ணே !திரும்ப திரும்ப !
என்று நான் முறைக்க ..நீ சிரிக்க ..
எத்தனை இன்ப நினைவுகள் !

ஆம் ! அத்தனையும் இன்று நினைவுகள் தான் !
அன்று நீ அழக்கூடாது என்று பதறினேன் !..
இன்றோ...நீ எவர்கூடவோ மணமாகி சிரிக்கிறாய் !
என் மனம் தான் சிதறி போகின்கிறது !

பரவாயில்லை பெண்ணே !
என்  நினைவுகள் உன்னை சுடாதவரையில் !
என் கனவுகள் என்றும் ..
கடக்க முடியாத பாதைகளே!
என் பயணங்கள் என்றும் ...
இணையா  தண்டவாளத்தின் பயணங்களே !


Offline SweeTie

அவன்
அன்பே  முழு நிலவே 
அழகான  வெண்மதியே 
பெண்ணே   பேசும் ஓவியமே
கண்ணே   உன்  காதலிலே
கரைந்துபோகுதடி  என் இதயம்
 
அவள்
கண்ணா  என்  காதலனே
 கார்முகில்  வண்ணா  நீயே
கந்தர்வ  உலகின்  கதாநாயகனே
கண்டதும்  கொண்டேன் காதல்  உன்
கண்களின் மடல்களில் தஞ்சமும் ஆனேன்

அவன் 
மின்விளக்கில்   வீழ்ந்து மடியும்  விட்டில்போல்
 உன் கண்  இடுக்கில்   மயங்கி   துடிக்கிறேனடி   
அன்னம்போல்  நீ  அசைந்து நெளிந்து  வந்து   
 மன்னன்  என் மார்பிலே  இதமாக   படர்ந்து
இன்புற்றிருக்க  வேண்டுமடி   

அவள்
குயில்  என்றாய்  என் மதுரக்குரல் கேட்டு
மயில்  என்றாய்  என்  நடை கண்டு 
கொடி  என்றாய்  என் இடை  பார்த்து 
கிளி என்றாய்  கொஞ்சும்  மொழி கேட்டு
என்னை   ஆட்கொண்ட  மன்னவனே

அவன்
கட்டிலில்  புரண்டாலும் உந்தன் ஏக்கம்
காலையில் எழுந்தாலும்  உன் நினைவு 
நித்தமும் நீயே  என் குலதெய்வம்
சித்தம்  கலங்குதடி    என்னவளே   
சிந்தையில்  உன்னையன்றி  வேறு இல்லை 

அவள்
உன் நித்திரையில்   வந்திடுவேன் '
நிழலாகவும்    தொடர்வேன் 
எட்டி  என்னை பிடிக்க  எழும்போது 
தட்டிவிட்டு   ஓடிவந்து  படுத்திடுவேன்
என் வீட்டு கட்டிலின்  மேல்   

காதல்   
காதல் எனும்  செடியில்  புதிதாக  பூத்து 
சாதல் எனும்  பதம் அறியா  மலர்கள்  இவை
காலையில்  பூத்த மலர்  மாலையில்   வாடிவிடும்
காதல்வலை   மாயவலை  என்றறிந்தும்
சோதனையில்   சிக்கிய  பட்டாம்பூச்சிகள்