Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 165  (Read 2427 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 165
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Ftc Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 11:11:38 AM by MysteRy »

Offline KaBaLi

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த
நம் பெற்றோர்- ஒன்று
சேர்ந்தனர் திருமணத்தில்!
இருவரின் பாசப்பிணைப்பில் பிறந்தவர்கள்
நாம் இருவர்!

இருவரையும் எங்கேயோ..விதைத்து..                 
எங்கேயோ விளைய வைத்து.. இன்று
இக்கரையில் நானும்,அக்கரையில் நீயும்..
நம் உறவின் பாசமாய்..பாலமாய்..ஈகரையும்..!!

நீ எச்சி வச்சு குடிச்ச பாலை தான் நான் குடிச்சேன்- ஆனால்
இதில் இருக்கும் அக்கா தம்பி  பாசம் ரத்த உறவு 
தான் தொப்புள்கொடியை விட
சிறந்த வலிமை மிக்கது...!!

வாழ்வில் எது நல்லது எது கெட்டது என கூறியவள்  நீ ...!!
வாழ்க்கையில் வரும் பள்ளம் மேடுகளை எடுத்து கூறிய நீ...!!!!

நான் கஷ்டப்பட்டாலும் என்  தம்பி  கஷ்டப்படக்கூடாது என -
தம்பியின்  ஆசைகளை நிறைவேற்றும் பாசமலையில் அக்கா தம்பி பாசம்..!!

வாழ்வில் எத்துணை தோல்வி கண்டாலும்
அதை எதிர்கொண்டு செல் என்று
தன்னம்பிக்கை கொடுத்த என் அக்கா
மிகவும் ரொம்ப நேசிக்கின்றேன் ..!!!

நீ அடிக்கடி  கொஞ்சிய வார்த்தை
எரும பிசாசு குரங்கு
அப்படியே போயிரு
மூஞ்சிலே முழிக்காத
செருப்பால அடிச்சுருவேன் -என
கொஞ்சிய வார்த்தைகள்
உண்மையிலே நெஞ்சை கவ்வுகிறது ..!!

அம்மா அப்பாவிடம்
வாங்கிய அடி திருடி சாப்ட சாப்பாடு
இளநி திருடி தோட்டத்துக்குள் உக்காந்து குடிச்ச
நிகழ்வு அனைத்தும் கோடி ரூபாய் கொடுத்தாலும்
ஈடாகாது

தினமும் ரம்மி விளையாட்டு
கூட்டான்சோறு நொண்டி விளையாடுதல்
என என் அக்கா என் தங்கை எல்லாம்
சேந்து விளையாடிய நினைவுகள்
எந்த விளையாட்டுக்கும் ஈடாகாது !!!!

வெளிய செல்லும் போது
நண்பன் நண்பியாக இருந்தோம்
மாரி மாரி அவ என பாக்குற
இவன் என பாக்குறான் டா
என நமக்குள்ளே சொல்லி
சந்தோசமாக இருந்த நிகழ்வுகள்
இன்றும் கடல் அலை போல்
வந்து மோதிக்கொண்டே இருக்கிறது ..!!!
 
உன்னுடன் தினமும் சண்டை போட்ட நாட்கள்
எனக்காக பைசாவை சேர்த்து எனக்கு ஷர்ட் பேண்ட்
வாங்கி கொடுத்த என் அக்கா !!

நம்ப அம்மா கூட இவ்ளோ கண்டிச்சுருக்கமாட்டாங்க
ஆனால் ஒவ்வவாறு நாளும் வருடமும்
எனக்கு எது வேணும் எது வேணாம்
என்று நிர்ணயித்த அக்கா எங்க   போனாய்

படிப்பு சொல்லித்தரும் போது ஆசிரியை
விளையாடும் போது தோழி
கஷ்டப்படும் போது அம்மா
அழும்போது நண்பி
தோல்வி அடையும் போது தன்னம்பிக்கை
இப்படி என் அக்கா என் முதுகெலும்பாக இருந்தா !! 

அழுகியபோது உன் தோள்பட்டையை கொடுத்தாய்
சந்தோசமாக இருக்கும் போது உன் நட்பை கொடுத்தாய்
கஷ்டப்படும் போது உன் முழு மூச்சையும் கொடுத்தாய்
இன்று நான் இப்படி இருக்க நீயே கரணம்

உனக்கு தகுதியானவை தேர்வு செய்யும் போது
என்னிடம் சொல்லிய கேட்ட அணைத்து நிகழ்வுகளும்
இன்று இந்த நொடிப்பொழுதில்
எண்ணில் விழுகிறது  சிரிப்புமலையாய் !!!

உன்னை கொஞ்ச ஆசை
உன்னை என் தோளில் மேல் வைத்து
கொண்டாட ஆசை

இந்த நொடிபொழுது வரை 
அக்காவாகவும் அம்மாவாகவும்
தோழியாகவும் நண்பியாகவும் என் மூச்சாக திகழும் உன்னை
என் தோள்பட்டையில் வைத்து
சாகும் வரை கொண்டாடுவேன் என் செல்லக்குட்டி அக்காவை

எனக்காக அழுபவள் வேண்டாம்
என்னை அளவைக்காமல் பார்த்துக்கொள்பவள்
போதும்,அவளே என் சகோதிரி <3 <3 ...

வாய்ல தான் டி சொல்லமுடியால
வார்த்தையால் டி சொல்லிக்குறேன்
 மிஸ் யு டி!!!!!
« Last Edit: November 26, 2017, 02:53:32 AM by KaBaLi »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
ஆயிரம் உறவு என்னை சுற்றி
இருந்தாலும் ஒரு மணி நேரத்தில்
ஒரு நிமிடமாவது தோன்றி
மறைவது உன் முகமே

அறியாத வயதில் தனிமையாக்கப்படுத்தல்
மாறிவிடும் காயம் தான்
அறிந்த வயதில்  நீ இல்லாமல்
தனிமை ஆக்கப்பட்டவள் நான்


 
என்னை உப்பு மூட்டை  தூக்கி
சும்மாகும் என் அண்ணாவுடன்
நான் இருந்த ஒவ்வரு  நாட்களும் 
மறக்கவில்லை இன்னும்

நீ என்னுடன்  இருந்த போது உன்னை
அண்ணா என்று அழைத்தது இல்லை
அதன் அருமை கூட தெரியவில்லை 
உன் அருமை புரியும் போது
நிமிடத்துக்கு ஆயிரம் தடவை
அழைக்கின்றேன்  கேட்பதற்கு 
நீ இல்லையே  என் அண்ணா


மண்ணிற்காய் நடத்த யுத்தத்தில்
ஆயுதம் ஏந்தா உன்னை கொன்றதன்
நியமம் என்னவோ கேட்பார் இல்லை
இறுதிவரை உன் முகத்தை
பார்க்காத அபாக்கியவாதி நான்

ஒரு பெண்ணாய் நான் இழந்த
மிக பெரிய பொக்கிஷம்  நீயே
நீ ஊட்டிய சோறின் சுவை கூட
மறக்கவில்லை இன்னும் 

நான் கேட்டு கிடைக்காதது
இல்லை என்பார்கள்
ஆனால் நான் இழந்த மறுபடி
 கிடைக்க முடிய வரம் நீ

நான் இறுதியில் பார்த்தது
புன்சிரிப்போடு அந்த முகம்
அது போது நீ எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கிறாய்
என்ற நினைப்போடு வாழ்கிறேன் நான்

 

Offline JeGaTisH

அண்ணன்  எனும்  சொல் அன்பால் உருவானது
 தங்கை எனும் சொல் தாய்க்கு நிகரானது
தங்கையே நீ என் வாழ்வில் ஓர் அங்கமே
உன்னை  கண்ணும் கருத்துமாய் என்றும் காப்பேனே

அன்னையாய்  தந்தையாய் நானிருப்பேன்
உனக்கு ஒன்னுனா  முன்  வந்து நிற்பேன்
சிறுமி நீ  என் கரம் பிடித்து  சுற்றிவந்தாய்
வயதுக்கு  வந்தும்  என் வார்த்தைக்கு   நீ பணிந்தாய்
 
அன்னையிடம்  சொல்லாத  ரகசியங்கள்
என் தங்கையிடம் சொல்லிடுவேன்
அண்ணன்  என்னை அரவணைத்து
சினுங்கல்  முத்தம் தந்துடுவாள்
 
மூக்குமேல்   முற்கோபம்   வரும்போது
முன்னூறு  முகபாவம்  காட்டிடுவாள்
சின்ன  சின்ன  குறும்பு செய்து 
சிரிப்பூட்டி மகிழ்வூட்டுவாள்

என்னை யாரும் திட்டி விட்டால் தங்கை முகம் வாடி விடும்
தரணியிலே யாருமில்ல தங்கை அவள் அழகை  வெல்ல
அன்னை இல்லாத அண்ணன்மார்கள் கூட
அன்னையை கண்டார்கள்  உன் உருவில் தங்கையே 

என் தங்கையை கையில் சுமந்த நாள் முதல்
கணவன் கையில் ஒப்படைக்கும்  வரை நானும் அன்னையே.
நீ செய்த குறும்புகள் என் கனவில் அவ்வபோது வந்து செலும்
அதை நினைத்து என் வாழ்க்கையும் நகரும்

என் கை பிடித்து ஊரெங்கும் சுற்றி திரிந்தாய்
பின் கணவன் கைபிடித்து வாழ்ந்திடுவாய் மகிழ்வுடனே
அன்னைக்கு  அடுத்த இடம்   நீதானே என் தங்கமே
நீ செலும் வழி எங்கும் பூக்கள் மலரட்டும்  என் தங்கையே


                                                நன்றி இப்படிக்கு ஜெகதீஷ்     
« Last Edit: November 26, 2017, 02:59:32 AM by JeGaTisH »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
புதிதாய் மலர்ந்த
மொட்டாய் மெத்தையில்
நான் இருக்க ...
விரல்களால் எந்தன்
நாசியில்
கோலமிட்டாய் ...

உறக்கம் களைந்து
விழி திறக்கையில் ..
நீயே
இவ்வுலகில்
நான் கண்ட
முதல் உயிர்  ...
 
உதட்டைப்  பிரித்து ...
இல்லாத  பற்களைக்
காட்டி புன்னகை பூத்து ...
பஞ்சு கரத்தினை உந்தன்
விரல்களில்
கோர்த்துக்கொண்டேன் ...

விழிகளில் பதிந்த
முதல் முகம்
நீயென்பதால் ...
உன்னையே தந்தையென்று
நினைத்தேனோ ...
நிஜத்திலும் தந்தையென
மாறினாய் ...

தந்தைக்கு பின் தமையன் ...
என்னை
உந்தன் மார்பிலும்
தோளிலும் சுமந்தாய் ...
எந்தன் சிறு சிறு
அசைவுகளையும் நெஞ்சிலும்
நினைவுகளிலும்  சேமித்தாய் ...

தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை ...
தமயனே உந்தன்
பாசத்திற்கு
ஈடிணையேதுமில்லை ....

எந்தன் தந்தையின்
மறு அவதாரம்
நீயே ...
எந்தன் நிழலின்
காவலனும் நீயே ...

தந்தையாகி என்னை
காத்துநின்றாய் ...
ஆதரவாய் நான் சாய...
தோல் தந்து நான் 
உறங்கிட செய்வாய் ...
அன்பினை அடர்
மழையென பொழிந்தாய் ...

உந்தன் அன்பின்
சீற்றத்தில் என்னை
உருகிடச் செய்தாய் ...
உருகியது
நான் மட்டுமா ......
அந்த இறைவனும்
உருகிதான் போனானோ ...

அவனது  அன்பில்
உன்னைக்  கரைக்கத்
துடித்தானோ ...
என்னிடமிருந்து பிரிக்க
நினைத்தானோ ...
எமதூதுவனை இப்புவிக்கு 
அனுப்பினானோ ...?

முதல் நாள் கன்னத்தில்
முத்தமிட்டு
வழியனுப்பினேன் ...
மறுநாள் விடியலில்
சவப்பெட்டியில்
இல்லறம்
வந்தடைந்தாய் ....

சுட்டெரிக்கும் சூரியன்
தந்த வெளிச்சத்திலும்
அந்த விடியல்
எமக்கு இருள்
சூழ்ந்ததைப்போல்
பிரம்மைப்  பிடித்தது... 

உந்தன் முகம் பார்க்க ...
உன்னை எந்தன்
கையில் ஏந்த
அருகதையற்றவளானேன் ...
இறைவன் தந்தப் 
பொக்கிஷத்தைத்
பாதுகாக்கத்
தவறியவளானேன் ...

அதிர்ச்சியில்  சத்தமின்றி ...
வடிந்த எந்தன் கண்ணிற்குப்
பொருள்
விளங்காதவளானேன் ....
சுற்றி நின்ற
உறவுகள் மத்தியில்
உன்னை ஒருவனை இழந்து ...
அனாதையாகி நின்றேன் ...

அண்ணா என்ற சொல்லை
மட்டும் உச்சரித்தவாறு
இருந்தேன் ...
நிகழ்ந்தது என்னவென்று
மூளையறியும்...
எந்தன் மனம் மட்டும்
ஏற்க மறுத்தது ....
விளங்கிய நேரம் ...
காலம் கடந்திருந்தது ...

தீயில் எரிந்து
சாம்பலானாய் ...
தழுவிச் செல்லும்
காற்றோடு கலந்தாய் ...
பாதத்தை முத்தமிட்டுச்
செல்லும் கடலலையில்
கரைந்தாய் ...
நீலம் பூசிய ஆகாயத்தில்
பிம்பமாய் படர்ந்தாய்...

நேரம் கடந்தது ...
நாட்கள் கடந்தது ...
மாதங்கள் கடந்தது ...
உந்தன் நினைவுகளைக் 
கடக்க முடியவில்லை...
வடிந்துக் கொண்டிருக்கும்
கண்ணீரை நிறுத்த வழியும்
தெரியவில்லை ...

எந்தன் கதறல்
உந்தன் செவிகளுக்கு
எட்டியதோ ...
தோளில் சாய்த்திட
உந்தன் நெஞ்சம்   
பதறியதோ...
கண்ணீரைத் துடைத்திட
உந்தன் கைகள் துடித்ததோ  ...

நீயின்றி ...உந்தன்
நிழலுமின்றி ..
சுருங்கிய நத்தையாய்
சுழன்று கிடந்தேன் ...
ஒருவனாய் சென்று
ஐவராய் திரும்பினாய் ...

எதிர்பாரா நேரத்தில்
பூத்த பூக்களாய் ...
என்னை சூழ்ந்துகொண்டனர் ...
அவர்களின் நேசவிதையில்..
வடிக்கிடந்த என்னை
மீண்டும்
மலர செய்தனர் ...

ரத்தபந்தமற்ற சொந்தம் ...
பழகியதென்னவோ ஒரு சில
நாட்கள் தாம் ...
கண்டேன்  அவர்களுள்
உந்தன் உருவம் ...
உணர்ந்தேன் அவர்களுள்
உந்தன் பாசம் ....

அந்த இறைவனும் ...
என்னில் சற்றுக் 
கருணைக் கொண்டானே  ...
ஐவரின் பாசத்தின்
வழி உன்னை மீண்டும்
காண செய்தானே ....

இறைவனின் ஒளிச்சுடரில்
நீ மறைந்தாலும் ...
உன் நினைவுகளை
என்றும் நான் மறவேனே...

முகமறியாமல்
சொந்தமுடனாலும் ...
இவர்களின் பாசத்திற்கு
ஈடினை கண்டறியேனே ...
ஐவரின் அன்பிற்கும்
நன்றியினை என்றும் நான்  மறவேனே...

நன்றி ....
ரித்திகா ....

பின்குறிப்பு : இந்த  கவிதை  இறைவனடிச்  சேர்ந்த  எந்தன்  தமையனுக்கும்  ...
முகமறியாமல்  பழகினாலும்  ...எம்மை  பாசமழையில்  நனைய  வைக்கும்  ...
எந்தன்  ஐம்பெரும்  பஞ்சபாண்டவ  தமையன்களுக்கும் 
(அனோத்  அண்ணா  ,Zam   அண்ணா  , மணி  அண்ணா  , சரிதன்  அண்ணா  ,Shabu அண்ணா  ) இவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்  ....இதன் வழி ...அவர்கள் என்மேல் கொண்ட மற்றட்ட
பாசத்திற்கும் நன்றியினை தெரிவிக்கிறேன் ...
« Last Edit: November 28, 2017, 06:03:57 AM by ரித்திகா »


Offline MyNa

அண்ணன் இல்லையென ஏங்கிய 
தங்கைகளில் ஒருவள் நான்
என் அன்பு தங்கை அவள் 
இப்புவிக்கு வரும் வரை..


அன்பு தங்கையாய் வந்து
என் செல்ல குழந்தையாய் மாறி
தாயென்னும் ஸ்தானத்தை   
கேட்காமலே எனக்கு தந்தவள் நீ ..

அன்பாய் அரவணைக்கையில் 
இன்னொரு தாய் நீ ..
வீண் சண்டைகள் போடுகையில்
என் மாமியாரும் நீ ..

குறும்புகள் செய்கையில்
என் கூட்டு களவாணி நீ ..
கிசு கிசுக்கள் பேசுகையில்
என் உற்றத் தோழியும் நீ..

என் சிறு சிறு அசைவுகளை 
கொண்டே என்னை படித்திடுவாய் ..
அழத் தோள் கொடுத்து 
என் சுமைகளை தீர்த்திடுவாய் ..

ரகசியம் ஏதேனும் உண்டெனில்
சாதுரியமாக கறந்திடுவாய் ..
அதே ரகசியம் தனை காக்க 
கல் நெஞ்சாய் மாறிடுவாய் ..
 
உன்னோடு இல்லாத ஒவ்வொரு கணமும்
நகந்திடாது மணித்துளிகள் ..
நீ உடன் இருந்தால் தனை
மறந்து உறைந்து போகும் நொடிகள் ..
 
இனி மறுஜென்மம்  உண்டெனில்
நீயே மீண்டும் தங்கையாகவும்
உன்னை போல் ஒரு மகளும்
பிறந்திட வேண்டுமெனக்கு
  ..

I LOVE YOU VAALU  :D

~ தமிழ் பிரியை மைனா ~

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
ஒரே கருவறையில் இருவரும்
உருவாகவில்லை
ஆனால்  உன் போல் யாரையும்
கண்டதுமில்லை

தாய்க்கு தலைப்பிள்ளையாய் நான்
ஆனால் தமையனாய்
எனக்கு முன் நீ இல்லாத
ஏக்கம் ஏன்

கூடிக் களித்திடும் நண்பியர் கூட்டம்
சொல்லுமே அண்ணன் புராணம்
எண்ணும் போது எனக்கு ஏனில்லை
என்ற வலியில் ஓர் துளி மரணம்

விட்டு செல்லும் உறவுகளிடம் என்னை
விட்டுக் கொடுக்காத நீயும் ஏனிங்குயில்லை
வாழ்க்கையில் என் இந்த கேள்விகளுக்கு
யாரிடமும் பதிலுமில்லை

தகப்பனாய் தாயாய் சர்வமுமாய் ஆன
தங்கைகளின் தோழன் நீ
"அண்ணண்" எனும் உறவின் பெயர் கொண்டு
வாழும் நிகரில்லா பாசமும் நீ
 

தங்கைகளை கொண்டாடும் தமையன்களுக்கும்
FTC  யின்  குட்டி அண்ணாவான அனோத் அண்ணாக்கும்
என் கவிதையின் சமர்ப்பணம் :D


                                **விபு**
« Last Edit: November 26, 2017, 10:18:33 AM by VipurThi »

Offline SwaranGaL

பள்ளிக்  காலங்களில்   துள்ளி  விளையாடி  ஓடி  பிடித்து
ஒருவருக்கொருவர்  வேடிக்கையாக  சில  சேட்டைகள்  செய்தும்
மறக்க  முடியாத  அளவிற்கு  குறும்புகள்  செய்தும்
மனயின்பம்  அடையும்  வரை  நேரமே  தெரியாத
அளவிற்கு  விளையாடி  மகிழ்வோம்

விடுமுறை  நாட்கள்  வந்தால்  சொல்லவா  வேண்டும் 
ஒருவருக்கொருவர்  ஏட்டியும்  போட்டியுமாய்
இரவும்   பகலும்  கேலியும் 
கிண்டலுமாய் சண்டையும் அழுகையுமாய்
கூத்தடித்தும்  கும்மாளம்  போட்டும் 
நேரத்தை  ஒன்றாகக் கடப்போம்

இருசக்கர  மிதிவண்டியில்  நீயும்  நானும் 
மனதிற்கு  இனிமையான  பாட்டினை பாடி
 உற்சாகமாய்  பயணம் செல்வோம் அந்திநேரத்தில்
 மொட்டைமாடியில்  பட்டம்  விட்டு அது
 வானில்  பறக்கும்  விதத்தை  ரசித்து  கொண்டாடுவோம்

தொலை  தூரம் சென்றாலும்  நீண்டு  பயணித்தாலும்
மனதுக்கு  நெருங்கிய  உறவுகளில்  சில  பிரிதல்  எழுந்தாலும்
உருக்கமான  உண்மையான  பந்தம்  எதனையும்  வென்றுவிடும்
அண்ணன்  தங்கை  இருவரின்  இடையில்  நீண்ட  இடைவெளி  அமைந்தாலும்
அவர்களின்  மனதில்  என்றும்  நீங்காது  நினைவுகள்  பல சுமக்கும்

[/color][/b]
« Last Edit: November 26, 2017, 10:38:02 PM by SwaranGaL »


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உன்னை எனது அண்ணனாக நண்பனாக
அடைந்தததிற்கு நான் பெருமைப்படுகிறேன்
எனது அன்பை உனக்கு காணிக்கையாக்கும்
கவிதை இது

உன்னோடு  ஒன்றாய் இருந்த
ஒவ்வொரு நிமிடமும்
என் வாழ்வில் அன்பான தருணம்
உன்கூட அன்பில் இழைந்து
ஒன்றாய் வளர்ந்தேன் நான்

அன்பில் நனைந்து
நட்பில் இணைந்து
ஒன்றாய் நாம் வளர்ந்த நாட்கள்
நமது எண்ணங்களை
ஒருவருக்கொருவர் தயக்கமின்றி
பகிர்ந்து கொண்ட கணங்கள்
என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒன்று

எனக்காக பார்த்து பார்த்து நீ செய்த
ஒவ்வொரு செயலுக்கும்
நன்றி சொல்ல
வார்த்தைகள் இல்லை
இனிமையான நகைச்சுவையான
அண்ணன் நீயே

எனக்கு அறிவுரை சொல்வதில்
ஆசான் நீ
எனது வாழ்க்கைக்கு
வழிகாட்டியும் நீயே

எனது வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது
அண்ணன் உன்னாலே
எதையும் சாதிப்பேன்
அண்ணன் உன் அன்பினாலே