FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 23, 2021, 07:25:49 AM

Title: நம் காதல்
Post by: thamilan on January 23, 2021, 07:25:49 AM
நகம் கடித்து கடித்து
விரல் நுனி தொடும்
எதிரே வருவது
நீ தானென தெரியும்வரை.....
காதல் எப்போதும்
காத்திருப்பதில் சுகமானது

எட்டாக மடித்து
நீ தரும் கடிதத்தில்
என்னவென்று அறியும் வரை
காதல் எப்போதும் சுமையானது

எல்லோரும் உறங்கியபின்னே
யாருக்கும் தெரியாமல்
நான் மட்டும்
கண்விழித்து கடிதம் படித்து......
உன் இதயம்
கடிதமாக என்னுடன் பேச
காதல் எப்போதும் சுவையானது

நீ உடுத்தி வரும் உடை நிறத்திலேயே 
நானும் உடுத்திவர
சந்தோசத்தில் புன்னகை பூத்து
செல்லமாக சிணுங்குவாயே
காதல் இனிமையானது

அம்மாவிடம் தோழி வீட்டுக்கு
அப்பாவிடம் டியூசனுக்கு
அண்ணனுடன் கம்ப்யூட்டர் சென்டருக்கு என
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாக
எனக்காக நீ சொல்லும் பொய்களில்
காதல் எப்போதும் அழகானது

காதலுக்குத்தான் கண்ணிலேயே தவிர
காண்பவருக்கு உண்டே.....
அந்தப் பார்வைகளில் பலியாகிப் போன
நம் காதல் துயரமானது

இப்பொது நீ வேறு திசையில்
நான் வேறு திசையில்
தனித்தனியாய்.....

இனி எங்காவது தனிமையில்
நாம் சந்திக்க நேர்ந்து
கடைவிழியில் கண்ணீர் சுரந்தால்
நம் காதல் என்றுமே புனிதமானது ....