(https://media.giphy.com/media/QM6mq8Ln5YTGFuqXp5/giphy.gif)
'' காரிருள் உனை மூடினால்
பேரொளியாய் சூழ்வதும் அம்மா
பாலைவனத்தில் நீ தவித்தால்
பாரிய மழையாய்
உனை குளிரச் செய்வதும் அம்மா...
கவிகளுக்குள் தாய்மையின்
தாற்பரியம் அடக்க முடியாது
மகா புலவருக்கும் தாயன்பை
சிறப்பிக்க சொற்கள் தேட முடியாது''
ஆனால் இந்த கவிதாயினி
இவ்வளவு அழகாக தாயின்
பெருமைகளை வர்ணித்து
அன்னையைக்குப் பெருமைச்
சேர்த்துவிட்டேரே அஷுமா!!!
நிஜமாக அன்னையை
வர்ணிக்க இருக்கும் வார்த்தைகள்
போதவில்லை ...
புதிதாக வார்த்தைகள் கண்டறிவது
அவ்வளவு எளிதில்லை !!!
அன்னையைப் போற்றி தாங்கள்
எழுதிய கவி மிக சிறப்பு !!!!
கவிதாயினியின் படைப்பு
மென்மேலும் சிறப்பாகத் தொடர
வாழ்த்துக்கள் !!!