Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 207  (Read 1782 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 207
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline யாழிசை

கைகோர்த்து நடந்த 
காலங்கள் கனவிலே சென்றன...
காரிருளில் கனவுகள்தான்
கவிதை ஆகின....
கடைக்கண் பார்வை எட்டாத தூரத்தில்
காலடித்தடங்கள் காணாமல்.....
நீ எங்கோ;  நான் இங்கே...

விடியலை நோக்கி நீயோ
கண்காணா தொலைவில்....
விடிந்தும் கண் துயிலாமல்
நானோ, நம் கண்மணிகளோடு...

நிழல் படத்தில் பிரிவை சந்தித்த நாம்
நிஜத்தில் கரம் கோர்க்க
நித்தம் நித்தம் நித்திரையிலும்
நினைக்க தவறுவதில்லை அன்பே உன்னை ...

நேசிப்பவர்கள் எல்லாம் நிலைத்து விட்டால்
நினைவின் பலமும் பிரிவின் வலியும்
தெரியாமல் போயிவிடும் என்று நினைத்தாயோ....

காத்திருக்கேன் கனவா ...
காலம் கனியும் என...
நிழல் படத்தில் பிரிந்த நாம்
நினைவுகளோடு நிஜத்தில் இணைவோமாக ....
« Last Edit: December 10, 2018, 02:46:42 PM by யாழிசை »

Offline thamilan

கண்கள் கலந்ததால் காதலித்தோம்
கருத்து ஒருமித்ததால் கட்டுண்டோம்
எதிர்ப்புகளை மீறி கரம் பிடித்தோம்
ஈருடல் ஓருயிர் ஆனோம்
 
உனக்கு பெண்குழந்தைகள் பிடிக்காது
குழந்தைகள் என்ன பொம்மைகளா
நாம் விரும்பியபடி வாங்கிட
அது இறைவன் கொடுத்த வரம்

 முதல் ஒன்று பிறந்தது
பெண்குழந்தை
அடுத்தது ஆண்குழந்தை
பிறக்கும் என்று நினைத்தோம்
அதுவும் பெண்குழந்தை
உனக்குப்  பிடிக்காது  என்று
தெரிந்து தானோ என்னவோ
பிறக்கும் போதே இறந்து பிறந்தது
மூன்றாவது சரி உன் விருப்பம்  போல
பிறக்கும் என்று நினைத்தோம்
அதுவும்  பெண்குழந்தை

முடவனுக்கு தான் தான் தெரியும்
காலின் அருமை
குருடனுக்குத்தான் தெரியும்
கண்களின்  அருமை
குழந்தைகள் இல்லாதவர்களுக்குத் தான் தெரியும்
குழந்தைகளின் அருமை 

மூன்றுக்கு மேல் பெறமுடியாத நிலை
தொடர் பிரவசம் அறுவை சிகிச்சை என
உடல் நலிவுறத் தொடங்கியது
என் இளமை குன்றியது
உன் அன்பும் குறையத் தொடங்கியது

வீட்டில் இருப்பதும் குறையத் தொடங்கியது
ஓவர் டைம் ஆபீஸ் டூர் என
காரணங்கள் பல
உன்  கருத்தினில் உதித்தன
குழந்தைகள் மேல் எரிந்து  விழுந்தாய்
தொட்டதுக்கெல்லாம்  குறை கண்டாய்

குடும்பத்தின் மேல் உண்டான வெறுப்பு
குடிக்கு நண்பன் ஆனாய்
குடியை கெடுக்குமாம் குடி
நம் வாழ்வில் அது உண்மை ஆகியது

உலை வாயை மூடினாலும்
ஊர் வாயை மூட முடியுமா
என் காதுக்கும் வரத் தொடங்கியது
உனக்கும் வேறு பெண்ணுக்கும் தொடர்பு
இருக்கிறது  என்ற செய்தி

என் வாழ்வில் விழுந்த இடி
அந்த செய்தி
ஒரு நாள் என் கண்ணால்  கண்டேன்
அவளும் நீயும் கை கோர்த்து சொல்வதை

நீ இப்படி செய்வது நியாயமா
இதை கேட்கப் போய்
பூகம்பம் வெடித்தது எங்கள் வாழ்வில்
சண்டை சச்சரவு அடிதடி என
எங்கள் குடும்பம் இரண்டு பட்டது

ஒரு நாள்
சொல்லாமல் கொள்ளாமல்
பிரிந்து சென்றாய் எங்களை விட்டு
அப்பா எங்கேம்மா
எனும் குழந்தைகளின் கேள்விகளுக்கு
பதில்  சொல்லத்  தெரியாமல் 
தவித்து நிற்கிறேன்  நான்
« Last Edit: December 09, 2018, 07:06:43 AM by thamilan »

Offline Guest 2k

பிரிதல் நிமித்தம்

மரத்திலிருந்து
இலை உதிர்வது போல
எளிதாக உதிர்கிறது
ஒரு உறவு
மறந்து கொண்டே இருப்பது
நம் இயல்பெனினும்
நினைவுறுத்திக் கொண்டே இருப்பது
இப்பிரபஞ்சத்தின் கடமைப் போல
இந்த கூட்டின் நினைவுகள்
அறுக்க அறுக்க
புதியதொரு நினைவு பிறக்கிறது

நதியின் இருகிளையென
பிரிந்து
வெவ்வேறு பாதைகளில்
நாம் நின்றிருந்தாலும்
எப்பொழுதோ ஒரு நாள்
தாய்நிலத்தின் மடியில்
நாம் இணைந்திருந்த கணம்
சத்தியம் தானே

சரிவிலிருந்து மேலேறும்
ஒவ்வொரு நொடியும்
சிதைந்து கிடைக்கும் இக்கூடு
மீண்டும் உள்ளிழுக்கிறது
எதிர்காலத்திற்காகவேனும்
இந்த இறந்த காலத்தை
ஏமாற்ற
நினைத்து
அச்சுழலில் மீண்டும் சிக்கிக் கொள்கிறேன்
ஒவ்வொரு புரிதலும்
ஒரு வெறுப்பாகியிருக்கிறது
ஒவ்வொரு உன்மத்தமும்
காரணமற்றதாகியிருக்கிறது
ஒவ்வொரு நொடியும்
ஒரு சாபமாகியிருக்கிறது

போகும் இடமும் தெரியவில்லை
இந்த பாதையின் நீளமும் அறிந்திருக்கவில்லை
கூட வரவும் யாருமில்லை
வழிகாட்டவும் நீயில்லை
நீ விட்டுச் சென்ற கால்தடங்களின்
வழிகொண்டு இப்பயணத்தை
தொடர்ந்தாக வேண்டும்
ஏனெனில்
பறக்கவொரு சிறகும்
விரிக்கவொரு வானமும் கொண்ட
இந்த சிறு பறவைகளின் கனவை
சிதைக்க நாம் யார்?

சட்டத்திற்கு என்ன தெரியும்?
சாட்சியங்கள் என்ற
தோற்றப் பிழைகளைத் தான்
தெரியும்
நம் வாழ்வின் நீட்சியென
விரல் கோர்த்து நின்றிருக்கும்
இக்குழந்தைகளுக்கு
சட்டதிட்டங்களை விடவும்
உன்னுடன் கழிந்த
உன்னதமான தருணங்களைத் தான்
தெரியும்
நம்மிடையே
ஆயிரம் குற்றப் பட்டியல்கள் இருப்பினும்
இந்த குழந்தைகளுக்காகவாவது
சிறு முத்தத்தை
நீ விட்டுச் சென்றிருக்கலாம்

மீண்டும் மீண்டுமென
நினைவுகளைக் கிளறிக் கொண்டிருக்கும்
கிழிந்து போன
இந்நிழற்படத்தில்
மிச்சம்
ஒட்டிக்கொண்டிருப்பது
உன் சுண்டுவிரலா அல்லது
உன் நினைவுகளா

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
அண்ணனையும் தம்பியையும்
அப்பனையும் ஆத்தாளையும்
வம்புக்கிழுத்து வசைபொழிந்து
போனதனால் , சிறுக்கி மகள்
கிறுக்கி அவள்,
எனைக்கிழித்துப்போட்டாளே!

பத்து சவரன் நகை கேட்டா
சொத்த வித்தா வாங்குறது?
பத்து நாளு பொறுடி என்றேன்
பாதகத்தி கேட்கலையே!
பணம் புரட்டி திரும்பும் முன்னே
சிறுக்கி மகள்கிறுக்கி அவள்,
எனைக்கிழித்துப்போட்டாளே!

அன்பான தங்கை ஒன்று
அருமருந்தாய்  எனக்கிருக்க
அவளுக்கு சீர் செனத்தி
செய்வதெல்லாம் கண்ணுறுத்தி
கோபம் கொப்பளிக்க ,
சிறுக்கிமகள் கிறுக்கி அவள்,
எனைக்கிழித்துப்போட்டாளே!

மணமான என் மாமா பொண்ணு
குணமான என் குரங்கு பார்க்கையிலே
நலமான்னு கேட்டாளே! அய்யா
நான் வீடுவந்து சேரும்முன்னே
சிறுக்கிமகள் கிறுக்கி அவள்,
எனைக்கிழித்துப்போட்டாளே!

கோபத்தில் கிழித்ததெல்லாம்
குப்பைக்கு போனாலும்
சாந்தமாக இப்போவெல்லாம்
சிறுக்கிமகள் கிறுக்கி அவள்,
முத்தம் தினம் தாராளே!
« Last Edit: December 09, 2018, 05:29:03 PM by பொய்கை »

Offline Guest

நான் புரிதலைப்பற்றி
பேசுகிறேன் - நீதான்
அதனை பிரிதல் என்று
எடுத்துக்கொண்டாய்.....
*
துரோகங்களின் வரலாறு
சொல்கிறாய் - நான்
துரோகித்ததாய் சொல்லவே
இல்லையே...
புரிந்துகொள் நீ...
*
நியதிகள் வகுத்த
வகுப்பறையில் நீயும் நானும்
நிசப்தம் கொண்டமர்ந்தோம்
பிறந்து விழுந்ததுதானே
உனதும் எனதுமான இது....
*
நீதி கேட்டுச்செல்வதெங்கே
நியதிகள் வகுத்த நாமேதான்
நீதியறியவேண்டும்....
*
புரிந்துகொள் நீ
நான் பிரிவதைசொல்லவேயில்லை
புரிந்துகொள்ளச்சொன்னேன்
என்னை
புரிந்துகொள்ளச்சொன்னேன்....
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Grand Max

  • Newbie
  • *
  • Posts: 21
  • Total likes: 54
  • Karma: +0/-0
  • Gender: Male
  • mazhai ...... ada mazhai ....
ராத்திரியில்
கண்ணயர்ந்து நான்
உறங்கும் வேளை- திடிரென்று
விழித்தெழுந்தேன்
உன் நினைவால்....
படபடத்தது மனது
என்னவளுக்கு என்னானது என்று..
எழுந்து நானும்
வெளியில் சென்று - அந்த
ஆகாயத்தை பார்த்த போது
அந்த முழு நிலவில்
உன் முகம்.........
பதறிய என் மனம் கண்டு
திங்கள் அது....

"உன் அவள் தூதாக
அனுப்பினாள் எனை அழைத்து
என்னவன் ஏங்குகிறான் அங்கு
கவலையொன்றும் வேண்டாம்
உன் கன்னியவள்
நலமாக உள்ளாள் இங்கு என்று..."

நன்றி பயத்தேன்
அந்த செம்மதிக்கு - என்
இல்லாளின் இனிய செய்தி
இடரின்றி கொண்டு வந்ததற்கு....
"உன் செய்தியும்
நான் கொண்டு போகின்றேனே
உன்னவள் இன்னும்
உறங்கவில்லை -என்
வருகைக்காய் என்று
விடை பெற்று
நகர்ந்தது அந்த வெண்ணிலவு....


Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..


இருமனம் இணையா திருமண..
ஒப்பந்தங்கள் !
வாழ்க்கையை வழக்காகும் ..
நிர்பந்தங்கள் !

கரை சேர்ப்பான் என்று எண்ணி ..
கால கடலில் பயணித்தால்....
ஆழ்கடல் சூறாவளியில் ..
தனியே தவிக்க விட்டு ...
தான் மட்டும் தப்பித்து ஓடும்....
நம்பிக்கை துரோகிகள் !

மண்ணில் விதைத்த விதைகளை...
பயிராகும்முன்னே ...
வேரோடு பறித்து ...
உயிர் கரி சமைக்கும் ...
கொடூரமானவர்கள் !


உறவு கொண்டு உயிர்கள் கொடுத்து ..
உள்ளம் உலர இரக்கம் இல்லாமல்
சுமைகளை மட்டும் தள்ளி விட்டு
சுகங்கள் தேடி ஓடும்
கோழைகள் ..

பிஞ்சுகளை கொடுத்துவிட்டு ...அதன்
நெஞ்சங்களை பிய்த்து....
வல்லூறுகள் பறக்கும் ..
உலகில் தனியே தவிக்க விட்டு
சென்ற கொலையாளிகள்!

பெண் என்பவள் உங்களை போல்
பேடி அல்ல ...
அவள் எத்தனை துன்பம் வந்தாலும்
எதிர் கொண்டு  காக்கும் ...
ஆண்மை கொண்ட வீராங்கனைகள் !

வாலிப திமிரில் திரியும் ...
உங்கள் காலங்கள் யாவும் ..
காத்து கொண்டு இருக்கின்றன ..
எப்போது அதையெல்லாம் .....
வட்டியோடும்...வியாதியோடும் ..
வயோதிகத்தில் திருப்பி தர ..!

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
நாங்கள் பிறந்தபொழுது
எங்கள் உயிரின் பொருட்டு
மருத்துவரின் கைபிடித்து
நீ அளித்த பணம்
யாரோ வட்டிக்காரனிடம் அடமானமாய்
வைத்த உன் கைகளின் விலை

நாங்கள் வளர்ந்தபொழுது
எங்கள் கல்வியின் பொருட்டு
ஆசிரியரின் கைபிடித்து
நீ அளித்த பணம்
யாரோ வட்டிக்காரனிடம் அடமானமாய்
வைத்த உன் கைகளின் விலை

எங்கள் தேவைகளின் பொருட்டு
எங்கள் ஆசைகளின் பொருட்டு
இத்தியாதி இத்தியாதிகளின் பொருட்டு
நீ அளித்த பணம்
யாரோ வட்டிக்காரனிடம் அடமானமாய்
வைத்த உன் கைகளின் விலை

யாரோ வட்டிக்காரன் வலையில்
எங்களின் பொருட்டு
உனையே விலை வைத்த நீ
எழமுடியாமல் எமனின் கைகளில்
வீழ்ந்து கிடக்கிறாய்
எங்களை கரைசேர்க்கும் வழியில்
தொலைந்து போனது நீ தான்
நல்வாழ்வென நீ அளித்த
இவ்வுலகில்
உன் துணையின்றி தவித்திருக்கிறோம்
விலை வைத்த உன் கையினை
ஒருமுறையேனும் அன்புடன்
பற்றிடும் நிலையில்லை இனி
இந்த கைகளைப் பற்றி
உலகை சுற்றி வரும் பேறு இல்லை இனி
இந்த கைகளைப் பற்றி
கடுமைகளை கடந்திடும் வழி இல்லை இனி
கிழிந்து கிடைக்கும் இந்த புகைப்படத்தில் கூட
உன்னுடைய கைகள்
எங்களுக்கு சொந்தமில்லை
« Last Edit: December 11, 2018, 09:58:43 AM by ThoR »

Offline SweeTie


அத்தை பெத்த ஒத்தை  மவன்
ஊரெல்லாம்  கெட்ட  பேரு   உருப்படமாட்டான்  என்று
என்ன கட்டிவைச்ச பெரியவங்க  காடேறி  போயாச்சு
செத்தாலும் உன்ன விட்டு போக மாட்டேண்டி என்று
சத்தியமும் செஞ்சுதான் கைபுடிச்சான் - இப்போ
 கொண்டவள  விட்டு கண்டவள நம்பி
எங்கள  கிளிச்செறிஞ்சு  போய்ட்டானே 

ஆசைக்கு  ஒரு புள்ள  ஆஸ்திக்கு ஒரு பொண்ணு
அளவோட  பெத்து  அன்போட வாழ்ந்திருந்தோம்
ஊரோட கண்ணு   நாய்கண்ணு  பேய்கண்ணு
அத்தனையும்   பட்டிருச்சோ எங்கமேல
வெளங்காம  போச்சு   என் வாழ்க்கை
இப்ப திண்டாடித்  தவிக்கிறனே
எங்கள கிழிச்செறிஞ்சு  போய்ட்டானே

ஆரோ பாதகத்தி  அடு த்த ஊரு சிங்காரி
ஒத்த பார்வையில  கவுத்துப்புட்டா  இவன் மனச
ஆறு முழம் சேலையில  என் அழகு தெரியலயாம்
காலில  கிழிஞ்ச கால்சட்ட போட்ட புள்ள
பாத்ததுமே பத்திருச்சாம்  பாவி மவன் இவனுக்கு
விழுந்தவர்தான்  சீமத் தொர எந்திரிக்க முடியாம
எங்கள கிழிச்செறிஞ்சு  போய்ட்டானே


புள்ள பொறுப்பும்   போச்சு பொண்டாட்டி நினைப்பும் போச்சு
புதுப்பொண்ணு மயக்கத்துல மச்சான்
கதி கலங்கி நிக்கிறாரு 
தொண்ணூறு நாள் போனா    புத்தி நிலைக்கு வரும்
புதுப்பொண்ணு மயக்கம்  தணியும்
புத்தி நிலைக்கு வந்தா புள்ள நினைப்புவரும் 
புத்திகெட்ட  சண்டாளன்
எங்கள கிழிச்செறிஞ்சு  போய்ட்டானே
 

பச்சைக்கிளிபோல   வீட்டுக்காரி இருந்தாலும்
குரங்கு போல  ஒன்னு கூடவே இருக்கும் ஏன்னு
பாட்டி சொன்ன கதை ஞாபகம்தான் வருது இப்போ
பெண்ணாக  பொறந்தா  பொறுக்கணுமாம்
பொறுத்த காலம் போய் டிவோர்ஸ் காலம் வந்தாச்சு
கிழிச்செறிஞ்சு போனவன கோடேத்த
நாங்களும் கெளம்பியாச்சு
 
« Last Edit: December 11, 2018, 03:03:08 AM by SweeTie »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.

உனக்காக   ஏங்கும் என் மனம்


என் கரம் கோர்த் த நாளில் இருந்து
உன்னை விட்டு பிரிந்ததில்லை
உன் மார்புப் படுக்கை இல்லமல்
என்றும் உறங்கியதும் இல்லை

வருடங்கள் கடந்திட
இரு குழந்தைகளுடன் நம் வாழ்வு
எவ்வளவு பாசம் இருந்தாலும்
காகிதத்திற்கு தான் மதிப்பு இவ்வுலகில்

பணம் எனும் காகிதத்தை தேடி
என்னை பிரிந்தாய் அன்பே
உன் மூச்சுக் காற்று இல்லாத இடத்தில்
நானும் நடை பிணமானேன்

எவ்வளவு தொலை தொடர்பு இருந்தாலும்
உன் தொடுகை எதிலும் கிடைக்கவில்லை
எத்தணை முத்தத்தின் சத்தம் கேட்டாலும்
என்  இதழால் அதை சுவைக்க முடியவில்லை

மகளின் முகத்திலும் மகனின் குரலிலும்
அடிக்கடி உன்னை காண்கிறேன்
இப்பிரிவு நிரந்தரம் இல்லை என்றாலும்
ஏனோ உனக்காக  எங்கும் என் மனம்

« Last Edit: December 11, 2018, 07:11:13 PM by NiYa »