கல்லறை கல்வெட்டுகளில் நீ ...
வாசகமாகி போனதால்..
இன்று கண்ணீர்க்கும்...
யாசகம்கேட்டு நிற்கின்றேன்!
வாழ்க்கையை வரமாக்கி ...
காதலை உரமாக்கி.....
இன்பத்தை பரிசாக்கி...
இருளோடு கலந்து விட்டாய்!
உன் நியாபக சுரங்கத்தில் ...
புதையலை தேடி அலைகிறேன்!
கிடைத்தது என்னவோ ...
வெறுமையின் நிழல்களைத்தான்!
கால வெளியில்...தனிமை துகளாய்....
ஜீவன் சுமந்து திரிகிறேன்!
உன் முக சாயலில் ..ஒருவரை கண்டாலும் ..
நின்று விடுகிறேன் நினைவு தூணாய்!
அன்று மூச்சை நிறுத்தி ...
மரணத்தை தேடி நீ !
இன்று ரணங்களில் உழன்று ..
நிம்மதி தேடு ஆவியாய் நான் !
என் உயிர் காற்று வாங்கி ..
சொர்க்கத்திற்கு சென்றுவிட்டாய் !
இவ்வுலகில் ..
நடைபிணமாய் நரக வாழ்க்கை ..
வாழ்ந்துவிட்டு வருகிறேன்! போ!