Author Topic: !!!!!!மழை!!!!!!!!  (Read 701 times)

Offline இளஞ்செழியன்

!!!!!!மழை!!!!!!!!
« on: November 15, 2021, 12:18:44 PM »
மழை பெய்த நாளின்
அடுத்த நாளில் ஓய்ந்து கிடக்கும்
வானம் தெருவெங்கும்
தேங்கிக் கிடக்கும் நீரில் விழுந்து கிடக்கிறது
முட்டிக்கால் வரை தூக்கிச் சுருட்டிய
உடைகளோடு வானத்தின் மீதேறி மிதித்து
நடந்து செல்கிறார்கள் மனிதர்கள்
மழையை சபித்தபடி...,
வீட்டுக்கூரையையும் தெருவையும்
நனைத்தவிட்டு கணுக்கால் வரை
தேங்கிக் கிடக்கும் மழையிடம்
யாதொரு பிணக்குமில்லை அவர்களுக்கு,
மழைக்கும் தெரிவதில்லை
தான் வாசல் வரை மட்டும்
வந்து செல்லக் கூடிய விருந்தாளி என்று,
இது புரியாமலேயே
விரும்புகிறார்கள் மனிதர்களென்று
வீட்டு அடுக்களை வரை எட்டிப்பார்த்துவிட்டு
மனிதர்களின் சலிப்பினையும் வெறுப்பினையும்
பரிசாய் வாங்கிக் கொண்டு
கோடையில் கொளுத்தும் வெயிலில்
மீண்டும் என்னைத் தேடுவீர்கள்தானே...
அப்போது பார்த்துக் கொள்கிறேன்
கடிந்தபடியே
உறிஞ்சும் வரை மெளனமாய்
படுத்துக் கிடக்கிறது பூமி மீது...
அடித்துப் பெய்தாலும் அழித்துக் கொன்றாலும்
மழை என்னவோ மழைதான்...
அதற்கென்ன மனதா இருக்கிறது...
ஆனால் மனிதர்கள்தான்....
பிழைகளோடு ஆனவன்...