FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on January 11, 2018, 09:28:25 AM
-
காதல் மழையில் கொட்டும் கவிதை
கறையான் அரித்த இதயக் கலங்களில்
உறைந்து உருப்பெற்று
நித்தமும் நிழலாடும்
காற்றில் மிதக்கும் காதல் வரிகள்
சுமக்கும் நினைவு அலைகள்
சேற்றில் பூத்த செந்தாமரையும்
மாலை வருடலில் வாடும்
காதல் நோயில் வாடும் தலைவன்
கண்கள் தேடும் பொன்வண்டு
தெரிவாள் சிலைபோல்
வருவாள் அருகில் மறைவாள்
முகிலுள் நிலா போல்.
-
ஜெகா தம்பி கூட சேர்ந்து சேர்ந்து
அந்த காதல் கரையான் உங்களையும்
அரிச்சிடிச்சி போல ;D ;D
அந்த நிலவு மறைவதற்குள் ஜெகா
தம்பிக்கும் சொல்லிடுங்க ;)
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
-
கவிதை அருமை ஸ்வீட் மா
காதல் நோயில் வாடும் தலைவன்
கண்கள் தேடும் பொன்வண்டு
தெரிவாள் சிலைபோல்
வருவாள் அருகில் மறைவாள்
முகிலுள் நிலா போல்.
:-[ :-[ :-[woow அருமை ஸ்வீட் மா
கவிதைகள் தொடரட்டும்
-
நன்றி ஜோக்கர் ஜெகா .....