காதல் மழையில் கொட்டும் கவிதை
கறையான் அரித்த இதயக் கலங்களில்
உறைந்து உருப்பெற்று
நித்தமும் நிழலாடும்
காற்றில் மிதக்கும் காதல் வரிகள்
சுமக்கும் நினைவு அலைகள்
சேற்றில் பூத்த செந்தாமரையும்
மாலை வருடலில் வாடும்
காதல் நோயில் வாடும் தலைவன்
கண்கள் தேடும் பொன்வண்டு
தெரிவாள் சிலைபோல்
வருவாள் அருகில் மறைவாள்
முகிலுள் நிலா போல்.