Author Topic: பொன்வண்டு  (Read 359 times)

Offline SweeTie

பொன்வண்டு
« on: January 11, 2018, 09:28:25 AM »
காதல் மழையில் கொட்டும் கவிதை
கறையான்  அரித்த   இதயக்  கலங்களில்
உறைந்து  உருப்பெற்று
நித்தமும் நிழலாடும்

காற்றில் மிதக்கும்  காதல் வரிகள் 
சுமக்கும்  நினைவு அலைகள்
சேற்றில் பூத்த செந்தாமரையும்
மாலை   வருடலில்  வாடும்

காதல் நோயில்  வாடும் தலைவன்
கண்கள் தேடும்  பொன்வண்டு
தெரிவாள் சிலைபோல் 
வருவாள்  அருகில்  மறைவாள்
முகிலுள்   நிலா போல். 
 

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: பொன்வண்டு
« Reply #1 on: January 11, 2018, 05:03:31 PM »
ஜெகா தம்பி கூட சேர்ந்து சேர்ந்து
அந்த காதல் கரையான் உங்களையும்
அரிச்சிடிச்சி போல ;D ;D

அந்த நிலவு மறைவதற்குள் ஜெகா
தம்பிக்கும் சொல்லிடுங்க  ;)

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeGaTisH

Re: பொன்வண்டு
« Reply #2 on: January 11, 2018, 10:43:06 PM »
கவிதை அருமை ஸ்வீட் மா

காதல் நோயில்  வாடும் தலைவன்
கண்கள் தேடும்  பொன்வண்டு
தெரிவாள் சிலைபோல் 
வருவாள்  அருகில்  மறைவாள்
முகிலுள்   நிலா போல். 

 :-[ :-[ :-[woow அருமை ஸ்வீட் மா


கவிதைகள் தொடரட்டும்


Offline SweeTie

Re: பொன்வண்டு
« Reply #3 on: January 13, 2018, 05:09:04 AM »
நன்றி  ஜோக்கர்   ஜெகா .....