« on: July 30, 2018, 07:12:12 PM »
அன்பான நண்பன்
அரட்டை அரங்கத்தில்
ஆனந்தமாய் பேசிக்கொண்டிருபான்
இசை துணை கொண்டு
நண்பரின் பிறந்த நாளுக்கு
மெட்டுக்கு வார்த்தைகளையிட்டு
அழகாய் பாடி
மகிழ்ச்சியில் ஆழ்த்திடுவான்
பிறர் மனம் நோகாமல் பேசுவது
இவனுக்கு கை வந்த கலை
பல மொழி அறிந்தவன்
பல கலைகளும் கொண்டவன்
இவன் எழுதிடும் கவிதைகளுக்கு
என்றும் நான் ரசிகன்
அரட்டை அரங்கத்தில்
வேடிக்கையாய் பேசிடுவான்
விளையாட்டுகள் அடிக்கடி நடத்திடுவான்
பவர்,
என்றும் உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சியும் , ஆனந்தமும் குடிகொள்ள
உங்கள் மனம் விரும்பும் வாழ்வு அமைய
இறைவனை பிரார்த்திக்கிறேன்
****ஜோக்கர் ****
« Last Edit: July 30, 2018, 07:19:51 PM by joker »
Logged
"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "