இரகசிய கேள்வி ஒன்று கேட்டாள்...!!
இரகசியமாய் பதிலுரைக்கச்சொன்னாள்...!!
இரகசியமாய் யோசித்துக்கொண்டிருக்கிறேன்..!!
கேள்வியின் இரகசியம் புரியவில்லையாதலால் இரகசியமாய்
யாரிடமும் விசாரிக்கவியலவில்லை..!!
இன்னும் அந்தக்கேள்வி
விடைதெரியாமல் இரகசியமாய் இருக்கிறது...!!
.
பெருவெளிச்சத்தினூடே ஊடுருவும்
காரிருள்போல் மிகக்கூர்மையானது...!!
.
காரிருள் பிழந்து நீண்டுசெல்லும் மெல்லிய
வெள்ளிச்சுருள் போன்றது அது....
.
விடையறியா கேள்விகளின்
குவியல்களினின்றும் பொறுக்கியெடுத்த
கேள்வியாய் இருக்கலாம்...
.
ஒரு பேரிடரில் அடித்துச்செல்லப்பட்ட குழந்தையின்
ஏன் அடித்துச்செல்லப்படுகிறேன்
என்ற கேள்வியின் விடை தெரியாமல்
மரணித்துப்போன இதயத்தில்
இரகசியமாய் இருக்கிறது அந்தக்கேள்வி..
.
ஏன் உயிர்பிழைத்தேன் எனும் உறுப்புகள்
உலைந்த வயோதிகரின் பொதுக்கேள்வியின் எதார்த்த
விடைறியாத தேடலில் வெட்கித்து நிற்கிறது அந்தக்கேள்வி....
.
சுயம் சதா எழுப்பும் கேள்விகளின்
பொது தரவுகள்கள் தரும் விடைகளின் ஒவ்வாமை
எழுப்பும் புதிய கேள்விகள்
அவள்
கேட்ட இரகசிய கேள்விபோல்
விடைகளற்று நிற்கிறது....