சேய் உறங்கும்
பஞ்சு மெத்தையிலும்
முள் இருந்திடுமோ என
உள்ளம் பதறும்
உன்னத உறவே
"தாய்"
எட்டா உயரம் என
நெஞ்சம் அறிந்தும்
தன் பிள்ளைத் தொடுவதற்காய்
விண் முட்டும் ஏணி தேடும்
ஆசை நெஞ்சம்
"தந்தை"
வாயும் வயிறும் வேறாகினும்
ஆயிரம் மோதல்கள் கண்டிடினும்
ஆபத்தென அறிகையில்
ஒரே கருவறையில் வந்தோம் என
தன் பந்தத்துக்காய் வரும்
அன்பு பந்தமே
"உடன்பிறப்பு"
தோற்றத்தில் குறை எனினும்
சுபாவத்தில் வழு எனினும்
வாதங்கள் பல எழும்பினும்
தன் துணை மீது
கொண்ட அன்பினை
துரோகம் அண்டாது,
பசுமை மாறாது பேணுவதே
"உண்மைக்காதல்"