தினம் காத்து கிடக்கின்றேன்
அவள் முகம் காண விரைகின்றேன்
நகல் தெரிய நிற்கின்றாள் . '
பித்துபிடித்து போனேன் அவள்
மொத்த அழகையும் பார்த்து !
எட்டுப்போல் இடுப்பழகும்
பட்டுப்போல் மேனியின் பளபளப்பும்
புடம் போட்ட தங்கம்போல் நாசியும்
வடிவான சங்கு கழுத்தும்
குட்டி குதிரைவால் கூந்தலும்
நாய்க்குட்டிபோல் என்னை ஈர்த்ததே
நிழல் பார்த்த கணத்தில் என்னுள்
காதல் கொழுந்து விட்டு எரியுதடி
உடல் வேர்த்து விறுவிறுக்க
மனம் எனோ பதை பதைக்க ,
கால்கள் நிலை தடுமாறுதடி
நித்திரையில் வந்த பெண் மயிலா?
நித்தமும் என் நினைவில் நின்றவளா?
வைகறையில் பூத்த தாமரையா ?
தேன் மதுரை தமிழ் கொஞ்சும் தேவதையா?
கண்முன் வந்துபோன கன்னியரோ
அழகழகாய் ஆயிரம் பேர்
ஏறெடுத்தும் பார்க்காத என் மனசு
உன் நிழல் பார்த்து காதலுற்றேன்
காரணமும் நானறியேன்
செக்க செவந்தவளோ
செவ்வாழை போன்றவளோ
கன்னக்குழி தெரிய
கலகலத்து சிரிப்பாளோ
காத்துக் கிடக்கின்றேன் அவள்
கண்ணோடு கண் நோக்க !!!
ஏறெடுத்து பார்ப்பாளா?
ஏளனமாய் சிரிப்பாளா?
காதல் ஒரு கேடா என்று '
கைகொட்டி சிரிப்பாளா?
யானறியேன் பராபரமே !
நின்னை சரணடைந்தேன் !