காற்றில் மிதக்கும் இறகு போல...
இருக்கிறது இந்த வாழ்க்கை....
எந்த திசையென்றறியாது
இடமாய், வலமாய், மேலாய், கீழாய்....பறந்து பறந்து...
எங்கேதான் சென்று கொண்டிருக்கிறேன் நான்...?
உறக்கம் கலைந்து எழுவது போல..
ஏதேனும் ஒரு புது உலகத்துக்குள்...எழுப்பி விடுமோ
இந்த வாழ்க்கையின் முடிவு.. என்னை...?