Author Topic: செப்டம்பர் மாத ராசி பலன்கள் -  (Read 2715 times)

Offline kanmani

மேஷம்

மேஷம்:மாணவர்கள் குருவின் அருளால் சிறப்பாக படிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் மீது ஆசிரியர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். அதிகாலையில் எ ழுந்து படித்தல் உங்கள் திறமையை இன்னும் கூட்டுவதாக அமையும். வெள்ளி மற்றும் தங்க நகைகளை வெளியூர் பயணத்தின்போது குறிப்பாக இரவு  நேரப் பயணங்களில் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் உங்களின் முயற்சிக்கு உரிய அங்கீகா ரம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மிகவும் உதவுவார்கள். அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

 திருமண விஷயங்கள் நல்ல முடிவினை எட்டும். மனைவி வழி உறவினர்களால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் தரும். ஒ ன்று விட்ட சகோதரர்கள் தேடி வந்து உதவுவார்கள். அரசு சார்ந்த அலுவலகங்களில் வேலை பார்ப்போர் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண் டிய நேரம் இது. பன்னாட்டு நிறுவனங்களில் வேலையில் சேருவதற்காக காத்திருப்போர், இம்மாதம் நல்ல சம்பளத்தோடு வேலையும் கிடைக்கப் பெறு வீர்கள். தொழில் துறையில் இதுவரை காணப்பட்ட தடங்கல்கள் யாவும் நீங்கும். வியாபாரத்தில் நஷ்டம் குறைந்து லாபம் அதிகமாகும்.

மற்றபடி  தொழிலில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம். 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை அனைத்து விஷயங்களிலும் படிப்படியாகவும் முழு கவனத்துட னும் செயல்பட வேண்டும். குடும்பத்தினருடன் கோபம் மற்றும் பரஸ்பர எதிர்வாதங்கள் எதுவும் வேண்டாம். அதாவது, வாழ்நாள் முழுவதும் ஏற்பட  இருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம். அரசியல்வாதிகள் எதிரிகளை வசமாக்கும் நூதனக் கவர்ச்சியைக் கைக் கொள்வீர்கள். பெற்றோர் சம்மதிக்காத திருமணங்களை இந்தக் காலத்தில் தள்ளிப்போடுவது நல்லது. அதிகமான முதலீடுகளை போட்டு விழிக்க  வேண்டாம்; புதிய கடன்கள் வேண்டாம்.
.

அச்சாரங்கள்:

16, 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் இரவு மற்றும் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம். 26ம் தேதிக்குப் பிறகு மேற் கொள்ளும் எந்தப் பிரயாணத்திலும் முழு கவனம் தேவை.

எச்சரிக்கை:

4ம் தேதி காலை 10:00 மணிக்குள்ளும், 11ம் தேதி காலை 9:00 மணிக்குள்ளும், 26ம் தேதி காலை 10:00 மணிக்குள்ளும் புதிய ஒப்பந் தங்கள் செய்ய நன்று.

பரிகாரம்:

முருகன் கோயில் தரிசனம், நவகிரக ஹோமம் நடைபெறும் இடத்தில் இருத்தல் ஆகியவை நன்மை தரும்.


ரிஷபம்

ரிஷபம்:மாணவர்கள் இம்மாதம் நிறைய படிக்க வேண்டியிருக்கும். கல்வி சம்பந்தமான அலைக்கழிப்புகள் இருக்கும். பொதுவாக ரிஷப ராசியினர் 11ம் தேதி வரை அதிகப்படியான வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த பெரிய மாற்றமும் இல்லாவிடினும் வீடு, மனை வாங் கும் திட்டங்கள் தற்போது நிறைவேறும். வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். 27ம் தேதிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட்டுகளில் ஈடுபடுவது லாபம் தரும்.  அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு பணிச்சுமையால் சில சிக்கல்கள் ஏற்படும். இரவு நேரப் பிரயாணங்களில் தகுந்த துணையோடு செல்லுங்கள். நிர்வாகப் பொறுப்புகள் கூடுவதால் கீழ்மட்ட அலுவலர்களுடன் சுமுகமாக இருப்பது நல்லது. மேலதிகாரிகளின் எதிர்ப்பு குறையும்.

புதிய டெண்டர்களில் ஒப்புதல் கையெழுத்திடும்போது துணிச்சலுடன் செயல்படலாம். தொழிலதிபர்களுக்கு தங்களின் துறைகள் நல்லபடியாக இயங்குவதை  பார்க்கலாம். 11ம் தேதிக்குப் பிறகு பொறுப்புடன் பெரிய செயல்களில் ஈடுபட வேண்டிவரும். மருந்து கம்பெனிகள், கல்வி சம்பந்தமான தொழில்கள் நல்ல முன்னேற்றம் காணும். வியாபாரிகள் 11ம் தேதிக்குப் பிறகு எடுத்த செயல்களில் வெற்றி  பெறுவார்கள். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான நிலைமை இருக்கும். போட்டியாளர்களை வெல்ல அவர்களின் வேலையாட்களோடு மோத வேண்டியது வரும்.

26ம் தேதிக்குப் பிறகு உறவினர்களின் உதவியுடன் வியாபாரத்தில் முதலீடுகளை அதிகரிக்கலாம். அரசியல்வாதிகள் முழுமையான மன  உறுதி கொண்டு எதிரிகளை வெற்றி காண்பீர்கள். கலைஞர்கள் தங்கள் உதவியை நாடி வருவார்கள். பெண் தொண்டர்களை சற்று சாந்தமாகப் பேசி  அமைதிப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். பெரிய இன்ஜினீயரிங் காண்ட்ராக்ட்களில் உள்ள பிரச்னைகள் தங்கள் முயற்சியால் தீர்வுக்கு வரும். அதிகார மும் வலிமைமிக்க பதவியும் வரும் நேரமாதலால் சற்று கவனமாகவே இருங்கள்.
.

அச்சாரங்கள்:

7, 8, 9, 11, 12, 13 தேதிகளில் பிரயாணத்தில் கவனம் தேவை. 16, 17, 18 தேதிகளில் இரவு மற்றும் வெளியூர் பிரயாணங்களை மேற் கொள்ளும்போது எச்சரிக்கை வேண்டும்.

எச்சரிக்கை:

6ம் தேதி மதியம் 2:00 மணிக்குள்ளும் 25ம் தேதி காலை 11:30 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்யலாம்.

பரிகாரம்:

ஸ்ரீருத்ர ஜெபம் செய்வித்தல், அஷ்ட புஜ துர்க்கை தரிசனம், அக்னிபுரீஸ்வரர் எனும் திருப்பெயரில் அருளும் சிவாலயங்களை தரிசித்தல் மன நிம்மதியைத் தரும்.

மிதுனம்

மிதுனம்:உயர் கல்வி பயிலும் புதிய மாணவ நண்பர்களின் நட்பு கிடைக்கும். அதனால் உங்களின் கல்வித் திறன் அதிகரிக்கும். நுண்கலைகளில் ஆர்வம்  ஏற்படும். இதனால் பெயரும் புகழும் கூடும். 11ம் தேதிக்குப் பிறகு பழைய நண்பர்களின் வம்பான சேர்க்கையினால் வசிக்கும் இடத்தில் சண்டை ஏற்ப டும். பெண்களுக்கு மனம் ஒரு நிலையில் இருக்காது. கருவுற்ற பெண்கள் பிடித்த பெண் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு அமைதி கொள்வது அவசி யம். கடுமையான செய்திகளை பார்ப்பதைத் தவிர்க்கவும்.  அலுவலகத்தில் அளிக்கப்பட்ட வேலையை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். எல்லா சம யத்திலும் விழிப்புடன் இருப்பீர்கள். எனினும் ஒரு இடமாற்றம் ஏற்படும்.

தங்களின் மேல் வழக்கு விவகாரங்கள் ஏற்பட்டு சாதகமாக முடியும். 17ம்  தேதிக்குப் பிறகு கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்படும். கடனும் நெருக்கும். தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்கநிலை மாறும். திடீர் கோபங்களை குறைத்தல் நல்லது. வேலையாட்கள் அடங்கி நடப்பார்கள். 26ம் தேதி வரை பணவசதிகளும் லாபமும் அதிகமாவதைக் காண்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து முதலீடுகளை அதிகப்படுத்தலாம். பிறர்  கைவிட்ட கண்டெய்னர் ஒன்று உங்கள் வசப்படும். ஆச்சரியமான லாபமும் கிட்டும். வியாபாரிகளுக்கு  நிறைவான மாதமிது.

இசைக் கருவிகள், நடிகர் களின் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவை இம்மாதம் நல்ல லாபத்தைத் தரும். ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபடும் நல்ல வாய்ப்பொன்று 27ம் தேதிக்குப் பிறகு கைவரப் பெறும். அரசியல்வாதிகளுக்கு 16ம் தேதிவரை பணம் வீண் விரயமாகும் நிலைமை ஏற்படும். மற்றவர்களை கேவலமாகப்  பேசுதல், சூதாட்டம் இவற்றில் ஈடுபடத் தோன்றும். நீதிமன்ற வழக்குகள் தங்களுக்கு எதிராகச் செல்லும். எனவே, முருகன் வழிபாடு செய்து அமைதி யாக இருங்கள்.
.

அச்சாரங்கள்:

11, 12, 13 தேதிகளில் பிரயாணத்தில் கவனம் தேவை. சுயமாக வண்டி ஓட்ட வேண்டாம். 18, 19, 20 தேதிகளில் இரவு மற்றும் வெளியூர் பிரயாணங்கள் வேண்டாம்.

எச்சரிக்கை:

21ம் தேதி காலை 8:30 மணிக்குள்ளும் 27ம் தேதி காலை 9:00 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று.

பரிகாரம்:

திருவிடைமருதூரில் அருளும் ரிஷிபுரீஸ்வரர் கோயிலை தரிசித்தல், வயதான பெண்மணிகளுக்கு புடவை வாங்கித் தருதல், திருவொற்றியூர் வடிவுடையம்மன் தரிசனம் போன்றவை நல்ல பலன்களை தரும்.

கடகம்


கடகம்:ஒருபுறம் ஆடம்பரப் பொருட்கள் வாங்கிக் குவித்தாலும் கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மாணவர் குழுத் தலைமைக்கான தகுதிகள் உங் களிடத்தில் இப்போது வெளிப்படும்.  நுண்கலை, நடிப்பு, விளையாட்டுப் போட்டிகள் என்று ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கழுத்தின் மைய எலும்பு களில் வலி ஏற்படும். உடனடியாக மருத்துவரைப் பாருங்கள். பிறந்த வீட்டில் சொத்துப் பிரச்னைகள் ஏற்படும். தங்கள் நிலையில் கொஞ்சம் விட்டுக்  கொடுத்துப் போவது வழக்குகளை தவிர்க்க உதவும். அலுவலர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் 16ம் தேதிக்குப் பிறகு குறையும். பணவரவு அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடி குறையும். அலுவலக வழக்குகள் சாதகமாக முடியும்.

தொழிலதிபர்கள் குடும்பத்தினர் சொல்லும் பேச்சை மதிக்க வேண்டும். தொழில் முன்னேற்றத்திற்கு குடும்பத்தின் அனுசரிப்பு தேவைப்படும் நேரமிது.  தொழில் நுட்ப ஒத்துழைப்பும் நல்ல நண்பர்களின் சேர்க்கையும் கிட்டும். பெரிய கம்பெனிகளின் சங்கங்களின் தொடர்பு ஏற்படும். தொழில்வழி பயணம்  ஒன்று நன்மை தருவதாகவும் அமையும். அரசுக்கான வரிகள் முறையாக செலுத்தப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ரியல் எஸ்டேட், டிரான்ஸ் போர்ட், ஃபைனான்ஸ் துறைகளில் நல்ல லாபம் கிடைக்கும்.

சுற்றுலா, கம்ப்யூட்டர் உதிரிபாக வியாபாரங்கள் சிறந்த முறையில் லாபம் தரும். அரசியல்வாதிகள் நீண்ட பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆங்காங்கே உள்ள பிரச்னைகளை தீர்த்து வைக்க தலைமையின் உத்தரவு  கிடைக்கும். தென்மேற்கு திசைகளில் தொண்டர்களை கௌரவக் குறைவாக நடத்தாமல் எச்சரிக்கையாக இருங்கள். இந்த சமயத்தில் பணவசதி கொஞ் சம் குறைவாக இருக்கும். ஆனாலும் தங்களின் உழைப்பு உற்சாகத்தை அளிக்கும்.
.

அச்சாரங்கள்:

7, 8, 9, 18, 19, 20 ஆகிய தேதிகளில் பிரயாணங்களில் அதிக கவனம் தேவை. 26ம் தேதி முதல், மாத இறுதி வரை, நீண்ட மற்றும் இரவு பிரயாணங்களின் போது விலையுயர்ந்த உடைமைகளை எடுத்துச் செல்ல வேண்டாம்.

எச்சரிக்கை:

3ம் தேதி காலை 7:30 மணிக்குள்ளும் 15ம் தேதி காலை 9:00 மணிக்குள்ளும் 22ம் தேதி காலை 9:00 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங் கள் செய்யலாம்.

பரிகாரம்:

மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள பரசலூர் சிவன் தரிசனம், திருவண்ணாமலை கிரிவலம் செய்தல், இந்த்ராக்ஷி அம்மன் சந்நதியில் விளக்கு ஏற்றுதல் ஆகியவை நன்மையைத் தரும்.



சிம்மம்


சிம்மம்:மாணவர்களுக்கு நல்ல படிப்பினையைத் தரும் சம்பவம் ஏற்படும். எந்தச் செயலிலும் கடும் உழைப்பை கூட்டுவீர்கள். எதிர்கால திட்டங்களும்  வெளிப்படும். பாடங்களை எழுதும்போது எழுத்துகளில் பிழைகளும், கோர்வை இல்லாமலும் இருக்கும். முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் களை மனதில் நிறுத்திக் கொண்டு படிக்க வேண்டும். பள்ளி வாகனங்களின் அமைப்புகளை சரிபார்த்துக் கொள்ளவும். அவற்றால் 30.11.2012 வரை  இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். மூத்த சகோதரர் ஆதரவு உண்டு. வருமானம் அதிகரிக்கும்.

அலுவலகப் பெண்களுக்கு சக ஊழியர்களின் தொல்லை நீடிக்கும். மேலதிகாரிகளின் எதிர்பார்ப்புக்கு ஈடுதர முடியாததால் அவர்களின் அதிருப்திக்கு  ஆளாவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு இது முன்னேற்றமான நேரம். ஆரோக்யம் நன்றாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு  ஒப்பந் தத்தின் அடிப்படையில் நல்ல வருமானமுள்ள வேலை கிடைக்கும். 17ம் தேதிக்குப் பிறகு சொத்து விஷயமாக ஏற்படும் பிரச்னைகளை எச்சரிக்கை யோடும், நிதானத்துடனும் சீர்செய்து கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு வெளியூர் பயணங்கள் அனைத்தும் சாதகமான முடிவுகளையே தரும். பெரிய  மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். கறுப்பு நிற பொருட்களை வைத்து வியாபாரம் செய்வோருக்கு கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்படும்.

26ம்  தேதிக்குப் பிறகு தொழில் போட்டியாளர்களால் தொல்லை அதிகரிக்கும். ஆன்லைன் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கோர்ட்  விஷயங்களில் வெற்றி கிட்டும். அரசு வழிகளில் தொந்தரவுகள் நீங்கும். 26ம் தேதிக்குப் பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் உதவியினை நாடி வர  நேரிடும். புகழ், செல்வாக்கு, அந்தஸ்து போன்றவை உயரும். பழைய தவறுகளை திரும்பச் செய்யும் சூழ்நிலைகள் தோன்றும்; கவனமாக இருங்கள்.  தங்களுக்கு கீழ் வேலை செய்பவரின் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். 26ம் தேதிக்குப் பிறகு பிரயாணங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
.

அச்சாரங்கள்:

7, 8, 9 தேதிகளில் பிரயாணத்தில் முழு கவனம் தேவை. சுயமாக வண்டி ஓட்ட வேண்டாம். 18, 19, 20 தேதிகளில் இரவு மற்றும் வெளி யூர் பிரயாணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.

எச்சரிக்கை:

21ம் தேதி காலை 8:30 மணிக்குள்ளும் 27ம் தேதி காலை 9:00 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று.

பரிகாரம்:

விராலிமலை முருகன் தரிசனம், சஷ்டி விரதம் இருத்தல், திருமுருகாற்றுப்படை சொல்லுதல், கேட்டல் ஆகியவை நன்மையைத் தரும்.

கன்னி

கன்னி:மாணவர்கள் நுட்பமான அறிவு பெறும் வகையில் கல்வித்திறன் மேம்படும். உங்களின் திறமையைக் காட்ட சரியான வாய்ப்பும் கிட்டும். தங்கள் பிள் ளைகள் மேல் எந்த பழியும் ஏற்படாமல் காக்க பெற்றோர் கவனத்தோடு இருக்க வேண்டும். ஏனெனில் வகுப்புகளில் ஆசிரியர்-மாணவர்களுக்கிடையே  ஒற்றுமை குறையும். திருமணம், குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகள் கூடிவரும். குடும்பத்தில் தெய்வ நம்பிக்கை குறையாது பார்த்துக் கொள்ளுங்கள்.  வீட்டிற்குள்ளேயே அதிகமான வார்த்தை, வசவுகள் வேண்டாம். கணவருக்கு கால்வலி குறையும். குரு பாதுகைகளுக்கு அபிஷேகம் செய்வது நலம்  தரும்.

தாங்கள் உட்காரும்பொழுது கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படலாம், கவனம் தேவை. சகோதரர்களிடம் விரோதம் ஏற்படும். எதிர்பாராத  பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலைபளு அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பொறுப்பான வேலைகளில் இருப்போர் கடமையை  செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - களவு அபாயம் தெரிகிறது. 26ம் தேதிக்குப் பிறகு எல்லோருடனும் வீணாக சண்டை ஏற்படுத் திக் கொள்வீர்கள். அமைதியை கைக்கொள்வது நல்லது. தொழிலதிபர்களுக்கு தேக பலவீனம், பொருள் திருடுபோதல் போன்றவை ஏற்படும். திடீரெ ன்று இடமாற்றமும் செய்ய நேரிடும். நண்பர்கள் மூலம் பலவிதமான வசதிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

தேக்க நிலை மாற பழைய நடைமுறைகளை  மாற்றுவீர்கள். 27ம் தேதிக்குப் பிறகு டெபாசிட் முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரிகள் சட்டப் பிரச்னைகள், அரசாங்கத்தின் கேள்விகளால் தொல் லைகளை சந்திப்பீர்கள். எதிரிகளின் பலம் அதிகரிக்கும். ஆயினும் நவீன தொழில் நுட்ப கட்டுமான உபகரணங்களின் விற்பனை அதிக லாபத்தைத்  தரும். அரசியல்வாதிகளுக்கு அடிமட்ட தொண்டர்களின் தொல்லை அதிகரிக்கும். தொடரப்பட்ட வழக்கில் 17ம் தேதிக்குப் பிறகு தொய்வு ஏற்படும்.
.

அச்சாரங்கள்:

புகை சூழும் ஜெனரேட்டர் அறை, சமையல் கூடம் மற்றும் ஆய்வுக் கூடம் போன்ற இடங்களில் மாணவர்கள் பிரவேசிக்காதபடி பெற்றோ ரும், அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருத்தல் நல்லது. 16, 17, 18, 19, 20 தேதிகளில் பிரயாணத்தில் முழு கவனம் தேவை.

எச்சரிக்கை:

6ம் தேதி மதியம் 2:00 மணிக்குள்ளும், 25ம் தேதி காலை 11:30 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்யலாம்.

பரிகாரம்:

பௌர்ணமி விரதம் இருத்தல், அங்காள பரமேஸ்வரி தரிசனம், குரு பாதுகைகளை பூஜித்தல் போன்றவை நன்மை தரும்.


துலாம்

துலாம்:மாணவர்களுக்கு படிப்பில் கவனம் குறையும் சாத்தியம் தெரிகிறது. மறதியால் சில தொல்லைகள் ஏற்படும். ஆனாலும் சிரமங்களை சமாளிக்கும்  ஆற்றல் அவ்வப்போது குரு அருளால் கிட்டும். எதிலும் மனச்சோர்வு கொள்ள வேண்டாம். தீய நண்பர்களின் சேர்க்கை ஏற்படும் அபாயம் உள்ளது.  உயர் கல்வி கற்போருக்கு அரசு வழி உதவி கிட்டும். பெண்களுக்கு குறிப்பிட்ட சந்தேகப் பேச்சுகளால் குடும்ப ஒற்றுமைக் குறைவு ஏற்படும். மன  சஞ்சலம் நீங்க கருட தரிசனம் செய்யுங்கள். அலுவலகப் பெண்களுக்கு மேலதிகாரிகளின் உதவி, வேண்டிய நேரத்தில் கிட்டும்.

உத்யோகஸ்தர்களுக்கு  தர்ம செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நன்மை விளையும். எடுத்த காரியங்கள் இழுபறியாக இருக்கும். மீண்டும் மீண்டும் ஒரே வேலையை செய்து  முடிக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் சற்று விரக்தியான சூழல் நிலவும். வேலை தேடுபவர்கள் வெளிநாட்டு முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.  தொழில் துறையினர் வேலைகளை பூர்த்தி செய்ய அயராது உழைக்க முயல்வீர்கள். உழைப்பினால் உங்கள் செல்வாக்கு உயரும். எனினும் கடமை யைச் செய்கிறோம் என்கிற விரக்திதான் மேலோங்கி நிற்கும். பைனான்ஸ் கம்பெனிகளுடன் கூட்டு சேரும் வாய்ப்பு கிட்டும்.

உற்பத்தியாகி தேங்கி யுள்ள பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் கிட்டும். அரசியல்வாதிகள் 16ம் தேதிவரை அமைதியாக இருக்க முயற்சி செய்யுங் கள். எதிலும் ஒரு ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும். இதனால் பிரச்னைகள் தங்களை அணுகாது. நிதி வசதிகள் எதிர் பார்க்கும் அளவு இருக்காது. 26ம் தேதிவரை விரோதிகளின் தொல்லை மிகுந்திருக்கும். பெண்களால் கௌரவம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  சங்கடமான விஷயங்களை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ளுங்கள். தற்போதைய பதவியில் நீடிப்பது நல்லது.
.

அச்சாரங்கள்:

7, 8, 9, 11, 12, 13 தேதிகளில் பிரயாணத்தில் முழு கவனம் தேவை. 16, 17, 18 தேதிகளில் இரவு மற்றும் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம்.

எச்சரிக்கை:

4 ம் தேதி காலை 10:00 மணிக்குள்ளும் 20ம் தேதி காலை 12:00 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று.

பரிகாரம்:

ஐயனார் கோயில் யானை சிலைக்கு மாலை சாத்துதல், பெருமாள் கோயில் சக்ரத்தாழ்வார் தரிசனம் போன்றவை நன்மை தரும்.


விருச்சிகம்

விருச்சிகம்:மாணவர்களே, ஆசிரியர்கள் உங்கள் மேல் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். பொதுஜனத் தொடர்புகளில் சாதனை  செய்யும் வாய்ப்பு ஏற்படும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். அரசுவழி உதவிகள் எதிர்பாராமல் கிடைக்கும். கணவன் வழி உறவுகளால் பொன்,  வெள்ளி போன்ற ஆபரணங்களின் சேர்க்கை அதிகரிக்கும். நினைப்பது நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் நிலவும். திருமண விஷ யங்கள் நல்ல முடிவினை எட்டும். கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாமல் இருக்க எல்லோரையும் அனுசரித்துப் போவது நல்லது.

அரசு அலுவலர்கள் அவசரப்பட்டு சில முட்டாள்தனமான வேலைகளை செய்துவிட்டு பின்பு அதற்காக வருத்தப்படுவீர்கள். பெண் அலுவலர்களிடம் கோபப்படாமல் சாந்தமாகப்  பேசுங்கள். வேலை தேடுவோருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் துறையில் இருந்த தடங்கல்கள் நீங்கும். கூட்டு வியாபாரங்களில் ஏற்பட்ட நஷ்டம் குறைந்து லாபம் அதிகமாகும். இப்பொழுது தொழிலில்  எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை அனைத்து விஷயங்களிலும் படிப்படியாகவும் முழு கவனத்துடனும் செயல்பட  வேண்டும்.

நீண்ட தூரங்களுக்கு சரக்குகளை இந்த காலகட்டத்தில் அனுப்ப வேண்டாம். பணியாட்கள் விடுப்பு விஷயங்களில் நீக்குபோக்குடன் நடந்து  கொள்வது நன்மையைத் தரும். வியாபாரிகளுக்கு பலவகையிலும் வருமானத் தடங்கல்கள் இருக்கும். எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். 26ம்  தேதி வரை அமைதி காத்தல் நல்லது. அரசியல்வாதிகள் 11 முதல் 17ம் தேதி வரை திறமையினால் பல காரியங்களை சாதித்து நன்மையடைவீர்கள்.  18ம் தேதி முதல் 25ம் தேதி வரை எந்த பிரச்னையிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருங்கள்.
.

அச்சாரங்கள்:

16, 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் இரவு மற்றும் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம். 26ம் தேதிக்குப் பிறகு மேற் கொள்ளும் எந்தப் பிரயாணத்திலும் முழு கவனம் தேவை.

எச்சரிக்கை:

4ம் தேதி காலை 10:00 மணிக்குள்ளும் 11ம் தேதி காலை 9:00 மணிக்குள்ளும் 26ம் தேதி காலை 10:00 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங் கள் செய்ய நன்று.

பரிகாரம்:

காளிகாம்பாள் தரிசனம், புவனேஸ்வரி தரிசனம், கணபதி ஹோமம் நடைபெறும் இடத்தில் இருத்தல் ஆகியவை சிறப்பான பலன்களைத் தரும்.


தனுசு

தனுசு:மாணவர்களே, படிப்பு ஒன்றே குறிக்கோள் என்று நீங்கள் இருந்தாலும் நண்பர்களின் தொந்தரவு காரணமாக பிரச்னைகளில் சிக்குவீர்கள். பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த கலைகளில் ஈடுபடுவதில் அக்கறை காட்டுவீர்கள். இதில் நீங்கள் பெரும் வெற்றி உங்களை தாறுமாறாக திசை திருப்பிவி டும். எனவே படிப்பு விஷயத்தில் நாட்டம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள், கணவருக்கு வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் ந ன்கு சீராக செய்து தருவீர்கள். எனினும் ஏதோ ஒரு குறை இருப்பதுபோல் உணர்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் மிகுந்திருக்கும். ஆரோக்யத்தில்  குறை இருக்காது. குழந்தைகளுடன் வாகனங்களில் பிரயாணம் செய்யும் பொழுது அதீத கவனத்துடன் இருங்கள்.

26ம் தேதிக்குப் பிறகு ஒரு சுற்றுலா  செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலர்கள் தொடர்ச்சியான வேலைகளினால் தங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். அதிகாரிகள் எப்பொழுதும் உங்கள் உதவியை எதிர்நோக்கிக் காத் திருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும். அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். உணவு வகைகளில் எச்சரிக்கையுடன் இருங்கள். அசைவம் முற்றிலும்  தவிர்த்தல் இந்த மாதம் நல்லது. இளைய சகோதரருடன் மனத்தாங்கல் ஏற்படும். குடும்பம் செழிப்பாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு  பயண வாய்ப்புகள் கிட்டும்.

வாழ்வின் சில லட்சியங்களை உறுதிபடுத்திக் கொள்ளவும் அதை அடையும் வழியையும் தெரிந்து கொள்ளவும் இது சரி யான சந்தர்ப்பமாக அமையும். கல்வி நிறுவனங்களில் தீ தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். அனைத்து வியாபாரத்திலும் லாபம் குவியும். மருத்துவ  உபகரணங்கள், நர்சிங்ஹோமுக்குத் தேவையான பொருட்கள் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.  அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். தலைமையின் நோக்கத்தை நிறைவேற்றி நல்ல பெயர் அடைவீர்கள். இருக்கும் பதவியு டன் அதிகாரம் மிக்க உயர் பொறுப்புகள் வந்தடையும். நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
.

அச்சாரங்கள்:

11, 12, 13 தேதிகளில் பிரயாணங்களை முற்றிலும் தவிர்ப்பதும், 20, 21, 22 தேதிகளில் பிரயாணங்களில் எச்சரிக்கையும் தேவை.

எச்சரிக்கை:

19ம் தேதி காலை 11:00 மணிக்குள்ளும் 21ம் தேதி காலை 8:30 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று.

பரிகாரம்:

பெருமாள் கோயிலில் சஹஸ்ர தாரை அபிஷேகம் நடப்பதை பார்த்தல், யாகம் செய்பவர்களுக்கு உதவி செய்தல், ஞானிகளை தரிசித்தல் போன்றவை நன்மையைத் தரும்.


மகரம்

மகரம்:மாணவர்கள் பள்ளியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வெற்றி பெறுவீர்கள். சுக்கிரனால் நுண்கலைகளில் தேர்ச்சி  பெறுவதோடு  நாடகம், கவிதை போன்றவற்றிலும்  ஈடுபடுத்திக் கொண்டு பரிசுகளை வெல்வீர்கள். அலுவலர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் 26ம்  தேதிக்குப் பிறகு தீரும். வாக்கு தவற மாட்டீர்கள். சோம்பல் அகலும். குடும்பம், தொழில், வியாபார தலங்களில் சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும்.  வியாபாரிகள் இப்போது கிடைக்கும் லாபத்தை தங்கமாக மாற்றி வைத்துக் கொள்வது நல்லது. மூத்த அதிகாரிகள் பாராட்டுவார்கள். ஆனாலும், வீட் டிற்குள் அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் பதட்டம் போன்றவை இருக்கத்தான் செய்யும். இதனால் வைத்திய செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில்  நிலுவையில் உள்ள தொகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சொத்து விவகாரங்களில் மூத்த சகோதரர்களுடன் சமாதானமாகப் போவது நன்மையைத்  தரும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வெளிப்படையாக நடந்து கொள்வது நல்லது. வாகனங்களை அதிவேகமாக செலுத்த வேண்டாம். அலுவல கப் பெண்களுக்கு உயர் பதவியும் வருமானமும் வரும். மீனவர்கள் தங்கள் இருப்பிடம் அறிவிக்காமல் எந்த பயணமும் மேற்கொள்ளாதீர்கள். கல்விக்  கடன்கள் முறையாக செலவழிய கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். மூத்த சகோதரர்களின் வழிகாட்டுதலால் வருமானம் அதிகரிக்கும்.

அரசு சார்ந்த  வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து எல்லா வேலைகளையும் முடித்து விடுங்கள். ரியல் எஸ்டேட்,  எண்ணெய் வியாபாரம் போன்ற துறைகளில்  ஈடுபட்டுள்ளோர் நல்ல லாபத்தை பெறுவார்கள். அரசியல்வாதிகள் தங்கள் தலைமையால் பாராட்டப் பெறுவார்கள். எதிர்க்கட்சியினரை அதிகம் விமர் சித்துப் பேசாமல் இருப்பது நல்லது. விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை கண்டறிந்து அதை பின்பற்றி வெற்றியும் பெறுவீர்கள்.
.

அச்சாரங்கள்:

13, 15, 17, 19, 22 ஆகிய தேதிகளில் இரவு மற்றும் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம். 17ம் தேதியிலிருந்து 20 வரை மேற்கொள்ளும் எந்தப் பிரயாணத்திலும் கவனம் தேவை.

எச்சரிக்கை:

7ம் தேதி காலை 10:00 மணிக்குள்ளும் 12ம் தேதி காலை 9:00 மணிக்குள்ளும் 26ம் தேதி காலை 10:00 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங் கள் செய்ய நன்று.

பரிகாரம்:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தரிசனம், ருத்ர பாராயணம் நடைபெறும் இடத்தில் இருத்தல் ஆகியவை நன்மை தரும்.

கும்பம்


கும்பம்:மாணவர்கள் புதியதாக அறிமுகமாகும் நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் எங்கும் செல்ல வேண்டாம். மாணவர்-ஆசிரியர் இடையே பகைமை  உருவாகும் வாய்ப்பு உண்டு. எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கவனமாக இருக்கும்படி அறிவுறுத்துங்கள். 19ம் தேதிக்குப் பிறகு முக்கியமான  வழக்குப் பிரச்னைகள் தீரும். தொழிலதிபர்கள் தங்களின் துறைகள் நல்லபடியாக இயங்குவதை பார்க்கலாம். 11ம் தேதிக்குப் பிறகு பொறுப்புடன்  பெரிய செயல்களில் ஈடுபட வேண்டியது வரும். உற்பத்திப் பொருட்கள் வாடிக்கையாளர்களின் நோக்கத்தையும் தேவையையும் நிறைவேற்றுமாறு இ ருக்கிறதா என்று முன்கூட்டியே ஆலோசித்துக் கொள்ளுங்கள். வியாபாரிகள் 13ம் தேதிக்குப் பிறகு தாங்கள் எடுத்த செயல்களில் வெற்றி பெறுவார்கள். 

பழைய பாக்கிகள் யாவும் வசூலிப்பீர்கள். 22ம் தேதியிலிருந்து 27ம் தேதிவரை கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால், உடனடியாக உதவி கள் கிடைக்கப் பெற்று பிரச்னைகள் தீர்ந்து விடும். வேலையாட்கள் அடங்கி நடப்பார்கள். 26ம் தேதி வரை பணவசதிகளும் லாபமும் அதிகமாக இருப் பதைக் காண்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து முதலீடுகளை அதிகப்படுத்தலாம். கருப்பு நிற பொருட்களை மட்டும் வைத்து வியாபாரம் செய் வோருக்கு கொடுக்கல் வாங்கலில் எந்த பிரச்னையும் இருக்காது. 

பொருத்தமில்லாத ஜாதகங்களாக தங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ வரலாம். அதனால் சரியான பொருத்தமுள்ள ஜாதகங்களை பார்த்து  சேர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் எந்த சொத்துப் பிரச்னை குறித்தும் யாரிடமும் பஞ்சாயத்து செய்ய வேண்டாம். நெருங்கிய தொண்டர்களை கூட அதிகம் கோபித்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புகள் கூடுவதுபோல் போக்குக் காட்டும் நேரம் இது.
.

அச்சாரங்கள்:

8, 12, 16, 18, 23, ஆகிய தேதிகளில் இரவு மற்றும் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம். 16ம் தேதியிலிருந்து 23 வரை மேற்கொள்ளும் எந்தப் பிரயாணத்திலும் முழு கவனம் தேவை.

எச்சரிக்கை:

5ம் தேதி காலை 10:00 மணிக்குள்ளும் 8ம் தேதி காலை 9:00 மணிக்குள்ளும், 24ம் தேதி காலை 10:00 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று.

பரிகாரம்:

காமாட்சி அம்மன் தரிசனம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும் இடத்தில் இருத்தல் ஆகியவை சிறப்பான பலன்களை தரும்.


மீனம்

மீனம்:மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் அதிகரித்து படிப்பில் கவனம் குறையும். ஆனாலும் புதன் உங்களுக்கு சாதகமாக இருப்ப தால் நினைவாற்றல் மிகுந்து காணப்படும். உயர் கல்வி கற்போருக்கு அரசு வழியில் உதவி கிடைக்கும். மன சஞ்சலம் அதிகமிருப்போர் பைரவரை  வணங்குங்கள். பெண்கள், பிள்ளைகள் மேலுள்ள கோபத்தை இப்போது வெளிக் காட்டாதீர்கள். வீட்டில் கனமான பெட்டிகளை உயரமான இடத்தில் வைத்தால், சரிந்து விழுந்துவிடாதபடி பத்திரமாக இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். அலுவலகப் பெண்கள் இடம் மாற்றப்படும் சூழ்நிலை ஏற்படும்.

அது அவர்களுக்கு நன்மையையே தரும். வேலை தேடுபவர்கள் வெளிநாட்டு முயற்சிகளில் இறங்கினால் பன்னாட்டு நிறுவனத்தின்  வேலையே கூட கிட்டும். பால், கூல்டிரிங்ஸ், வேர்க்கடலை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோர் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இளைய சகோதர வழியில் வரும் பிரச்னையை வீட்டிற்குள்ளேயே பேசித் தீர்க்கப் பாருங்கள். இப்போதைக்கு உழைப்பதுதான் உங்கள் வேலை என்று நினைத்துக் கொள்ளுங்கள். 25ம் தேதிக்குப் பின்னர் நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கும். இரண்டு மூன்றாக இணை தொழில்கள் செய்வோர் கடன்களால் அவஸ்தைப்படுவீர் கள். இதனால் இப்போதைக்கு கொஞ்சம் முதலீடுகளை குறைத்துக் கொண்டு பழைய பாக்கிகளை வசூலிக்கப் பாருங்கள்.

இல்லையெனில் ஏஜென்ட்,  புரோக்கரேஜ் என்று இறங்கி சாதிக்கப் பாருங்கள். வேலையாட்கள், நண்பர்களால், அரசியல்வாதிகள் பெருமையை இழக்க நேரிடும். அதனால் அரசி யல்வாதிகள் 16ம் தேதி வரை அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். எதிலுமே கொஞ்சம் பொறுமையை கடைபிடியுங்கள். திருமணம் தள்ளிபோ கும் பெண்களுக்கு 22ம் தேதிக்குப் பிறகு நல்ல ஜாதகங்கள் வரும். பெண் குழந்தைகளால் சமூகத்தில் கௌரவம் கிடைக்கும். வெள்ளி பொருட்களை  வாங்கிக் குவிப்பீர்கள்.
.

அச்சாரங்கள்:

5, 14, 17, 26 தேதிகளில் இரவு மற்றும் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம்.

எச்சரிக்கை:

3ம் தேதி காலை 10:00 மணிக்குள்ளும், 21ம் தேதி காலை 12:00 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று.

பரிகாரம்:

ஹயக்ரீவப் பெருமாள் கோயில் தரிசனம், ஏகாதசி அன்று விரதமிருத்தல், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும் இடத்தில் இருத்தல் போன்றவை நன்மை தரும்.