Author Topic: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்  (Read 3634 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
2014 புத்தாண்டு ராசி பலன்கள்


புதன் கிழமை, தேய்பிறையில் அமாவாசை திதியில் கீழ்நோக்கு கொண்ட மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்யா லக்னத்தில், விருத்தி நாமயோகம், சதுஷ்பாதம் நாமகரணம், ஜீவன் நிறைந்த அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு மணி 12, 00க்கு 1, 1, 2014-ம் ஆண்டு பிறக்கிறது.

2014 ஆம் ஆண்டிற்கான பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ளை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

« Last Edit: January 18, 2014, 10:00:13 AM by Maran »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்
« Reply #1 on: January 18, 2014, 09:54:21 AM »
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : மேஷம்!


ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதிக்கும் நீங்கள், பெரியோர், சிறியோர் என்றில்லாமல் எல்லோரிடமும் பணிவாக நடந்துக் கொள்வீர்கள். புத்தாண்டு பிறப்பின் போது புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். மகளின் திருமணத்தை வெகுவிமர்சையாக நடத்தி முடிப்பீ£க்ள். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். நல்ல வாழ்க்கை துணையும் அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9-ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும் என்றாலும் செலவுகளும் இருக்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வருடப் பிறப்பின் போது உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் மனப்போராட்டங்கள் குறையும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திர பதிவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவிகள் உண்டு. அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 4-ம் வீட்டிலேயே அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துச் செல்லும். தாயார், அம்மான், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கம் அதிகரிக்கும்.

4.2.2014 முதல் 24.3.2014 வரை மற்றும் 16.7.2014 முதல் 14.10.2014 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலவீனமாக இருப்பதால் இக்காலக்கட்டத்தில் ஆரோக்ய குறைவு, சிறுசிறு விபத்துகள், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் மனக்கசப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் வந்து நீங்கும்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மனஇறுக்கம் வந்துச் செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு தைராய்டு, பைப்ராய்டு பிரச்னைகளெல்லாம் வந்துச் செல்லும். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள்.

திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் முகவாட்டத்துடன் காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும். உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.

இந்தாண்டு முழுக்க சனி 7-ல் நின்று கண்டகச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும் வருவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கவன மறதியால் விலை உயர்ந்த நகை, பணம், செல்போனை இழக்க நேரிடும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்துக் கொண்டேயிருக்கும்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட்டு நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், நகச்சுத்தி, முடி உதிர்தல், அலர்ஜி வந்து நீங்கும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம்.

வியாபாரிகளே! மற்றவர்களின் பேச்சை கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு செயல்படத் தொடங்குவீர்க்ள. பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். வர வேண்டிய பாக்கிகளை போராடித் தான் வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. துணி, சிமெண்ட், செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள். சந்தை நிலவரங்கள் அறிந்து புது ஏஜென்சி எடுங்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் உழைப்பை பயன்படுத்தி சிலர் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடி வேலை வாங்க வேண்டி வரும். இடமாற்றங்கள் உண்டு. சம்பள உயர்விற்காக போராட வேண்டி வரும்.

கன்னிப்பெண்களே! போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். காதலை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். கல்யாணம் தாமதமாகி முடியும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

மாணவர்களே! மந்தம், மறதி வந்து நீங்கும். கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். விரும்பியப் பாடப்பிரிவில் கூடுதல் செலவு செய்தும், சிலரின் சிபாரிசின் பேரிலும் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

இந்த 2014-ம் ஆண்டு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்:

புதுக்கோட்டை அருகிலுள்ள திருப்பத்தூரில் அருள்பாலிக்கும் பைரவரை தேய்காய் தீபமேற்றி வணங்குங்கள். ஆதரவற்ற முதியவருக்கு உதவுங்கள்.

« Last Edit: January 18, 2014, 09:58:41 AM by Maran »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்
« Reply #2 on: January 18, 2014, 10:05:40 AM »
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : ரிஷபம்!


செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் நீங்கள், தொடங்கிய வேலையை முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு எட்டாவது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். ஆனால் உங்களுக்கு 6-ம் வீட்டில் சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருக்கும் போது இந்த புத்தாண்டுப் பிறப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 3-ம் வீட்டிலேயே அமர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 12ல் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். சில நாட்களில் தூக்கம் குறையும். ராகுவும் ஜீன் 20-ந் தேதி வரை 6-ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள்.

சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள்.

இந்தாண்டு முழுக்க சனி 6-ம் வீட்டிலேயே நீடிப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சொத்து சேரும். தந்தையாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். அவருக்கு இருந்த நோய் விலகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலைக் கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆனால் வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருவதால் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், முதுகு மற்றும் மூட்டு வலி வந்துப் போகும்.

வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டு. அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். உணவு, பைனான்ஸ், லெதர் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.

உத்தியோகஸ்தர்களே! பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்தும் தருவார்கள். என்றாலும் பணிகளை முடிப்பதில் தொய்வு வேண்டாம். சக ஊழியர்களும் மதிப்பார்கள். பதவி உயர்விற்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். சம்பளம் உயரும்.

கன்னிப்பெண்களே! சமயோஜித புத்தி அதிகரிக்கும். கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள்.
மாணவர்களே! பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ள கீரை காய்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த 2014-ம் ஆண்டு உங்கள் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

சென்னை மயிலாப்பூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுங்கள். மேலும் சாதிப்பீர்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்
« Reply #3 on: January 18, 2014, 10:14:05 AM »
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : மிதுனம்!


எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையை ஒரு போதும் மறவாதவர்கள். உங்கள் ராசிநாதன் புதன் 7-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் புதிய யோசனைகள் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

புது வாகனம் வாங்குவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் சேரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகு, இளமைக் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் முடியும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். மஞ்சள் காமாலை, தலைச்சுற்றல், காய்ச்சல், அலர்ஜி வந்து நீங்கும். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். குடும்பத்தில் சச்சரவு வந்து விலகும். வாழ்க்கையின் மீது வெறுப்புணர்வு வந்துச் செல்லும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு குரு விலகி 2-ம் வீட்டில் தொடர்வதால் பணவரவு உண்டு. பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளை பாக்யம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள்.


20.6.2014 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-லும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்துச் செல்லும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.

இந்தாண்டு முழுக்க சனி 5-ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். அவர்கள் போக்கிலேயே அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னையில் கொஞ்சம் தள்ளியிருங்கள். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். 18.12.2014 முதல் 6-ம் வீட்டில் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருக்க வேண்டாம். புது வாடிக்கையாளர்களும் வருவார்கள். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். நன்கு அறிமுகமானவரை பங்குதாரர்களாக சேர்க்கப் பாருங்கள்.

உத்தியோகஸ்தர்களே! ஜீன் 21-ந் தேதி முதல் கேது 10-ல் அமர்வதால் சின்ன சின்ன அலைகழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கன்னிப்பெண்களே! உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்கள் நண்பர்களாவார்கள்.

மாணவர்களே! உங்களின் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள். அதிகாலையில் எழுந்து படியுங்கள்.

கலைத்துறையினர்களே! சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

இந்த 2014-ம் ஆண்டின் முற்பகுதி நிம்மதியற்ற போக்கை தந்தாலும் பிற்பகுதி சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:

திருக்கோவிலூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீவியாக்ரபாதேஸ்வரரையும், நீலவிசாலாட்சி அம்மனையும் பௌர்ணமி திதி நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வளம் பெருகும்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்
« Reply #4 on: January 18, 2014, 01:03:04 PM »
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : கடகம்!


எதிராளிகளையும் சிந்திக்க வைக்கும் நீங்கள், சுற்றுப் புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்கள். உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன், சூரியன் அமர்ந்திருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் நழுவ விடாமல் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். அரசியலில் செல்வாக்குக் கூடும். புது வேலைக் கிடைக்கும்.

அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். உங்கள் யோகாதிபதி செவ்வாய் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். என்றாலும் ராசிக்கு 6-ம் வீட்டில் புதன் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தொண்டை வலி, சையனஸ் தொந்தரவு வந்து நீங்கும்.

ஜுன் 12-ந் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஆரோக்யம் பாதிக்கும்.

வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். காய்ச்சல், யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். பல வருடங்களாக பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்துச் செல்லும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும்.

ஜுன் 21-ந் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ம் வீட்டில் கேது தொடர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்துச் செல்லும். ஆனால் ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

இந்தாண்டு முழுக்க சனி சாதகமாக இல்லாததால் மனத்தாங்களால் தாயாரை பிரிய வேண்டி வரும். தாய்வழி உறவினர்களுடனும் கருத்து மோதல்கள் வரும். வீட்டில் களவுப் போக வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினருடன் வெளியூர் பயணிப்பதாக இருந்தால் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.

வியாபாரிகளே! இந்தாண்டு ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். ஜீன் மாதம் முதல் ஜென்ம குரு தொடங்குவதால் திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். பங்குதாரர்களுடன் பிரிவு வரக்கூடும்.

உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் நிலையற்ற சூழல் உருவாகும். தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். நீங்கள் பொறுப்பாக நடந்துக் கொண்டாலும் அதிகாரிகள் குறைக் கூறத் தான் செய்வார்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் தாமதமாக வரும். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குகள் தொடர்வார்கள்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். பெற்றோருக்கு தெரியாமல் பெரிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம். போராடி உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகள் தாமதமாகும்.

மாணவர்களே! தொடக்கத்திலிருந்தே பாடத்தில் கவனம் செலுத்துங்கள். விளையாடும் போதும் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.

கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

இந்த 2014-ம் ஆண்டு சுற்றியிருப்பவர்களின் சுயநலப் போக்கை உணர வைப்பதுடன், இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டுமென்பதை உணர்த்துவதாகவும் அமையும்.

பரிகாரம்:

திருவெண்ணெய் நல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகிருபாபுரீஸ்வரரையும், ஸ்ரீமங்களாம்பிகையையும் பஞ்சமி திதி நாளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். நினைத்தது நிறைவேறும்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்
« Reply #5 on: January 18, 2014, 01:10:01 PM »
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : சிம்மம்!


வஞ்சப் புகழ்ச்சியால் சுற்றியிருப்பவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் நீங்கள், எப்போதும் நீதி நேர்மைக்கு குரல் கொடுப்பவர்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் புதன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.

விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வாகன வசதிப் பெருகும். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

வருட பிறப்பு முதல் ஜுன் 12-ந் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால் வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். எதிர்பாராத பயணங்கள் உண்டு. உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். தூக்கம் குறையும். பழைய கடன், பகையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்துப் போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். ஆனால் 3-ம் வீட்டில் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும்.

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். ஜுன் 21-ந் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனி 3-ம் வீட்டிலேயே நிற்பதால் திடீர் யோகம் உண்டு. பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள்.

சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 4-ல் சனி அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாகவும் வருவதால் மூட்டு வலி, முதுகு வலியால் தாயார் சிரமப்படுவார். தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அன்பு, பாசம் மிகுதியால் தாயார் ஏதேனும் உரிமையுடன் பேசினால் அதற்கெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். பணப்பற்றாக்குறையும் வந்துச் செல்லும். அசதி, சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.

வியாபாரிகளே! வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, காய்கறி, ஹாட்வேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களும் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வரும்.

கன்னிப்பெண்களே! காதல் இனிக்கும். கல்யாணம் கூடி வரும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று நல்ல வேலைக் கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். கலைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும். பரிசு, பாராட்டுகள் உண்டு.

இந்த 2014-ம் ஆண்டு நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றுவதுடன், மன அமைதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

தஞ்சாவூர்-கண்டியூருக்கு அருகிலுள்ள திருச்சோற்றுத்துறை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசோற்றுத்துறை ஈசனையும், அம்பாள் ஸ்ரீஅன்னபூரணியையும் உத்திராடம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் அல்லது அமாவாசை திதி நாளில் சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவருக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்
« Reply #6 on: January 18, 2014, 01:15:54 PM »
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : கன்னி!


எப்போதும் தியாகம் செய்து கொண்டிருக்கும் நீங்கள், பிரதிபலன் பாராத சேவையால் எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பவர்கள். உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள்.

பணம் வரத் தொடங்கும். வழக்கு சாதகமாகும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். தாய்வழி சொத்துக்களை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வங்கிக் கடன் கிடைக்கும். அம்மான், அத்தை வகையில் மதிப்புக் கூடும்.

என்றாலும் வருடப் பிறப்பின் போது செவ்வாய் உங்கள் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சொத்து வாங்கும் போது தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்ரன் உங்கள் பூர்வ புண்யஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்குள் எலியும், பூனையுமாக இருந்த நிலை மாறி நகமும் சதையுமாக இணைவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரையம் வந்துச் செல்லும். சாதாரணமாகப் பேச போய் சண்டையில் முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.

பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், படபடப்பு, ஒற்றை தலை வலி, செரிமானக் கோளாறு வந்துச் செல்லும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். வீண் சந்தேகத்தை விலக்கி கொள்ளுங்கள். ஈகோவை தவிர்க்கப்பாருங்கள்.

வருடத்தின் இறுதியில் 17.12.2014 வரை சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச் சனியாக இருப்பதால் பல் வலி, காது வலி வந்து நீங்கும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளை படிப்பின் பொருட்டு கசக்கிப் பிழிய வேண்டாம். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.

பணப்பற்றாக்குறை ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 3-ம் வீட்டில் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். தைரியம் கூடும். உங்களை ஏளமாகப் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.

வியாபாரிகளே! இந்தாண்டு பற்று வரவு கணிசமாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். கடையை முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகோடமாக பேசுவார்கள். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். புரோக்கரேஜ், பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! ஜீன் 12-ந் தேதி வரை வேலைச்சுமை வாட்டும். 13-ந் தேதி முதல் எதிர்ப்புகள் விலகும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை மதிப்பார். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும்.

கன்னிப்பெண்களே! நிஜம் எது, நிழல் என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். கல்யாணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.

கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

இந்த 2014-ம் ஆண்டின் முற்பகுதி அலைச்சலையும், ஆரோக்ய குறைவையும் தந்தாலும் பிற்பகுதி அதிரடி முன்னேற்றங்களை அள்ளித் தரும்.

பரிகாரம்:

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகிலுள்ள திருப்புன்கூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிவலோக நாதரையும், ஸ்ரீசௌந்தர்ய நாயகி அம்மனையும் வெள்ளிக் கிழமையில் சென்று தரிசியுங்கள். சாலை துப்பரவுப் பணியாளர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சிக் கூடும்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்
« Reply #7 on: January 18, 2014, 01:22:26 PM »
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : துலாம்!


எல்லோரையும் எடுத்த எடுப்பிலேயே நம்பும் நீங்கள், காலம் கடந்து தான் சிலரின் கல் மனதை புரிந்து கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். உங்கள் பாக்யாதிபதி புதன் சாதகமான நட்சத்திரத்தில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.

அரசு காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவலாகி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தந்தையார் ஒத்தாசையாக இருப்பார். புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். இளைய சகோதர வகையில் ஆதரவுப் பெருகும்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நீடிப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ம் வீட்டில் அமர்வதால் சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சில நேரங்களில் தர்மசங்கமான சூழ்நிலைகளில் சிக்குவீர்கள்.

ஜுன் 20-ந் தேதி வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், அல்சர், இரத்த சோகை வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்பப்பையில் கட்டி வந்து நீங்கும். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கோவில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 2-ல் அமர்ந்து பாதச் சனியாகவும் வருவதால் யாரிடமாவது சண்டைபோட வேண்டும் என யோசிக்க வைக்கும். உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போகுதல் வந்து நீங்கும். லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். முக்கிய காரியங்களுக்காக இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

வியாபாரிகளே! வருட முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். என்றாலும் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். கடன் தர வேண்டாம். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். அரிசி, பூ, எலக்ட்ரிக்கல், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! ஜீன் 12-ந் தேதி வரை குரு சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் மரியாதைக் கூடும். ஆனால் ஜுன் 13-ந் தேதி முதல் வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். பதவி உயர்வு, சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். சக ஊழியர்களால் மனஉளைச்சல் ஏற்படும். இடமாற்றம் உண்டு.

கன்னிப்பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். காதல் கசந்து இனிக்கும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள்.

மாணவர்களே! டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். விளையாடும் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும்.

கலைத்துறையினர்களே! விமர்சனங்களால் விரக்தியடையாதீர்கள். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.

இந்த 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் முன்னேற்றத்தையும் வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

திருவாரூர் அருகிலுள்ள ராஜமன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாசுதேவப் பெருமாளையும், ஸ்ரீசெங்கமல தாயாரையும் ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்
« Reply #8 on: January 18, 2014, 01:28:22 PM »
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : விருச்சிகம்!


கனிவான விசாரிப்பால் மற்றவர்களையும் கவர்ந்திழுக்கும் நீங்கள், உள்ளன்று வைத்து புறமொன்று பேச மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திர பதிவு செய்வீர்கள்.

சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவுக்கு குறைவிருக்காது. தடைப்பட்ட கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனி ஏற்பாடாகும். முகவாட்டத்துடன் இருந்த நீங்கள் இனி உற்சாகமாக வளம் வருவீர்கள்.

4.2.2014 முதல் 24.3.2014 வரை மற்றும் 16.7.2014 முதல் 1.9.2014 வரை உள்ளக் காலக்கட்டங்களில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலவீனமடைவதால் ஆரோக்ய குறைவு, சிறுசிறு விபத்துகள், சொத்துப் பிரச்னைகள், ஏமாற்றங்கள் வந்து நீங்கும். 2.9.2014 முதல் செவ்வாய் வலுவடைவதால் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேருவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துப் போகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 9-ம் வீட்டிலேயே அமர்வதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவருக்கிருந்த நோய் விலகும்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ராசிக்கு 12-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 5-ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். ஆனால் ராகு 11-ம் வீட்டில் நீடிப்பதால் திடீர் பணவரவு உண்டு. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரையச் சனியாகவும் வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாகவும் வருவதால் அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டுமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது. நல்லவர்களுடன் பழகுங்கள். கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும். வாயு பதார்த்தங்கள், கார உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக் கூடும். எனவே இரும்புச் சத்துள்ள காய், கனிகளை உட்கொள்வது நல்லது.

வியாபாரிகளே! ஜுன் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகளையும் விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடி சலுகை திட்டங்கள் மூலமாக வருவாய் கூடும். பங்குதாரர்கள் வழக்கம் போல் முணுமுணுப்பார்கள். பகைத்துக் கொள்ளாதீர்கள்.


வேற்றுமாநிலத்தை சார்ந்த வேலையாட்களால் நிம்மதி கிடைக்கும். புது கிளைகள் தொடங்குவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கண்ஸ்டரக்ஷன், பவர் புராஜெக்ட் வகைகளால் லாபமடைவீர்கள். பெரிய வியாபாரிகளின் நட்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களே! ஜுன் 12-ந் தேதி வரை கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையேயென புலம்புவீர்கள். ஜுன் 13-ந் தேதி முதல் மரியாதைக் கூடும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்காக வாதாடி சில சலுகைகளை அவர்களுக்கு பெற்றுத் தருவீர்கள். இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். பதவி உயர்விற்காக சில தேர்வுகளை எழுத திட்டமிடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! உற்சாகமாக இருப்பீர்கள். அழகு, அறிவுக் கூடும். உயர்கல்வி நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். நல்ல வரனும் அமையும். திருமணமும் கூடி வரும். காதல் விவகாரத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.

மாணவர்களே! கல்வியிலும், கலைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.

கலைத்துறையினர்களே! வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும்.

இந்த 2014-ம் ஆண்டு மனநிம்மதியையும், வசதி, வாய்ப்புகளையும், சமூகத்தில் அந்தஸ்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மூடைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்
« Reply #9 on: January 18, 2014, 01:32:46 PM »
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : தனுசு!


தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் நீங்கள் அடுத்தவர் விஷயத்தில் அநாவசியமாக தலையிட மாட்டீர்கள். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்ரன் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள்.

வருடப் பிறப்பின் போது செவ்வாய் 10-ம் வீட்டில் நிற்பதால் புது வேலைக் கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

12.6.2014 வரை உங்கள் ராசிநாதன் குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அழகு, அறிவுக் கூடும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும்.

திடீர் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாக கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்துச் செல்லும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். அவர்களிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம். கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் வீட்டிலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்காலம் பற்றிய கவலை அடி மனதில் நிழலாடும். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக் கொள்வது நல்லது.

இந்தாண்டு முழுக்க சனி 11-ம் வீட்டான லாப வீட்டில் தொடர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வீடு வாங்குவீர்கள். சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால் வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான விரையச் சனி தொடங்குவதால் தூக்கமில்லாமல் போகும். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

வியாபாரிகளே! போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அயல்நாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. ஸ்டேஷனரி, பேன்ஸி ஸ்டோர், உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! ஜுன் 12-ந் தேதி வரை அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். 13-ந் தேதி முதல் அதிகம் உழைக்க வேண்டி வரும். மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தள்ளிப் போகும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும்.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள்.

மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினர்களே! வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். புகழடைவீர்கள்.

இந்த புத்தாண்டு கடந்த ஆண்டை விட பணவரவையும், செல்வாக்கையும், பதவிகளையும் பெற்றுத் தரும்.

பரிகாரம்:

கும்பகோணம்-நீடாமங்கலம் இடையிலுள்ள திருஅவளிவநல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாட்சி நாதர் உடனுறை ஸ்ரீசௌந்தர நாயகி அம்மனையும் அமாவாசை திதியில் சென்று வணங்குங்கள். மணமுறிவுப் பெற்றவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது கைக்கூடும்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்
« Reply #10 on: January 18, 2014, 01:37:59 PM »
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : மகரம்!


வித்தியாசம் பார்க்காமல் பழகும் நீங்கள், வீட்டு நலனுடன், நாட்டு வளர்ச்சி குறித்தும் அதிகம் யோசிப்பீர்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் பிறப்பதால் சின்ன சின்ன கனவுகளெல்லாம் நிறைவேறும். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

உங்கள் ராசிக்குள்ளேயே உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடியும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வீடு அமையும். அழகு, இளமைக் கூடும். பழைய வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.

ஆரோக்யம் சீராகும். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்யம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வேற்றுமொழிப் பேசுவர்கள், வேற்று மதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துச் செல்லும். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். ஆனால் வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 11-ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார்.

வியாபாரிகளே! ஜுன் மாதம் முதல் வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். வாடிக்கையாளர்களை கவர புது யுக்திகளை கையாளுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். புது பங்குதாரரால் பயனடைவீர்கள். கம்பியூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். பாரபட்சமாக நடந்துக் கொண்ட அதிகாரி உங்களைப் பாராட்டும்படி நிலைமை சீராகும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். இடமாற்றம் சாதகமாக அமையும். ஆனாலும் 10-ல் சனி தொடர்வதால் மறைமுக பிரச்னைகள் இருக்கும். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். ஜுன் மாதம் முதல் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

கன்னிப்பெண்களே! போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வேலைக் கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். காதல் குழப்பங்கள் நீங்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

மாணவர்களே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் உங்கள் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார். பெற்றோர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கலைத்துறையினர்களே! யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவீர்கள். அயல்நாட்டு நிறுவனத்திலிருந்தும் நல்ல வாய்ப்புகள் வரும்.
இந்தப் புத்தாண்டு உங்களின் திறமைகளை அதிகப்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் வெற்றியையும் அள்ளித் தரும்.

பரிகாரம்:

திருவண்ணாமலை-கடுவனூருக்கு அருகிலுள்ள சங்கராபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதாண்டேஸ்வரரையும், ஸ்ரீசிவகாமி அம்மையாரையும் வெள்ளிக் கிழமையில் சென்று வணங்குங்கள். மகப்பேறு இல்லாதவர்களுக்கு உதவுங்கள். மதிப்புக் கூடும்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்
« Reply #11 on: January 18, 2014, 01:42:53 PM »
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : கும்பம்!


புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது உங்களைப் பொறுத்த வரை உண்மை தான் நீங்கள் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கும். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சூரியனும், புதனும் லாப வீட்டிலேயே நிற்பதால் போராட்டங்களை சளைக்காமல் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு அனுமதி கிடைக்கும். உங்களுக்கு லாப ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். டி.வி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள்.

வருடம் பிறக்கும் போது ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் சின்ன சின்ன விபத்துகள் வரும். முன்கோபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். சகோதரங்கள் அதிருப்தி அடைவார்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். சொத்துப் பிரச்னை வெடிக்கும். வழக்குகளில் எச்சாக்கையாக இருங்கள். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாக தீரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டிலேயே மறைவதால் சின்ன சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். 20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள்-ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்களால் உதவிகள் உண்டு. ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் மனத்தாங்கல் வந்துச் செல்லும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் வரும்.21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி வந்து விலகும். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைக்கூர்ந்து பேசாதீர்கள். அதன் மூலமாக பிரச்னைகள் வரக்கூடும். காலில் அடிப்படும்.

இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்கள் அதிகரிக்கும்.

ஆனால் வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 10-ல் அமர்வதால் வீரியத்தை விட காரியம் தான் பெரிது என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். புது பதவிகளும், சிறப்பு பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

வியாபாரிகளே! லாபம் சுமாராக இருக்கும். சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முதலீடுகளையும் மாற்றுவீர்கள். வேலையாட்களால் சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வரும். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும் ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே! ஜுன் 12-ந் தேதி வரை பணிகளை தோய்வின்றி முடிப்பீர்கள். 13-ந் தேதி முதல் உங்களையும் அறியாமல் ஒருவித பயம் இருந்துக் கொண்டேயிருக்கும். சக ஊழியர்களைப் பற்றி குறைக் கூற வேண்டாம். அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளியிட வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.

கன்னிப்பெண்களே! உங்களின் ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கல்யாண பேச்சு வார்த்தைகள் கொஞ்சம் தாமதமாக முடியும்.

மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். அவ்வப்போது தூக்கம், மந்தம், மறதி வந்து நீங்கும். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி பெற போராடியும், அதிக செலவு செய்தும் சேர வேண்டி வரும்.

கலைத்துறையினர்களே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.

இந்தப் புத்தாண்டு சகிப்புத் தன்மை மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்:

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள முறப்பநாடு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாச நாதர், சிவகாமி அம்மையையும், ஸ்ரீவீர பைரவரையும் அஷ்டமி திதி நாளில் சென்று வணங்குங்கள். தொழு நோயாளிகளுக்கு உதவுங்கள். தடைகள் உடைபடும்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: 2014 புத்தாண்டு ராசி பலன்கள்
« Reply #12 on: January 18, 2014, 01:47:10 PM »
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : மீனம்!


துயரங்களுக்காகத் துவளாத நீங்கள் நாளை நமதே என்ற நம்பிக்கையில் வாழ்வீர்கள். நல்லது செய்தே நலிந்தவர்கள். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிலேயே சூரியனும், புதனும் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்று புது வேலையில் சேர்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். பேசாமல் இருந்த நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வீடு, வாகனம் உங்கள் ரசனைக் கேற்ப அமையும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். இந்தப் புத்தாண்டு

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமையால் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். தாயாருடன் மோதல்கள், அவருக்கு மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டை கூடுதல் செலவு செய்து சீர் செய்ய வேண்டி வரும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 5-ம் வீட்டிலேயே அமர்வதால் மனஇறுக்கங்கள் நீங்கும். பணப்பற்றாக்குறை அகலும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

புது வீடு கட்டிப் புகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார். மகளுக்கு வேலைக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.


20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரையம், இனந்தெரியாத கவலைகள் வந்துச் செல்லும். சிலர் உங்கள் வாயைக் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம்.

பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கணுக்கால் வலி வந்துச் செல்லும். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கோவில் விஷேங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. என்றாலும் தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவு வரக்கூடும். மனைவிக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.

இந்தாண்டு முழுக்க சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்துடன் வெளி ஊருக்கு செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை சரி பார்த்து செல்லுங்கள். நகை, பணம், முக்கிய பத்திரங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. களவுப் போக வாய்ப்பிருக்கிறது. முன்பின் தெரியவாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்ல ஆதாயம் தேடாதீர்கள்.


தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். பெரிய நோய்கான அறிகுறிகளெல்லாம் இருப்பதைப் போல் தோன்றும். ஆனால் மருத்துவப் பரிசோதனை செய்யும் போது பெரிய பாதிப்புகள் இருக்காது என்றாலும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 9-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு தெளிவுப் பிறக்கும்.மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துப் பேசும் பக்கும் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும்.

வியாபாரிகளே! அஷ்டமத்துச் சனி தொடர்வதால் புது தொழில் தொடங்கும் முயற்சிகள், பெரிய முதலீடுகள் வேண்டாம். ஜுன் மாதம் முதல் போட்டிகளை சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்டாதீர்கள். தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரி பொருள் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! ஜுன் 12-ந் தேதி வரை அலுவலகத்தில் சின்ன சின்ன அவமானங்களை சந்திக்க வேண்டி வரும். ஜுன் 13-ந் தேதி முதல் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். இழந்த சலுகைகளையும், உரிமைகளையும் மீண்டும் பெறுவீர்கள்.

கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். மே மாதம் வரை அலைச்சல், டென்ஷன் இருக்கும். அவ்வப்போது கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்துச் செல்லும். தாயாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் விலகும். திருமணம் கூடி வரும். மாணவர்களே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். கடினமாக உழைத்து அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

முயன்று தவறினாலும் அனுபவ அறிவால் சாதித்துக் காட்டும் வருடமிது.

பரிகாரம்:

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அருள்பாலிக்கும். ஸ்ரீசிவகாமி அம்மை உடனுறை ஸ்ரீகைலாச நாதரையும், சனீஸ்வரரையும், திருவாதிரை நட்சத்திர நாளளில் சென்று வணங்கி வாருங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.