Author Topic: பழமொழிகள்...  (Read 1784 times)

Offline Aswin

  • Full Member
  • *
  • Posts: 113
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • வரங்களே சாபங்கள் அனால் இங்கு தவங்கள் எதுக்கு
பழமொழிகள்...
« on: April 26, 2012, 09:55:01 PM »
* அகத்தினழகு முகத்தில் தெரியும்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
* அடியாத மாடு படியாது.
* அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
* அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
* அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
* அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
* அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
* அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
* ஆழம் தெரியாமல் காலை விடாதே.
* ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
* ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
* இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
* எறும்பூரக் கல்லும் தேயும்.
* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
* கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
* கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
* கழுதை அறியுமா கற்பூர வாசனை?
* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
* காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
* காகம் திட்டி மாடு சாகாது.
* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
* குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
* குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
* குரைக்கிற நாய் கடிக்காது.
* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
* கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
* தடியெடுத்தவன் தண்டக்காரன்.
* தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
* தன் வினை தன்னைச் சுடும்.
* தனிமரம் தோப்பாகாது.
* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
* தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
* தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
* நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
* நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
* நிறைகுடம் தளம்பாது.
* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
* படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
* பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
* பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
* பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
* முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
* விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
* விரலுக்குத் தக்கதே வீக்கம்.
* விளையும் பயிரை முளையிலே தெரியும்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வைக்கோற் போர் நாய் போல.