தமிழ்ப் பூங்கா > கதைகள்

ஜோக்கரின் குட்டி கதைகள் பகுதி

(1/5) > >>

joker:
உருவ வழிபாட்டை கிண்டல் செய்து,
ஒரு மன்னன் பேசிக் கொண்டிருந்தான்.

மக்களே! கடவுள் மீசை வைத்திருக்கிறானாம்.
சாமியாரைப் போல ஜடாமுடி தரித்திருக்கிறானாம்.

ஒருவன் தலையில் கங்கை நதியை தூக்கி வைத்துள்ளானாம்.

ஒருவன் கையில் சங்கையும், சக்கரத்தையும் வைத்திருக்கிறானாம். அவனுக்கு 16கை இருக்கிறதாம்.

இன்னொருவனுக்கு 12கைகள் உள்ளதாம்.
ஒரே கடவுள் என்று வேறு பீற்றிக்கொள்கிறார்கள். ஒரு கடவுளுக்கு இத்தனை உருவங்கள் எப்படி இருக்க முடியும்? சிந்துத்து பார்க்க வேண்டாமா?  என்றான்.

அந்தக் கூட்டத்தில் இருந்த விவேகானந்தர் எழுந்தார்.

ராஜாவே! உங்கள் தந்தை யார்?

என் தந்தை இறந்துவிட்டார் ஏன் கேட்கிறாய்?

காரணத்துடன்தான். இறந்து போன உங்கள் தந்தை எங்கே?

அதெப்படி எனக்கு தெரியும்?

சரி..  உங்கள் தந்தையை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்ன செய்வீர்கள்?

அவர் படத்தை பார்ப்பேன்.

கண்ணுக்கு தெரியாத உமது தந்தையின் படத்தைப் பார்த்து எப்படி மகிழ்ச்சி அடைகிறீரோ, அப்படித்தான் இந்த மக்களும். கண்ணுக்கு தெரியாத ஒரே இறைவனைஅவரவர் வசதிப்படி காளியாகவும்  சிவனாகவும் கிருஷ்ணனாகவும், ராமனாகவும் பார்த்து மகிழ்கன்றனர்.
தங்களது குறைகளைச் சொல்லி ஆறுதலடைகின்றனர். புரிகிறதா?

மன்னன் தலை குனிந்தான்.

joker:
🐊🐊ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.


யார் அந்த முதலைகள் 🐊🐊 நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி 💸💵💸 ரூபாய் பரிசு என்று.


அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.

 அப்போது ஒருவன் 🤸🏻‍♂ மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை🏊🏼 அடைந்தான்.


அவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. 💸💵💸


உடனே அவன் கூட்டத்தினரை பார்த்து கேட்டான்.... யார்டா என்னை குளத்தில் தள்ளி விட்டது?😡😡😡



கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர்.👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧


அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி மட்டும் அவனைப் பார்த்து சிரித்தாள்.😎😎


நீதி : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள் :D :D

joker:
விடியற்காலை 3 மணி.
மழை வேறு பெய்து கொண்டிருந்தது.

ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக்
கொண்டிருந்தனர்.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது
.
கணவன் மட்டும் எழுந்து போனான்
.
கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர்
நின்று கொண்டிருந்தார்.

“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க
வந்து தள்ளி விட முடியுமா?”
என்று அந்த குடிகாரர் கேட்டார்.

கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை
சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்
.
“யாரது?” என்று மனைவி கேட்டாள்
.
“எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்”

“நீங்க உதவி செஞ்சீங்களா?”
“இல்லை, காலைல 3 மணி, மழை வேற
பெய்யுது எவன் போவான்?”

“3 மாசம் முன்னாடி நம்ம கார்
ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப
இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க
அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி?

கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி.

கணவன் எந்திரிச்சான், ட்ரஸ்
பண்ணிக்கிட்டு மழையில்
நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.
இருட்டுல, மழையில்
சரியா தெரியாதாதால
சத்தமா கேட்டான்.

“ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”

“ஆமா சார்”

“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே,
இப்ப செய்யலாமா?”

“ஆமா சார்
 வந்து கொஞ்சம்
தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”

“எங்கே இருக்கீங்க?

“இங்கதான் ஊஞ்சல் மேல
உட்கார்ந்திருக்கேன்
வாங்க
வந்து தள்ளிவிடுங்க....”

😳அட நன்னாரிப் பயலே....

Ha ha ha 😬😀

எப்ப பாரு கருத்த மட்டுமே  எதிர்பாக்காதீங்க
லைஃப எஞ்ஜாய் பன்னுங்க! :))))))
Be happy 😀😄😜😀😄

joker:
ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன !! 🌳🌳
அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி 🐥 முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க☁ இருப்பதால்  நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.

முதலில் இருந்த மரம் முடியாது என்றது
😣😣😣😣😣😣😣😣

அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது
😌😌😌😌😌😌😌

குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் 🐣🐤🐥🐦

அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச்சென்றது .

தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து  குருவி சிரித்து கொண்டே சென்னது  , எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று !!!!

அதற்கு அந்த மரம் கூறிய பதில் :  எனக்குத் தெரியும் நான் வழுவிழந்து விட்டேன்😑 எப்படியும் இந்த மழைக்குத்  தாங்க மாட்டேன் , தண்ணீரில் அடித்துச் செல்லபடுவேன்என்று ,  நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்
உனக்கு இடம் இல்லை என்றேன் !!!! மன்னித்து விடு என்றது !!!!!! 😢

கருத்து:   உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால்தவறாக நினைக்காதீர்கள் அவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்!!!

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்...

joker:
(((((((எச்சரிக்கை )))))))

    உண்மை கசக்கும்

ஒருவரின் இடது கால் நீல
நிறத்தில் மாறி விட்டது.

 பயந்து போய் ஊரில்
உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு
சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை
கேட்டார்.

பரிசோதனை செய்து விட்டு
காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர் சொல்ல, அதிர்ச்சி
அடைந்தவர் தயக்கத்துடன் வேறு
வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக் கொண்டார்..
...
சில நாட்களுக்குப் பிறகு வலது
காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றார்.

வலது காலிலும் விஷம் ஏறி விட்டது என்று சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும் என மருத்துவர் சொல்லி விட, நொந்து போனவர் அதற்கும் ஒத்துக் கொண்டார்.
...
இரு கால்களையும் இழந்து, மரக் கட்டை கால்களுடன் நடமாட ஆரம்பித்தவருக்கு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.
...
மரக் கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட, பதற்றத்துடன் மருத்துவரை அணுக, மருத்துவருக்கு மரக் கட்டைக் கால்களில் விஷம் எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து 'அனைத்து வகையான உடல் பரிசோதனைகளையும்' முடித்த பின் மருத்துவர் சொன்னார்...
" உங்கள் லுங்கி சாயம் போகிறது, மன்னித்து விடுங்கள்"..
...
இதுதான் இன்றய

 மருத்துவர்களின் நிலை.. சிரிப்பதற்கல்ல...
...
சிந்திக்க...

மட்டுமே. ........

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version