Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 17464 times)

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #180 on: December 28, 2023, 05:47:08 PM »
குறள்:180

      இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு 



விளக்கம்;
சாலமன் பாப்பையா விளக்கம்:
பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.
   

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #181 on: January 03, 2024, 07:41:36 AM »
குறள்:181

 
அதிகாரம்: புறங்கூறாமை


அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.


விளக்கம்

    கலைஞர் விளக்கம்:
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும். 
« Last Edit: January 03, 2024, 07:47:31 AM by mandakasayam »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #182 on: January 06, 2024, 08:17:05 AM »
குறள்:182

  அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.


விளக்கம்:

   கலைஞர் விளக்கம்:
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.     

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #183 on: January 22, 2024, 08:04:58 AM »
குறள்:183

  புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.


விளக்கம் :

சாலமன் பாப்பையா விளக்கம்:
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும். 

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #184 on: January 27, 2024, 05:58:17 AM »
குறள்:184

   கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.   


விளக்கம்:


       கலைஞர் விளக்கம்:
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.     

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #185 on: February 04, 2024, 06:39:54 AM »
குறள்: 185

  அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். 


விளக்கம்:

     சாலமன் பாப்பையா விளக்கம்:
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.
 

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #186 on: February 18, 2024, 08:36:04 AM »
குறள்:186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

   


விளக்கம்:

        சாலமன் பாப்பையா விளக்கம்:
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.   

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #187 on: March 03, 2024, 08:52:32 AM »
குறள்: 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். 


விளக்கம்:

   கலைஞர் விளக்கம்:
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.   

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #188 on: March 09, 2024, 07:39:17 AM »
குறள்:188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.


    விளக்கம்
சாலமன் பாப்பையா விளக்கம்:
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!.

 


Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #189 on: March 10, 2024, 09:56:13 AM »
குறள் :189


    அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.   

   விளக்கம்:

கலைஞர் விளக்கம்:
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை இவனைச் சுமப்பதும் அறமே என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது     
   

« Last Edit: March 10, 2024, 09:59:09 AM by mandakasayam »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #190 on: March 11, 2024, 05:23:36 PM »
குறள்190

  ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.


விளக்கம்:

       
மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.