மனம் உருக்கும் ஒரு இசைக்கீற்றின்
இலாவகத்தோடு இதயத்தின் உள்நுழைகிறாய் நீ...
ஹேம்லின் நகரத்து வண்ண உடையணிந்த
காற்றிசைக்கருவி வாசிப்பவர் போல
உன்னை பின்தொடர்ந்து அணிவகுக்கிறது
எங்கோ எப்போதோ தொலைந்து போனதாய்
மனம் கொண்ட நினைவுகள்...
நினைவுகளில் நீ இருப்பதாலே
மீண்டும் வந்து ஒட்டிக்கொள்கிறது
மனதோடு உன் எண்ணங்கள்
வீணையோடுயுள்ள இசை கீற்றுப் போல
நதியோடு நாணம் கொண்ட தென்றலைப் போல
நீ வருவதாய் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது
காற்றோடு அசையும் திரைச்சீலைகளும்
கட்டினில் மேல் திசை மாறாமலிருக்கும்
தலையணையும்
மழை நேரத்து சாறாலை
இரசித்தபடி
கொஞ்சம் தேநீரோடு
நானும்......