Author Topic: கிறுக்கல்கள்  (Read 3075 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
கிறுக்கல்கள்
« on: August 10, 2020, 01:38:00 PM »
கிறுக்கல்கள்


வெளிச்சத்தை கண்டு
வரும் விட்டில்பூச்சியாய்
உன்னை கண்டதும்
காதல் கொண்டு வருகிறேன்
வீட்டில் பூச்சியாய் ஆகினும்
என்னை வைத்துக்கொள்ளேன்
உன்னுடன் "

*******    *******    *********

"ஆறு தலை
முருகனை காண
வந்தேன்
ஆறுதலாய் இருந்தது
கண்டபின்
உன் முகம் "

*******    *******    *********

கதிரவன்
உதித்துவிட்டான்
ஊரடங்காம்
இன்று

எப்படி சொல்வேன்
தடுக்க முடியாதபடி
வந்து செல்லும்
உன் நினைவலைகலை  பற்றி

*******    *******    *********

என் வீட்டில்
பால் திருடிய
உன் வீட்டு
பூனைக்கெல்லாம்
கொஞ்சி முத்தம் கொடுக்கிறாய்

என் இதயத்தை
திருடிய உனக்கு
என்ன தண்டனை
கொடுக்கலாம்
என யோசித்துக்கொண்டிருக்கிறேன்

*******    *******    *********

உன்னை காணாத பொழுதில்
அனலில் இட்ட புழுவாய்
துடிக்கிறேன்
வந்து
உன் தாவணி தணலில்
எனக்கு ஓர் அடைக்கலம்
தருவாய் என 

*******    *******    ********

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #1 on: December 14, 2020, 03:24:03 PM »


உன்னிடம்
சிக்கிக்கொண்டது
"பென்" மட்டுமல்ல
"பெண்ணே"
என் மனமும் தான்

உன்னிடம்
கடி வாங்கி
சிக்கி சிக்கி எழுதுவது
"பென்" மட்டுமல்ல
பெண்ணே

உன்னிடம்
காதல் சொல்ல வந்த
என் வார்த்தைகளும் தான்
திக்கி சிக்கி கொள்கிறது
எனக்குள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #2 on: January 22, 2021, 07:01:13 PM »


இல்லை...
உடுத்தி கொள்ள நல்ல
துணி இல்லை

வயிறு நிறைய சாப்பிட
உணவும் இல்லை
 
நேரம் தொலைக்க
தொலைபேசியும் இல்லை

உடன்
இருப்பது என்னவோ
எதிர்பார்ப்பில்லாத
நண்பனும்
அளவில்லா
ஆனந்தமும்
மட்டுமே

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #3 on: January 22, 2021, 07:02:38 PM »

நிலா

விளையாட்டு "பந்து" ஆகவோ ?
சாப்பிடும்  "அப்பளம்" போலவோ
குமரி  "பெண்"ணாகவோ ?
தனிமை போக்கும் "தோழி" என்றோ?

பேசாமல் உறவை விதைத்து 
உணர்வை கடத்தி செல்லும்
 மாயக்காரி நீ


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #4 on: January 22, 2021, 07:05:10 PM »


திண்ணைகள்

வெறிச்சோடிய திண்ணைகள்
பேரன் பேத்திகளுக்கு
கதை சொல்ல
கனத்த இதயங்களுடன்
அப்பத்தாக்கள் 
வீடியோ காலில்
காத்திருக்க

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #5 on: January 22, 2021, 07:08:31 PM »


தினமும்
தனியாய்
என் வீட்டு ஜன்னலோரம்
வந்து அமர்ந்து
 தன் மொழியில்
சத்தமிட்டு கொண்டிருக்கும்

என்னை போல
யாரை தொலைத்து
புலம்புகிறாயோ

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #6 on: January 22, 2021, 07:10:28 PM »


மாதுளை விற்கவில்லை
கவலையில்லை
மாதுளை முத்துக்கள்
போன்ற
குழந்தையின் சிரிப்பில்
மறைகிறது
தாயின் கவலைகள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #7 on: February 17, 2021, 03:24:35 PM »
அரைப்பெடல் அடித்து
ஆனந்தமாய் சுற்றிய
காலம்தனில்
அரை வயிறு உண்டாலும்
நிறைந்திருந்தது மனது

உடன் பயணித்து
என் உயர்வில் பங்கெடுத்து
இன்று சாய்வு நாற்காலியில்
அமர்ந்து ஓய்வெடுக்கும்
தந்தையை போல
சுவர் ஓரமாய் சாய்த்து
வைக்கப்பட்டிருக்கிறது
அப்பாவின்
"மிதிவண்டி




"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #8 on: September 29, 2023, 01:41:22 PM »
கைகள்
அழுத்தி பிடித்து
நடந்த காலம்
மறந்து

கைகள்
கோர்த்து நடந்த காலம்
மனதில்
நிறைந்து

உடல் தளர்ந்த நேரம்
அழுத்தி பிடிக்க
கைகள் இருந்தால்
வாழ்க்கை
அழகு

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #9 on: September 30, 2023, 08:11:12 PM »
சிரித்த முகங்களுக்கு
வர்ணம்
பூச வேண்டியதில்லை

***JOKER***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #10 on: September 30, 2023, 08:16:53 PM »
நீ என்னை மிகவும்
ஆழமாக நேசிக்கும்
ஒரு நாள் வரும்

இந்த பூமியில் உள்ள
அனைத்தையும் தாண்டி
எனக்காக நீ
தனியாக காத்திருப்பாய்

ரசிக்க ரசிக்க
பேசும்
பேச பேச
ரசிக்கும்
என் குரல்,
என் மணம்,
என் அசைவு  என
எல்லாமே நெருக்கமாக இருக்கும்
என் ஆழ்ந்த இருப்பை
நீ விரும்புவாய்

ஒவ்வொரு
மரங்களில் இருந்தும்
உதிரும்
வாழ்ந்து தீராத
பச்சை இலை
போல

ஒவ்வொரு
மனங்களிலும்
உண்டு
ஆசை தீர
வாழாத
ஒரு காதல்
அதை புரிந்து கொள்ளும்
ஓர் நாள் வரும்
 

***JOKER***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #11 on: October 07, 2023, 06:03:46 PM »
எங்கள் சந்திப்பு
ஒளியின் வேகம் போல்
தோன்றும் அளவுக்கு
நேரம் கடந்தாலும்
அவள் பிரிக்க
முடியாதவளாகிவிட்டாள்
என் வாழ்வில்

சந்தித்த
மரத்தின் கிளைகள்
தென்றலுக்கு
சொல்கின்றன
ரகசியங்கள்

சரிதான்
வாழ்ந்து ஆசை தீராத
வாழ்வின் சுவடுகளை
உதிர்ந்து கீழ் வீழும்
மரத்தின் இலையை போல
நன்கு வேறுயாரறிவார்

****joker***

« Last Edit: October 07, 2023, 06:08:49 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #12 on: October 10, 2023, 06:54:10 PM »
ஓர் பெரிய ஆன்மா
அங்கு பிறந்தது
வன்முறைக்கு இறை ஆகி
மீண்டும் உயிர்த்தெழுந்தது

எதனாலோ
அவ்வப்போது வன்முறை
அங்கு விருந்துக்கு வருகிறது

வன்முறை காணுகையில்
கனத்து விடுகிறது
நம் மனது

ஈவு இரக்கமற்ற
கூட்டத்தில் குண்டுகளால்
பிய்த்து எறியப்படுகிறது
அப்பாவிகளின் உயிர்

இவைகளை தடுக்க
மீண்டும் அவதரிக்க வேண்டுமோ
அந்த பெரிய ஆன்மா ?



"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #13 on: October 13, 2023, 02:46:50 PM »
கண்டேன்

முதன் முதலில்
உன்னை
கண்டேன்

உன்
நிழலுக்கும்
குடை பிடிக்கும்
பேதை என
நான் மாற
கண்டேன்

வார்த்தைகள்
உச்சரிக்கும்
உன் இதழ்கள்
கண்டேன்

போதை ஏறிய
குரங்காய்
என் மனம் மாறிட
கண்டேன்

காகிதம் கூட
உன்னிடம் பேசும்
ஆயுதமாக
கண்டேன்

படிக்க படிக்க
வெட்கம் கூட
என் துணை நிற்க
கண்டேன்

நம்மில்
வார்த்தைகள்
வற்றிட கண்டேன்

கண்ணில்
ஈரம் நிறைந்திட
கண்டேன்

உன் மௌனத்தின்
நெருக்கம்
கண்டேன்

அது
நம் பிரிவின்
தொடக்கமாய்
கண்டேன்

***JOKER***


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #14 on: October 14, 2023, 12:02:27 PM »
தேவைகளை தவிர
எல்லோரும்
உங்களிடம் வருவார்கள்
என்ற மாயையில் இருக்காதீர்கள்
இதயத்தில் ஆழமாக
அன்பைக் கொடுத்தவர்களைத் தவிர

ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும்
உண்டு மூன்று வாழ்க்கைகள்

தனிப்பட்ட சொந்த
வாழ்க்கை,
பொது வாழ்க்கை,
மற்றும் அவரே அறியும்
ரகசியமான வாழ்க்கை..

இந்த ரகசியமான வாழ்க்கையின்
சந்தோஷங்கள்,
துயரங்கள், கொண்டாட்டங்கள்,
சின்னச் சின்ன அச்சங்கள்,
அளவற்ற மகிழ்ச்சி  அனைத்துமே,
அவரவர் மனங்களுக்கு
மட்டுமே சொந்தமானது..

ஏதோவொரு உந்துதலில்,
எப்போதாவது மட்டும்
அதனைப்பற்றி,
தான் நம்புகின்ற
ஒரு சிலரிடம் பேசக்கூடும்..

மனதிற்குள்
தன்னந்தனியே
நகர்ந்து கொண்டிருக்கும்
அந்த ரகசியமான வாழ்வு..

அவரவரின்
மன உலகுக்குள் மட்டுமே
எப்போதும் பயணிக்கிறது,
நினைத்துச் சிரிக்கிறது,
பரிதவித்து அழுகிறது,
மீண்டெழுகிறது

உண்மை என்பது
வெறும் வார்த்தையல்ல
வாழ்க்கை முழுமையும்
வாழ்ந்து தீர்க்கவேண்டும்
நேர்மையாக


***jOKER***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "