நெஞ்சமே என் நெஞ்சமே ,
நேசத்தின் நினைவுகள் என்னை வதைக்கிறதே.
நினைவுகள் உரமாய் எரிகிறதே,
என் இதயம் நெருப்பில் கருகியதே.
நிகழ்வுகள் அனைத்தும் நிலைகுலைய,
நினைவுகள் நிலையையாய் நிலைத்ததே.
என் துயிலிலும் உனையே நேசித்தேன்,
என் துயரத்திலும் உன் நினைவுகள் தனை சுவாசித்தேன்..
நீ இல்லாது போன நிகழ்வுதனை,
கனவாய் இருத்தல் நல்லம் என பிராத்திக்கிறேன்..
உன் நினைவுகள் தனை,
உயிர் மூச்சாய் சுவாசிக்கிறேன்..
நேசகி நீ என்னை பிரிந்தபோதும்,
உன் நேசம் எல்லாம் எனை ஆளுகிறதே.
உறவுகள் ஆயிரம் இருப்பினும்,
இதயம் உனையே தேடியதே.
எத்தனை காலம் தான் இவ்வேதனையோ,
என் இறைவன் மட்டுமே அறிந்தவன்..... MNA.....