Author Topic: கடவுளா இல்லை என் காதலியா  (Read 550 times)

Offline சிற்பி

அவள் பேசிடும் அழகை பார்த்து
பூங்குழல் எழிலை பார்த்து
பூத்திடும் பூக்கள் எல்லாம்
விழுந்தது இந்த மண்ணில்
மலர்ந்தது காதல் என்னில்

மூன்றடி உலகளந்த
 வாமனன் பார்த்தேன்
இரண்டடி உலகளந்த
 வள்ளுவன் பார்த்தேன்
ஆனால் இவள்
ஒவ்வொரு அடியிலும்
உலகை அளக்கவில்லை
அழகாக்கி கொண்டு இருக்கிறாள்

அவள் கோபங்கள் தனை பார்த்தால்
உலகினை அதிர வைத்த
சிம்மமும் அதிர்ந்து போகும்

மிதிலையில் வில்வளைத்த
சீதையின் இராமன் கூட
இந்த மின்னலின்
கண்கள் பார்த்தால்
கன்னலாய் கரைந்து போவான்

கோபியர் தனை மயக்கும்
காவிய கண்ணன் கூட
என் காதலி நடந்து வந்தாள்
கால்களில் விழுந்து போவான்

ஆசையை துறந்து வாழும்
புத்தனும் வந்தால் கூட
அவள் அழகிய சிரிப்பை பார்த்து
பித்தனாய் மாறி போவான்

தெய்வமும் பெரியதில்லை
அவள் அதனினும் உயந்தவள்
தென்றலும் சுகமதில்லை
அவள் தேகமே தேன் மயக்கம்
பூக்களும் வாசமில்லை
அவள் பூவிதழ் அழகே போதும்
அத்தனை சிறந்த காதல்
அவள் உயிரினை உணரும் தேடல்

கவிதை ஒரு பெருமை
அவளை கவிதைகள் பாடும் போது

     சிற்பி...
Presented with my dear...




« Last Edit: October 21, 2019, 10:55:06 AM by சிற்பி »
❤சிற்பி❤