98
« Last post by Sun FloweR on April 11, 2024, 09:08:28 PM »
இசைத் தென்றல் நிகழ்ச்சி நமது நண்பர்களின் அதி விருப்பமான ஒன்று.. இந்நிகழ்ச்சியை, தொகுப்பாளர்களும், Dj களும் அழகாக செதுக்கி நமக்கு தருகின்றனர். அவர்களுக்கு நண்பர்கள் சார்பாக வாழ்த்துகள்.
இந்த வாரம் நான் தேர்வு செய்த பாடல் திருவிளையாடல் திரைப்படத்திலிருந்து..
வெளிவந்த ஆண்டு: 1965
இயக்குநர்: ஏ.பி.நாகராஜன்
நடிகர்கள்: சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலர்.
இசை: கே.வி.மகாதேவன்.
திருவிளையாடல் புராணம் எனும் சைவ இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது இத் திரைப்படம்.
தேர்வு செய்த பாடல்: பார்த்தா பசுமரம் படுத்து விட்டா..
இந்த பாடலில் மனித வாழ்வின் தத்துவத்தை அழகாக எடுத்துக் கூறியிருப்பார் கண்ணதாசன்.
இறைவன் ஒருவனே நிலையானவன் என்ற கருத்தினைச் சுமந்து இப்பாடல் எழுதப்பட்டிருக்கும்.
எனது தந்தைக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனது தந்தையின் நினைவு மேலோங்கும். இந்தப் பாடல் எனது பாசமிகு தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.