வாழ்க்கை
எத்தனை வித விதமான
மனிதர்களை
கடந்து செல்ல வைக்கிறது
நம்முள்
ஒட்டிக்கொள்ளும்
உறவாய் உயிராய்
சில மனிதர்கள்
சிலரோ
நம்முள் ஒட்டிக்கொண்டிருக்கும்
உயிரை ,
கரும்பு சாறு
பிழியும் இயந்திரத்தில்
சிக்குண்டு வெளியே வரும்
சக்கை போல் பிழிந்து எடுக்கவே
உடன் இருப்பார்
அவருக்கொரு
பெயருண்டு
முதலாளி
ஒரு சான் வாயிருக்காகவும்
சுயம் காப்பாற்றிக்கொள்ளவும்
வளைந்து வளைந்து
கொடுத்து
முதுகெலும்பும்
வளைந்தே போயிற்று
நிமிர்ந்து நிற்க திராணியின்றி
சில நேரம் தோன்றும்
கோபமும் எரிச்சலும்,
பற்றி எரியும்
உணர்வின் கொந்தளிப்புகளும்
என்னை நம்பி வீட்டிலுருக்கும்
உறவுகளின் பசியின் கொடுமையை
எண்ணிப்பார்க்கையில்
அணைந்துவிடுகிறது
நீரூற்றாமல்
நிமிடத்தில்
வீழ்ந்து
துகள் துகளாய்
உடைந்து போய்விடும்
வாழ்விது என தெரிந்தும்
அடக்குமுறையின்
அடையாளங்கள்
அழிந்து போகும்வரை
வாழ்க்கை
எத்தனை வித விதமான
மனிதர்களை
கடந்து செல்ல வைக்கிறது