Author Topic: அரண்மனைக்கிளி  (Read 2477 times)

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
அரண்மனைக்கிளி
« on: February 19, 2013, 01:54:26 PM »
Movie Name:Idhaya Kovil
Song Name:Yaar veettil roja
Singers:S..P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Lyricist:Mehtha


யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ?

யார் வீட்டில் ...

ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள்
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்
ஜீவன் அங்கே என்னைத் தேடும்
பாடல் இங்கே காற்றில் ஓடும்

காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று

ஓர் ஏழை வெண்புறா மேடையில்
என் காதல் பெண்புறா வீதியில்
பூங்காற்று போராடவே
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே

யார் வீட்டில்....

வான் மேகம் மோதும் மழைதனிலே
நான் பாடும் பாடல் நனைகிறதே
பாடல் இங்கே நனைவதனாலே
நனையும் வார்த்தை கரையுது இங்கே

ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
என் காவல் எல்லையை தாண்டுமோ
நியாயங்கள் வாய் மூடுமோ
தெய்வமில்லை என்று போகுமோ

 யார் வீட்டில் ...

மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ

யார் வீட்டில் ..
« Last Edit: April 23, 2014, 01:23:38 PM by MysteRy »