முன்குறிப்பு : இடம் பிடித்து விட்டு பாடல் நிறைவு செய்யாத சோம்பேறிகள் நம் இணையதளத்தில் நிறையவே இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தோடு இந்த பதிவை இடுகிறேன்.
ஹாய் இசை தென்றல் புகழ் காயத்திரி ..உங்களுடைய இனிமையான குரலில் இந்த நிகழ்ச்சி மிக இனிமையாக இருக்கிறது . வாழ்த்துக்கள்.
இந்தவாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் தேனிசை தென்றல் தேவா அவர்களின் இசை வாரிசு ஸ்ரீகாந்த் தேவா அவர்களின் இசை தேர்வில் இருந்து ஒரு திரைப்படத்தை தேர்வு செய்ய விரும்புகிறேன்.
இந்த வாரம் இசையால் வெற்றி பெற்ற திரைப்படமாக நான் தேர்வு செய்ய விரும்பும் திரைப்படம் 2005 ஆம் ஆண்டில் பேரரசு அவர்களின் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து வெளி வந்த சிவகாசி திரைப்படம்.
தாய், அண்ணன் தம்பி இடையிலேயான உறவை சுவாரஸ்யமான நிகழ்வுகளோடு இணைந்து அருமையாக இயக்கி இருக்கிறார் பேரரசு அவர்கள் . இயக்குனர் பேரரசு எப்பொழுதும் ஊரின் பெயரிலேயே திருப்பதி , திருத்தணி,பழனி என திரைபடத்தின் தலைப்பு அமையும்படி வைத்திருப்பார்.
ஸ்ரீகாந்த் தேவா, அவருக்கே உரிய பாணியில்" தீபாவளி தீபாவளி , கோடம்பாக்கம் ஏரியா, வாடா வாடா தோழா ,அடி என்னத்த சொல்வேனுங்கோ " என தொடங்கும் பாடல்கள் எல்லாரும் ஆட்டம் போடும் படி அருமையாக இசைஅமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமாக "அட என்னத்த சொல்வேனுங்கோ" என தொடங்கும் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் எல்லாரும் கேடு மகிழும்படி அனைத்து வானொலிகளிலும் ஒலிக்கும் பாடலாக அமைந்து இருந்தது.
தாயின் அன்பை உணர்த்தும் விதமாக அமைந்த "தெய்வத்துக்கே மாறு வேசமா" என தொடங்கும் சோக பாடலும் மிக அருமையாக அமைந்து இருக்கும். எனினும் நான் இந்த வாரம் கேட்கவிருக்கும் பாடல் உழைப்பின் அருமையை உணர்த்தும் விதமாக அமைந்த " வாடா வாடா தோழா' எனத்தொடங்கும் பாடல்.
யாரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா என தொடங்கி இந்த பாடல் முழுவதுமே மிக அருமையான வரிகளால் உழைப்பை பற்றி பாடி இருப்பது மிக அருமை .
இந்த பாடலை இசை தென்றல் நிகழ்ச்சியில் இடம் பிடித்துவிட்டு பாடல் பதிவிடாத சோம்பேறி நண்பர்களுக்காக விரும்பி கேட்கிறேன் .