நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பண்பலை ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
எனக்கு பிடித்த பாடல்கள் பல உண்டு என்றாலும் இசை தென்றல் நிகழ்ச்சிக்காக ஒரு குறிப்பிட்ட பாடலை தெரிவிக்க விரும்புகிறேன்.அந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப்.இது 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் இதனை எழுதி, இயக்கி, தயாரித்ததுடன் நடிக்கவும் நடித்தார். இப்படம் வணிக நோக்கில் பெருவெற்றி பெற்றதுடன் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றது.
இயக்குனர்,தயாரிப்பாளர்,கதை-சேரன்
இசை-பரத்வாஜ்
இப்படத்தில் நடித்த நடிகர்கள் - சேரன் ,ஸ்னேகா ,கோபிகா,மல்லிகா,கனிகா,
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்:
1."ஞாபகம் வருதே"-பரத்வாஜ்(பாடியவர்)
2 "கிழக்கே பார்த்தேன்"-யுகேந்திரன், போனி(பாடியவர்)
3 "மனமே நலமா"-பரத்வாஜ்(பாடியவர்)
4 "மனசுக்குள்ளே தாகம்"-ஹரிஷ் ராகவேந்திரா, ரேஷ்மி(பாடியவர்கள்)
5 "மீசை வச்ச பேராண்டி"-கோவை கமலா, கார்த்திக்(பாடியவர்கள்)
6 "நினைவுகள் நெஞ்சினில்"-உன்னிமேனன்(பாடியவர்)
7 "ஒவ்வொரு பூக்களுமே"-சித்ரா(பாடியவர்)
இத்தனை பாடல் இடம்பெற்ற இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது என்ற பாடலே.இந்த பாடலுக்கான இசை அமைத்தவர் பரத்வாஜ்.
சிறந்த பாடலாசிரியருக்கான வெள்ளித்தாமரை தேசிய விருதை கவிஞர் பா.விஜய் இந்த பாடலை எழுதியதற்க்காக பெற்றுள்ளார்.மேலும் இப்பாடலை பாடியதற்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான வெள்ளித்தாமரை தேசிய விருதையும் தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதையும் சித்ரா பெற்றுள்ளார்.நம்பிக்கை உணர்வை தூண்டும் இந்த பாடல் , வாழ்க்கையில் துன்பத்திலும்,கவலையிலும் வாடும் மனிதர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையையும் மற்றும் கவலையில் இருந்து மீண்டு வாழ்வில் போராடி வெல்ல வேண்டும் என்ற புத்துணர்வு எண்ணத்தையும் கண்டிப்பாக கொடுக்கும்.
"மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வி இன்றி வரலாறா துக்கம் இல்லை என் தோழா"
விரக்தியில் இருக்கும் மனிதர் கூட விதியை வென்று ஜெயிக்கலாம் என்று சிந்தனையை தோற்றுவிக்கும் பாடல் இது..
நம்பிக்கையை தூண்டும் வரிகள்,நேர்த்தியான அழகான இசை ..பாடலுக்கு உயிரூட்டும் குரல்.. என சோகமான மனித உணர்வுகளை தட்டி எழுப்பும் இந்த பாடலை வாழ்வில் முன்னேறத்துடிக்கும் அனைவருக்காகவும் மற்றும் FTC குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்..
குறிப்பு: நான் முன்பதிவு செய்யவில்லை.. பழம் நழுவி பாலில் விழுவது போல ஏதோ.வாய்ப்புகள் வந்தால் மட்டும் காற்றலையில் இந்த கருத்தான பாடலை தவழ விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.